மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> அசினுக்கு ஆபத்து

படப்பிடிப்புக்காகதான் இலங்கை சென்றேன் என்று சொன்ன அசின் அங்கு ராஜபக்சேயின் மனைவியுடன் அரசு நிகழ்ச்சியிலும், சிங்கள கண் துடைப்பு நாடகங்களிலும் கலந்து கொண்டது பத்தி‌ரிகைகளில் புகைப்படத்துடன் வெளியானது தமிழ் இன உணர்வாளர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. முக்கியமாக திரைப்பட சங்கங்கள் இந்த இன விரோத செய்கையால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆனால் ஏற்கனவே அறிவித்தபடி அசின் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இது குறித்து நடிகர் சங்க செயலாளர் ராதாரவியிடம் கேட்டதற்கு, அசின் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிபட தெ‌ரிவித்தார். என்னவிதமான நடவடிக்கை என்பது குறித்து சங்க நிர்வாகிகள் கலந்தாலோசித்ததாகவும், இன்னும் ஓ‌ரிரு தினங்களில் அதுபற்றி முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் அவர் தெ‌ரிவித்தார்.

அசின் தற்போது விஜய் ஜோடியாக காவல் காதல் படத்தில் நடித்து வருகிறார். இதுவே அவரது கடைசி தமிழ்ப் படமாக இருக்க வேண்டும் என்பதே ஒட்டு மொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.