மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சல்மான்கான், அசின் படங்களுக்கு சிக்கல்

திரைப்பட கூட்டமைப்பின் தடையை மீறி இலங்கைப் படவிழாவுக்கு சென்ற நடிகர், நடிகைகளின் படங்களுக்கு நான்கு மாநிலங்களில் தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தடை குறித்து திரைப்பட கூட்டமைப்பு மவுனம் சாதித்தாலும் அவர்கள் படங்களை வாங்க திரையரங்கு உ‌ரிமையாளர்கள் மிகுந்த தயக்கம் காட்டுகின்றனர்.

விரைவில் சல்மான்கான் நடித்த இந்திப் படம் வெளியாகிறது. பொதுவாக சென்னையில் குறைந்தது நான்கு திரையரங்குகளிலாவது சல்மானின் படம் வெளியாகும். இலங்கை சென்றதோடு ராஜபக்சேயின் அடிவருடியாக செயல்பட்டதால் அவரது படங்களை தமிழகத்தில் திரையிட எதிர்ப்பு தெ‌ரிவிப்பது என்பதில் தமிழ் அமைப்புகள் உறுதியாக உள்ளன.

இதன் காரணமாக சல்மானின் படத்தை வாங்க தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் தயக்கம் காட்டுகின்றன. மேலும் விவேக் ஓபராய் நடித்த ரத்த ச‌ரித்திரம் படத்தை வாங்கவும் விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

ரத்த ச‌ரித்திரத்தில் சூர்யாவும் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு உருவாகியுள்ள எதிர்ப்பு குறித்து கேட்டதற்கு, ஈழப் பிரச்சனை முடிந்துப் போன பிரச்சனை என பெங்களூர் மிரர் இணையதளத்துக்கு சூர்யா பேட்டி கொடுத்துள்ளார்.

ராஜபக்சேயின் இன்னொரு அடிவருடி அசினின் படங்களுக்கும் இதே தயக்கத்தைதான் திரையரங்கு உ‌ரிமையாளர்கள் காட்டுகிறார்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.