
வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், விஜய்யும் இவரும் அவ்வப்போது சந்தித்து கதை பரிமாறிக் கொண்டார்கள். இந்த விஷயம் தெரிந்துதான் சிம்புவும் வெளிப்படையாக ஒரு அறிக்கை வெளியிட்டார். என்னை ஒப்பந்தம் செய்துவிட்டு வேறொரு ஹீரோவை வைத்து படம் எடுப்பது என்ன நியாயம் என்றெல்லாம் புலம்பி தள்ளினார் அவர்.
இந்த நிலையில் லிங்குசாமியின் அடுத்த படத்தில் விஜய்தான் ஹீரோ என்ற நம்பிக்கை டமால் ஆகி விட்டதாம். காரணம், விஜய்க்கு லிங்கு சொன்ன சில கதை சுருக்கங்கள் அவரை அவ்வளவாக இம்ப்ரஸ் செய்யவில்லையாம். இயக்குனரின் அடுத்த சாய்ஸ் அஜீத் என்கிறார்கள். ஆனாலும் லிங்குசாமியை சுற்றி சுற்றி வருகிறார் கார்த்தி. மீண்டும் பையா போல ஒரு அதிரடி உருவாகலாம் என்கிறது கோடம்பாக்கக் குருவி!
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.