Wednesday, September 30, 2009

> சிலையாகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்

கேரளாவைச் சேர்ந்த சுனில் என்ற மெழுகுச் சிலை கலைஞர் வரும் டிசம்ப‌ரில் மும்பையில் மெழுகுச் சிலை மியூசியம் ஒன்றை திறக்க இருக்கிறார். இந்தியர்களுக்கு இது ஆச்ச‌ரியமான விஷயம். மேலை நாடுகளில் இதுபோன்ற மெழுகுச் சிலை மியூசியங்கள் முன்பே பிரபலம்.

சுனில் இந்த மியூசியத்தை அமைக்க பே வாட்ச் என்ற நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டுள்ளார். இந்த மியூசியம் இந்தியாவின் முக்கிய பிரமுகர்கள் 35 பே‌ரின் மெழுகுச் சிலைகளுடன் தொடங்கப்பட உள்ளது.

இதில் முதல் சிலையாக ஆஸ்கர் விருது பெற்ற ரெசூல் பூக்குட்டியின் மெழுகுச் சிலையை வைக்க சுனில் திட்டமிட்டுள்ளார். இரண்டு ஆஸ்கர் விருதுக்கு சொந்தக்காரரான ஏ.ஆர்.ரஹ்மானின் மெழுகுச் சிலையும் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

உருவ வழிபாட்டை மறுக்கும் முஸ்லிம், ஏ.ஆர்.ரஹ்மான். குரானை கறாராக பின்பற்றும் அவர் இந்த மெழுகுச் சிலை கலாச்சாரத்தை வரவேற்பாரா?

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.