மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ரஜினியின் வெடிச்சிரிப்பு

ஹாட்ரிக் அடிக்கப் போகிற சந்தோஷத்தில் இருக்கிறார் வெங்கட்பிரபு. சென்னை -28, சரோஜா, தொடர்ந்து கோவாவுக்காக காத்திருக்கிறது ரசிகர்கள் வட்டாரம். சுற்றி வளைத்து பார்த்தாலும் சரி, நேரடியாக முறைத்தாலும் சரி, வெங்கட்டின் ஒரே தந்திரம் சிரிப்பு. இதை வைத்துக் கொண்டுதான் பெரிய ஜனக்கடலை உள்ளங்கைக்குள் வைத்திருக்கிறார் அவர். கோவா எப்படி? அதையேன் கேட்கிறீங்க... இந்த படத்திலே பிரேம்ஜிக்கு பஞ்ச் டயலாக்கெல்லாம் இருக்கு தெரியுமா என்று வெடிக்கு திரி கொளுத்துகிறார் வெங்கட்.

தேனியிலிருந்து கோவாவுக்கு ஜாலி ட்ரிப் அடிக்கும் நண்பர்களுக்குள் நடக்கும் அடிதடி காதல் மோதல் நட்பு எல்லாவற்றையும் போட்டு குலுக்கி எடுக்கும் கதையாம் இது. சவுந்தர்யா ரஜினியிடம் கதை சொல்ல போயிருந்தாராம். அங்கே ஆரம்பித்து வைத்த சிரிப்பு, அப்படியே ரஜினி வரைக்கும் போயிருக்கிறது. அவரோ கதையை கேட்டுவிட்டு விழுந்து விழுந்து சிரிக்க, அந்த மூடிலேயே கோவாவுக்கு கிளம்பியது டீம். இவர்கள் போன சீசனில் மழை.

அப்பறம் என்ன? இதே போல லொக்கேஷன் உள்ள லங்காவி தீவுக்கு போய்விட்டார்கள். மலேசியாவுக்கு பக்கத்தில் இருக்கிறது இந்த இடம். சுமார் 40 நாட்கள் பிழிய பிழிய ஷ§ட்டிங்கை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பி சில நாட்கள் மட்டுமே ரெஸ்ட் எடுத்துக் கொண்டு மீண்டும் கோவாவுக்கு கிளம்பிவிட்டார்கள். (மழை விட்ருச்சு போல...)

ஒரேயடியா சிரிச்சிட்டு இருந்தா எப்படி? கொஞ்சம் சீரியஸ் ஆவுங்கப்பான்னு நினைச்ச மீடியா, இந்த படத்திலே நடிக்கும் சினேகா டூ பீஸ் டிரஸ்சில் நடிக்கிறாங்கன்னு கொளுத்திப் போட, மொத்த யூனிட்டும் மூட் அவுட். அதுக்குள்ளே இப்படி கொளுத்தி போட்டா எப்பிடி? படம் வந்தால் தெரியும், இது அவங்களுக்கே ஒரு புதிய கேரக்டர் என்று! அழுத்தமாக சொல்கிறார் வெங்கட்பிரபு.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.