மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> Facebookகால் நயன்தாராவுக்கு தொடரும் பிரச்சனை

ஃபேஸ்புக்கில் தனது பெயரை பிரபுதேவா பெயருடன் இணைத்து ‘டயானா மரியம் பிரபுதேவா’ ஆகிவிட்டார் நயன்தாரா என்பதை முன்பே விளக்கமாக எழுதியிருந்தோம். அறைக்குள் போட்ட ஆட்டம் அம்பலத்துக்கு வரும் என்று நினைத்திருக்க மாட்டார் போலிருக்கிறது. இப்போது அந்த பேஸ்புக்குக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்று கூற ஆரம்பித்திருக்கிறார் நயன். தெலுங்கு படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் இருக்கும் அவர் அங்கிருந்து இந்த மறுப்பை வெளியிட்டிருக்கிறார்.

தனுஷ் பெயரில் யாரோ இப்படி ஒரு பேஸ் புக்கை துவங்கி வெட்டி அரட்டை அடித்த கதையை அறிந்த பேஸ்புக்கர்கள் அட பாவி பயலுகளா என்று அதிர்ந்து போயிருக்கிறார்கள். இந்த நேரத்தில் நயன்தாராவும் இப்படி சொல்லவும், அப்ப அத்தனையும் பொய்யா...? என்று கொதியாக கொதிக்கிறார்கள்.

இதுவரைக்கும் நயன்தாராவின் பேஸ்புக்கில் வந்த அரிய புகைப்படங்களை பார்த்தால், இந்த இணைப்பில் யாரோ போலியாக விளையாடியது போல தெரியவே இல்லை. ஏனென்றால் சமீபத்தில் ஆதவன் படப்பிடிப்புக்காக வெளிநாட்டிற்கு போன போது எடுத்த படங்களை கூட அங்கிருந்து சுடசுட பதிவு செய்யப்பட்டிருந்தது அதில். அப்படியிருக்க யாரோ ஒரு டுபாக்கூர் எப்படி இந்தளவுக்கு ஃபிரஷ்ஷாக படங்களை வெளியிட முடியும்?

எது எப்படியோ? நயன்தாரா வெளிநாட்டுக்கு போனாலும் இங்கிருந்து அவர் பற்றிய விஷயங்களை எடுத்துக்கூற நாலு பேரும், அதை காதில் வாங்கிக் கொண்டு கவலைப்படுகிற மனசும் அவருக்கு இருக்கிறது என்பது ஆறுதலான விஷயம்தான்!
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

1 நான் சம்பாதிச்சது:

  1. see this - http://www.tamilthunder.com/forum/showthread.php?t=46778

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.