
நான் கடவுள் படத்துக்குப் பிறகு பூஜா எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. வந்த வாய்ப்புகளை, பாட்டியை பார்த்துக்கணும், வீடு கட்டணும் என்று தட்டிக் கழிப்பதிலேயே குறியாக இருந்தார். துரோகி படத்தில் கூட சிறிய வேடத்தில்தான் நடிக்கிறார். அதுவும் படத்தின் இயக்குனர் பூஜாவின் நெருங்கிய தோழி என்பதால்.
தனது தந்தை திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்ப்பதாகவும், திருமணத்துக்கு தான் தயார் என்றும் அறிவித்திருக்கிறார் பூஜா. தனது வருங்கால கணவர் குறித்து ஒரேயொரு எதிர்பார்ப்பு மட்டுமே அவருக்கு இருக்கிறது. மது, புகை இரண்டையும் நினைத்துக்கூட பார்க்காதவராக இருக்க வேண்டும். இந்த இரண்டும் உபயோகிப்பவர்களை மட்டுமின்றி அவர் சம்பந்தப்பட்ட அனைவரையும் பாதிக்கும் என்பது பூஜாவின் கருத்து.
மதுவை தொடாத, புகையை விரும்பாத ஒருவர்... 21ஆம் நூற்றாண்டில் சிரமமான செலக்சன்தான்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.