மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


மட்டக்களப்பில் யுத்தத்தாலும் வன்செயல்களாலும் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான சுயதொழில் மற்றும் வீட்டுத் திட்டத்திற்கான கடனுதவி வழங்குவதற்கான நேர்முக தேர்வுகள்‏.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற யுத்தம் மற்றும் வன்செயல்கள் போன்ற அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு அதிகார சபையினால் சுயதொழில் மற்றும் வீட்டுத்திட்ட கடனுதவிகள் வழங்கு திட்டங்கள் நடைமுறைபடுத்தி வருகின்றது.

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தாலும் வன்செயல்களாலும் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான சுயதொழில் மற்றும் வீட்டுத் திட்டத்திற்கான கடனுதவி வழங்குவதற்கான  நேர்முக தேர்வுகள் இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில்   புனர்வாழ்வு அதிகார சபையின் நிறைவேற்று பணிப்பாளர் என்.புகேந்திரன்  தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது புனர்வாழ்வு அதிகாரசபையினால் வீடுகளுக்காக 55 பேரினதும் சுயதொழிலுக்காக 74 பேரினதும்  ஆவணங்கள் பரீட்சிக்கப்பட்டன.

வீடுகள் புனரமைப்பு, சுயதொழில், முச்சக்கரவண்டி கொள்வனவு மற்றும் சிறிய உழவு இயந்திரம் என்பன கொள்வனவு செய்வதற்காக தலா 250,000 ரூபாய் என்ற அடிப்படையில்  4 வீத வட்டியில் வழங்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு அதிகார சபையின் வேலைத்திட்டப் பணிப்பாளர் என். புகேந்திரன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுங்சழியன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா மற்றும் மாவட்டச் செயலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.







Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.