
யார் சூர்யாவை வைத்து படம் செய்தாலும் இடையில் அவரை வைத்து படம் பண்ணுவார் ஹரி. வாரணம் ஆயிரம் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போதுதான் அதன் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி தனது வேல் படத்தை வெற்றிகரமாக முடித்தார் ஹரி. ஆனால் யானைக்கும் அடி சறுக்குமில்லையா?
மாற்றானுக்குப் பிறகு ஹரிதான் சூர்யாவை இயக்குவதாக இருந்தது. ஆனால் இப்போது அந்த புராஜெக்ட் ட்ராப். அவருக்குப் பதில் வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார்.
இது வெங்கட்பிரபு பாணியில் அமைந்த காமெடிக் கதையாம். மாயாவிக்குப் பிறகு சூர்யா காமெடி வேடத்தில் நடிப்பதால் படத்தைப் பார்க்க எல்லோருக்கும் ஆர்வம். ஷூட்டிங் எப்போ போகப் போறீங்க?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.