மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> மிரட்டும் பிரகாஷ்ராஜ்

சத்தமே இல்லாமல் அடுத்த படத்தை ஆரம்பித்துவிட்டார் கஸ்தூரி ராஜா. 'பாண்டிய பேரரசி' என படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார். கதை வித்தியாசமாக இருக்கும் என்பதால் ஏற்கனவே நடித்துக் கொண்டிருக்கும் ஹீரோவைப் போடாமல் புதுமுகம் ஒருவரைத் தேடி வருகிறார்.

இப்படத்தின் அலாவுதீன், ரமணா, தற்போது 'தம்பி அர்சுனா' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஆஷிமா நாயகியாக நடிக்கவிருக்கிறார். மிகவும் சவாலான கேரக்டர் என்பதால் சண்டைக் காட்சிகளில் நடிக்கத் தன்னை தயார்படுத்தி வருகிறார்.

முக்கிய வேடமொன்றில் ராஜ்கிரண் நடிக்கிறார். அதேபோல, பிரகாஷ்ராஜுக்கும் பேசும்படியான கேரக்டர் கிடைத்திருக்கிறது. வில்லன் என்பதையும் தாண்டி மிரட்டியுள்ளார். இதற்கான மொத்த படப்பிடிப்பையும் ஹைதராபாத் ஸ்டுடியோவில் நடத்த திட்டமிட்டிருக்கிறார் கஸ்தூரி ராஜா.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.