மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஐஸ்வர்யாராயை உடனடியாக மறுத்த மணிரத்னம்.

கடல் படத்தை இயக்கி வரும் மணிரத்னம் அடுத்து ஐஸ்வர்யாராய் நடிக்கும் படத்தை இயக்குவதாகவும், இது ஐஸின் இரண்டாவது இன்னிங்ஸின் தொடக்கமாக இருக்கும் எனவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனை உடனடியாக மணிரத்னம் தரப்பு மறுத்துள்ளது. ஐஸ்வர்யாராயை வைத்து மணிரத்னம் இயக்கப் போவது 1938 ல் வெளிவந்த ரெபேக்கா என்ற நாவலை என்றும் செய்திகள் கசிந்தன. இதனை ஒரேயடியாக மறுத்துள்ளனர். கடல் படத்தில் தற்போது மணிரத்னம் பிஸியாக இருக்கிறார். இதன் போஸ்ட் புரொடக் ஷன் முடிந்து படத்தை வெளியிட்டு அடுத்தப் படத்தை தீர்மானிக்க இன்னும் ஆறு மாதகாலமாவது ஆகும். ரெபேக்கா நாவல், ஐஸ்வர்யாராய் என்பதெல்லாம் கற்பனை என்று தெ‌ளிவாக விளக்கியிருக்கிறார்கள். அதேநேரம் அடுத்தப் படத்துக்காக ஒன்றிரண்டு கதைகளை மணிரத்னம் யோசித்து வருவதாகவும் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.