மட்டக்களப்பு செலிங்கோ லைப் கிளை 04இல் தகாபுல் பிரிவினால் நடத்தப்பட்ட 2015 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. மட்டக்களப்பு ஏறாவூர் கல்வி கோட்டத்தில் 2015 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பாடசாலை மாணவர்களை கௌரவித்து அவர்களுக்கு வெற்றி கிண்ணங்களும், பரிசில்களும் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு செலிங்கோ லைப் கிளை 04 இன் முகாமையாளர் எஸ்.வேனுகரன் தலைமையில் இன்று மட்டக்களப்பு செலிங்கோ லைப் கிளை அலுவலகத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு செலிங்கோ லைப் கிளை 04 தகாபுல் பிரிவின் ஏற்பாட்டில் 2015 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து அவர்களுக்கு மாணவர்களுக்கு வெற்றி கிண்ணங்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு செலிங்கோ லைப் கிளை விற்பனை மேற்பார்வையாளர் வி.மகேஷ், செலிங்கோ லைப் கிளை உத்தியோகத்தர் திருமதி.ஆர்.நந்தினி மற்றும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு செலிங்கோ லைப் கிளை 04 இன் தகாபுல் பிரிவினை விரிவுபடுத்தும் முகமாக வேலைவாய்ப்புக்களும் வழங்கப்படவுள்ளன. இது தொடர்பான விபரங்களை 077 035 95 32, 075 278 95 68 ஆகிய தொலை பேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.