![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhP-4W0c_P68Gj1lU47GaFgNcSbz4pGqyfeKaXcvyxR83xzpUIR2lJgt81FmXSvIcLzqi6EfYIQAMbxfSwfnekX3oCyQTDFlyItz6w3tiYQa5dF74iwDlJfNAi0rS0bW4aZm47iZnLIGsE/s320/Ajith%252C+Vijay+films+to+face+trouble+in+Andhra.jpg)
ஆந்திராவில் வெளியாகும் தமிழ்ப் படங்கள் குறைவில்லாத வசூலைப் பெறுகின்றன. இதிலும் கோ படம் ரங்கம் என்ற பெயரில் வெளியாகி நூறு நாட்களைத் தொட்டது. அவன் இவன் வாடு வீடு என்ற பெயரில் வெளியாகி ஆந்திர விநியோகஸ்தர்களுக்கு லாபம் சம்பாதித்து கொடுத்தது.
லாரன்சின் காஞ்சனா அதே பெயரில் வெளியாகி வசூலை குவித்து வருகிறது. இவை தவிர ஜீவாவின் வந்தான் வென்றான், அஜீத்தின் மங்காத்தா, விஜய்யின் வேலாயுதம் உள்பட ஏராளமான படங்கள் தெலுங்கில் டப் செய்து வெளியிடப்பட உள்ளது.
தமிழ்ப் படங்களின் வியாபாரம் காரணமாக நல்ல திரையரங்குகளை அவற்றிற்கு ஒதுக்குகின்றனர். இதனால் தெலுங்கு நேரடிப்பட தயாரிப்பாளர்களும், நடிகர்களும் அதிருப்தியில் உள்ளனர். தமிழ்ப் படங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த, தமிழ் மொழிமாற்றுப் படங்களின் மீதான 20 சதவீத வரியை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும், 50 பிரிண்டுகளுக்கு மேல் போடக் கூடாது என்பன போன்ற தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளனர். விரைவில் மங்காத்தா, வேலாயுதம் படங்கள் வெளியாக உள்ளதால் அதற்குமுன் இந்தக் கட்டுப்பாடுகளை கொண்டுவர ஆந்திர திரையுலகினர் முயன்று வருகின்றனர்.
தமிழ்ப்பட ஹீரோக்களின் சம்பளம் மற்றும் படத்தின் பட்ஜெட் தெலுங்குப்பட உரிமையையும் கணக்கில் வைத்தே போடப்படுகிறது. இதனால் தமிழ்ப் படங்களுக்கு குறிப்பாக மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.