![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7Xme_9DeseQxUWxX1n5hQdvjpXvIqhq7c1147kUEoDCzJ424yyTu4RC9DaMNvIEtKIKCnL7f94TYPfFdSbbylGZzH3l5CJCaeaZ3fVY0TPGFYVfbvbIVsxWCZ7mXLn9c-JDPygamklMg/s200/aadukalam+movie+download+stills.jpg)
வெற்றிமாறனின் முதல் படம் பொல்லாதவனையும் கதிரேசனே தயாரித்திருந்தார். பொல்லாதவனில் நடித்த தனுஷ்தான் இதிலும் ஹீரோ.
1970 ல் நடந்த உண்மைச் சம்பவத்தை வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறாராம் வெற்றிமாறன். மதுரைப் பின்னணியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வெற்றிமாறனின் சொந்த ஊர் சென்னை. மதுரை அவருக்கு அந்நியம். அதனால் மதுரையில் பல மாதங்கள் தங்கியிருந்து அந்த அனுபவத்தைக் கொண்டு ஆடுகளத்தை எடுத்துள்ளார்.
தனுஷ் கருப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கருப்பு செய்யும் விஷயங்கள் ஏற்படுத்தும் விபரீதங்களே கதையின் அடிப்படை. ஆங்கிலே இந்திய பெண்ணாக அறிமுக நிடிகை டாப்ஸி நடித்துள்ளார். இன்னொரு அறிமுகம், ஈழக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன். இவர்களுடன் கிஷோர், டேனியல் பாலாஜ், ஜி.எம்.குமார், சிந்துமேனன், கருணாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பாடல்கள் யுகபாரதி, ஏகதாசி, சினேகன், யோகி பி மற்றும் வ.ஐ.ச.ஜெயபாலன்.
வரும் பொங்கலுக்கு ஆடுகளம் திரைக்கு வருகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.