மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிறுவர்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பாக அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல்‏.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிறுவர்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி  இவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பாக சம்பந்த பட்ட அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலலாளர்  வி.தவராசா தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது இங்கு உரையாற்றிய  மண்முனை வடக்கு பிரதேச செயலலாளர் வி.தவராசா கூறுகையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள சிறுவர்கள் பாதுகாப்பான சூழலில் வாழக்கூடிய நிலைமையினை  உருவாக்குவதற்கு நல்ல செயல் திட்டங்கள செயல்படுத்துவதன் ஊடாக எதிர் காலத்தில் எமது  சிறுவர்கள் பாதுகாப்பான சூழலில் வாழமுடியும்.

எனவே இதனுடன் சம்பத்தப்பட்ட அதிகாரிகள் பிரதேச மட்டத்திலும், கிராம மட்டத்திலும் உள்ள சிறுவர்களில்   தரவுகள் திரட்டப்பட்டு  இதில் பாடசாலைகளில் இருந்து இடைவிலகிய மாணவர்கள், பெற்றோரால்  கைவிடப்பட்ட சிறுவர்கள் , சமூக சூழலினால் பதிக்கப்பட்ட  சிறுவர்கள் தொடர்பாக ஆராயப்பட்டு இவர்களுக்கான சிறுவர் மேம்பாட்டுத்திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப் படவேண்டும் என தெரிவித்துக்கொண்டார்.

இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் மட்டக்களப்பு உதவி ஆணையாளர் என்.தனஞ்சயன், மண்முனை வடக்கு பிரதேச செயலக  சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்  எஸ்.உதயராஜ்,  மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  கிராம சேவையாளர்கள் , பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், வலயக்கல்வி பணிப்பாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.





Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.