மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> அப்போ தூங்கியவர்கள் இப்போ சவுண்ட் விடுவது எதனால்?

சல்மான் மும்பை திரும்பிய அதேநேரம் சென்னையில் அவருக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கிளப்பியிருப்பவர்கள், பொழுதுபோகாத இந்து மக்கள் கட்சியினர்.

ஒஸ்தி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு சல்மான்கானை அழைக்கயிருக்கிறார்கள். இது உறுதியில்லை, அப்படியொரு எண்ணம் ஒஸ்தி குழுவுக்கு இருக்கிறது அவ்வளவுதான். ஆனால் இந்து மக்கள் கட்சிக்கு இது போதுமே.

ஈழ விவகாரத்தில் சல்மான் தமிழர்களுக்கு எதிராக நடந்து கொண்டார். அதனால் அவர் சென்னை வந்தால் எதிர்ப்போம் என்று புது வெடி கொளுத்தியிருக்கிறார்கள். வேடிக்கை என்னவென்றால் ஈழ விவகாரத்துக்குப் பிறகு பலமுறை சல்மான் சென்னை வந்துவிட்டார். சமீபத்தில்கூட மார்கண்டேயன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சீமானுடன் கலந்து கொண்டார். அப்போதெல்லாம் தூங்கியவர்கள் இப்போது சவுண்ட் விடுவது எதனால்?

ஒஸ்‌தியில் அனைவருக்கும் தெ‌ரியக் கூடிய நடிகர் நடித்திருப்பதாலா?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.