Thursday, November 12, 2009

> கமல் - நிருபர்கள் சந்திப்பு

முதல் முறையாக இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சென்னையில் இரண்டு நாள் மாநாடு மற்றும் கருத்தரங்கு நடத்துகிறது. நவம்பர் 18, 19ஆம் தேதிகளில் நடைபெறும் இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக கமல்ஹாசன் உள்ளார்.

இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சென்னையில் இப்படியொரு மாநாடு நடத்துவது இதுவே முதல் முறை. கமல்ஹாசனின் தனிப்பட்ட முயற்சியால் இது சாத்தியமாகியுள்ளது.

இந்த மாநாட்டுக்காக தமிழக அரசு சார்பில் முதல்வர் கருணாநிதி 50 லட்ச ரூபாய் அளித்துள்ளார். மேலும், 18 ஆம் தேதி மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் சிறப்புரையாற்றுகிறார்.

இந்த மாநாடு மற்றும் கருத்தரங்கில் உலகம் முழுவதிலிருந்தும் வரும் அறிஞர்கள் கலந்து கொள்கிறார்கள். சினிமா குறித்த பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற உள்ளது.

கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கமல், இந்த மாநாட்டில் ர‌ஜினி, மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்வதாக கூறினார்.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.