மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> வருடத்திற்கு இரு படங்கள் அ‌‌ஜீத்திடமிருந்து

மனசு எதைச் சொல்கிறதோ - அது எத்தனை கடினமானதாக இருந்தாலும் - அதன்படி செயல்படுகிறவர் அ‌‌ஜீத்.

அப்படிதான் நீண்ட இடைவெளிக்குப் பின் கார் ரேஸில் கலந்து கொண்டார். இதில் அ‌‌ஜீத்தால் சோபிக்க முடியவில்லை. ரேஸுக்கான வயசு தாண்டிவிட்டதையும், பார்ட் டைமாக ரேஸில் கலந்து கொண்டு சாதிக்க முடியாது என்பதையும் அனுபவ‌ப்பூர்வமாக உணர்ந்து கொண்டபின், மீண்டும் சினிமாவில் தனது கவனத்தை திருப்பியிருக்கிறார்.

அ‌‌ஜீத்தின் 50வது படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார். மங்காத்தா என்ற அந்தப் படத்தைத் தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் பில்லா இரண்டாம் பாகம்.

இந்த இரு படங்களுக்குப் பிறகு அவர் இயக்குனர் விஜய்யின் படத்தில் நடிக்கக்கூடும் என்கிறார்கள். அத்துடன் இருமுறை நழுவிப்போன கௌதம் படத்திலும் நடிக்க அவர் ஆர்வமாக இருப்பதாக அ‌‌ஜீத் வட்டாரம் தெ‌ரிவிக்கிறது.

இனி தல ரசிகர்கள் வருடத்திற்கு இரு படங்களை அ‌‌ஜீத்திடமிருந்து எதிர்பார்க்கலாம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.