மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பாக்சிங் பழகும் ஜெயம் ரவி.

ஆதிபகவானுக்கு அடுத்து பூலோகம் அதற்கு அடுத்து ஜனநாதனின் படம் என்று 2011 வேலை நாட்களை ச‌ரியாக பி‌ரித்து வைத்திருக்கிறார் ஜெயம் ரவி. பூலோகம் படப்பிடிப்பு இந்நேரம் தொடங்கியிருக்கும். ஆதிபகவானுக்காக வளர்த்த தாடி மீசை தடையாக இருக்கிறது.

ஜனநாதனின் அசிஸ்டெண்டும், அவரது படங்களுக்கு திரைக்கதை எழுதியவருமான கல்யாண கிருஷ்ணன் பூலோகம் படத்தை இயக்குகிறார். இது பாக்ஸர் மதனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படும் படம். ஜெயம் ரவி பாக்ஸராக நடிக்கிறார்.

இதற்காக பாக்சிங் பயிற்சியில் தற்போது ஜெயம் ரவி முழு வேகத்தில் இறங்கியுள்ளார். ஹாலிவுட் ஸ்கார்சசியின் ரேகிங்ஃபுல் படம் அளவுக்கு பூலோகமும் பேசப்படும் என்கிறார்கள் இப்போதே.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.