மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி நெறி மட்டக்களப்பில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணம் மகளிர் மற்றும் சிறுவர் அமைச்சின் சிறுவர் செயலகத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்ட செயலக ஒருங்கமைப்புடன் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வாண்மை விருத்தி பயிற்சி நெறி 2015 இரண்டு நாள் மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு கல்லடி கிரீன் காடன் விடுதியில் சிறுவர் செயலகம் – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் பணிப்பாளர் திருமதி சந்திமா நிகேரா தலைமையில் 10.12.2015 வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் ஆரம்ப  நிகழ்வாக அதிதிகளை மலர்மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டதுடன் தொடர்ந்து மங்களவிளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு மாவட்ட செயலக  முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தியின் மாவட்ட இணைப்பாளர் வி.முரளிதரன் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்த பயிற்சி நெறியில்  வளவாளர்களாக  வடமாகான கல்வி அமைச்சு ஆரம்ப  பிள்ளைப்பருவ பணிப்பாளர் செல்வி ஜெயா தம்பையா, மட்டக்களப்பு மாவட்ட  முன்பிள்ளைப்பருவ கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளர் எம்.புவிராஜ், மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் கலாநிதி எம்.வி.ரவிச்சந்திரன் ஆகியோர்கலந்துகொண்டனர்.

 இடம்பெற்ற  முதல் நாள் நிகழ்வில் கலந்துகொண்ட சிறுவர் செயலகம் – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் பணிப்பாளர்  திருமதி சந்திமா நிகேராவுக்கும், இந்த பயிற்சி நெறியில் வளவாளர்களாக கலந்துகொண்ட வளவாலர்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட செயலக ஒருங்கமைப்புடன் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி பயிற்சிக்கான நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த பயிற்சி நெறியின் இரண்டாம் நாளான இன்று வெள்ளிக்கிழமை பயிற்சி நெறிகளை முடித்துக்கொண்ட  உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட  உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் மட்டக்களப்பு கல்லடி கிரீன் காடன் விடுதியில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலக  முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தியின் மாவட்ட இணைப்பாளர் ஒழுங்கமைப்பில்  இடம்பெற்ற இந்த  இரண்டு நாள் பயிற்சி நெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில்   மாவட்ட செயலக கணக்காளர்  எம்.பிறேம்குமார் மற்றும் பயிற்சி நெறியில் பங்குபற்றிய கிழக்கு மாகாண முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

















Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.