Thursday, April 30, 2009

**மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்.. - சிறுகதை!

{றஞ்சினி (ஜேர்மனி)}

எதிர்பாராத நிமிடத்தில் மரங்களை உலுப்பி அங்குமிங்குமாக ஆவேசத்தில் கூத்தாடுகிறது காற்று , கதிரவன் கலவரத்தில் ஒளித்துக்கொள்கொள்ள கருமுகில்கூடி மாகாநாடுபோடுகிறது ,முழங்கிய முழக்கத்தின் கோபத்தில் மின்னல் ஏழனமாக சிரித்துச்செல்கிறது இரச்சலுடன் வந்திறங்கும் மழையுடன் காற்று கலக்க நினைக்கையில் அங்குமிங்குமாக அலைகிறது மழை ,காற்றின் தாகமடங்க மழை விடாத ஆவேசத்தில் பொழிந்துகிண்டிருக்கிறது .

இயற்கை நடத்திக்கொண்டிருகும் கழியாட்டத்தில் எனைமறந்த நான் வீட்டு ஜென்னல்கள் அடித்துமுடியதில் விழித்துக்கொண்டேன்
ஜன்னல்கதவுகவுகளை பூட்டிவிட்டு..

இருள் சூழ்த மதியப்பொழுதில் தேநீருடன் புத்தகத்தைக் எடுத்துக்கொண்டு பல்கனிக்குபோகும் நீண்ட கண்ணாடிக்கதவருகே தரையில் போர்வையுடன் உட்காருகிறேன் தனிமையின் சுகமும் எதோ ஒருவித தவிப்புமாக எனது கனவு நீழ ..

கண்ணாடிஜென்னலூடாக என் கண்கள் பதிகிறது. மழை ஆவேசமாக யாருடனோ கோபித்துக்கொள்கிறது என் கண்களுடன் இல்லை என்பது
மட்டும் தெரியும், சிறுவயதிலிருந்தே மழையில் அலாதிகாதல்

மழைபெய்தவுடனே பேப்பரைக்கிழித்து கப்பல்செய்து அது ஓடும் அழகை ரசிப்பதிலும் அல்லது எதாவது கையில் கிடைப்பதை
வழிந்தோடும் மழைநீரோடு ஓட விடட்டுரசிப்பதிலும் ஒரு தனி இன்பம் ,மழையில் நனைவதிலிருந்து மழையில் குழிப்பதுவரை மிகவும் பிடித்தது .

இன்று இங்கு ஜன்னலருகிலிருந்து மழையை ரசிக்கும்போது பல அடிமனதில் உறைந்துவிட்ட நினைவுகள்..

நான் ரசித்த அந்த மழைக்காதலனைத்தான் என் அம்மாவும் ரசித்தாள், .நகரத்தில் இருந்து அந்த காடுகள் சூழ்ந்த வன்னி வீட்டிற்க்கு
வந்தபோது அவளுக்கும் ஆரம்பம் ஒரு பயங்கரம் நிறைந்த புதிராக இருந்ததாம், இருளும்போது அந்தக்காடுகள் அந்த வீட்டைச்சுற்றி
பெரிய கரடிகள் இருப்பதுபோல் தோன்றுமாம் (அவள் அங்கு சென்றபோது அருகில் அதிக மக்கள் இருந்ததில்லை என்பாள்,
அந்தவீட்டிலிருந்து கொஞ்சத்தூரம் சென்றால் சிறிய நகரம் அங்குதான்மனிதர்கள் நிறைய இருந்தார்கள் அங்குதான் பெரியபாடசாலைகள் ஆஸ்பத்திரியிலிருந்து எல்லாமே இருந்தது. )தூக்கமில்லாது கழித்த இரவுகளும் நாடு சுற்றும் வாலிபனாக இருந்த அப்பாவின் துணையில்லாதபொழுதுகளும் அம்மாவுக்கு இருளுடனும் அந்த ஊருடனும் ஒரு நட்பான ஒப்பந்தத்தை உருவாக்கியிருக்கவேண்டும் அவளின் தனிமையுடன் பறவைகளும் விலங்குகளும் அவளுக்கு நண்பர்களாகிப்போயின ,அந்த ஊர் அவள் சுதந்திரமாக நடமாடும் அளவுக்கு உறவாகி அவளுக்குள் இருந்த இயற்கையின் நேசிப்பினால் எல்லாவிதமான மரங்களும் பழங்களும் பல வண்ணப்பறவைகள் என்று அந்த வன்னி வீடு அழகிய சோலையாக மாறியது ,எங்கிருந்தெல்லாம் அம்மாவைத்தேடி மக்கள் வருவார்கள் அவரின் ஆலோசனைகள் ஆறுதல்களும் உதவியும் அவர்களுக்கு தேவையாக இருந்தது ,இப்படித்தான் என் அம்மா தன் வாழ்க்கையை வன்னியுடன் அர்ப்பணித்துக்கொண்டாள் ,

எப்போதாவது தோன்றும் அப்பாவை ஒரு விருப்பமில்லாதா கடுமையான வாத்தியாரைப்போலவே நோக்கவேண்டியிருந்தது அவருக்கும் எமக்கும் ஒரு நல்ல உறவு இருந்ததில்லை அப்பாவுக்கும் அம்மாவிற்க்கும் ஏற்படும் முரன்பாடுகள் அவளுக்கும் எமக்கும் சந்தோசத்தை தந்தவைகள் இல்லை ஆனாலும் அப்பாமீது அம்மா கொண்டிருந்த ஒருவித்க் காதலும் மதிப்பும் என்னால் இன்றுவரை புரிந்துகொள்ளமுடியாதது இதுதான் எமது எல்லா அம்மாக்களினதும் குணமாகவும் இருக்கிறது இருந்தது என நினைக்கிறேன் காதலும் மோதலும் .எனக்கும் அப்பாமீது ஒரு அன்பு இல்லாமலும் இல்லைத்தான் , பேதங்கள் எதுமில்லாத மனிதநேயத்தை நான் அவளிடம்தான் கற்றுக்கொண்டேன் ,அவளிடமிருந்து தோல்விகளையும் துன்பங்களையும் எதிர்கொண்டுவாழும் திடமான மனதை இன்றுவரை என்னால்
அவளிடமிருந்து கற்க்கவும் முடியவில்லைத்தான் அவளை நினைக்கும்போது பெருமையாக கண்கள் பனிக்கும் .அவளிடம் நிறைய கதைகள் இருந்தன சொல்வதற்கென்று தனது சிறுவயது ஆசைகள் ,தான் படிக்கவேண்டுமென்ரு இருந்தும் தன் திருணம் ஒரு விபத்தாக முடிந்ததுபற்றி,தன் சகோதரர்கலைப்பற்ரி அவளின் சிறுவயதில் தாயை இழந்து தனது அம்மம்மாவுடன் வாழ்ந்ததுபற்ரி இப்படி பல.நான் சிறுபெண்கனவுடன் இருந்ததால் அன்று அவளின் கதைகளைக்கேட்கும் நிலையில் இருந்ததில்லை ,5 வருடங்களுக்குமுன் அவளைபோய்ப்பார்த்தபோது

பிள்ளைகளை பிரிந்தசோகம் அவளை வாட்டியிருந்தது அப்போதும் அவளிடம் நிறைய கதைகள் இருந்தன ஆவலுடன் என்னிடம்
பகிர்ந்துகொண்டாள் அன்று நான் அவளிடம் அறியாத விடயங்கள் இன்று என் மனப்பக்குவத்தால் அறுதலாக புரிந்துகொள்ள முடிந்தது
அது அவளுக்கும் எனக்கும் ஒரு ஆறுதலைத்தந்தது ..

படிப்புக்காக அவளைப்பிரிந்து வெளியூர்போனது அதன்பின் அவளைமுழுதாக பிரிந்து புகலிடம் வந்தது எல்லாமே மின்னல்வேகத்தில் நடந்த அதிசயமான உண்மைகள் . ..

வன்னி வீட்டில் மழைவந்தால் செம்மண் வாசனையும் அடர்ந்த மரங்களில் விழுந்து வழியும் மழையின் சத்தமும் பார்த்துக்கொண்டிருக்க
அழகாகவும் சந்தோசமாகவும் இருக்கும்

எமது வீட்டின் பின்புற நான்கு சதுர முற்றத்தில் வந்து வழியும் மழைநீர் அருவிபோல் இருக்கும் அதில் குளிப்பதே ஒரு
புத்துணர்ச்சியானது . எல்லாமே நெஞ்சில் வலிக்கும் நினைவுகளின் தருணங்கள் .இந்த சூழலில் அந்த நினைவுகள் ஒரு மலங்கோலிக்கான
வதை நிறைந்த சுகந்தருபவை.

தொடர நினைக்கையில் தொலைபேசி அழைப்பு குலைத்துப்போகிறது..பெரிய பெருமூச்சொன்று என்னிடமிருந்து விடைபெற கண்கலங்க போர்வைக்குள் தஞ்சமாகிறேன். மீண்டும் ஜன்னலுக்கு திரும்புகையில் காற்று சிறிது அமைதியாகி மழை ஒரே கோட்டில் நேராக பெய்ய போராடிக்கொண்டிருந்தது. எனது ரசனைகளை ஆராதிக்கும் அந்த காதலன்.. அருகிருந்தால் இருந்தால். உண்மையில் மழையா அல்லது உள்ளுக்குள் மழையா? அவனது கேள்வி அவன் ஆசையுடன் எனை அணைத்து என் கவலைகளையும் கற்பனைகளையும் தனதாக்கி என் வலிகளை வருடிக்கொடுத்தான் . உண்மையில் மழைதான் இது எனது பதில்..

அவனின் வார்த்தைகள் என் வலிகளுக்கு இதமாக இருந்தது போர்வைக்குள் பெருகிய வெயர்வை எமைக் கரைக்க... நிமிடங்களும்
அவனும் மறைந்து நான் சுயத்தை அடைந்தபோது இயற்க்கை ஒரு சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தது. சூரியன் கலவரம்நீங்கி
மெதுவாக வெளிக்கிறான்.

அறையில் மெல்லியதாக இசைத்துக்கொண்டிருந்த கண்ணீரே...சந்தோஷக்கண்ணீரே பெண்ணே பெண்ணே வாராய் பெண்ணே உன்னோடு நான் கண்ட பந்தம் மண்ணோடு மழைகொண்ட சொந்தம் ....இந்தபாடல் வரிகள் மழையில் துள்ளி எழுவதுபோல் வரும் அப்பாடலின் தொடக்க இசை எல்லாமே இந்த சூழலிற்கேற்ப்ப எனக்காகவே இசைத்ததுபோல் மனம் சிலிர்த்தது .
மேலும் அறிய

Saturday, April 25, 2009

** காதலர்கள் பெற்றோரைக் கவர

காதலிக்கும் நபரை பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைக்கும் அந்த சந்திப்பு நிகழ்ச்சியைப் பற்றி முன்பு பார்த்தோம்.

அந்த சந்திப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றி சில குறிப்புகளை இங்கு தருகிறோம்.

அதாவது காதலரை நமது வீட்டிற்கும் அழைத்துச் சென்று அறிமுகம் செய்யலாம். இது சரியானதுதான்.

ஆனால், இந்த சந்திப்பின்போது பெற்றோர் தங்களது வீட்டில் எந்த பிரச்சினையும் இன்றி இயல்பாக இருப்பார்கள். ஆனால் உங்கள் காதலருக்குத்தான் புதிய இடம் எனவே அவர் கொஞ்சம் திணறித்தான் போவார்.

எனவே இந்த சந்திப்பு கோயில், பூ‌ங்கா, பொது நிகழ்ச்சி நட‌க்கு‌ம் இட‌ம் என இருவருக்கும் புதிய இடத்தில் அமைவது உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

தான் விரும்பியவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று பெற்றோரிடமும், பெற்றோர் எதிர்த்தாலும் உன்னைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று காதலரிடமும் சந்திப்புக்கு முன்னதாகவே சொல்லிவிடுங்கள்.

உங்களது உறுதியான மனநிலையை பெற்றோரிடம் தெரிவித்துவிட்டால், இந்த சந்திப்பின்போது ஏதேனும் பிரச்சினை வருவதோ, எதிர்மறையான முடிவையோ தவிர்க்கலாம்.

நீங்கள் காதலிக்கும் நபரிடம் உங்கள் உறுதித் தன்மையை சொல்வதன் மூலம், அவர் உங்களது பெற்றோரை சந்திக்கும்போது தன்னம்பிக்கையுடன் பேசுவார். அதிகமான அச்ச உணர்வோ, பயமோ வார்த்தைகளில் தெரியாது.

சந்திப்பிற்கு முன்னதாகவே பரஸ்பரம் இருவரும் தொலைபேசியில் பேச வைத்து விடுவதும் சிறந்தது. அப்போதுதான் நேரடியான சந்திப்பின்போது அவர்கள் எளிதாகப் பேசிக் கொள்வார்கள்.

குடும்பப் பின்னணியைப் பற்றி இருவரும் நன்கு தெரிந்து வைத்துக் கொள்வதும் நல்லது.

சந்திப்பின்போது ஒருவர் பக்கமாக இருந்து நீங்கள் எந்த பதிலையும் தெரிவிக்க வேண்டாம். அது நீங்கள் ஆதரவு தரும் பக்கத்திற்கு பலவீனத்தை ஏற்படுத்தும்.

இருவரும் எனக்குத் தேவை என்பது போல் உங்கள் பேச்சு அமையட்டும்.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள். எனவே முதல் சந்திப்பு ஒரு முழுமையான சந்திப்பாக அமையட்டும். சந்திப்பிற்கு என வெகு நேரம் ஒதுக்கி இரு தரப்பும் பேச அதிக நேரம் கொடுங்கள்.

எந்த போலியான வாக்குறுதிகளையும், விவரங்களையும் சந்திப்பின்போது சொல்ல வேண்டாம். அது தவறான வழிகாட்டுதலாக அமைந்துவிடும்.

இந்த சந்திப்பு இனிய சந்திப்பாக மாற்றுவது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. இனிய காதல் தம்பதிகளாக வாழ வாழ்த்துகிறோம்.
மேலும் அறிய

** பெற்றோரை கவர்வாரா காதலர்

காதல் என்றாலே உடலில் உள்ள அனைத்து ஹார்மோன்களும் தலையை தூக்கிப் பார்த்துவிட்டு போகின்றன. அவ்வளவு புத்துணர்ச்சியைக் கொடுக்கும் விஷயம் காதல்தான்.

காதலிக்கத் துவங்கிவிட்டாலே உடலில் ஒரு பரபரப்பு வந்து ஒட்டிக் கொள்ளும். நாம் காதலிப்பதை உரிய நபரிடம் சொல்லும்வரை கத்திமேல் வாழ்க்கைதான்.

அவரிடம் சொல்லி ஒப்புதல் பெற்றாலும் அந்த பரபரப்பு வேறொரு ரூபத்தில் நம்மை சுற்றிக் கொண்டிருக்கும்.

ஆம், பொது இடங்களில் எங்காவது ஒன்றாகச் செல்லும்போது இருவருக்கும் தெரிந்தவர்கள் யாராவது பார்த்துவிட்டால்... ஏன் பெற்றோர் யாராவது பார்த்துவிட்டால் என்ற அந்த அச்சமும் கொஞ்சம் சுவாரஸ்யமானதுதான். அது அனுபவித்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

இதுபோன்று காதலர்கள் காதலிக்கும் நேரத்தில் பல்வேறு விஷயங்களுக்கு பயந்து வாழ வேண்டியுள்ளது.

இதெல்லாம் ஒரு விஷயமா என்று கேட்காதீர்கள். இப்போது சொல்லப்போவதுதான் இருப்பதிலேயே பெரிய விஷயம்.

ஆம், நாம் காதலிக்கும் நபரை நமது பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைக்கும் அந்த ஒரு சந்திப்பு. அந்த நேரத்தில் நமது மனம், சிந்தனை, உடல், செயல் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைகளுக்கு அல்லவா ஓடிக் கொண்டிருக்கும்.

வீட்டிலோ அல்லது கோயில், வெளி நிகழ்ச்சி என எங்கு வேண்டுமானாலும் இந்த சந்திப்பு நிகழலாம்.
நமது பெற்றோரை காதலர் கவர்வாரா, பெற்றோரது மனதிற்கு பிடித்தவராக காதலர் இருப்பாரா? காரசார விவாதம் வந்துவிடுமா என்று கோடிக்கோடி கேள்விகள் மின்னல் போல சிந்தனையில் சிதறிக் கொண்டிருக்கும்.

பெற்றோரிடம் காதலரைப் பற்றியும், காதலரிடம் பெற்றோரைப் பற்றியும் நாம் சொன்னவைகள் எல்லாம் தண்ணீரில் எழுதியதாகி விடுமா என்ற எண்ணத்தில் நமது மனம் குதிரையாக ஓடிக் கொண்டிருக்கும்.
பெற்றோருக்கு பிடித்தது போல நடை, உடை, பாவனைகள் எல்லாம் காதலரிடம் ஒப்பித்துவிட்டிருந்தாலும் பார்த்த மாத்திரத்தில் பிடிக்காமல் போய்விடும் அபாயமும் உள்ளது.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நன்கு பேசிக் கொண்டிருக்கும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பூகம்பம் வெடிக்கலாம். ஏனெனில் இந்த சந்திப்பு இரண்டு பகை நாட்டுத் தளபதிகளின் சந்திப்பைப் போன்றதுதான்.

ஒரு சில பெற்றோர் வேண்டுமானால் ரொம்ப விட்டுக் கொடுத்து முழு மனதுடன் காதலுக்கு பச்சைக் கொடி காட்டலாம். பெரும்பாலான பெற்றோர்கள், தங்கள் பிள்ளை காதலிப்பதை அறிந்து கொதித்து பின்னர் காதலரை சந்திக்க வேண்டும் என்று ஆணையிடுவார்கள்.

இந்த சந்திப்பின் மூலம் காதலரிடம் குறை காண மட்டும் பெற்றோர்கள் காத்திருப்பார்கள். இதுபோன்ற சமயங்களில் காதலர்கள் என்னதான் அமைதியாக, விட்டுக் கொடுத்துப் பேசினாலும் பெற்றோர்கள் அவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இந்த தருணம் எப்படி இருக்கும் என்பதை நம்மில் பாதி பேர் உணர்ந்திருப்பார்கள்.

இந்த சமயத்தில் நமது அச்ச உணர்ச்சியே நமக்கு பகையாகிவிடும். எனவே இதுபோன்ற தருணத்தில் நாம் மிக அமைதியாக, எதார்த்தமாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

நமது இயல்பான நிலையே நமது காதலருக்கும் அமைதியைக் கொடுக்கும். இதனால் இந்த சந்திப்பு வெற்றி பெற வழி ஏற்படும். நாமே நமது காதலரை கலங்கச் செய்துவிடக் கூடாது.

‌நீ‌ங்க‌ள் இய‌ல்பாக இரு‌ந்து உ‌ங்க‌ள் காதலரையு‌ம் இய‌ல்பாக இரு‌க்க‌வி‌ட்டு, உ‌ங்க‌ள் காதலை வாழ வையு‌ங்க‌ள்.

காதலர்கள் பெற்றோரைக் கவர சில குறிப்புகள் - அடுத்த கட்டுரையில்
மேலும் அறிய

++ ‌வ‌ெ‌ற்‌றிகரமான திருமண வா‌ழ்‌க்கை‌யி‌ன் ரக‌சிய‌ம்!

இது ஒரு சுவார‌‌ஸ்யமான கதை. அதாவது ஒரு த‌ம்ப‌திக‌ள் த‌ங்களது ‌திருமண வா‌ழ்‌க்கையை வெ‌ற்‌றிகரமாக வா‌ழ்‌ந்தத‌‌ற்கான ரக‌சிய‌ம் ப‌ற்‌றியது.

கதை ஆர‌ம்ப‌ம்...

‌திருமண வா‌ழ்‌க்கையை எ‌ந்த ‌பிர‌ச்‌சினை‌யு‌ம் இ‌ல்லாம‌ல் வா‌ழ்‌ந்த ஜோடிக‌ள் த‌ங்களது 25வது ‌திருமண நாளை‌க் கொ‌ண்டாடினா‌ர்க‌ள்.

ஊரையே‌க் கூ‌ட்டி ‌விரு‌ந்து வை‌த்து த‌ங்களது ‌திருமண நாளை‌க் கொ‌ண்டாடிய த‌ம்ப‌தி‌யினரை‌ப் ப‌ற்‌றி அ‌றி‌ந்த அ‌ந்த ஊ‌ர் செ‌ய்‌தியாள‌ர் ஒருவ‌ர், அவ‌ர்களை‌ப் பே‌ட்டி‌க் க‌ண்டு ப‌த்‌தி‌ரி‌க்கை‌யி‌ல் ‌பிரசு‌ரி‌க்க ‌விரு‌ம்‌பினா‌ர்.

நேராக அ‌ந்த த‌ம்ப‌திக‌ளிட‌ம் செ‌ன்று, 25ஆ‌ம் ‌திருமண நாளை‌ ஒ‌ற்றுமையாக‌க் கொ‌ண்டாடுவது எ‌ன்பது பெ‌ரிய ‌விஷய‌ம். இது உ‌ங்களா‌ல் எ‌ப்படி முடி‌ந்தது. உ‌ங்களது ‌திருமண வா‌ழ்‌‌வி‌ன் வெ‌ற்‌றி ரக‌சிய‌ம் எ‌ன்ன எ‌ன்று கே‌ட்டா‌ர்.

இ‌ந்த கே‌ள்‌வியை கே‌ட்டது‌ம், அ‌ந்த கணவ‌ரு‌க்கு தனது பழைய தே‌னிலவு ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள் ‌நினைவு‌க்கு வ‌ந்தது.

"நா‌ங்க‌ள் ‌திருமண‌ம் முடி‌ந்தது‌ம் தே‌னிலவு‌க்காக ‌ஷ‌ி‌ம்லா செ‌‌ன்றோ‌ம். அ‌ங்கு எ‌ங்களது பயண‌ம் ‌சிற‌ப்பாக அமை‌ந்தது. அ‌ப்பகு‌தியை சு‌ற்‌றி‌ப் பா‌ர்‌க்க நா‌ங்க‌ள் கு‌திரை ஏ‌ற்ற‌ம் செ‌ல்வது எ‌ன்று ‌தீ‌ர்மா‌னி‌த்தோ‌ம்.

அத‌ற்காக இர‌ண்டு கு‌திரைகளை‌த் தே‌ர்‌ந்தெடு‌த்து, இருவரு‌ம் ஒ‌வ்வொரு கு‌‌திரை‌யி‌ல் ஏ‌றி‌க் கொ‌ண்டோ‌ம். எ‌னது கு‌திரை ‌மிகவு‌ம் அமை‌தியாக செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்தது. ஆனா‌ல் எ‌ன் மனை‌வி செ‌ன்ற கு‌திரை ‌மிகவு‌ம் குறு‌ம்பு‌த்தனமானதாக இரு‌ந்தது. ‌திடீரென ஒரு து‌ள்ள‌லி‌ல் எ‌ன் மன‌ை‌வியை ‌அது கீழே‌த் த‌ள்‌ளியது.

அவ‌ள் ‌‌கீழே இரு‌ந்து எழு‌ந்து சுதா‌ரி‌த்து‌க் கொ‌ண்டு அ‌ந்த கு‌திரை‌யி‌ன் ‌மீது ‌மீ‌ண்டு‌ம் ஏ‌றி அம‌ர்‌ந்து கொ‌ண்டு, "இதுதா‌ன் உன‌க்கு முத‌ல் முறை" எ‌ன்று அமை‌தியாக‌க் கூ‌றினா‌ள்.

‌சி‌றிது தூர‌ம் செ‌ன்றது‌ம் ‌மீ‌ண்டு‌ம் அ‌ந்த கு‌திரை அ‌வ்வாறே செ‌ய்தது. அ‌ப்போது‌ம் எ‌ன் மனை‌வி ‌மிக அமை‌தியாக எழு‌ந்து கு‌திரை‌யி‌ன் ‌மீது அம‌ர்‌ந்து கொ‌ண்டு "இதுதா‌ன் உன‌க்கு இர‌ண்டா‌ம் முறை" எ‌ன்று கூ‌றியவாறு பய‌ணி‌க்க‌த் தொட‌ங்‌கினா‌ள்.

மூ‌ன்றா‌ம் முறையு‌ம் கு‌திரை அ‌வ்வாறு செ‌ய்தது‌ம், அவ‌ள் வேகமாக அவளது கை‌த்து‌ப்பா‌க்‌கியை எடு‌த்து அ‌ந்த கு‌திரையை சு‌ட்டு‌க் கொ‌ன்று‌வி‌ட்டா‌ள்!!!

இதை‌க் க‌ண்டு அ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்த என‌க்கு ‌மிகவு‌‌ம் கோப‌ம் வ‌ந்து‌வி‌ட்டது. நா‌ன் அவளை ‌தி‌ட்டினே‌ன். "ஏ‌ன் இ‌ப்படி செ‌ய்தா‌ய்? ‌நீ எ‌ன்ன மு‌ட்டாளா? ஒரு ‌வில‌ங்கை‌க் கொ‌ன்று‌வி‌ட்டாயே? அ‌றி‌வி‌ல்லையா?" எ‌ன்று கே‌ட்டே‌ன்.

அவ‌ள் ‌மிகவு‌ம் அமையாக எ‌ன்னை‌ப் பா‌ர்‌த்து, "இதுதா‌ன் உ‌ங்களு‌க்கு முத‌ல் முறை" எ‌ன்றா‌ள்.

அ‌வ்வளவுதா‌ன். அத‌ன்‌பிறகு எ‌ங்களது வா‌ழ்‌க்கை ‌மிகவு‌ம் அமை‌தியாக செ‌ன்று கொ‌ண்டிரு‌க்‌கிறது எ‌ன்றா‌ர் கணவ‌ர்.
மேலும் அறிய

Wednesday, April 22, 2009

++ உண்மையிலேயே நீங்கள் காதலர்களா?




ஒன்றாக இருக்கும்போது பட்டாம்பூச்சி பறப்பதும், நீண்ட நேர சலிக்காத உரையாடல்களும், ஒருவரை ஒருவர் அதிக அன்பு வைத்திருப்பது மட்டுமே காதலா? காதலைச் சொல்லியிருந்தாலும் சரி சொல்லாதக் காதலாக இருந்தாலும் சரி காதலர்களுக்கான சில நடவடிக்கைகள் உங்களுக்குள் இருக்கிறதா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள்.

இதெல்லாம் இல்லையென்றால் உடனே நீங்கள் காதலர்கள் இல்லை என்றோ, காதலர் உங்களை ஏமாற்றிவிட்டார் என்றோ அர்த்தமல்ல.

நீங்கள் தற்போது நல்ல நண்பர்களாக இருக்கின்றீர்கள். ஒருவருக்கு பிடித்த, பிடிக்காத விஷயங்களைப் பற்றி மற்றொருவருக்கு தெரியும், அவருடைய உணர்ச்சிகளை நன்கு புரிந்து கொண்டிருக்கிறீர்கள். தற்போதுதான் உங்களுக்குள் இருக்கும் அந்த அன்பு நேசமாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது என்பது உறுதி.

சரி காதலன் செய்ய வேண்டியது...

உங்களுக்கு முதல் முன்னுரிமை அளித்திருப்பது.

உங்களை அவரது குடும்பத்தாருக்கு அறிமுகம் செய்து வைத்திருப்பது.

எதிர்காலத் திட்டங்களை வகுத்து வைத்திருப்பது.

எந்த ஒரு காரியத்தையும் உங்களை வைத்துக் கொண்டு செய்வது.

அவரது ரகசியங்களையும், எதிர்கால கனவுகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வது.

உங்களது தோழிகளை கவருவதில் ஆர்வம் காட்டுதல்.

உங்களை பணி அல்லது மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்க முயற்சி எடுப்பது

எதிர்பாராத விதமாக பரிசுகளை அனுப்புதல், உங்களது ஒவ்வொரு செயலுக்கும் பாராட்டு மழை பொழிவதும்.


காதலி செய்ய வேண்டியது

தான் செலவிட்ட மறக்கமுடியாத நாட்களையும், நிகழ்ச்சிகளையும் உங்களிடம் பரிமாறிக் கொள்வது.

ஒரு நாள் முழுவதும் நடந்த சிறு சிறு விஷயங்களை ஒன்று விடாமல் உங்களிடம் ஒப்பிப்பது.

உங்களுடனான வாழ்க்கை, குழந்தை, திருமணம், முதுமை, பயணம் போன்றவற்றைப் பற்றி அடிக்கடி பேசுதல்.

உங்களை அடிக்கடி கோபப்படுத்துதல்

உங்கள் அம்மாவிடம் தொலைபேசியில் அதிக நேரம் பேசுதல்.

உங்களது செயல்களைப் பற்றிய கடுமையான விமர்சனம் தெரிவிப்பது.

உங்களுடன் வெளியே செல்ல ஏதாவது ஒரு காரணம் தேடுவது.

உங்களது கடந்தகால, நிகழ்கால, எதிர்காலங்களைப் பற்றியை கேள்விகளை அடுக்கிக் கொண்டே போவது

உங்களை அடிக்கடி அதிர்ச்சிக்குள்ளாக்குதல் போன்றவை.

இதெல்லாம் ஒரு வரைமுறைதான். இதையெல்லாம் தாண்டியும் பல காதல்கள் வாழ்ந்து சரித்திரம் படைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.

அதில் ஒன்றாகவும் உங்கள் காதல் இருக்கலாம்.

காதலிக்கும் முன் பல முறை யோசியுங்கள். ஆனால் காதலித்த பின்பு வேறு எதையும் யோசிக்காதீர்கள் நேசிப்பதைத் தவிர.
மேலும் அறிய

++ காதல் பொன் மொழிகள்


காதல் என்பது.. எப்போது இருவர் ஒருவரை ஒருவர் விட்டு பிரிந்து வாழ முடியாமல் போகிறதோ, தங்களது வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள நினைக்கின்றார்களோ அப்போது உருவாவதுதான்.

ஒருவருக்கொருவர் கருத்தொற்றுமை இல்லாவிட்டால் அது காதல் இல்லை.

இதயத்திற்கு ரத்தமாகும், உடலுக்கு தண்ணீராகவும் இருப்பது காதல்.

காதல் என்பது அழகான கனவு.

காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் விவரிக்க முடியாத அளவிற்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

காதல் என்பது போரைப் போன்றது. துவக்குவது எளிது. முடிப்பது கடினம்.

காதல் மகிழ்ச்சியை அளிக்குமேத் தவிர மகிழ்ச்சியாக இருக்க விடாது.

காதல் இதயத்தில் இருந்து வர வேண்டும். கண்களில் இருந்து அல்ல.

காதலிப்பதை விட ஏதாவது சிறந்த பொருள் ஒன்று இருந்தால் அது காதலிக்கப்படுவதாக இருக்கும்.

காதல் இதயத்தை கனக்கச் செய்துவிட்டு மூளையை காலியாக்கிவிடும்.

சில சமயம் கண்களால் பார்க்க முடியாத விஷயங்களை இதயம் பார்க்கும். அதுதான் காதல்.

காதலில் விழுவதற்கு புவியீர்ப்பு சக்தியின் பங்கு ஏதும் இல்லை.

காதல் காதல் தான். அது எப்போதும் சாயம் போவதில்லை.

காதலுக்காக உயிரிழப்பவர்களும் உண்டு, காதலை இழந்ததால் உயிரிழப்பவர்களும் உண்டு.

நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்க வைக்க முடியும்.

காதல் என்பது வாழ்க்கையில் ஒரே ஒரு முறை வரும் சலுகை.
மேலும் அறிய

++ காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள்


காதலிப்பதை நீங்கள் உணர்ந்து, நீங்கள் காதலிப்பவரிடம் உங்கள் காதலை சொல்லும் முன் உங்களிடம் நீங்களே கேட்க வேண்டிய சில கேள்விகள் உள்ளன.

அவற்றை நீங்கள் உங்கள் காதலை வெளிப்படுத்துவதற்கு முன்பு மட்டுமே கேட்க வேண்டும். அதற்குப் பிறகு இந்த கேள்விகளைக் கேட்டால் அது உங்கள் காதலையே கேள்விக்குறியாக்கிவிடும்.

முதலில் ஆண்களிடம் வருவோம். அதாவது ஒரு பெண்ணைப் பார்த்து அவளை பிடித்துவிட்டது. அவளையும் நம்மைக் கவனிக்க வைத்தாகிவிட்டது. அப்புறம் என்ன அவளிடம் சென்று பேசுவதுதான், தன்னுடைய காதலை வெளிப்படுத்துவதுதான்.

ஒரு பெண்ணிடம் பேசலாம் என ஒரு ஆணுக்கு தைரியம் வரும் சூழலில் கீழ்க்கண்ட கேள்விகளை தனக்குள்ளே கேட்டுக் கொள்வது அவனுக்கும், அவளது காதலுக்கும் மிகச் சிறந்ததாகும்.

முதல் கேள்வி, அவளுக்கு நான் சரியான நபர்தானா?

என்னால் அவளை சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியுமா?

எனக்கு அதற்கான தகுதிகள் இருக்கிறதா?

நான் அவளை விரும்புவது சரிதானா?

அவள் என்னால் சந்தோஷமடைவாளா?

என் சந்தோஷம் அவளிடம்தான் இருக்கிறதா?

அவளுக்காக நான் மற்றவர்களை இழக்கும் அளவிற்கு தைரியம் உடையவனா?

அவள்தான் என் வாழ்க்கை என்று முழுமையாக நம்புகிறேனா?

போன்ற கேள்விகளை ஒன்றுக்கு இரு முறை தனக்குள்ளே கேட்டுப் பார்த்து அதற்கு சரியான பதில்களைக் கூற வேண்டும்.

நீங்கள் காதலிப்பது அவளை மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே இருக்க வேண்டுமேத் தவிர, ஊர் சுற்றிவிட்டு, சலித்ததும் பிரிந்து விடுவதற்காக இருக்கவேக் கூடாது. இவை அனைத்துக்கும் சரி என்ற பதில் வந்தால் மட்டுமே அந்த பெண்ணிடம் உங்கள் காதலை தெரிவிக்க வேண்டும்.

அதிகபட்சமான கேள்விகளுக்கு இல்லை என்ற பதில் வந்தால் உடனடியான அவளது கண்ணில் படாமல் ஓடிவிடுங்கள்.

ஆணைப் போலவே பெண்ணுக்கும் சில விஷயங்கள் உள்ளன. இதுவரை தூரமாய் இருந்து பார்த்து வந்த ஒருவன் அருகே வந்து பேசுகிறான் எனும் பொழுது அவளும் காதலின் அடுத்த கட்டத்தில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.

பதில் சொல்ல வேண்டுமா? அல்லது தட்டிக்கழிக்க வேண்டுமா என முடிவெடுக்கும் முன்னர் அடுத்து வரும் கேள்விகளை மனதிற்குள் கேட்டுப் பார்த்துவிடுவது நல்லது.

நான் செய்வது சரிதானா?

எனது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும் அளவிற்கு எனக்கு தகுதியும், வயதும் உள்ளதா?

இதைத் தவிர்ப்பது நல்லதா? தேர்ந்தெடுப்பது சிறந்ததா?

இவன் உண்மையில் நல்லவனாகவும், உண்மையில் காதலிப்பவனாகவும் மனதுக்கு தெரிகிறதா?

என்னுடைய நடத்தைகள் ஏதாவது அவனது கவனத்தை சிதறடித்துவிட்டதா?

என் மனதில் இருக்கும் அந்த உருவத்துடன் இவன் ஒத்து வருவானா?

இவன் இல்லை என்றால் நம்முடைய வாழ்வில் சந்தோஷம் இருக்காது என்று நம்புகிறாயா?

இவனுக்காக நாளை ஒரு பிரச்சினை என்றால் உறவினர்களுடன் போராடவும், அவர்களை விட்டு விலகி வரவும் முடியுமா?

மேற்கண்ட கேள்விகளில் ஏதாவது ஒன்றிரண்டிற்காவது தவறான பதில்கள் கிடைக்கும் பட்சத்தில் காதலில் அடுத்த கட்டத்திற்குள் நுழையாமல் இருப்பதே நல்லது.

முடிந்தால் அவரிடம் உங்களது நிலையை தெளிவாக விளக்கிவிட்டு விலகிக் கொள்வது இருவருக்கும் சிறந்தது.

ஆண்கள் என்பவர்கள் ஒரு ரப்பர் வளையம் போன்றவர்கள். பெண்களுக்காக எத்தனை தூரம் வேண்டுமானாலும் இழுபடுவார்கள். ஆனால் பெண் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் மீண்டும் பழைய நிலைமைக்கே போய்விடவும் அவர்களால் முடியும்.

எனவே ஆணின் மனம் புண்பட்டுவிடும் என்று எந்த முடிவையும் எடுக்க வேண்டியதில்லை. உண்மையில் உங்கள் மனதுக்கு பிடித்து, உங்களால் கடைசி வரை போராடி கல்யாணம் செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கைக் கொண்டால் மட்டும் உங்களது பதிலை ஆம் என்று அழுத்தம் திருத்தமாக கூறுங்கள்.


பெண் தனது பதிலை சொல்லும் முன் தனக்குள் சில கேள்விகளைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.
மேலும் அறிய

Friday, April 17, 2009

++நாளை ஆரம்பம் IPL



நாளை கிரிக்கெட்டின் களியாட்டத் திருவிழாவான IPL 2009 தென் ஆபிரிக்காவில் ஆரம்பிக்கப் போகிறது.

இது தொடர்பான தகவல்கள்

Indian Premier League 2009 Schedule, IPL 2009 Fixtures, IPL Fixtures in South Africa

Sat 18
12:30 local, 10:30 GMT 1st match - Chennai Super Kings v Mumbai Indians
Newlands, Cape Town

Sat 18 (D/N)
16:30 local, 14:30 GMT 2nd match - Bangalore Royal Challengers v Rajasthan Royals
Newlands, Cape Town

Sun 19
12:30 local, 10:30 GMT 3rd match - Delhi Daredevils v Kings XI Punjab
Newlands, Cape Town

Sun 19 (D/N)
16:30 local, 14:30 GMT 4th match - Deccan Chargers v Kolkata Knight Riders
Newlands, Cape Town

Mon 20 (D/N)
16:30 local, 14:30 GMT 5th match - Bangalore Royal Challengers v Chennai Super Kings
St George's Park, Port Elizabeth

Tue 21
12:30 local, 10:30 GMT 6th match - Kings XI Punjab v Kolkata Knight Riders
Kingsmead, Durban

Tue 21 (D/N)
16:30 local, 14:30 GMT 7th match - Rajasthan Royals v Mumbai Indians
Kingsmead, Durban

Wed 22 (D/N)
16:30 local, 14:30 GMT 8th match - Bangalore Royal Challengers v Deccan Chargers
Newlands, Cape Town

Thu 23
12:30 local, 10:30 GMT 9th match - Chennai Super Kings v Delhi Daredevils
Kingsmead, Durban

Thu 23 (D/N)
16:30 local, 14:30 GMT 10th match - Kolkata Knight Riders v Rajasthan Royals
Newlands, Cape Town

Fri 24 (D/N)
16:30 local, 14:30 GMT 11th match - Bangalore Royal Challengers v Kings XI Punjab
Kingsmead, Durban

Sat 25
12:30 local, 10:30 GMT 12th match - Deccan Chargers v Mumbai Indians
Kingsmead, Durban

Sat 25 (D/N)
16:30 local, 14:30 GMT 13th match - Chennai Super Kings v Kolkata Knight Riders
Newlands, Cape Town

Sun 26
12:30 local, 10:30 GMT 14th match - Bangalore Royal Challengers v Delhi Daredevils
St George's Park, Port Elizabeth

Sun 26 (D/N)
16:30 local, 14:30 GMT 15th match - Kings XI Punjab v Rajasthan Royals
Newlands, Cape Town

Mon 27
12:30 local, 10:30 GMT 16th match - Deccan Chargers v Chennai Super Kings
Kingsmead, Durban

Mon 27 (D/N)
16:30 local, 14:30 GMT 17th match - Kolkata Knight Riders v Mumbai Indians
St George's Park, Port Elizabeth

Tue 28 (D/N)
16:30 local, 14:30 GMT 19th match - Delhi Daredevils v Rajasthan Royals
SuperSport Park, Centurion

Wed 29
12:30 local, 10:30 GMT 18th match - Kolkata Knight Riders v Bangalore Royal Challengers
Kingsmead, Durban

Wed 29 (D/N)
16:30 local, 14:30 GMT 20th match - Kings XI Punjab v Mumbai Indians
Kingsmead, Durban

Thu 30
12:30 local, 10:30 GMT 21st match - Delhi Daredevils v Deccan Chargers
SuperSport Park, Centurion

Thu 30 (D/N)
16:30 local, 14:30 GMT 22nd match - Rajasthan Royals v Chennai Super Kings
SuperSport Park, Centurion

Indian Premier League 2009 Schedule - May 2009
Fri 1
12:30 local, 10:30 GMT 23rd match - Mumbai Indians v Kolkata Knight Riders
Buffalo Park, East London

Fri 1 (D/N)
16:30 local, 14:30 GMT 24th match - Kings XI Punjab v Bangalore Royal Challengers
Kingsmead, Durban

Sat 2
12:30 local, 10:30 GMT 25th match - Deccan Chargers v Rajasthan Royals
St George's Park, Port Elizabeth

Sat 2 (D/N)
16:30 local, 14:30 GMT 26th match - Chennai Super Kings v Delhi Daredevils
New Wanderers Stadium, Johannesburg

Sun 3
12:30 local, 10:30 GMT 27th match - Kings XI Punjab v Kolkata Knight Riders
St George's Park, Port Elizabeth

Sun 3 (D/N)
16:30 local, 14:30 GMT 28th match - Bangalore Royal Challengers v Mumbai Indians
New Wanderers Stadium, Johannesburg

Mon 4 (D/N)
16:30 local, 14:30 GMT 29th match - Deccan Chargers v Chennai Super Kings
Buffalo Park, East London

Tue 5
12:30 local, 10:30 GMT 30th match - Kings XI Punjab v Rajasthan Royals
Kingsmead, Durban

Tue 5 (D/N)
16:30 local, 14:30 GMT 31st match - Delhi Daredevils v Kolkata Knight Riders
Kingsmead, Durban

Wed 6 (D/N)
16:30 local, 14:30 GMT 32nd match - Mumbai Indians v Deccan Chargers
SuperSport Park, Centurion

Thu 7
12:30 local, 10:30 GMT 33rd match - Bangalore Royal Challengers v Rajasthan Royals
SuperSport Park, Centurion

Thu 7 (D/N)
16:30 local, 14:30 GMT 34th match - Chennai Super Kings v Kings XI Punjab
SuperSport Park, Centurion

Fri 8 (D/N)
16:30 local, 14:30 GMT 35th match - Delhi Daredevils v Mumbai Indians
Buffalo Park, East London

Sat 9
12:30 local, 10:30 GMT 36th match - Deccan Chargers v Kings XI Punjab
De Beers Diamond Oval, Kimberley

Sat 9 (D/N)
16:30 local, 14:30 GMT 37th match - Chennai Super Kings v Rajasthan Royals
De Beers Diamond Oval, Kimberley

Sun 10
12:30 local, 10:30 GMT 38th match - Bangalore Royal Challengers v Mumbai Indians
St George's Park, Port Elizabeth

Sun 10 (D/N)
16:30 local, 14:30 GMT 39th match - Delhi Daredevils v Kolkata Knight Riders
New Wanderers Stadium, Johannesburg

Mon 11 (D/N)
16:30 local, 14:30 GMT 40th match - Deccan Chargers v Rajasthan Royals
De Beers Diamond Oval, Kimberley

Tue 12
12:30 local, 10:30 GMT 41st match - Bangalore Royal Challengers v Kolkata Knight Riders
SuperSport Park, Centurion

Tue 12 (D/N)
16:30 local, 14:30 GMT 42nd match - Kings XI Punjab v Mumbai Indians
SuperSport Park, Centurion

Wed 13 (D/N)
16:30 local, 14:30 GMT 43rd match - Deccan Chargers v Delhi Daredevils
Kingsmead, Durban

Thu 14
12:30 local, 10:30 GMT 44th match - Bangalore Royal Challengers v Chennai Super Kings
Kingsmead, Durban

Thu 14 (D/N)
16:30 local, 14:30 GMT 45th match - Mumbai Indians v Rajasthan Royals
Kingsmead, Durban

Fri 15 (D/N)
16:30 local, 14:30 GMT 46th match - Kings XI Punjab v Deccan Chargers
OUTsurance Oval, Bloemfontein

Sat 16
12:30 local, 10:30 GMT 47th match - Chennai Super Kings v Mumbai Indians
St George's Park, Port Elizabeth

Sat 16 (D/N)
16:30 local, 14:30 GMT 48th match - Deccan Chargers v Kolkata Knight Riders
New Wanderers Stadium, Johannesburg

Sun 17
12:30 local, 10:30 GMT 49th match - Kings XI Punjab v Deccan Chargers
New Wanderers Stadium, Johannesburg

Sun 17 (D/N)
16:30 local, 14:30 GMT 50th match - Delhi Daredevils v Rajasthan Royals
OUTsurance Oval, Bloemfontein

Mon 18 (D/N)
16:30 local, 14:30 GMT 51st match - Chennai Super Kings v Kolkata Knight Riders
SuperSport Park, Centurion

Tue 19 (D/N)
16:30 local, 14:30 GMT 52nd match - Delhi Daredevils v Bangalore Royal Challengers
New Wanderers Stadium, Johannesburg

Wed 20
12:30 local, 10:30 GMT 53rd match - Rajasthan Royals v Kolkata Knight Riders
Kingsmead, Durban

Wed 20 (D/N)
16:30 local, 14:30 GMT 54th match - Chennai Super Kings v Kings XI Punjab
Kingsmead, Durban

Thu 21
12:30 local, 10:30 GMT 55th match - Mumbai Indians v Delhi Daredevils
SuperSport Park, Centurion

Thu 21 (D/N)
16:30 local, 14:30 GMT 56th match - Bangalore Royal Challengers v Deccan Chargers
SuperSport Park, Centurion

Fri 22 (D/N)
16:30 local, 14:30 GMT 1st Semi-Final - TBC v TBC
SuperSport Park, Centurion

Sat 23 (D/N)
16:30 local, 14:30 GMT 2nd Semi-Final - TBC v TBC
New Wanderers Stadium, Johannesburg

Sun 24 (D/N)
16:30 local, 14:30 GMT Final - TBC v TBC
New Wanderers Stadium, Johannesburg
மேலும் அறிய

Friday, April 10, 2009

**வாழ்க வளமுடன் !

முன்னுரை:
வாழ்க வளமுடன் ! பொறுமையாக இப்பதிவை முழுவதும் படித்து ( வாசித்து ) கருத்தை உள்வாங்கிக் கொள்ளுங்கள். வாழ்க வளமுடன் !

1) வாழ்க வளமுடன் ! அருட்பேரா ற்றல் கருணையினால் உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைச்செல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்று மேலோங்கி வாழ்வோம். வாழ்க வளமுடன் !

2) வாழ்க வளமுடன் ! அருட்பேரா ற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும், எல்லா தொழில்களிலும் உறுதுணையாகவும், பாதகாப்பாகவும், வழி நடத்துவதாகவும் அமையுமாக. வாழ்க வளமுடன் !


பின்னுரை::
ஏசுகிருஸ்த்துவும், அல்லாவும், இந்து கடவுளர்களும் பேரா ற்றல் உடையவர்களாக இருப்பதால் தான், அவர்களை நாம் வணங்குகின்றோம், வேண்டுகின்றோம், பிரா ர்த்திக்கின்றோம், பணிகின்றோம், இறைஞ்சுகின்றோம், மண்டியிடுகிண்றோம் நம்மையெல்லாம் காக்க. யார் எந்த கடவுளை வணங்கினாலும் என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்று என்று பலரும் பலவாறாய் வணங்குகிறோம்.. அதன் கருத்துத் தான் இந்த நல்வாக்கு. நல்லவைகளை, நல்ல வார்த்தைகளை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தால் நல்லதாகவே நடக்கும் என்பது பெரியோர்களின் அருள்வாக்கு. நம்பிக்கையில் தானே இறைவனை வணங்குகிறோம் நல்லவைகள் நடக்க வேண்டுமென்று. சொல்லுங்கள் நல்லதாகவே நடக்கும். நீங்கள் யாரை சந்தித்தாலும், யாரிடம் உரையாடினாலும் " வாழ்க வளமுடன் " என்னும் இவ்வார்த்தையே முதலில் வருகின்ற வார்த்தையாக இருக்கட்டும். அதே போல உங்களை யார் சந்தித்தாலும் இதுவே முதலில் வருகின்ற வார்த்தையாக இருக்கட்டும். அடுத்தது யாரை ஆசிர்வதித்தாலும், விடைக்கொடுத்தாலும் மேற்காண்ட அருள்வாக்கை தவறமல் முழுமையாக அனைவரும் கேட்கும்படியாகவே உச்சரியுங்கள் ( சொல்லுங்கள் ). நிச்சியமாக நலமாக, வளமாக வாழ்வீர்கள். மேற்கண்ட சிறிய நல்வாக்கு செய்திக்கு, எவ்வளவு பெரிய பின்னுரை தேவைப் படுகிறது பார்த்தீர்களல்லவா அத்தனை சக்தி வாய்ந்தது அந்த வாழ்த்து. இது நமக்காக சொல்லப் பட்ட அருள்வாக்கு. தொடர்ந்து சொல்லுவோம். நலமாய், வளமாய் வாழ்வோம். வாழ்க வளமுடன் !
மேலும் அறிய

Thursday, April 9, 2009

**சிறு சிறுவுறவுகள்

video








1
மேலும் அறிய

**90 வினாடிக்குள் ......

சுந்தர் வீட்டிலே கோபித்துக் கொண்டு அந்த சிக்னல் அருகே வெறுப்பாக
நின்றிருந்தான். அப்பாவும் அம்மாவும் சேர்ந்து மாற்றி மாற்றி திட்டிய, "கையாலாகதப் பயலே" என்ற "திட்டு ஜாம்" மனதில் மிகுந்த நெரிசலை ஏற்படுத்தியிருந்தது.

சிவப்பு விளக்கு போட்டு, நல்ல எண்ணங்களை நிறுத்தியிருந்தது - மனம்!

டவுன் பஸ் ஒன்று சிக்னலில் நின்றது.

கபக்கென்று சிறுவனொருவன், பஸ்ஸிலிருந்து வெளியே வந்தான். ஓடிச்சென்று அருகில் உள்ள மின்சாரிய வாரிய ஆஃபீஸில் பில்லிற்கான பணத்தை கட்டி விட்டு, ஓடி வந்து மறுபடி அதே பஸ்ஸில் தொற்றிக்கொண்டு விட்டான்.

பஸ் சிக்னலிலே நிற்ற 90 வினாடியிலே சிறுவன் எலக்டிரிசிட்டி பில்லைக் கட்டி விட்டான்.

பச்சை விளக்கு விழுந்து பஸ் புறப்பட, சுந்தர் மனதிலும் பச்சை சிக்னல் விழுந்தது!

"அட, இந்த 90 வினாடிக்குள் முடியும் வேலைக்கா நான் வீட்டில் சண்டை போட்டேன்? அப்பாவிடம் வண்டி கொடுக்காவிட்டால் பில் கட்டப்போக மாட்டேன் என்று கத்தினேனே! நீ கட்டும்மா என்று அம்மாவிடம் சாடினேனே!"

ஓட்டமெடுத்தான் வீட்டிற்கு. அம்மா செய்த பொங்கலை சாப்பிட!
மேலும் அறிய

**தந்தைக்கு ஆற்றும் உதவி.......

வணக்கம்,

சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் "தமிழ்க்குரல்" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை.

அன்பகலா,
கண்ணன் நடராசன்


'தந்தையருக்கு(ம்) ஒரு தினம்!! - சபேசன்

தந்தையர் தினம் (பாதெர்'ச் டாய்)! மேற்கத்திய நாடுகளில் தாய்மார்கள் தினம், காதலர் தினம் என்று தாய்மார்களுக்கும், காதலர்களுக்கும் தனித் தினங்கள் ஒதுக்கப்பட்டு கொண்டாடப்படுவது போல், தந்தையர்களுக்கு ஒரு தினம் ஒதுக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

நாட்டுக்கு நாடு தந்தையர் தினம் கொண்டாடப்படும் நாள் வித்தியாசப்பட்டாலும், 'தந்தையர் தினம்' என்ற அந்த நாள் உணர்வுபுர்வமான, அர்த்த புர்வமான ஒரு நாள் என்பதனை மறுக்க முடியாது.

தந்தையர் தினம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்ற கேள்விக்கு, பலவிதமான பதில்கள் காத்திருக்கின்றன. அமெரிக்கா நாட்டின், மேற்கு வேர்ஜினியாவில் 1908 ஆம் ஆண்டு தந்தையர் தினம் ஆரம்பமானது என்று ஒரு சிலரும், வாஷிங்டனில் உள்ள வான்கூவர் நகரத்தில் தந்தையர் தினம் முதன் முதலாக கொண்டாடப்பட்டது என்று சிலரும் சொல்வதுண்டு.

சிக்காகோ நகரின் 'லயன்ஸ் கழகத்தின்' தலைவரான ஹாரிமீக் என்பவர் தந்தைகளைப் போற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பலதரப்பட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தார் என்றும், அதன் காரணமாக அவருடைய பிறந்த தினத்தை ஒட்டி அமெரிக்க லயன்ஸ் கழகம் அவருக்கு 'தந்தையர் தின நிறுவனர்', என்று பட்டமளித்ததாகவும் வரலாற்று குறிப்பு உண்டு.

எது எப்படி இருப்பினும், 'தந்தையர் தினம்' என்ற ஒரு தினம் ஏற்படுத்தப்படுவதற்கான அடிப்படைக் காரணமாக விளங்குவது ஓர் ஆணின் கடமையால், நன்றி கொண்ட ஒரு பெண்தான் என்பதனை வரலாறு பதிவு செய்து நிற்கிறது.

1909 ஆம் ஆண்டளவில் வாஷிங்டனில் உள்ள ஸ்போகேன் (ச்போக்ணே) நகரின் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. தாய்மார்கள் தினம் கொண்டாடப்படுவது, அப்போதுதான் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அந்தத் தேவாலயத்தில் அமர்ந்திருந்து பிராத்தித்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணிக்கு மட்டும் தாயின் நினைவுகள் நிழலாடவில்லை. மாறாக, அவளுக்கு தன் தந்தையின் ஞாபகங்கள் தான் நெருணி நிரைத்த வண்ணம் இருந்தன. ஏனென்றால் அப்பெண் மிகச்சிறு வயதாக இருந்த போதே அவளது தாயார் இறந்து விட்டாள். அந்த பெண்ணையும், அவளது ஐந்து சகோதரர்களையும் அன்புடன் பராமரித்து, தாயாக அன்புகாட்டி தந்தையாக வளர்த்து வந்தது அவளது தகப்பனார் தான். அந்த ஆராதனையில், தாயை பற்றிச் சொல்லப்பட்ட ஒவ்வொரு சொல்லும் அவளுக்குத் தன் தந்தையைத்தான் ஞாபகப்படுத்தியது.

திருமணமாகி தன்னுடைய குடும்ப வாழ்வை தொடங்கி விட்டிருந்த அந்த பெண்மணியின் பெயர் திருமதி சொனாரா டொட் (ம்ர்ச்.சோனொர ளௌய்செ டோட்ட்). திருமதி சொனாரா டொட்டின் தாயார் தனது மகவொன்றின் பிரசவத்தின் போது 1898 ஆம் ஆண்டு அகால மரணமடைந்திருந்தார். சொனாராவையும், அவரது ஐந்து சகோதரர்களையும், தனி ஒருவனாக அவர்களது தந்தையே வளர்த்திருந்தார். அந்த தந்தையின் பெயர் வில்லியம் ஜக்ஸன் ஸ்மார்ட் (நீல்லியம் ஜாச்க்சொன் ச்மர்ட்) தன்னுடைய சின்னஞ்சிறிய குழந்தைகளை- ஆறு பிள்ளைகளை- தாயாக, தந்தையாக அன்பு காட்டி அரவணைத்து வளர்த்தெடுத்த வில்லியம் ஜக்ஸன் யார் தெரியுமா நேயர்களே? ஓரு போராளி! தனது நாட்டுக்காகப் போராடிய போர் வீரன்! தனது மனைவியை இழந்த போதும், தன் தாய் நாட்டின்மீது தான் காட்டிய நேயத்தை, தாயை இழந்த தன் மகவுகளிடம் காட்டிய ஓர் உண்மையான மனிதன், தந்தை கிறிஸ்தவச் சமயத்தின் அம்மையப்பன். அன்று - அன்றைய தினம் - தேவாலயத்தில் தாய்மார்களின் சிறப்பைப்பற்றிய உரைகளையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அந்த போராளியின் மகளுக்கு, அவையெல்லாம் தன் தந்தையைப் பற்றித்தான் சொல்வது போலிருந்தன.


தன்னந்தனியனாகத் தம்மை வளர்ப்பதற்கு, தம் தந்தை பட்ட கஷ்டங்களெல்லாம் அந்த மகளின் மனதை மீண்டும், மீண்டும் உருக்கின. தாய்மார்களுக்கு ஒரு தினம் என்பது போல, தந்தையருக்கும் ஒரு தினம் தேவை - என்ற எண்ணம் அந்த பெண்ணுக்கு, அந்த மகளுக்கு உருவானது. அது வலுப்பெற்றது. அவள் ஒரு போராளியின் மகள் அல்லவா! ஆகையால், அவள் தன் எண்ணத்தை செயலாற்றத் துணிந்தாள்.

கிறிஸ்தவ தேவாலயத்தின் ஊடாக, மதகுருமார்கள் ஊடாக, திருமதி சொனாரா டொட் அவர்கள் தனது பிரச்சாரத்தை, பரப்புரையை ஆரம்பித்தார். ஏற்கனவே, தாய்மார்கள் தினத்தை ஆதரித்து கருத்து வெளியிட்டிருந்த பத்திரிகைகள், திருமதி சொனாரா டொட்டின், தந்தையர் தினத்தை வரவேற்றுச் செய்திகளை வௌயிட ஆரம்பித்தன. ஸ்போக்கேன் நகர பிதாவும், கவர்னரும், திருமதி டொட் அவர்களின் வேண்டுகோளை ஏற்று அறிக்கைகளை விடுத்தார்கள்.

வில்லியம் ஜென்னல்ஸ் பிரைன் போன்ற அரசியல்வாதிகளும், தந்தையர் தினம் என்ற திட்டத்தை வரவேற்று பேசினார்கள். வாஷிங்டன் நகர், ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையை, தந்தையர் தினமாக பிரகடனப்படுத்திக் கொண்டாட ஆரம்பித்தது.

திருமதி சொனாரா டொட்டின் தந்தையான வில்லியம் ஜக்ஸன் ஸ்மார்ட்டின் பிறந்த மாதமும், ஜூன் மாதத்தில் தான் வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆயினும், தாய்மார்களின் தினம் போல், தந்தைமார் தினம் உடனடியாக பிரபலம் அடையவில்லை என்பதே உண்மையாகும்.
(அதனை இன்றைய தந்தைமாரும், மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வார்கள் என்பது வேறு விடயம்.)

1916 ஆம் ஆண்டளவில் அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில்சன் (நோஒற்றொந் நீல்சொன்), இந்த தந்தையர் தினக் கருத்தை ஏற்றுக் கொண்ட போதும் அது, தேசிய மயமாக்கப்படவில்லை.

1924 ஆம் ஆண்டு, ஜனாதிபதி கல்வின் கூலிட்ஜ் (சால்வின் சோஒலிட்கெ) தந்தையர் தினத்தை, ஒரு தேசிய நிகழ்வாக பிரகடனம் செய்தார். 1966 ஆம் ஆண்டு, அமெரிக்கா ஜனாதிபதியாக இருந்த லின்டன் ஜோன்சன், யூன் மாதத்து 3 ஆவது ஞாயிற்றுக்கிழமையை அமெரிக்காவின் தந்தையர் தினமாக பிரகடனம் செய்தார். ஆயினும், உலகின் பல்வேறு பாகங்களில் வெவ்வேறு மாத தினங்களில், தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றதனை நாம் காணக்
கூடியதாக இருக்கிறது.

உதாரணமாக அவுஸ்திரேலியாவிலும், நியுசிலாந்திலும் செப்டெம்பர் மாதத்து முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருவதனை இங்கு சுட்டிக் காட்டலாம். வெள்ளை ரோஜா மலரும், சிவப்பு ரோஜா மலரும் தந்தையர் தினத்திற்கு உரிய மலர்கள் என்பதை, இங்கே ஒரு உபரித் தகவலாக தர விழைகின்றோம்.

வெள்ளை ரோஜா மலர் - ஒருவரது தந்தை காலமாகி விட்டார் என்பதையும்,
சிவப்பு ரோஜா மலர் - ஒருவரது தந்தை வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்பதையும் குறிப்பிட்டு கௌரவப்படுத்துகின்ற விடயங்களாகும்.

மேற்கத்தைய நாடுகளில் தந்தையர் தினம் என்பதை, இன்று ஓர் அவசியமான தினமாகப் பரிமாணம் எடுத்துள்ளதோடு, வியாபார ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தற்கால உலக வழிமுறைகளுக்கு ஏற்ப, உணர்வுக்கும் - பொருளியலுக்கும் ஓர் அருமையான தளத்தையும், தந்தையர் தினம் இன்று ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. தந்தையர் தினம், தாய்மார்கள் தினம் போன்றவை எல்லாம் வெள்ளைக்காரன் பண்பாடு, தமிழர்களாகிய எங்களுக்கு இவையெல்லாம் தேவையில்லை! எமக்கு ஆண்டின் எல்லா நாட்களும் தந்தையர் தினம் தான்!
தாய்மார் தினம் தான்! என வாதிடும் எம்மவர்களையும் நாம் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால், இவர்களது வாதங்கள் தப்பானவை என்றே எமக்கு தோன்றுகிறது.

தமிழ் மக்களின் பாரம்பரிய பண்பாட்டு வாழ்வியலின் பல அம்சங்கள், இப்போது குறியீடுகளாகவே அடையாளம் காணப்படுகின்ற காலகட்டத்திற்கு நாம் வந்துள்ளோம்.

பழையன கழிதலும், புதியன புகுதலும் ஓர் இனத்தின் பண்பாட்டு மேன்மைக்கும் நாகரிகச் சிறப்பிற்கும் அத்தியாவசியமாக அமைந்து வருகின்றன. அத்தகைய சிறப்பும், தகுதியும் தமிழ் மொழிக்கு இருப்பதனால் தான், தமிழ் மொழியும் ஆயிரம், ஆயிரம் ஆண்டுக் காலமாக அழியாது, தழைத்து சிறந்து, வளர்ந்து வளர்கின்றது.

பழைமையை போற்றுவதாக நினைத்துக் கொண்டு, புதுமையை ஏற்றுக் கொள்ள மறுத்தோமேயானால், நாங்கள் பழைமையை இழப்பதோடு மட்டுமல்லாது, புதுமையையும் தவறவிடுகின்ற வரலாற்றுத் தவறுகளுக்கு உடந்தையாக இருக்க நேரிடும். புதுமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நாம் தாக்கிப்பதற்கு 'எதையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்', என்பதல்ல பொருள்.

முன்னர் நாம் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொண்டவற்றையெல்லாம் மீள் பரிசீலனை செய்து செரிவானவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும்,
பொருள் கொள்ளலாம்.

'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்; அப்பொருள்,
மெய்ப்பொருள் காண்பதறிவு - என்பதே வள்ளுவரின் வாக்கு ஆகும்.

மற்ற இனங்களைப் போல, ஆணாதிக்கக் கட்டமைப்பு முறை, தமிழரிடையே இருந்தாலும், அடிப்படையில் அது ஒரு தாய்வழிச் சமுதாயமாகவே இயங்கி வந்துள்ளது. அதனடிப்படையில் பார்த்தாலும், 'தந்தை என்பவருக்குரிய பண்புகளும், பொறுப்புகளும் தொல் தமிழர் வாழ்விலே எடுத்துக் கூறப்பட்டிருப்பதை நாம் காணுகிறோம்.

தந்தை என்ற தமிழ் சொல்லே தந்தைக்குரிய தகுதியை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. ஒருவன், ஒரு பொருளைத் தந்தால், அவன் தந்தவன் ஆகிறான். உலகியலில் உள்ள தருதல் வழக்கத்தை உன்னித்து உணர்ந்தால் உண்மை புலப்படும்.

தந்தை-என்ற பெயருக்கு உள்ள அடிப்பொருளும் தெளிவாகும். மகவைத் தந்தவன் தந்தையானான். பழந்தமிழர் வாழ்க்கை முறையில், இன்னும் ஒரு விடயத்தை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்ககூடும்.

காதல் வாழ்க்கையின் போதும், மணவாழ்க்கையின் போதும், தலைவன் தலைவி என்றும், கணவன் மனைவி என்றும், ஆணை முதன்மைப்படுத்தியே விளிக்கப்பெற்று வந்தததையும் மகவு பிறந்த பின்னர், தாய்-தந்தை, அம்மையப்பன் என்று பெண்ணை முதன்மைப்படுத்துவதையும், நாம்
சுட்டிக் காட்டலாம்.

தந்தையின் கடமைகள் குறித்து திருக்குறளிலும், சங்க இலக்கியங்களிலும் சொல்லப்பட்டிருப்பதையும் நாம் காண்கின்றோம்.

"தந்தை மகற்காற்று நன்றி, அவையத்து முந்தி இருப்பச் செயல் - (குறள்-67) என்ற குறள் மூலம் தந்தையானவன், தனது மகவுக்கு செய்ய வேண்டிய முதற்கடமை, அவனை கல்வியில் சிறந்தவன் ஆக்குதலே என்று திருவள்ளுவர் கூறுகின்றார்.

ஒரு தந்தை, தனது மகனை செல்வனாக்குவதிலும் பார்க்க, அவனை கல்விமானாக்குவதே சிறந்தது என்பது இக்குறளின் உட்கருத்தாகும். தந்தையின் இந்த முதற் கடமையை நாம் புறநானூறிலும் காணக்கூடியதாக இருக்கின்றது. பொன்முடியார் பாடிய இப்பாடல் ஒரு மறக்குடித்தாயின் மனநிலையை கூறுவது போல் அமைந்திருப்பது இன்னுமொரு சிறப்பாக அமைகின்றது.

புறநானூறில் 312 ஆவது பாடல், இவ்வாறு கூறுகின்றது -

"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே:
சான்றோன் ஆக்குதல், தந்தைக்குக் கடனே:
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே:
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறுவான் அருஞ்சமம் முருக்கிக் களிறு எறிந்து
பெயர்த்தல் - காளைக்குக் கடனே
என்னுடைய முதன்மையான கடமை பெற்று வளர்த்து
வெளியே அனுப்புதல்.

தந்தையின் கடமையோ, அவனை சான்றோனாக ஆக்குதல்.

வேல் வடித்துத் தருதல் கொல்லனின் கடமை. நல்ல முறையிலே அவனுக்குப் போர்ப்பயிற்சி முதலியன அளித்தல் வேந்தனுடைய கடமை. இவ்வளவு கடமைகளையும் பிறர் செய்ய, ஒளிர்கின்ற வாளைப் போர்க்களத்திலே சுற்றிக் கொண்டு அஞ்சாது நின்று வென்று பகை மன்னர் களிற்றையும் கொன்று, மீண்டு வருதல் வளர்ந்து, காளையான அவனது கடமையாகும். இதனை அறிவீராக. என்று புலியுர் கேசிகன் பொருள் கூறுகின்றார்.

தந்தையர் தினத்தின் மூலம் தனது தந்தையை உலகளாவிய முறையில் திருமதி சொனாரா டொட் அவர்கள் உயர்த்திச் சிறப்பித்தார். இதே விடயத்தைத் திருவள்ளுவர் மறுவடிவமாகக் கூறுதல் மிகுந்த நயமுடையதாக உள்ளது.

"மகன் தந்தைக் காற்றும் உதவி, இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும்
சொல்" - குறள் 70-தான் பிறந்ததில் இருந்து, தன்னை வளர்த்துக் கல்வி கற்க வைத்து, உலகில் பிழைப்பதற்கு ஒரு தொழிலில் பயிற்று, மணம் செய்வித்து மனையறப் படுத்தி, தனது தேடலிலும், ஒரு கூறளித்த தன் தந்தைக்கு மகன் செய்ய வேண்டிய கைம்மாறு என்ன!

மகன் செய்ய வேண்டிய கைம்மாறு 'இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல். அதாவது மகனின் அறிவாற்றலையும் நற்குண, நற்செயல்களையும் கண்டவர்கள், இவனுடைய தந்தை இந்த அருமையான மகனைப் பெறுவதற்கு எத்தகைய கடும் தவத்தை செய்தானோ என்று வியந்து கூறுகின்ற சொல்லை அவர்கள் வாயிலிருந்து தானாக வரச் செய்தலாகும். இந்த குறளில் இன்னுமொரு நயம் உள்ளது. இங்கே சொல் என்பது சொல்லைப் பிறர் மூலம் வருவிப்பதைக் குறித்து நிற்கின்றது. கொல் என்பது ஐயம் குறித்த இடைச் சொல்லாகும். தந்தை நெடுங்காலமாக செய்து வந்த பல்வேறு பெருநன்மைக்கும், மகன் செய்யவேண்டிய கைம்மாறு ஒரு சொல்லே என்று, ஒருவகை அணிநயம் படத் திருவள்ளுவர் கூறுகின்றார். இதனால் தந்தை செய்த நன்றிக்கு சரியாக ஈடு செய்தல் அது என்ற உட்பொருளையும் காணுகின்றோம்.

திரைப்படப்பாடல்களையும் குறைவாக மதிப்பிட்டு விட முடியாது. கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்றில் வருகின்றது,

"குழந்தை பாரம் உனக்கல்லவோ, குடும்ப பாரம் எனக்கல்லவோ கொடியிடையின் பாரம் எல்லாம் பத்து மாதக் கணக்கல்லவோ!"

மனைவியுடன் குழந்தையையும் ஒருவனாக சுமக்கின்றேன். சுமப்பதுவும் சுகம் என்று மனதுக்குள்ளே ரசிக்கின்றேன் என்ற வரிகளை, எல்லாத் தந்தையர்களும் முற்றாக ஆமோதிப்பார்கள் என்ற தைரியத்தில் இந்த கட்டுரையை முடிக்கின்றோம்.

இந்த கட்டுரையை எழுதுவதற்கு,
ஒப்பியன் மொழி நூல்,
திருக்குறள்,
தமிழ் மரபுரை,
வள்ளுவர் வாழ்ந்த தமிழகம்,
புறநானூறு,
தமிழ் வளம்-சொல், போன்ற நூல்கள் பெரிதும் உதவின. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள். சபேசன்

- நன்றி கண்ணன் நடராஜன்
மேலும் அறிய

** அயன் - பள பளகுற நில வீடியோ HQV

video
மேலும் அறிய

Tuesday, April 7, 2009

++ உலக தினங்கள்

காதலர் தினம், அன்னையர் தினம், நட்பு தினம் என ஒரு சில தினங்கள்தான் தற்போது இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது.

இவற்றுக்கே இதென்ன அன்னையர் தினம், நட்பு தினம் என்று தனித்தனியாக ஒரு தினம் என்று சலித்துக் கொள்பவர்கள் ஏராளம்.

இவர்கள் எல்லாம் இந்த பட்டியலைப் படித்துவிட்டு என்னத்தான் சொல்வார்களோத் தெரியவில்லை.

உலக தினங்களின் பட்டியல்

பிப்ரவரி 14, காதலர் தினம்
‌பி‌ப்ரவ‌ரி 28, உலக அ‌றி‌விய‌ல் ‌தின‌ம்
மார்ச் 2, உலக புத்தக தினம்
மார்ச் 8, உலக மகளிர் தினம்
மார்ச் 22, உலக தண்ணீர் தினம்
ஏப்ரல் 1, முட்டாள்கள் தினம்
ஏப்ரல் 7, உலக சுகாதார தினம்
ஏப்ரல் 22, உலக பூமி தினம்
ஏப்ரல் 25, உலக இறைச்சல் விழிப்புணர்வு தினம்
மே 1, உழைப்பாளர் தினம்
மே 8, உலக விலங்குகள் பாதுகாப்பு தினம்
மே 11, உலக அ‌ன்னைய‌ர் ‌தின‌ம்
மே 15, உலக குடும்பங்கள் தினம்
மே 18, உலக அருங்காட்சியக தினம்
மே 31, உலக புகையிலை எதிர்ப்பு தினம்
ஜுன் 5, உலக சுற்றுச்சூழல் தினம்
ஜுன் 12, உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்
ஜுலை 1, உலக நகைச்சுவை தினம்
ஜுலை 11, உலக மக்கள் தொகை தினம்
ஆகஸ்ட் 5, உலக நட்பு தினம்
ஆகஸ்ட் 12, உலக இளைஞர் தினம்
செப்டம்பர் 21, உலக அமைதி தினம்
செப்டம்பர் 26, உலக சுற்றுலா தினம்
அக்டோபர் 1, உலக முதியோர் தினம்
அக்டோபர் 5, உலக ஆசிரியர் தினம்
அக்டோபர் 10, உலக மனவளர்ச்சி குன்றியோருக்கான தினம்
அக்டோபர் 16, உலக உணவு தினம்
நவம்பர் 11, உலக நினைவூட்டல் தினம்
நவம்பர் 16, உலக பொறுமை தினம்
நவம்பர் 20, உலக குழந்தைகள் தினம்
நவம்பர் 21, உலக தொலைக்காட்சி தினம்
டிசம்பர் 1, உலக எய்ட்ஸ் தினம்
டிசம்பர் 3, உலக உடல் ஊனமுற்றோர் தினம்
டிசம்பர் 10, உலக உரிமைகள் தினம்
மேலும் அறிய

++ கணக்கேத் தெரியாலை

நீ என்கிட்ட 100 ரூபாய் கடன் வாங்குற.. அதில் 25 ரூபாயை திருப்பித் தந்துட்டா மீதம் எவ்வளவு இருக்கும்?
பாக்கி ஏதும் இல்லைங்க சார்,.
உனக்கு கணக்கேத் தெரியாலை..
உங்களுக்குத்தான் என்னப்பத்தி தெரியலைங்க சார்.
மேலும் அறிய

‌++ விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா?

இ‌ந்த ‌விடுகதைகளு‌க்கு ‌விடை த‌ெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறதா எ‌ன்று பாரு‌ங்க‌ள்?

தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார்?

ஆயிரம் பேர் வந்து சென்றாலும் வந்த சுவடு தெரியாது? அது என்ன?

வினா இல்லாத ஒரு விடை அது என்ன விடை

உரசினால் உயிரே மாய்த்துக் கொள்ளும் அது என்ன?

கை பட்டால் சிணுங்கும் கன்னிப் பெண், கூச்சல் போட்டு கதவை திறக்க வைப்பவள் அவள் யார்?

தாழ்ப்பாள் இல்லாத கதவு, தானாக மூடி திறக்கும் கதவு அது என்ன?


‌விடைக‌ள்

1. இள‌நீ‌ர்

2. எறு‌ம்பு

3. ப‌ணி‌விடை

4. ‌தீ‌க்கு‌ச்‌சி

5. கா‌லி‌ங்பெ‌ல்

6. க‌ண் இமை
மேலும் அறிய

++ விழி மூடி யோசித்தால்- அயன் பாடல்


Vizhi Moodi Yosithaal - Ayan Songs with Lyrics


பாடல் : விழி மூடி
பாடியவர் : கார்த்திக்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
படலாசிரியர் : வைரமுத்து





விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழை காலம்
என் வாழ்வில் வருமா
மழை கிளியே மழை கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னை கண்டேனே சென்றேனே

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழை காலம்
என் வாழ்வில் வருமா
மழை கிளியே மழை கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னை கண்டேனே சென்றேனே

கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும்
துளியாய் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே
தானா எந்தன் கால் இரண்டும் உந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே
இந்த காதல் வந்துவிட்டால்
நம் தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும் திரிந்திடுமே
ஒ ..ஒ ..ஒ ..

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழை காலம்
என் வாழ்வில் வருமா
மழை கிளியே மழை கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னை கண்டேனே சென்றேனே

ஆசை என்னும் தூண்டில் முள் தான்
மீனை நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட
மனம் துடிக்கும்
சுற்றும் பூமி என்னை விட்டு
தனியாய் சுற்றி பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ
புது மயக்கம்
இது மாய வலை அல்லவா
புது மோக நிலை அல்லவா
உடை மாறும் நடை மாறும்
ஒரு பாரம் என்னை பிடிக்கும்

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழை காலம்
என் வாழ்வில் வருமா
மேலும் அறிய

++ நெஞ்சே நெஞ்சே நீ எங்கே - அயன் பாடல் வரிகளுடன்


Nenje Nenje Nee enge - Ayan Movie Song with Lyrics

பாடல் : நெஞ்சே நெஞ்சே
இசை:ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியது: ஹரிஷ் ராகவேந்தர், மாலதி
படலாசிரியர் : வைரமுத்து




ஹ ஹ ஹ
ஹூம் ஹூம்
ஹ ஹ
ஹூம் ஹூம் ஹூம் ம்ம்ம்ம்

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே

என் ந‌தியே என் க‌ண் முன்னால் வ‌ற்றிப் போனாய்
வான் ம‌ழையாக‌ என்னை தேடி ம‌ண்ணில் வ‌ந்த்தாய்

என் தாக‌ங்க‌ள் தீர்க்காம‌ல் க‌ட‌லில்
ஏன் சேர்கிறாய்.

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே.

க‌ண்ணே என் க‌ண்ணே நான் உன்னைக் காணாம‌ல்
வானும் என் ம‌ண்ணும்
பொய்யாக‌ க‌ண்டேனே.

அன்பே பேர‌ன்பே நான் உன்னைச் சேராம‌ல்
ஆவி என் ஆவி நான் ஏற்றுப் போனேனே

வெயில் கால‌ம் வ‌ந்தால்தான் நீரும் தேனாகும்
பிரிவொன்றை க‌ண்டால்தான் காத‌ல் ருசியாகும்

உன் பார்வை ப‌டும் தூர‌ம் என் வாழ்வின் உயிர் நீளும்
உன் மூச்சு ப‌டும் நேர‌ம் என் தேக‌ம் அன‌லாகும்

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே

க‌ள்வா என் க‌ள்வா நீ காத‌ல் செய்யாம‌ல்
க‌ண்ணும் என் நெஞ்ஞும் என் பேச்சை கேட்காதே

காத‌ல் மெய் காத‌ல் அது ப‌ட்டு போகாதே
காற்றும் நாம் பூமி ந‌மை விட்டு போகாதே

ஆகாய‌ம் இட‌ம் மாறி போனால் போக‌ட்டும்
ஆனால் நீ ம‌ன‌ம் மாறி போக‌ கூடாதே

ஏ ம‌ச்ச‌த் தாம‌ரையே
என் உச்ச‌த் தார‌கையே
க‌ட‌ல் ம‌ண்ணாய் போனாலும்
ந‌ம் காத‌ல் மாறாதே

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே

என் ந‌தியே என் க‌ண் முன்னே வ‌ற்றிப் போனாய்
வான் ம‌ழையாக‌ எனை தேடி ம‌ண்ணில் வ‌ந்த்தாய்

உன் தாக‌ங்க‌ள் தீராம‌ல் ம‌ழையே
ஏன் வ‌ருகிறாய்

ஹ ஹ ஹ ஹூம் ஹூம் ஹா ஹ ஹ ம்ம்ம் ம்ம்ம்
ஹ ஹ ஹ ஹூம் ஹூம் ஹா ஹ ஹ ம்ம்ம் ம்ம்ம்
மேலும் அறிய

Monday, April 6, 2009

** Tamil Pazhamozhigal - தமிழ்ப் பழமொழிகள்

பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.

குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.

பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.

காய்த்த மரம்தான் கல்லடிபடும்.

சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்.

விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.

உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?

அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.

தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.

ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.

குரங்குப் புண்ணுக்கு அருமை காட்டினால் கொப்பிலே தாவுமாம்.

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.

தனிமரம் தோப்பாகாது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.

முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.

இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.

தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல்.

வேலிக்கு ஓணான் சாட்சி.

கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?

காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.

விளையும் பயிரை முளையிலே தெரியும்.

இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.

அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.

கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?

பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.

வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.

புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.

எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.

நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.

ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை.

நிறைகுடம் தளம்பாது.

தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.

அகத்தினழகு முகத்தில் தெரியும்

கழுதை அறியுமா கற்பூர வாசனை?

மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.

படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
மேலும் அறிய

**தமிழனுக்கு வணக்கம்

தரணியில் தமிழனாய் தவழவிட்ட எனை ஈன்ற அன்னையின் பாதம் தொட்டு என் பயணத்தை தொடருகின்றேன்
மேலும் அறிய

** உண்மையின் உயர்வு -- பகுதி - 4

பகுதி மூன்றில் முடிவு வரிகள் சிலவற்றுக்கு அக்கதையிலே, சில நடந்த விசயங்களை எழுதாமல் விட்டு விட்டேன். அதாவது, அந்த வைரப்பெட்டியை எடுத்துக் கொண்டு திரும்பும்போது, அதன் நினைவுகளிலேயே முழ்கியவனாய், அந்த இருட்டு அறையிலே பக்கத்திலிருக்கும் சாமாங்களை கவனிக்கத் தவறி, அதன் மேல் மோதிவிட்டான். அதனால் அந்த பொருட்கள் கீழே உருண்டு விழுந்தன.அதனால் ஏற்பட்ட சத்தத்தால் காவலாளிகள் அரைதூக்கத்திலிருந்து விடுப்பட்டு, சத்தம் வந்த பொக்கிஷ்ய அறையை நோக்கி விரைந்தனர். அவன் அவர்களிடமிருந்து தப்பி, விரைவாக கயிற்றின் மூலம் சுவறே வேளியே வந்து விட்டான். பிறகு தான் கிழவரிடம் நடந்த விவரத்தை கூறி, வரத்தையும் பங்குக் கொடுத்து, தங்குமிடத்தையும் காட்டி, அவரை வழியனுப்பி வைத்தான்.
அப்பாடா...! இந்த வைரத்தை சில நாட்கள் கழித்து விற்று, பணமாக்கிக் கொண்டால், இனி திருட வேண்டியது இல்லை. ஏதாவது தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று முடியு செய்துக் கொண்டு உறங்கினான். அவன் திருடிய இடம் ராஜாவின் அரண்மனை என்பது அவனுக்குத் தெரியாது. மறு நாள் காலையிலேயே முதலமைச்சரை வரவழைத்து, என்னென்ன களவு போயிருக்கிறது என்பதை கண்க்கு எடுத்து வர சொன்னார். முதலமைச்சரும் கண்க்கு பார்த்து விட்டு, எல்லாம் சிரியாக இருக்கிறது, நீங்கள் விரும்பி வாங்கி வைத்த அந்த மூனறு வைரங்கள் மட்டுமே காண்வில்லை என்று கூறினார். உடனே திருடனைப் பிடிக்க நாலாபுறமும் வீர- -ர்களை அரசர் அனுப்பி வைத்தாதுடன், பிடித்து வரவில்லையெனில், தலை துண்டிக்கப் படுமென கட்டளையுமிட்டார். அவர்களும் தேடிவிட்டு திருடனைப் பிடிக்கமுடியாமல் வந்து, அரசர் முன்பாக தலை குனிந்து நின்றனர். அரசரோ, மிக கோபமாக காவலும் காக்கத் தெரியவில்லை, ஒரு திருடனைக்கூட பிடிக்க முடியவில்லையென கர்ஜித்தார். பிறகு அவரே, அவரின் மெய்காப்பாளனை அருகில் அழைத்து, காதோடு ஒரு தகவல்ம் கூறியனுப்பினார். அவன் சென்று சிறிது நேரத்தில், அரசவையில் அரசருக்கு முன்பாக ஒருவனை பிடித்து வந்து நிறுத்தினான். அரசரும் அவனைப் பார்த்து, என்னப்பா நேற்று எங்காவது நீ திருடினாயா? என கேட்டார். அவனும், ஆமாம் நேற்று ஒரு மாளிகையில் திருடினேன் என கூறினான். என்ன திருடினாய்/, திருடியதை எங்கே மறைத்து வைத்துள்ளாய்? என்று கேட்டார். எங்கும் மறைத்து வைக்கவில்லை, என்னிடமே உள்ளது என கூறி, அவனிடமிருந்த ஒரு வைரக்கல்லைக் கொடுத்தான். உண்மையைக் கூறு, ஒரு வைரக்கல்லைத்தான் திருடினாயா?, உண்மையை கூறாவிட்டால், உன் தலையைத் துண்டித்து விடுவேன் என்றார். நேற்று இரவு நடந்த விசயங்களை முழுவதும் கூறினான்.
அப்படியெனில் கிழவரின் இருப்பிடம் கூறு, அவரை பிடித்து உண்மையைத் தெரிந்துக் கொள்வதுடன், நீ கொடுத்ததாககூறும் வைரத்தையும் பறிமுதல் செய்யலாம் என்றதற்கு, அவறீருப்பிடம் எனக்கு தெரியாது, என் இருப்பிடம் மட்டும் அவர் தெரிந்துக் கொண்டு, மீண்டும் அவரே வந்து பார்ப்பதாக கூறிச் சென்று விட்டதையும் சொன்னான். அப்பொழுது அரசர், திடிரென அரசவையிலிருந்து எழுந்து சென்று விட்டார். அந்த சமயத்தில் அரசவையின் கூடியிருந்த மக்கள் கூட்டத்தினிடையே ஒரு கிழவரை,அவன் கண்டு அவ்ரை பிடிக்குமாறு கூச்சலிட்டான். காவாலாளிகளும் அவரை பிடித்து, அவனுக்கு அருகில் அழைத்து வந்தன்ர். அவரைப் பார்த்து, நேற்று உங்களிடம் கொடுத்த வைரக்கல்லை கேட்க, என்னிடம் நீ கொடுக்கவில்லையென அவரும் மறுக்க, பொய்யா சொல்கிறீரென, அவர் மீது பாய்ந்தான். அவரோ விலக, அவரின் தாடி அவன் பிடியில் சிக்கி கையோடு வந்து விட்டது. பிறகு அந்த கிழவர் வேசத்தை களைத்து அரசராக அரசவை முன் நின்றார். அவர் சிம்மாசனத்தில் அமர்ந்த பிறகு, என்னிடம் ஒன்ரு உள்ளது என்று கூறி விட்டு,நீ சொல்லியதெல்லாம் உண்மையென்றால், மற்றோரு வைரம் எங்கேயன மீண்டும் கேட்டார். சிறிது யோசனைக்கு பிறகு, யார் இன்று கண்க்குகளை முதலில் சரிபார்த்தது என அவன் கேட்டான். மதலமைச்சரென அரசர் கூர, அந்த நேரத்தில் முதலமைச்சர் நடுங்குவதையும், அவரின் கைகள் இடுப்பின் பக்கம் செல்வதையும் கவனித்து விட்டான். அவனின் முக மாருதலை கவனித்த அரசர் உனக்கு யார் மீதாவது சந்தேகமிருந்தால் கூறு, அவர்களையும் விசாரித்து விடலாம் என்றார். முதலமைச்சரின் இடுப்பு வேட்டியை பிடித்து இழுக்க, அவர் மடியிலிருந்து, பெட்டியுடன் வைரக்கல் கீழே விழுந்தது. . முதலமைசரும் மன்னித்துவிடும்படி மன்னரின் காலடியில் விழுந்தார்.ஆனால் மன்னரோ, உண்மையாய் இருக்கவேண்டிய நீர் மோசம் செய்து விட்டீர். இவன் திருடனாய் இருந்தாலும் உண்மையைப் பேசினான். எனவே இன்று முதல் இவனுக்கு முதலமைச்சர் பதவியும், உமக்கு பாதாளசிறையில் ஆயுட்கால கடுங்காவல் சிறைத்தண்டனையும் அளிக்கிறேன் என உத்தரவையிட்டதைக் கண்டு மக்கள், "அரசர் வழ்க, வாழ்க" என வாழ்த்தினர்.

இவ்வளவுதாங்க இந்த கதை. உண்மை என்னிக்கும் ஜெயிக்குமுங்க.

ரொம்ப சின்ன வயசுல இந்த கதைய நான் படிச்சது..!!.

கருத்து சொல்லுங்களேன்.
மேலும் அறிய

** உண்மையின் உயர்வு -- பகுதி - 3

தந்தையின்றி, பாசம் மிகுந்த ஏழை தாயினால் வளர்க்கப் பட்ட திருட்டு சிறுவனான இவன் இன்றும் திருட்டு வாலிபனாக, ஆனால் தாயிக்கு கொடுத்த சத்தியத்திற்கு கட்டுப்பட்டு நடந்துவருகின்றவன், மீண்டும் மாட்டிக் கொண்டான் முகமறியா ஒரு கிழவனிடம்.
இவனோ அந்த கிழவனிடமிருந்து தப்பிச் செல்ல சட்டையை உருவிக் கொண்டு மேலே ஏற முயற்சி செய்ய, கிழவரோ அவனை கீழே இழுக்க, அவரின் பிடியிலிருந்து தப்ப முடியாமல் கீழே இறங்கினான். கிழவர் இங்கே என்ன செய்கிறாயென கேட்க, திருட செல்கிறேனென உண்மையைக் கூறினான். அதற்கு கிழவர், இவ்வளவு பெறிய மாளிகையில் பணம் எங்கே வைத்திருப்பார்களென தெரியுமா ? என கேட்க, அவனோ தெரியாதென கூறினான். தெரியாமல் திருடச் சென்றால் மாட்டிக் கொள்வாயே என்று கூறி, என்ன செய்ய போகிறாய்? என கேட்டார். அப்பொழுது தான் அதை உணர்ந்தவன் திருதிருவென முழித்தான்.
பிறகு கிழவரே பேசினார். நானும் ஒரு காலத்தில் திருடன் தான். வயதாகிவிட்டதால், திருட செல்லமுடியாமல், உணவுக்கும் வழியின்றி சிரமப்படுகிறேனென கூறி விட்டு, இந்த மாளிகையில் பணம் வைத்திருக்கும் இடம் எனக்கு தெரியும், நீ திருடி வருவதில் பாதி எனக்கு கொடுப்பதாக இருந்தால் வழி சொல்லுகிறேன் என்றார். அவனும் சரியென்றான். நானோ கிழவன், வழியை
தெரிந்துக் கொண்டு திருடியதில் பங்குக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டால், நான் என்ன செய்யமுடியுமென சந்தேகம் கேட்டார். அதற்கு அவனோ, நான் திருடனாய் இருந்தாலும் பொய் பேசமாட்டேன் என சத்தியம் செய்துக் கொடுத்தான். என்ன திருடிக் கொண்டு வரப்போகிறாயென கிழவர் கேட்டார். அதற்கு அவனும் கிடைக்கும் வெள்ளி சாமாங்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை மூட்டைக் கட்டி திருடி வருகிறேனேன கூறினான்.
ஒன்றும் இல்லாமலேயே சுவறேறும்போதே என்னிடம் மாட்டிக் கொண்டாய். சமான்களை மூட்டைக் கட்டி, எடுத்து வரும்போது சத்தம் கேட்டு கண்டிப்பாக காவலாளிகளிடம் மாட்டிக் கொள்வாய், அதனால் இந்த கோட்டையின் உரிமையாளர், மிகவும் விரும்பி விலையுயர்ந்த மூன்று வைரக்கற்களை, எந்த அறையில், எந்த இடத்தியில் வத்துள்ளார் என்பதை விவரமாகக் கூறி அனுப்பினார். அவனும் அவர் கூறியபடி சென்று, வைரக்கற்கள் உள்ள பெட்டியை திறந்துப் பார்த்தான். அந்த இருட்டில் வைரக்கற்களின் ஒளியில் கண்கள் கூசியது. அதை எடுத்துக் கொண்டு திரும்பியபோது ஒரு எண்ணம் தோன்றியது. எவ்வளவு விருப்பமிருந்திருந்தால் இந்த கற்களை மிகபெரிய விலைக் கொடுத்து வாங்கியிருப்பார். இது திருடு போனதை அறிந்தால் எவ்வளவு வருத்தப்படுவாரென நினைத்து, நாம் மூன்றும் எடுத்து போனால் கூட சரிசமமாக பங்கு போடமுடியாது. எனவே பாவம் இவருக்கும் ஒன்று வைத்து விட்டு போவோமென்று, ஒன்றை வைத்து விட்டு இரண்டு கற்களை மட்டும் எடுத்துக் கொண்டுபோனான். கிழவருக்கு ஒன்றைக் கொடுக்க, அவரும் மற்றொன்று எங்கே என கேட்க, அவன் செய்ததைச் சொல்லிவிட்டு நகரப் பார்த்தான். உன் இருப்பிடம் சொல், தேவைப்படின் உனக்கு உதவுகிறேனென அவன் இருப்பிடத்தை தெரிந்துக் கொண்டார்.
மேலும் அறிய

** உண்மையின் உயர்வு -- பகுதி-2

அம்மா இறக்கும் போது வாலிப வயதை தொட்டிருந்தவனின் வாழ்க்கை, இப்பொழுது எப்படியிருகிறது என்று பார்போமா !. அவன் தொடர்ந்த்து முரடனாக தீயவன் ஆகவே வளர்ந்து வந்தான். ஆனால் அம்மாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறாமல் உண்மையை மட்டும் பேசினான். அதனால் நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளை, வழிபறி, திருடுகளில் ஈடுபட்டு மட்டிக் கொண்டால், உண்மையைப் பேசினான். அதனால் அவனுக்கும், அவன் நண்பர்களுக்கும் நன்றாக அடி உதை அடிக்கடி கிடைத்தது. இவனிடம் உண்மை பேச வேண்டாம், அது நம் செய்யும் திருட்டு வேலைக்கு ஒத்துவராது என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கேட்காததால், நண்பர்கள் இவனை விட்டு விலகி விட்டனர். இவனுக்கு வேறு தொழில் தெரியாததால் சாப்பாட்டுக்கே வழியின்றி, பட்டணம் ( நகரம் ) சென்று பிழைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்துக் கொண்டு, தனியாக புறப்பட்டு, நகரம் சென்றடைந்தன். நகரத்தில் பிரம்மாண்டமானா கட்டடங்களையும், கொட்டை கொத்தளங்களையும் கண்டு வியந்து நின்றான்.

அப்பொழுதுதான் அவன் மனத்தில், ஒரு திட்டம் உதயாமானது. மிகபெறிய வசதியானவர் வீட்டில் ஒரு முறை பெரும் செல்வத்தை ( பணத்தை ) கொள்ளையடித்துக் கொண்டு வேறு ஊருக்கு சென்று, மீண்டும் கொள்ளை, திருடுகளில் ஈடுபடாமல் நிம்மதியாக வாழ வேண்டுமென கருதி, நகரத்திலுள்ள பெறிய வீடுகளை நோட்டமிட்டான். அதில் ஒரு பெறிய மாளிகையை குறிவைத்துக் கொண்டு, சுற்றி வந்தான். மாளிகையைச் சுற்றி பெறிய மதில் சுவர் இருந்ததால், ஏறுவதற்கு வசதியாக, காட்டிற்கு சென்று ஒரு பெறிய உடும்பை ( பல்லி போன்ற காட்டில் வாழும் ஒரு உயிரினம். சரியான பிடி கிடைத்து பிடித்துக் கொண்டு விட்டால், அதை தனியாக அகற்றுவது மிக கடினம். )பிடித்துகொண்டு வந்தான். சுவரில் ஏறுவதற்கு வசதியாக ஒரு பெறிய கயிறையும் செய்து, ஒரு முனையை உடும்பின் இடுப்பில் கட்டி தயார் நிலையில், இரவுக்காக காத்திருந்தான்.
இரவு வந்தது, அனைவரும் உண்டு உறங்கினர்.இவன் மட்டும் விழித்துக் கொண்டிருந்தான். காவல் காத்துக் கொண்டிருந்த காவலர்களும், ஒருவரை அடுத்து ஒருவர் தூக்க கலக்கத்தில் சொக்க ஆரம்பித்தனர். சரியான நேரம் வந்ததும் உடும்பை கைற்றுடன் சுழற்றி கோட்டை சுவர் மேல் தூக்கி விசிறிப் போட்டான். உடும்பு கோட்டை சுவற்றின் உட்புறம் நன்றாகா பிடித்துக் கொண்டுவிட்டதா என்று இழுத்துசோதித்து விட்டு, கைற்றைப் பிடித்து மெதுவாக சத்தமி ல்லாமல் மேலே ஏற ஆரம்பித்தான். இரண்டுமூன்று அடிகள் சுவற்றில் ஏறியபிற்கு, சட்டை எங்கோ மாட்டிக் கொண்டு கீழே இழுப்பதைப் போல் உணர்ந்தான். மாட்டியிருக்கும் சட்டையை விடுவித்துக் கொள்ளலாம் என நினைத்து, பின் பக்கம் முகத்தை திருப்பி கீழே பார்த்தான். அப்போழுதுதான் தெரிந்தது, கீழே முதியவர் நின்றுக் கொண்டு, அவன் சட்டையை பிடித்து இழுப்பதை. ஐயோ....!!!! மிண்டும் மாட்டிக் கொண்டு விட்டோமே என நினைத்துக் கொண்டே, கீழே இறங்கினான். அவனை உற்று நோக்கிய கிழவரோ, என்னப்பா செய்கிறாய் என கேட்க அவனும் திருட செல்வதாய் கூறினான்.
மேலும் அறிய

++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1

ஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு சென்று விறகு, சுள்ளிகளை எடுத்து வந்து விற்று, மிக சிரமப்பட்டு குழந்தையை வளர்த்து வந்தாள். ஒரே குழந்தை என்பதால், மிகவும் செல்லமாக வள்ர்த்தாள். பள்ளி செல்லும் வயது வந்ததும், பள்ளிக்கும் அனுப்பி வைத்தாள். இல்லையென்று சொல்லாமல், அவன் கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்தாள். அதனால் அவனுக்கு அம்மாவின் சிரமத்தை புரிந்துக்கொள்ளாமல் வளர்ந்து வந்தான். பள்ளியில் பிள்ளைகளிடமே பல்பம், பென்சில், ரப்பர் என சிறு சிறு பொருட்களை திருடிக்கொண்டு வந்து விடுவான். அதை அம்மாவிடம் காட்டுவான். அவன் அம்மாவும் செலவு குறைகிறதே என்ற எண்ணத்திலும், இப்பொலுதே அவன் சாமார்த்தியமாக இருக்கிறானே என நினைத்தும் பாராட்டுவாள்.
அவனும் அம்மாவிடம் பாராட்டு பெருகின்ற சந்தோசத்தில், மேலும் மேலும் அதிகமாக திருட ஆரம்பித்தான். அதனால் ஆசிரியரிடம் மாட்டிக் கொண்டு அடிக்கடி அடி வாங்க ஆரம்பித்தான். அடி பொருக்க முடியாததாலும், அம்மாவை பள்ளிக்கு அழைத்து வர சொன்னதாலும், பள்ளிக்கு செல்வதையே நிறுத்தி விட்டான். பள்ளிக்கு செல்லாதது அம்மாவுக்கு தெரியக்கூடாது என நினைத்து, தினமும் பையை தூக்கிக் கொண்டு வெளியே சென்று, சரியான நேரத்திற்கு வீட்டுக்கு வந்து விடுவான். இவன் பள்ளிக்கு வராததால், ஒரு நாள் ஆசிரியர் அம்மாவிடம் ஏன் உங்கள் மகன் பள்ளிக்கு வருவதில்லையென கேட்டபோதுதான், அவளுக்கு பள்ளி செல்லாதது தெரிந்தது. செல்லமாக வளர்த்த பிள்ளையென்பதால், அவனை அடிக்க மனமின்றி, பள்ளிக்கு போகச் சொல்லி, அவனை வற்புறுத்தினாள். ஆனால் அவனோ, அம்மாவுக்கு தான் தெரிந்து விட்டதே என்ற தைரியத்தில், பள்ளிக்கு செல்வதையே நிறுத்தி விட்டான்.இப்படி இவன் வெளியே சுற்றியதால், தீய நணபர்களின் பழக்கம் ஏற்ப்பட்டதைத் தொடர்ந்து, கடைகளில் திருடுவதும், மிரட்டி வழிபறி செய்வதும், கொள்ளையடிப்பதிலும் நண்பர்களுடன் சேர்ந்து ஈடுபட ஆரம்பித்தான். மாட்டிக் கொண்டபோது, அடிபட்டு உதைப் பட்டு காயங்களுடன் வீட்டுக்கு வருவான். அதை பார்க்கும் தாயோ, அவனுக்கு எவ்வளவோ புத்திமதி கூறியும் அவன் திருந்துவதாக இல்லை. அந்த கவலையிலேயே தாய் நோய்வாய் பட்டு இறக்கும் நிலையடைந்தாள். எப்படியாவது அவனை திருத்திவிட எந்த யோசனையும் தோன்றமல், தவித்த தாயோ, அவனை அருகில் அழைத்து, உனக்காக நான் எவ்வளவோ செய்தேன், ஆனால் என் விருப்பத்தை நிறைவேற்றவில்லை. எப்போதும் உண்மையே பேசுவேன் என்ற சத்தியமாவது செய்துக் கொடு, என்று கேட்டாள். அவனும் இதை செய், அதை செய்யக் கூடாது என்று எதுவும் சொல்லவில்லை. உண்மையைப் பேச சத்தியம் தானே கேட்கிறள், அதனால் நமக்கென்ன நஷ்டம் என்று நினைத்தவன், சிறுது நேரம் யோசனைக்கு பிறகு, அப்படியே சத்தியம் செய்துக் கொடுத்தான். அதை கேட்ட பிறகே நிம்மதியாக உயிரை விட்டாள்.பிறகு நடந்தத்கேன்ன ?
மேலும் அறிய

++ பதவி என்பது கால்செருப்பு!

சீனு அவன் ஏரியாவில்....(தேனாம்பேட்டைக்கு கிட்டே) உள்ள டாக்டர் 'முருவா'
விடம் கன்ஸல்ட் செய்கிறான் அவன் மனோவியாதிக்கு...He is a popular
psychiatrist


டாக்டர் முருவா : "வாங்க! என்ன பிராப்லெம்?"


முருவா: "டாக்டர் ஸார்...தூங்கும்போது மணிக்கணக்காக செல்போன்ல
பேசகிற மாதிரி எனக்கு கனவு வருது..."

டாக்டர் முருவா : "அதனால் என்ன? வந்தூட்டுப் போகட்டுமே..."

சீனு : "விடிஞ்சதும், என் செல்லுலே பேலன்ஸே இல்லாம போயிடுதே!"

"அ.ஆ.இ.ஈ." கட்சித் தலைவர் 'குமரேஷ்' அவர் கட்சி
பொருளாளரிடம் பேசுகிறார்...அவர் கட்சி பொதுக்கூட்டத்திற்கு போகுமுன்....
(அவர் கட்சிக்கு அளிக்கப்பட்ட ஓட்டுச் சின்னத்தைப் பார்த்து):

தலைவர் : "பதவி என்பது எனக்கு 'கால் செருப்பு மாதிரி!'"

பொருளாளர் : "எவன் அசந்து கழட்டி விடுவான்...போட்டுக்கலாம்னுட்டு
பாக்கறீங்க!"

மாங்கொல்லை ரௌடி 'பக்கிரி' தன் செல்லில் வியப்போடு யாரோடேயோ
பேசிக்கொண்டிருக்கிறான் வூட்லே இருந்து.. அவன் தாத்தா ஆர்வம் பீறிட்டு
அது என்ன சமாசாரம்னுட்டு, இடைமரித்து, அவசரமாய் விசாரிக்கிறார் அவனிடம்.
அவன் பதிலைக் கேட்டு....

தாத்தா: "என்னது....ஜெயில்லே இருக்கிற தலைவருக்கு பதவியா?
ஆச்சர்யமாயிருக்கே!"

பக்கிரி : "ஆமாம்...அது வந்து..."கிளைச் சிறை கழக செயலாளர் பதவியாம் !!!"
மேலும் அறிய

Saturday, April 4, 2009

++ ஐ.பி.எல். கிரிக்கெட்டை எதிர்நோக்கி கங்கூலி

<strong>ஐ.பி.எல். கிரிக்கெட்டை எதிர்நோக்கி கங்கூலி
வெள்ளி, 3 ஏப்ரல் 2009( 14:19 TST )



தலைமைப் பொறுப்பு குறித்து ஜான் புக்கானனுடன் ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஐ.பி.எல். இரண்டாவது கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடுவது பற்றி தற்போது தன் கவனம் இருப்பதாக கங்கூலி தெரிவித்தார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவரான கங்கூலி இது பற்றி கூறுகையில் "சர்ச்சைகள் கிரிக்கெட் உலகில் சகஜம்தான், இது விளையாட்டு உலகத்திற்கு புதிதல்ல, ஆனால் தொழில் பூர்வ கிரிக்கெட் வீரர்கள் இவற்றை பின்னுக்கு தள்ளி ஆட்டத்தில் கவனம் செலுத்துவதுதான் வழக்கம்" என்றார்.

கடந்த ஆண்டு துவக்கத்தில் வெற்றிகளைக் குவித்த கங்கூலி அணி பிறகு தோல்விகளை சந்திக்க துவங்கியது. இதனால் இந்த முறை இரட்டை கேப்டன் முறை கடைபிடிக்க வேண்டும் என்று பயிற்சியாளர் புக்கானன் கூறினார்.

அந்த பிரச்சனையை அணி நிர்வாகம் தற்போது ஒத்தி வைத்து தென் ஆப்பிரிக்காவிற்கு சென்ற பிறகு கேப்டன் மற்றும் அணிகளை அறிவிக்கலாம் என்று முடிவு செய்துள்ளது.
மேலும் அறிய

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.