மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> 5 லட்சம் மக்கள் க்ளைமாக்ஸில்

மிகவும் வித்தியாசமான முறையில் வளர்ந்து வருகிறது 'பச்சை என்கிற காத்து'. ஒரு இரவில் தொடங்கி மற்றொரு இரவில் முடிகிற மாதிரியான கதை. தமிழ் இலக்கியம் பயின்று, எழுத்தாளராகவும் இருக்கிற மூர்த்தி என்கிற கீரா இயக்கும் படம் இது.

வி.சேகர், முகவரி துரை, தங்கர்பச்சானிடம் உதவி இயக்குனராக பயின்று இயக்குனராகியிருக்கிறார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தை தயாரிப்பவரும் இவரே. 'அ' என நிறுவனத்துக்கு பெயர் வைத்திருக்கிறார்.

ஒரு நாள் நடக்கும் கதை என்றாலும் ஒரு கமர்சியல் படத்துக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் படத்தில் இருக்கும் என்கிறார். அத்தோடு ஐந்து லட்சம் மக்கள் கூடும் வீரப்பூர் எனும் ஊரில் நடந்த பொன்னர் சங்கர் திருவிழாவை படம் பிடித்திருக்கிறார்கள். இது இந்தப் படத்தின் ஹைலைட் என்கிறார் கீரா.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.