மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஈசன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா?

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த படம் சசிகுமா‌ரின் ஈசன். அந்த எதிர்பார்ப்பை ஈசன் பூர்த்தி செய்துள்ளதா?

மிகுந்த வருத்தத்துடன் இல்லையென்றே சொல்ல வேண்டியுள்ளது.

முதலாவதாக படத்தின் நீளம். மூன்று மணி நேரத்துக்குமேல் படம் ஓடுகிறது. கதையின் தேவைக்காக இத்தனை நீளமா என்றால் அதுவுமில்லை.

கிராமத்திலிருந்து சென்னைக்கு ஃபேஷன் டிஸைன் படிக்க வரும் அப்பாவி இளம்பெண் அதிகாரமிக்க இரு பணக்கார மாணவர்களால் சீரழிக்கப்படுகிறாள். இந்த அவமானத்தால் அந்தக் குடும்பம் தற்கொலை செய்து கொள்கிறது. தப்பிப் பிழைக்கும் அப்பெண்ணின் தம்பி இருவரையும் பழிவாங்குகிறான்.

இதுதான் ஈசனின் ஒன் லைன். இந்தக் கதைக்கு தேவையில்லாமல் அதிகார மையமான அமைச்ச‌ரின் மகனின் காதல், அதிலுள்ள பிரச்சனை, அமைச்ச‌ரின் அடாவடி, கொட்டாவி வரவைக்கும் நீண்ட பிளாஷ்பேக் என சுப்பிரமணியுரத்தின் அத்தனை பிளஸ்களையும் ஈசன் மறுதலித்துள்ளது.

மொத்தத்தில் சசிகுமார் ஏமாற்றிவிட்டதை ரசிகர்களின் கூச்சலிலிருந்து அறிய முடிகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.