மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> திரைக்கதை வித்தியாசம் !

கமல் நடித்த ‘விருமாண்டி’ படத்தில் வித்தியாசமான திரைக்கதையாக அதில் நடித்த கதாபாத்திரங்கள் தங்கள் பார்வையில் என்ன நடந்தது என்பதை அவரவர் பாணியில் சொல்லப்பட்டிருந்தன. அதேபோன்ற கதையமைப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம்தான் ‘பச்சை என்கிற காத்து’.

‘அ’ திரை நிறுவனம் சார்பாக அஸ்வத்தமன், இந்துமதி, வைகறையாழன் தனலட்சுமி தயாரிக்கிறார்கள். மணப்பாறையில் வாழ்ந்த ஒரு இளைஞன் வாழ்வில் ஏற்பட்ட உண்மை சம்பவ‌ம்தான் இந்த‌ப்படம். படத்தில் மொத்தம் ஏழு முக்கிய கதாபாத்திரங்கள். ஏழு பேரும் அவரவர் பார்வையில் நடந்ததை சொல்கிறார்கள்.

சினிமா கலப்பில்லாமல் எதார்த்தமான படமாக எடுத்துள்ளேன். மேலும் ஒரு பாடல்காட்சியை ஒரே ஷாட்டில் படமாக்கியுள்ளது புதுமையாக இருக்கும். படப்பிடிப்பின் போதே பலர் இந்த முயற்சியை பாராட்டினார்கள். அதேபோல மக்களும் பாராட்டுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. குறுகிய காலத்துக்குள் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் நிறைவுடன் இருக்கும்’ என்கிறார் தங்கர்பச்சானின் சீடரும், இப்பட இயக்குனருமான கீரா.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.