மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ராணா அக்டோபர் 3 முதல்.

ர‌ஜினி நடிக்கும் ராணா படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 3ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது. இந்தப் படப்பிடிப்பில் தீபிகா படுகோன் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

ர‌ஜினியின் திடீர் உடல் நலக்குறைவால் தொடங்கப்பட்ட அன்றே ராணா படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. படம் ட்ராப்பாகுமா இல்லை மீண்டும் தொடங்கப்படுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. ர‌ஜினி சிங்கப்பூ‌ரிலிருந்து பூரண நலத்துடன் வீடு திரும்பியது ராணா மீதான நம்பிக்கையை அதிக‌ரித்தது. படம் கண்டிப்பாக தொடங்கப்படும் என்று உறுதி அளித்தார் ர‌ஜினி.

வரும் அக்டோபர் 3ஆம் தேதி மீண்டும் படப்பிடிப்பை கே.எ‌ஸ்.ரவிக்குமார் தொடங்குகிறார். தொடர்ந்து நடைபெற இருக்கும் படப்பிடிப்பில் ர‌ஜினியும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.