
பெப்சி போராட்டத்தால் படப்பிடிப்புகள் ஸ்தம்பித்துப் போயுள்ளன. எனினும் ஒரு குரூப் மட்டும் தங்கு தடையில்லாமல் தங்களுடைய பணியை செய்து வருகின்றன. அவர்கள் இசைக் கலைஞர்கள். இவர்களுக்கு வாத்தியம் இசைப்பவர்களும் கூலாக தங்கள் வேலையை செய்து கரன்சி பார்க்கிறார்கள்.
துப்பாக்கியின் படப்பிடிப்டபு இந்தப் போராட்டத்தால் தடைபட்டாலும் ஹாரிஸின் பணிக்கு எந்த இடையூறும் இல்லை. கிருஷ் குரலில் ஒரு பாடலை பதிவு செய்திருக்கிறார்.
இன்று முதல் மும்பையில் துப்பாக்கியை தொடங்குவதாக பிளான். சென்னைக்கு வராமல் மும்பையிலேயே மொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிடுவதாக திட்டமிட்டுள்ளார்கள் விஜய்யும், முருகதாஸும். இதில் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்டாக வருகிறார் விஜய் என்பது முக்கியமானது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.