![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWs8eJMjzgq5QtBzohKybNfEL6kf7Zw9guR9ODIOkwMJlDL_GqxmF8niAybyxgQ_gpDnTNVj87XcWCarYUIpT6PWgl3UKR7Lwuj8DK713Y_-exz6B5omoMmpleNnluuBVpvzzEzJ0fXIM/s1600/Simbu-stills-014.jpg)
விண்ணைத்தாண்டி வருவாயா 26ஆம் தேதி வெளியாகிறது. தனது 25வது படமான இது சினிமா கேரியரில் திருப்புமுனையாக இருக்கும் என்று நம்புகிறார். அதனால் இந்தப் படத்துக்குப் பிறகே அடுத்தப்பட வேலைகளை தொடங்குவது என்று முடிவெடுத்துள்ளார்.
மணிரத்னம் ரன்பீர் கபூரை வைத்து இயக்கப் போகும் இந்திப் படத்தின் தமிழ் பதிப்பில் சிம்பு நடிக்கயிருப்பதாக நம்பத்குந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் லிங்குசாமி தயாரிக்கும் படத்தை பூபதி பாண்டியன் இயக்குவதாகவும், சிம்பு நடிப்பதாகவும் இருந்தது.
விக்ரம் படத்தை இயக்கும் வாய்ப்பு பூபதி பாண்டியனுக்கு கிடைத்திருப்பதால் லிங்குசாமி படத்தை தயாரிப்பதுடன் சிம்புவை இயக்குவார் என கூறப்படுகிறது. இது விஜய்க்காக லிங்குசாமி உருவாக்கிய கதையாம்.
அதேபோல் வெங்கட்பிரபு தனது அடுத்தப் படத்தில் சிம்புவை நடிக்க வைக்கும் எண்ணத்தில் இருக்கிறார். இந்தப் படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கிறார்.
இந்த மூன்று முக்கிய படங்கள் குறித்து இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பதும் முக்கியமானது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.