
ரொம்ப சாதாரணமான டியூன், அதைவிட சாதாரணமான வார்த்தைகள். ஆங்கிலத்தை அங்கங்கே பியத்துப் போட்டதால் எல்லா மொழியினருக்கும் இந்தப் பாடல் அரைகுறையாக புரிந்தது. கொலவெறி ஹிட்டானது நல்ல பாடல்களுக்கு நிச்சயமாகப் பின்னடைவுதான். அதேநேரம் இன்றைய இளைஞர்களின் இரண்டுங்கெட்டான் டேஸ்டுக்கு இந்த ஹிட் நல்ல உதாரணம்.
இந்தியாவே பாடி மகிழும் இந்தப் பாடலை முதல்முறையாக கண்டித்திருக்கிறார் ஒரு பிரபலம். அவர் இந்தி சினிமாவின் முன்னணி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர். பாடலின் வரிகளை கண்டித்திருக்கும் இவர், இது மக்களின் உணர்வுகளை அவமதிப்பதாக இருப்பதாகவும் சாடியுள்ளார்.
கண்ணை மூடிக் கொண்டு இந்தப் பாடலுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு நடுவில் ஜாவேத் அக்தரின் குரல் சின்ன ஆறுதல்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.