Tuesday, June 30, 2009

> கமலுக்குக் குட்டு – நியாயமா ?

'ஆங்கிலம் தெ‌ரிந்தவர்களுக்கு மட்டுமே திரைக்கதை எழுத்துப் பயிற்சி முகாம் நடத்திய தமிழ் சினிமா நடிகர் கமல்ஹாசனுக்கு இந்த வாரக் குட்டு.'

இரண்டு வாரங்கள் முன்பு பிரபல வார இதழில் விமர்சகர் ஞாநி எழுதிய வாசகங்கள் இவை. நடிகர் கமல்ஹாசனின் ரா‌ஜ்கமல் நிறுவனம் சென்னை ஐஐடி-யுடன் இணைந்து ஆறு நாள் திரைக்கதை பயிற்சி வகுப்பை நடத்தியது. இந்தியா முழுவதிலிருந்தும் மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். தமிழ் திரைப்பட இயக்குனர்கள் மட்டுமல்லாது, இந்திப்படவுலகைச் சேர்ந்த இயக்குனர்களும், திரைக்கதை ஆ‌சி‌ரியர்களும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தினர். முக்கியமாக பிரெஞ்சு திரைக்கதையாசி‌ரியர் ழான் க்ளாட் கே‌ரியர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களுடன் திரைக்கதை குறித்து பேசினார்.

இந்த திரைக்கதை பயிற்சி வகுப்பை நடத்தியதற்காக கமல்ஹாசனுக்கு ஞாநி வழங்கிய நாலுவ‌‌ரி விமர்சன குட்டுதான் நீங்கள் மேலே படித்தது. ஞாநியின் இந்த விமர்சனம் ச‌‌ரியா?

இந்தக் கேள்வியை காலம் கடந்து கேட்பதற்கு காரணம் இருக்கிறது. சில தினங்கள் முன்பு இந்த திரைக்கதை பயிற்சி வகுப்பின் தொடர்ச்சியாக நிரூபர்கள் சந்திப்பு ஒன்றை கமல்ஹாசன் நடத்தினார். இந்த சந்திப்பின்போது ழான் க்ளாட் கே‌ரியரும் உடனிருந்தார்.

சென்னை பற்றி 30 குறும் படங்கள் தயா‌ரிக்கயிருப்பதாகவும், பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களிடமிருந்து ஸ்கி‌ரிப்படுகள் பெறப்பட்டு இந்த குறும் படங்கள் எடுக்கப்படும் என்றும் அப்போது கமல்ஹாசன் தெ‌ரிவித்தார். பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பெ‌ரிய இயக்குனர்களும், மாணவர்களும் இந்த குறும் படங்களை இயக்குவார்கள்.

இந்த நிருபர்கள் சந்திப்பு நமக்கு உணர்த்துவது என்னவென்றால், கமல்ஹாசன் நடத்திய திரைக்கதை பயிற்சி வகுப்பு ஆறு நாட்களுடன் முடிந்துவிடவில்லை. அதனை தொடக்கமாக வைத்து மேலும் பல ஆக்கப்பூர்வமான வேலைகள் தொடர்ந்து நடக்கயிருக்கின்றன.

இந்த பு‌ரிதலின் அடிப்படையில் ஞாநியின் விமர்சனம் எத்தனை மேலோட்டமானது என்பதையும், அவசரத்தில் அள்ளித் தெ‌ளித்த விமர்சனம் அது என்பதையும் ஒருவர் எளிதாக பு‌ரிந்து கொள்ளலாம்.

ஞாநி தனது நாலுவ‌ரி விமர்சனத்தில் குறையாக சுட்டிக் காட்டியிருப்பது கமல்ஹாசன் திரைக்கதை பயிற்சி வகுப்பை ஆங்கிலம் தெ‌ரிந்தவர்களுக்கு மட்டுமே நடத்தினார் என்பது. திரைக்கதை பயற்சி வகுப்பில் என்ன நடந்தது என்பதை அறியாமல் ஞாநி இதனை எழுதியிருக்கிறார் என்பதே உண்மை.

ஐஐடி-யில் நடந்த திரைக்கதை பயிற்சி வகுப்பில் பாடம் நடத்தியவர்கள் சேகர் கபூர், அஞ்சும் ரா‌ஜ்பாலி, அதுல் திவா‌ரி போன்றவர்கள். இவர்கள் அனைவருக்கும் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே தெ‌ரியும். தமிழ் தெ‌ரியாது. ஆறு நாள் பயிற்சி வகுப்பில் வகுப்பு நடத்திய தமிழ் தெ‌ரிந்த இயக்குனாகள்; பாலுமகேந்திரா மற்றும் ஹ‌ரிஹரன் மட்டுமே. வீடியோ கான்பரன்ஸில் கலந்துரையாடல் நடத்திய ழான் க்ளாட் கே‌ரியரும் ஆங்கிலத்திலேயே தனது கலந்துரையாடலை நடத்தினார். ஆங்கிலம் தெ‌ரியாத ஒருவர் இந்த வகுப்பில் கலந்து கொண்டிருந்தால் அவரால் எதையும் பு‌ரிந்து கொண்டிருக்க முடியாது என்பதே உண்மை.

> ஜி-மெயில் சேவை திடீரென நிறுத்தப்பட்டால் என்ன செய்வது?

இலவசமாக இமெயில் தரும் சேவையில் இன்று கூகுள் மெயிலின் இடத்தைப் பிடிக்க வேறு எந்த தளத்தினாலும் முடியவில்லை. அதிக பட்சம் சர்வரில் இடம் தருவதிலிருந்து அடிக்கடி ஏதேனும் புதிய வசதிகளைத் தொடர்ந்து இலவசமாக அளித்து வருவதால் பலரும் கூகுள் தளத்தில் தங்கள் இமெயில் அக்கவுண்ட்களை வைத்து இயக்கி வருகின்றனர்.

இது இலவசம் என்பதால் இந்த சேவை யை எந்த நேரமும் நிறுத்த கூகுள் நிறுவனத்திற்கு சுதந்திரம் உண்டு. கூகுள் நிறுவனத்திற்கு போட்டியாக உள்ள மற்ற நிறுவனங்கள் கூகுள் சர்வரை முடக்கிவிட்டால் என்ன செய்வது? ஏன், கூகுள் சர்வரிலேயே பிரச்சினை ஏற் பட்டு அது முடங்கிப் போய் நம் அக்கவுண்ட்கள் எல்லாம் காணாமல் போய்விட் டால்..?

நாம் கூகுள் சர்வரில் சேர்த்துவைத்த நம் மெயில்கள், அதன் இணைப்புகள் எல்லாம் காணாமல் போய்விடுமே. இப்போதே பலர் தங்கள் பைல்களைப் பத்திரமாகச் சேமித்து வைக்க தங்கள் அக்கவுண்ட்களுக்கு அட்டாச் செய்து அனுப்பி கூகுள் சர்வரில் வைத்துக் கொள்கிறார்கள்.

கம்பெனி ரகசிய ஒப்பந்தங்கள், கணக்கு வழக்குகள், பெர்சனல் கடிதங்கள் என கூகுள் சர்வரில் பலவகையான ரகசிய ஆவணங்கள் காக்கப்பட்டு வருகின்றன. இவை எல்லாம் சர்வர் இயங்காமல் போனால் நமக்குத்தானே நஷ்டம். அப்படியானால் என்ன செய்யலாம் என்கிறீர்களா?


கூகுள் மெயில்களை பேக்கப் எடுத்து உங்கள் சர்வரில் சேவ் செய்துவைக்க என ஒரு புரோகிராம் பைல் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.

இதனை முதலில் டவுண்லோட் செய்து பின் இன்ஸ்டால் செய்திடவும்.இன்ஸ்டால் செய்த பின்னர் புரோகிராம் லிஸ்ட்டில் இது இருக்கும் இடத்தைக் கண்டறிந்து இயக்கவும். கிடைக்கும் விண்டோவில் Gmail Login என்றுள்ள இடத்தில் கிளிக் செய்து அங்கு உங்கள் ஜிமெயில் முகவரியினைத் தரவும். கீழே பாஸ்வேர்ட் கேட்கும் இடத்தில் பாஸ்வேர்டைக் கொடுக்கவும். இதன் கீழே உங்களுடைய அஞ்சல்களை எங்கு சேவ் செய்திட முடிவெடுத்திருக்கிறீர்களோ அதைச் சுட்டிக் காட்டவும்.

அதற்கும் கீழாக எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரையில் உள்ள மெயில்களை சேவ் செய்வதற்கு தேதிகளை அமைக்கவும். உடன் நீங்கள் ஏற்கனவே சேவ் செய்வதற் கென குறியிடப்பட்ட டைரக்டரியில் இந்த மெயில்கள் அனைத்தும் சேவ் செய்யப்படும். நாட்களின் எண்ணிக்கை, மெயில்களின் அளவு ஆகியவை பொறுத்து இவை டவுண்லோட் ஆகும் கால நேரம் வேறுபடும்.

பேக் அப் ஆகும் போது இன்டர்நெட் இணைப்பு அறுந்து போனால், மீண்டும் இனைப்பு கிடைக்கும்போது ஏற்கனவே எதுவரை மெயில்கள் டவுண்லோட் செய்யப்பட்டதோ அந்த இடத்திலிருந்து மிச்ச மெயில்கள் பேக் அப் செய்யப்படும்.

கீழுள்ள ஏதாவது ஒரு முகவரியிலிருந்து தரவிறக்கி கொள்ளுங்கள்.

1.Softpedia : இங்கே கிளிக் செய்யவும்

2.Brothersoft :
இங்கே கிளிக் செய்யவும்

3.Uptodown :
இங்கே கிளிக் செய்யவும்

4.Google Solutions :
இங்கே கிளிக் செய்யவும்

5.Slunecnice.cz :
இங்கே கிளிக் செய்யவும்

> உங்கள் கம்ப்யூட்டரின் இன்டர்நெட் தொடர்புகளை அறிய

இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து தளங்களுக்குச் சென்று அரிய தகவல்களைப் பெறுவது என்பது அனைவரும் விரும்பும் குஷியான சமாச்சாரமாக மாறிவிட்டது. யாராவது இந்த இன்டர்நெட் இணைப்பு எப்படி எந்த கம்ப்யூட்டர் வழியாகப் போகிறது என்று ஒரு நிமிடம் எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? பரந்து விரிந்த உலக இன்டர்நெட் கட்டமைப்பில் எந்த எந்த கம்ப்யூட்டர் வழியே ஓர் இணைப்பு கிடைக்கிறது என்று அறிய எல்லாருக்கும் ஆவலாகத்தான் இருக்கிறது. ஆனால் அதனை எளிமையான முறையில் எப்படி அறிவது? அதற்கான தொழில் நுட்பத்தை எல்லாம் கற்றுக் கொள்ளாமல் எப்படி தெரிந்து கொள்வது?

இத்தகைய கேள்விகளுக்குப் பதில் அளிக்கத்தான் இணையத்தில் ஒரு சாப்ட்வேர் புரோகிராம் தரப்பட்டுள்ளது. இன்டர்நெட் தொடர்பில் இருக்கையில் கம்ப்யூட்டரின் பாதுகாப்பினை அறியவும் இந்த புரோகிராம் உதவுகிறது. இந்த புரோகிராமின் பெயர் TCPView. இதனை இலவசமாக இறக்கிப் பதியலாம்.




எளிதாக இயக்கவும் செய்திடலாம். இந்த புரோகிராம் இயங்குகையில் நமக்கு ஒரு நீண்ட பட்டியல் கிடைக்கிறது. இதனை மேலோட்டமாகப் பார்த்தால் கம்ப்யூட்டர் தொழில் நுட்பச் சொற்கள் அடங்கிய பட்டியல் போல் தெரியும். ஆனால் ஒவ்வொரு வரியும் உங்கள் கம்ப்யூட்டர் இன்டர்நெட் தொடர்பில் எதனை எல்லாம் தொடர்பு கொண்டு செயல்படுகிறது என்று காட்டுவதைக் காணலாம்.

நீங்கள் இன்டர்நெட்டில் இருக்கையில் சேட் கிளையண்ட் புரோகிராம் இயங்கலாம். அதற்கான நெட்வொர்க் தொடர்புகள் காட்டப்படும். அதே நேரத்தில் சில தளங்களுக்குச் சென்று நீங்கள் தகவல்களை எடுத்து சேட் செய்திடும் நண்பருக்கு அனுப்ப முயற்சிக்கலாம். அந்த தொடர்பு காட்டப்படும். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு கம்ப்யூட்டர் தொடர்பு கொள்ளும் நெட்வொர்க் கம்ப்யூட்டர்களை எல்லாம் கண்காணித்துக் கொண்டு இருக்கும். அந்த வரிசையும் காட்டப்படும்.




இதில் இன்னொரு நன்மையும் உண்டு. நமக்குத் தெரியாமல் நம் கம்ப்யூட்டரில் அமர்ந்து கொண்டு இயங்கும் புரோகிராம்களும் நம் இன்டர்நெட் வழியாகத்தானே நம் தகவல்களை அனுப்புகின்றன. இந்த தொடர்பு வரிசையைக் கண்டு கொண்டால் அது எங்கே செல்கிறது என்பதனை அறிந்து கொள்ளலாம். எனவே நீங்கள் டி.சி.பி. வியூ புரோகிராமினைப் பதிந்து ரெகுலராக அதனைக் கவனித்து வந்தால் புதிதாக ஏதேனும் ஒரு கம்ப்யூட்டர் உங்கள் இன்டர்நெட் பாதையில் தெரிந்தால் உடனே உஷாராகி அதனை அப்புறப்படுத்தலாம்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

எழுதியவர் : கார்த்திக்

> களத்தில் கவனம் இல்லை: தோனி

கிங்ஸ்டனில் நேற்று மேற்கிந்திய அணிக்கு எதிராக 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து அணித் தலைவர் தோனி களத்தை சரியாக கணிக்கவில்லை, பேட்ஸ்மென்கள் மேற்கிந்திய பந்து வீச்சாளர்களுக்கு இன்னும் சற்று மரியாதை கொடுத்திருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

82/8 என்ற நிலையில் களம் சற்றே ஆடுவதற்கு எளிதான பிறகு விக்கெட்டை விட்டு விடாமல் நின்ற தோனி தனி நபராக 95 ரனகள் எடுத்து 9-வது விக்கெட்டுக்காக ஆர்.பி.சிங்குடன் இணைந்து 101 ரன்கள் சேர்க்க இந்திய அணி 188 என்ற மரியாதைக்குரிய இலக்கை எட்டியது.

ஆனால் முதலில் பந்துகள் சுவிங் ஆனபோது அதிக விக்கெட்டுகளை இழந்திருக்கக் கூடாது, இது பேட்ஸ்மென்களின் தவறு, 188 ரன்களை வைத்துக் கொண்டு எதிரணியை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினம் என்றார் தோனி.

பேட்ஸ்மென்கள் மேற்கிந்திய பந்து வீச்சாளர்களுக்கு இன்னும் கூடுதல் மரியாதை அளித்திருக்கவேண்டும், களம் முதலில் ஆடுவதற்கு கடினமாக இருந்தது. ஆனால் அதிகமான ஷாட்களை ஆடப் போய் விக்கெட்டுகளை பறிகொடுத்தோம் என்று ஆட்டம் முடிந்து செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

ஆனால் களம் முதலில் பேட்டிங்கிற்கு சவலாக இருக்கும் என்று தெரிந்துள்ள நிலையில் தோனி ஏன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் என்பது பற்றி விளக்கவில்லை.

Monday, June 29, 2009

> த்ரிஷாவின் திடுக்...

பனை மரத்திலே இடி இடிச்சா பாக்கு மரத்திலே வெடிப்பு விட்ட மாதிரி ஆயிருச்சு பாலகிருஷ்ணாவுக்கு. தெலுங்கிலே இன்னும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் பாலகிருஷ்ணா, இப்போதும் கலெக்ஷன் புலியாகவே கர்ஜித்துக் கொண்டிருக்கிறார். பேத்தி வயசு பொண்ணுங்களோட, இந்த தாத்தாக்கள் ஆடுறதை, மானாட மயிலாட ரேஞ்சுக்கு ரசிக்கறது அங்குள்ள ரசிகர்களுக்கு ஆனந்தம், பரமானந்தம். அப்படிதான் இந்த பாலகிருஷ்ணா, இளம் நடிகைகள் ஒருத்தர் விடாம ஆட்டிப்படைக்கிறார்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரைக்கும் தெலுங்கில் என்னென்ன படத்திலே நடிக்கிறீங்க? என்று த்ரிஷாவிடம் கேட்டால், அவரோட இவரோடன்னு போடுற லிஸ்ட்டுல பால கிருஷ்ணாவும் இருந்தார். இப்போ த்ரிஷா இந்தி படத்திலே நடிக்க போய்விட்டதால், பாலகிருஷ்ணா படத்தை லிஸ்ட்டில் இருந்தே து£க்கிவிட்டாராம்.

இதனால் பாலகிருஷ்ணா நடிக்கும் 'பீஷ்மா' என்ற படத்திற்கு பொருத்தமான ஹீரோயின் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அங்கே கொடி நாட்டும் ஹீரோயின்களில் முக்கியமானவர்களான அனுஷ்கா, ஸ்ரேயா, நயன்தாரா வரைக்கும் கேட்டு பார்க்கிறார்களாம். தமிழில் ஒப்புக்கு சப்பாணியாக கூட இருக்க முடியாத ஷீலா, தெலுங்கில் இன்றைய தினம் ரசிகர்களின் 'ஆஹா' லிஸ்ட்டில் இருப்பதால், அவர் வரைக்கும் இறங்கியிருக்கிறார்களாம்.

தாத்தாவுக்காக மனசு இறங்குமா பொண்ணு?

-சிக்கு புக்கு

> பயண எச்சரிக்கை : அமெரிக்கா மீது இலங்கை பாய்ச்சல்

இலங்கைக்கு பயணம் செய்யும் மற்றும் அங்கு வசிக்கும் தமது நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள பிரயாண எச்சரிக்கை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக அழித்துவிட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கின்ற போதிலும் உறுதியற்ற நிலையும், பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறக்கூடிய சாத்தியக்கூறுகளும் தொடர்ந்து காணப்படுவதாகத் தெரிவித்திருந்த அமெரிக்க அரசு, இந்த விடயத்தில் அமெரிக்கக் குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், வடக்கு - கிழக்குப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தது.

இது தொடர்பாக தனது அதிருப்தியை ஊடகம் ஒன்றுக்கு வெளிப்படுத்தியுள்ள சிறிலங்காவின் வெளிவிவகாரச் செயலாளர் பாலித கோகன்ன, விடுதலைப் புலிகள் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த கள நிலவரத்தை புரிந்துகொள்ளாமல் அமெரிக்க அரசு இந்த எச்சரிக்கையை வெளியிட்டிருக்கின்றது எனவும் குற்றம் சாட்டியிருக்கின்றார்.

"இவ்வாறான ஒரு அறிவுறுத்தலை அமெரிக்க அரசு வெளியிட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்துகின்றது" எனத் தெரிவித்துள்ள கோகன்ன, கடந்த காலங்களில் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பு சிறிலங்கா படையினரால் முழுமையாக தோற்கடிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறலாம் எனத் தெரிவித்திருப்பது கள நிலைமைகளைப் போதுமான அளவுக்குப் புரிந்துகொள்ளாத தன்மையைத்தான் வெளிப்படுத்துகின்றது" எனவும் தெரிவித்திருக்கின்றார்.

இதேவேளையில் போருக்குப் பிந்தைய தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கடல் கடந்த நாடுகளில் உள்ள சிறிலங்காவின் தூதரகங்கள் அந்ததந்த நாடுகளில் விளக்கமளிக்க வேண்டும் என சிறிலங்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நாடுகள் ஏற்கனவே சிறிலங்காவுக்கான பிரயாண எச்சரிக்கைகளை வெளியிட்டிருந்தால் அவற்றைத் திரும்பப்பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் தூதரங்கள் குறிப்பிட்ட நாடுகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும் எனவும் வெளிவிவகாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கின்றது.

> சீனாவில் ரயில்கள் மோதல் ; 3 பேர் பலி

சீனாவில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியாயினர் ; 60 பேர் காயமுற்றனர்.

சீனாவின் மத்தியப் பகுதியில் உள்ள ஹனான் மாகாணத்தில் இன்று அதிகாலை இந்த விபத்து நேரிட்டது.

ஹனான் தலைநகர் சாங்ஷா ரயில் நிலையத்திலிருந்து, தெற்குப் பகுதியிலுள்ள ஷென்சென் என்ற இடதை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலும், குயிசோவு என்ற மாகாணத்திலுள்ள டாங்ரென் ரயில் நிலையத்திலிருந்து ஷென்சென் என்ற இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதையடுத்து, இரு ரயில்களுமே தண்டவாளத்தைவிட்டு கீழிறங்கியது.

இன்று அதிகாலை 2.34 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் 6 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததாகவும், 60 பேர் காயமுற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

> மனநோயின் அறிகுறிகள்!

மனநோய் ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்கள், எந்தெந்த மாதிரியான தருணங்களில் மனநோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய தகவல்களை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

மனநோய்க்கும், தூக்கமின்மைக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளதையும் குறிப்பிட்டிருந்தோம். சிந்தனைத் திறன் பாதிக்கப்படும்போதே மனநோய் ஏற்படுகிறது.

நமது சிந்தனைத் திறனைக் கட்டுப்படுத்துவது உடலின் தலைமைச் செயலகமான மூளையில் உள்ள நரம்பு மண்டலமே.

ஒருவரின் சிந்தனைத் திறன் என்பது வயதிற்கேற்ப, காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வேறுபடுகிறது.

குழந்தைப் பருவத்தில் உள்ளவர்கள், விளையாட்டு, பள்ளிப் படிப்பு, நண்பர்கள், புதிய பொருட்களை வாங்குதல், புத்தாடை, அணிகலன்கள், புத்தகங்களைப் படித்தல் என ஒவ்வொரு வயது நிலையிலும் அவர்களது சிந்தனை பரந்து விரிந்து கொண்டே செல்கிறது. ஆனால், பெரிய அளவிலான எதிர்பார்ப்பு நிறைவேறாதபோது, சிலர் பித்துப் பிடித்ததைப் போல் ஆகிவிடுவர்.

சிறு குழந்தைகளே கூட, சற்றே அதட்டலாகப் பேசினால், அவர்களின் முகபாவம் மாறிவிடுவதைப் பார்க்கிறோம். மிகவும் நம்பிக்கொண்டிருந்து விட்டு, குறிப்பிட்ட ஒரு பொருளோ அல்லது பதவியோ கிடைக்காமல் போனால்கூட சிலருக்கு ஒருவித மன அழுத்தம் உருவாகக்கூடும்.

நாம் மிகவும் நேசிக்கும் ஒருவர், அதாவது தாயோ - தந்தையோ மரணம் அடைந்தால் அவர்களின் இழப்பைத் தாங்க முடியாத துயரின் காரணமாகக்கூட சிலருக்கு மனநோய் ஏற்பட வாய்ப்புண்டு. ஆழ்ந்த பற்றுடன் வாழ்ந்துவிட்டு அவர்கள் மறைந்துவிடும் போதோ அல்லது அகால மரணம் ஏற்படும்போதோ இப்படிப்பட்ட பாதிப்பு ஏற்படுகிறது.

மனஅழுத்தமும், மனநோயும் தொடர்புடையது என்று ஏற்கனவே பார்த்தோம். நரம்புமண்டலத்தில் கட்டளைகளாக பதிவாகும் விஷயங்கள், நிறைவேறாமல் போகும்போதே பெரும்பாலானோருக்கு மனநோய் ஏற்படுகிறது.இன்னும் சிலர், கஞ்சா, அபின், பிரெளன் சுகர் போன்ற போதைப்பொருட்களை உபயோகிப்பதால் அதிகளவில் மூளை நரம்புகள் தூண்டப்பட்டு பின்னர் அது மூளையின் சொல்படி நடக்காமல் போவதாலும் மனநோய்க்கு ஆளாகின்றனர்.

அரிய நிகழ்வாக, அதிகளவு புத்தகப்புழுவாக இருப்பதால், சிந்தனை பாதிப்புக்குள்ளாகி மனஅழுத்த நோய்க்கு ஆளானவர்களையும் பார்க்கிறோம்.

எனவே மனநோய் எந்தமாதிரி, எந்த சூழ்நிலையில் ஏற்படுகிறது என்பதை விடவும், அந்த நோய் ஏற்பட்டு விட்டால்,. அதனை குணப்படுத்துவது எப்படி என்பது பற்றித்தான் நாம் யோசிக்க வேண்டும்.

முதலில் ஒருவருக்கு மனநோய் இருப்பதை எப்படி அறிந்து கொள்வது?

அதிகநேரம் - அதாவது மணிக்கணக்கில் - நாள்கணக்கில் தனிமையில் இருப்பது, யாருடனும் பேசாமல் ஒரே இடத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருத்தல், சம்பந்தமின்றி தானாகப் பேசுதல் அல்லது புலம்புதல் போன்றவை இந்நோய்க்கான அடிப்படை அறிகுறிகள் எனலாம்.

நோயின் தன்மையைப் பொருத்து அறிகுறிகளும் வேறுபடலாம். சிலர் அதிக நேரம் தண்ணீரை திறந்து விட்டு குளித்துக் கொண்டேயிருப்பர். வேறு சிலர் குளிக்கவே மாட்டார்கள். இதுபோல மனநோயாளிகளுக்கான அடையாளங்கள் பல உண்டு.

முதலில் மனநோய் என்று தெரிந்தவுடன், சம்பந்தப்பட்ட நோய்க்கு சிகிச்சையளிக்கக் கூடிய மனோதத்துவ நிபுணர்களை அணுக வேண்டும்.

அவர்களின் அறிவுரைப்படி மாத்திரைகளை சாப்பிட வேண்டும். மனோதத்துவ நிபுணர்களைப் பொருத்தவரை பெரும்பாலும் கவுன்சலிங் எனப்படும் கலந்துரையாடல் மிக மிக முக்கியமானது.

நோயாளியுடன் மருத்துவ நிபுணர் பேசுவதால், பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. அதற்கேற்ப சம்பந்தப்பட்ட நோயாளிக்கு நோயின் தீவிரத்தை அறிந்து, சிகிச்சை அளிக்க முடியும்.

> எய்ட்ஸ் நோயை குணப்படுத்துவதில் முக்கிய கண்டுபிடிப்பு

உயிர்க் கொல்லி நோயான எய்ட்ஸ் நோயை குணப்படுத்துவது தொடர்பான மருத்துவ ஆராய்ச்சியில் முக்கிய திருப்பமாக, மனித உடலில் எய்ட்ஸ் கிருமி எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறது என்பதை கனடா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் இதனை கண்டுபிடித்துள்ள கனடா விஞ்ஞானிகள், தற்போதைய கண்டுபிடிப்பு மூலம் எய்ட்ஸ் நோயை முற்றிலுமாக குணப்படுத்திவிடலாம் என்று கூறியுள்ளனர்.

எய்ட்ஸ் நோய் பாதித்த ஒருவருக்கு தற்போது அளிக்கப்படும் சிகிச்சை மூலம் அந்த நோய் மென்மேலும் அதிகமாகாமல் கட்டுப்படுத்த முடியுமே தவிர, முற்றிலும் குணப்படுத்த முடியாது.ஏனெனில் அந்த நோயை உண்டாக்கும் கிருமி மனித உடலில் எங்கோ மறைந்து இருந்து கொண்டு, மருநதின் வீரியம் குறைந்தவுடன் மீண்டும் மீண்டும் தாக்குகிறது.

இந்நிலையில், இதுவரை எய்ட்ஸ் நோயை ஏற்படுத்தும் கிருமி மனித உடலில் கிட்னியிலோ ( சிறுநீரகம் ) அல்லது மூளையிலோதான் மறைந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதிக்கொண்டிருந்தனர்.

ஆனால் தற்போதைய கண்டுபிடிப்பின் மூலம் இந்நோய் கிருமி மிக பாதுகாப்பாக, மனித உடலில் நீண்ட நாட்கள் வாழும் 'மெமரி செல் ( உயிரணு )' களில் மறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

'ஸ்டெம் செல்'களைப் போன்றே மனித உடலில் நீண்ட ஆயுளைக்கொண்ட இந்த 'மெமரி செல்', ஏதாவது புதிய வைரஸ் அல்லது நோய் தாக்காதவரை, பெரும்பாலான நேரம் உறங்கிக் கொண்டுதான் இருக்கும்.

அதேபோன்று 'ஸ்டெர்ம் செல்'களைப் போன்றே, தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் திறனும் 'மெமரி செல்'-க்கு உண்டு. எனவே எய்ட்ஸ் கிருமி அதை தாக்கும்போது, அதனை எதிர்த்துப் போராடுவதற்காக பல மடங்கு செல்களை அது உருவாக்கும்.

ஆனால் பிரச்னை என்னவென்றால், எய்ட்ஸ் கிருமி ஒருமுறை இந்த 'மெமரி செல்' - க்குள் புகுந்துவிட்டால், அதுவும் அதனுடன் சேர்ந்து பன்மடங்காக பெருகிவிடும்.

இவ்வாறாகாத்தான் எய்ட்ஸ் கிருமி மனித உடலில் பத்திரமான இடத்தில் ஒளிந்துகொண்டு, பின்னர் தனது வேலையை காட்டி வந்தது.

இந்நிலையில், மெமரி செல் - லில் ஒளிந்திருக்கும் எய்ட்ஸ் கிருமியை, மெமரி செல் - க்கு பாதிப்பில்லாமல் அழிப்பதற்கான வழிமுறைகளை கண்டறியும் முயற்சியில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாக கனடா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு, எய்ட்ஸ் கிருமியை அழிப்பதற்கான முதல் தடயமாக அமைந்துள்ளதாக இந்த ஆராய்ச்சிக் குழு தலைவரான சீக்லே தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் தற்போது 33 மில்லியன் பேர் எய்ட்ஸ் நோய் தாக்குதலுக்குள்ளாகி இருக்கின்றனர் என்பதும், ஆண்டுக்கு 2.7 மில்லியன் பேர் இந்நோய் தாக்குதலுக்கு உள்ளாகுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

> தனுஷ்ன் கடத்தல்

ரீமேக் படங்களில் நடிக்க தனுஷ் ஆர்வம் காட்டுகிறார். ரீமேக் படமான பரட்டை என்கிற அழகு சுந்தரம்
வெற்றி பெறாவிட்டாலும் அடுத்து நடித்த யாரடி நீ மோகினி அவருக்கு பெயர் வாங்கித் தந்தது. தற்போது நடித்து வரும் குட்டி படமும் தெலுங்கில் வெளியான ஆ‌ரியா படத்தின் ‌ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

குட்டி, ஆடுகளம் என பிஸியாக இருக்கும் தனுஷ் மேலுமொரு ‌ரீமேக் படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் வெளியான ரெடி என்ற படத்தை தனுஷுக்காக தேர்வு செய்துள்ளனர். ராம், ஜெனிலியா ரெடியில் நடித்திருந்தனர். படத்தை ஸ்ரீனு வைட்லா இயக்கியிருந்தார்.

பொறியியல் கல்லூ‌ரி மாணவர் ராம். அவருடைய நண்பர் ஒரு பெண்ணை காதலிக்கிறார். ஆனால் பெண்ணின் பெற்றோர் வேறு இடத்தில் திருமணம் நிச்சயிக்கின்றனர். நண்பனுக்காக அவரது காதலியை கடத்தி வருகிறார் ராம். கடத்தி வந்த பிறகுதான் அது நண்பனின் காதலி அல்ல வேறொருவ‌ர் என்பது தெ‌ரிகிறது. இந்த தவறு ராமை எப்படியெல்லாம் அலைக்கழிக்கிறது என்பது கதை.

மலையாளத்தில் மோகன்லால், ஐஸ்வர்யா நடித்த பட்டர்பிளை படத்தின் சாயலில் இருக்கும் ரெடி, தெலுங்கில் மிகப்பெ‌ரிய வெற்றியை பெற்றது. அதைதான் தமிழில் தனுஷை வைத்து ‌ரீமேக் செய்கிறார்கள். படத்தை இயக்குவது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

Sunday, June 28, 2009

> உலகின் அதிவேக கேமரா

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள், ஒரு நொடியில் லட்சக்கணக்கான படங்களை எடுக்கும் வகை யில் புதிய கேமரா ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த கேமராவில் இருந்து கிளம்பும் விசேஷ கதிர்கள் பொருட்களின் மீது பட்டு மிக வேக மாக பிரதிபலித்து காட்சி பதிவை ஏற்படுத்தும். இதனால் ஒரு நொடியில் சுமார் 60 லட்சம் படங்களை தொடர்ந்து எடுக்க முடியும். இந்த கேமரா நவீன தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. மிக அரிய நிகழ்வுகளையும் படம் பிடிக்கும் நுண்ணிய திறன் கொண்டது. எனவே இது ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் ரத்த செல்கள் மற்றும் முளையில் நிகழும் ரசாயன மாற்றங்களை கண்காணிக்க முடியும். இதனால் பல புதிய மருந்து பொருட்களை தயாரிக்க முடியும். இதனால் பல புதிய மருந்து பொருட் களை தயாரிக்க உதவும். மேலும் இது ரத்தத் தில் புற்றுநோயை உருவாக்கும் செல்களை தனித்து கண்டுபிடிக்கவும் துணைபுரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

> மழை பெய்விக்கும் பாக்டீரியா

அமெரிக்காவின் மொன்டானா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மழை பெய்விக் கும் பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் வறண்ட பகுதிகளிலும் மழை பெய்விக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தாவரங்கள் மேல் படரும் பாக்டீரியா காற்று மூலம் விண்ணுக்குச் செல்கிறது. இந்தப் பாக் டீரியா மீது உருவாகும் ஐஸ் பல்கிப் பெருகு கிறது. இந்த ஐஸ்கட்டிகள் மழை மேகங்களாக மாறுகின்றன. சில குறிப்பிட்ட வெப்பநிலையில் மழையாக பொழிகின்றன. இந்த பாக்டீரியாக்கள் உலகம் முழுவதும் எல்லா பகுதிகளிலும் காணப்படுகின்றன. மழை பெய்யும் காலங்களில் தான் இந்த பாக்டீரியாக்கள் பெருகி வளர் கின்றன. இவை 83 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலைக்கு உட்பட்ட இடத்தில் மட்டுமே வளர முடியும். தற்போது உலகம் வெப்பமயமாகி வருவதால் இந்த பாக்டீரியாக்கள் அழியும் நிலை கூட ஏற்படலாம். எனவே இந்த பாக்டீ ரியாக்களை செயற்கை முறையில் உருவாக்குவது குறித்தும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகி றார்கள்

Saturday, June 27, 2009

> I.C.C மீது அப்ரிடி கடும் சீற்றம்.....

ஒன்பது மாத இடைவெளியில் அடுத்த உலகக்கிண்ண (20 ஓவர்) தொடரை நடத்தவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின்(ஐ.சி.சி.) அட்டவணைக்கு பாகிஸ்தான் வீரர் அப்ரிடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் உலகக்கிண்ணத்தில் சகல துறைகளிலும் அசத்திய தனக்கு தொடர் நாயகன் விருது புறக்கணிக்கப்பட்டதாகவும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் இரண்டாவது "ருவென்ரி20' உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் நடந்தது. இதில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இத்தொடரில் அபாரமாக ஆடிய இலங்கை வீரர் டில்ஷான் (317 ஓட்டம்) தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றார். இதற்கு பாகிஸ்தான் சாகித் அப்ரிடி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது; "ருவென்ரி20' உலகக்கிண்ணத்தொடரில் பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், எனது செயல்பாட்டுக்கு ஐ.சி.சி. அங்கீகாரம் அளிக்கவில்லை. இத்தொடரில் 176 ஓட்டங்களும் 11 விக்கெட்டுகளும் வீழ்த்தி சகல துறைகளிலும் அசத்தியுள்ளேன் தவிர எனது களத்தடுப்பும் பாராட்டும் படியாக அமைந்தது. ஆனால், தொடர் நாயகன் விருதை ஐ.சி.சி. எனக்கு வழங்காதது அதிர்ச்சியளித்தது.

தற்போது தான் "ருவென்ரி20' உலகக்கிண்ண சாம்பியன் பட்டம் வென்று சாதித்துள்ளோம். இந்த மகிழ்ச்சியை கொண்டாட போதுமான கால அவகாசம் இல்லை. அதற்கும் மூன்றாவது உலக்கிண்ணத் (20 ஓவர்) தொடர் மேற்கிந்தியாவில் நடக்கவுள்ளது. ஐ.சி.சி.யின் போட்டி அட்டவணை முறையானதாக இல்லை. ஏன் இப்படி ஒரு முடிவை ஐ.சி.சி. எடுத்துள்ளது எனத் தெரியவில்லை.விளையாட்டு உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பணத்துக்கு முன்னுரிமை கொடுப்பது தான் இதற்கு முக்கிய காரணம் என நினைக்கிறேன்.

அணியின் கப்டன் யூனிஸ்கான் வீரர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார். மூன்றாவது வீரராக களமிறங்க யூனிஸ்கானிடம் விருப்பம் தெரிவித்தேன். அவரும் சிறப்பாக செயல்படுமாறு நம்பிக்கையளித்தார். தற்போது துடுப்பாட்டத்தில் போர்முக்கு திரும்பியது மகிழ்ச்சியளிக்கிறது. உலகக்கிண்ண வெற்றியை ஸ்வாட் பள்ளத்தாக்கில் வாழும் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தானுடன் விளையாட விருப்பமில்லை. இங்கிலாந்தில் நடந்த உலகக்கிண்ண (20 ஓவர்) பயிற்சி போட்டியில் இந்தியாவுடன் விளையாடினோம்.அப்போது இந்திய அணிக்கு எங்களுடன் போட்டிகளில் பங்கேற்க விருப்பமில்லை என்பது தெரிந்தது. பாகிஸ்தானுடன் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென்று அவர்கள் முகம் மட்டுமே சொல்கிறது.அவர்களது மனநிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை என்றார்.

> அரசியலுக்கு வர்றார் அஜித்: மீடியாக்கள்

மலேசியாவில் 'அசல்' படப்பிடிப்பில் சிவனேன்னு தனது வேலையை செய்து வருகிறார் அஜித்.
அதற்குள் அவர் அரசியலுக்கு வரப்போவதாக வாரஇதழ் ஒன்று பரபரப்பை பற்றவைத்துள்ளது.

தனது ரசிகர்மன்றத்தை மக்கள் இயக்கமாக இன்று ஆரம்பித்திருக்கலாம் விஜய். ஐந்து வருடங்களுக்கு முன்பே தனது ரசிகர் மன்றம் இயக்கமாக செயல்படும் என அறிவித்தார் அஜித். "இயன்றதைச் செய் இல்லாதவருக்கு" என்பதுதான் தனது இயக்கத்துக்கு அஜித் சொல்லிக்கொடுத்த மந்திரம். தமிழகத்தில் மட்டும் அஜித்துக்கு 35 ஆயிரம் மன்றங்களும், எண்ணிக்கையில் கோடியை தாண்டும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

இவர்கள் தன்னை எளிதான முறையில் தொடர்பு கொள்ளவும் இயக்கத்தை பலப்படுத்தவும் சில திட்டங்களை தீட்டியுள்ளாராம் அஜித். அதன்படி இணையதளம் ஒன்றை ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமைகளில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ரசிகர்களுடன் பேசி சமூக பணிகளை முடுக்கி விடும் எண்ணம் அஜித்திடம் உள்ளது.

இதனை வைத்துக்கொண்டு விஜய் பாணியில் அஜித் அரசியலுக்கு வரப்போகிறார் என்கிற தோற்றத்தில் வாரஇதழ் ஒன்று கட்டுரை வெளியிட்டுள்ளது. இதுபற்றி அஜித் தரப்பில் நாம் விசாரித்தபோது, 'அஜித்திடம் அப்படியொரு எண்ணம் இருந்ததும் இல்லை இருக்கப்போறதும் இல்லை. கடந்த 15 வருடங்களில் மட்டும் அஜித் செய்த உதவியினால் உயிர் பிழைத்தவர்கள் நிறைய. நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு விளக்கேற்றிவைத்த பெரிய மனசுக்காரர். ஆனால் செய்த உதவிகளை விளம்பரம் செய்து கொண்டதே இல்லை. இதுதான் அவருக்கு ஆத்மதிருப்தியை தருகிறது. அப்படிப்பட்டவருக்கு அரசியல் ஆசையெல்லாம் வராது" என்றார்.

"ஒருவேளை அஜித் அரசியலுக்கு வந்தாலும் சந்தோஷமே! கக்கன், காமராஜர் வழியில் அப்பழுக்கற்ற ஒரு அரசியல் தலைவர் தமிழகத்திற்கு கிடைக்கும்" என்கிறார் ரசிகர் ஒருவர்.

> ரஜினி-கமல் இணைவார்களா?: கே.எஸ் பேட்டி

ரஜினி, கமல் இருவருமே இணைந்து நடிக்கும் சூழல் வரும் என்றும், அப்படி ஒரு சூழலை உடனிருப்பவர்கள்தான் உருவாக்க வேண்டும்.
என்றும் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஆனந்த விகடன் வார இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டி:

ரஜினி கமல் இருவரும் சேர்ந்து நடித்தால் அந்த பட்ஜெட்டை தாங்குற அளவுக்கு தயாரிப்பாளர் அமையணும்.

கமல் ரஜினி சேர்ந்து நடிக்கிற சூழல் மறுபடியும் வரும்னு நினைக்கிறேன். சேர்ந்து நடிக்கணும்னு அவங்களா நினைக்க மாட்டாங்க. யாராவது தூண்டிவிடணும்.

ஆனா இந்த விஷயத்துல நானா எதுவும் செய்ய மாட்டேன். போய்க் கேட்டா, 'படம் பண்ணி பணம் பார்க்க ஆசைப்படறான்'னு நினைப்பாங்க.

அதனால அந்த மாதிரி விஷயத்தை நான் நினைச்சுக் கூடப் பார்க்கிறதில்ல, என்று அவர் பதில் கூறியுள்ளார்.

இதற்கு முன்பு மணிரத்னம் ஒருமுறா ரஜினியையும் கமல்பாசனையும் இணைத்து ஒரு படம் எடுக்க முயன்றார். ஆனால் அப்படி நடித்தால் வரக்கூடிய சிக்கல்கள், ரசிகர்களின் மனநிலையைக் கருத்தில் கொண்டு அந்த முயற்சியை ரஜினி - கமல் இருவருமே ஏற்கவில்லை என கூறப்பட்டது.

Friday, June 26, 2009

> டைட்டனில் எண்ணை வளம்

நாம் வசிக்கும் பூமிக்கு சந்திரன் துணைக் கோளாக இருப்பதுபோல சனி கிரகத்துக்கும் சில துணைக் கோள்கள் உள்ளன. அந்த துணைக்கோள்களில் ஒன்று "டைட்டன்' இந்த துணை கிரகமானது பூமியிலிருந்து 100 கோடியே 30 லட்சம் கிலோமீட்டர் தொலை வில் உள்ளது. இதன் வெப்பநிலை மைனஸ் 179 டிகிரி செல்சியஸ் ஆகும். சனி கிரகத்தையும் அதன் துணைக் கோள்கள் பற்றியும் ஆய்வு செய்ய காசினி என்ற விண்கலத்தை விஞ்ஞானி கள் அனுப்பியுள்ளனர். அதிலுள்ள ரேடார் டைட்டன் துணைக்கோளின் 20 சதவீத மேற் பரப்பை ஆய்வு செய்து படம் பிடித்துள்ளது. அதன் மூலம் டைட்டன் துணைக்கோளின் மேற்பரப்பில் நூற்றுக்கணக்கான ஏரிகள், கடல்கள் இருப்பதும் அவற்றில் எண்ணெய் வளங்கள் நிறைந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த எண்ணெய் வளம் பூமியில் உள்ள எண்ணெய் வளத்தைப் போல் பல நூறு மடங்குகள் அதிகம் என்றும் விஞ்ஞானி கள் தெரிவித்துள்ளனர்.

> தண்ணீர் அறிகுறியுடன் புதிய கிரகம்

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத் தின் துணை நிறுவனமான இன்ஸ்டிடியூட் டி அஸ்ட்ரோ பி சிக்யூ டி பாரீஸ் என்ற அமைப்பின் விஞ்ஞானிகள் விண்வெளியில் உள்ள ஒரு கிரகத்தில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். பூமியில் இருந்து 60 ஒளி ஆண்டு தொலைவில் ஒரு கிரகம் உள்ளது. எச்.டி.18733 பி என்ற பெயர் கொண்ட இந்த கிரகத்தில் இருந்து கிளம்பும் ஒளி அளவை யில் இருந்து அங்கு தண்ணீர் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் எச்.டி.189733 பி கிரகம் சூடான வியாழன் கிரகம் என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு முன்பு இந்த கிரகம் குறித்த ஆராய்ச்சியில் அங்கு தண்ணீர் இல்லை என்று கூறப்பட்டது. ஆனால் தற்போதைய நவீன ஆராய்ச்சியில் அது தவறு என்று நிரூபிக்கபட்டுள்ளது.

> விஜய் 50-வது பட இயக்குனர்

தொல்பொருள் ஆராய்ச்சியெல்லாம்கூட ரொம்ப சுலபம்தான். விஜய்யின் 50-வது பட இயக்குனர் யார்? என்று ரசிகர்கள் துளைத்தெடுத்த
கேள்விக்கு விடை கிடைப்பது என்பது அவ்வளவு சுலபமாக படவில்லை. இந்நிலையில் இந்த ரகசியம் உடைந்துவிட்டது.

விஜய்யின் 49-வது படமான 'வேட்டைக்காரனை' இயக்கிவருகிறார் பாபுசிவன். இவரைப்பற்றி எந்த மீடியாவும் கண்டு கொள்ளாத நிலையில் 50-வது படத்தை இயக்கப்போவது யாரென்ற ஆர்வமே ரசிகர்களிடமும் மீடியாக்களிடமும் இருந்தது. பிறந்தநாள் பிரஸ்மீட்டில்கூட இதுபற்றி சொல்லாமல் நழுவினார் விஜய்.

'முறைப்படியாக அறிவிப்பு வெளிவரும்வரை காத்திருங்கள்' என்றார் விஜய். ம்ஹூம் யாரும் காதில் வாங்குவதாயில்லை. 50-வது படத்தை இயக்கப்போவது எஸ்.பி.ராஜ்குமார். 'பொன்மனம்' உள்ளிட்ட பிரபு படங்கள் சிலவற்றை இயக்கிய இவர், தற்போது ஆர்.கே.நடிக்கும் 'அழகர் மலை' படத்தை இயக்கியுள்ளார்.

50-வது படத்துக்கு அனேகமாக 'உரிமைக்குரல்' பெயர் சூட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ஜோடியாக தமன்னா நடிக்க, மீண்டும் விஜய்யுடன் கைக்கோர்க்கிறார் வடிவேலு. மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும், நட்சத்திர தேர்வும் நடந்துவரும் இப்படத்தை சங்கிலிமுருகனின் முருகன் சினி ஆர்ட்ஸ் தயாரிக்கிறது.

Thursday, June 25, 2009

> யார் அடுத்த பிரபுதேவா நேரடி இறுதிப்போட்டி

விஜ‌ய் டி‌வி‌‌யி‌ல் ஒ‌ளிபர‌ப்பா‌‌கி வரு‌ம் அடுத்த நடனப் புயலுக்கான தேடலான உங்களில் யார் அடுத்த பிரபு தேவா நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேயர்கள் முன் நடத்தப்பட்டு விஜய் டிவியில் நேரடியாக ஒளிபரப்பும் செய்யப்பட உ‌ள்ளது.

தொலை‌க்கா‌ட்‌சிக‌ளி‌ல் ஒரு புதிய முயற்சிதான், இந்தியாவின் அடுத்த நடனப்புயலுக்கான தேடலான - உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சி. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத‌ம் துவ‌ங்‌கிய இ‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி ர‌சி‌க‌ர்களை ‌மிகவு‌ம் கவ‌ர்‌ந்த ‌நிக‌‌‌‌‌ழ்‌ச்‌சியாகு‌ம்.

யா‌ர் அடு‌த்த ‌பிரபுதேவா போ‌ட்டி‌ ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் ப‌ங்கே‌ற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களில் இறுதியாக நா‌ன்கு பே‌ர் இறுதி சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர்.

தே‌ர்வா‌கியு‌ள்ள பிரேம் கோபால், செரிஃப், நந்தா மற்றும் மனோஜ் குமார் ஆகியோர் இறுதிப்போட்டியில் மோதுகின்றனர். தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் இதுபோன்ற ஒரு நடன நிகழ்ச்சி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இதில் பங்குபெறும் போட்டியாளர்கள் தங்களின் நடனங்களை தானே வடிவமைத்து ஆடுவதுதான் இதன் சிறப்பம்சமாகும்.

வரும் வெள்ளியன்று நடைபெறும் நேரடி இறுதிப்போட்டியில் நடனப்புயல் பிரபுதேவா கலந்துகொள்கிறார். போட்டியாளர்களின் நடனத்தை பார்க்கவும் 'அடுத்த பிரபு தேவா' யார் என்பதை அறிவிக்கவும் அவர் நேரில் வருகிறார்.
இறுதி சுற்று‌ப் போட்டியில் நான்கு போட்டியாளர்களும் இரண்டு கட்டமாக போட்டி‌யிட உள்ளனர். முதல் சுற்றில் மேற்கத்திய நடனமும் இரண்டாம் சுற்றில் போட்டியாளர்களின் விருப்பத்திற்கும் நடனமாடுகின்றனர். உ‌ங்களில் யார் அடுத்த பிரபுதேவா போட்டியில் வெற்றி பெறும் நபருக்கும் இந்தியாவின் மைகேல் ஜாக்சனான பிரபுதேவாவிடம் இருந்து பட்டம் பெறுவதைத் தவிர ரூபாய் 10 லட்சம் பரிசுத் தொகையும் கிடைக்கப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வ‌ரு‌ம் வெள்ளி‌க்‌கிழமை அதாவது ஜூன் 26ஆ‌ம் தே‌தி மாலை 6:30 மணியிலிருந்து அடுத்த பிரபுதேவாவுக்கான மகுடம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள Y.M.C.A வளாகத்தில் நடைபெறுகிறது. மிக பிரம்மா‌ண்டமாக ஆயிரக்கணக்கான நேயர்களின் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி அரங்கேற உள்ளது. மேலும் இதனை விஜய் டிவியில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்படுகிறது.

> வீரர்களுக்கு தோனி எச்சரிக்கை

இந்திய கேப்டன் தோனி சாட்டையை சுழற்றியுள்ளார். அணியின் நலனுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ள இவர், காயம் அடைந்த வீரர்களுக்கு அணியில் இடமில்லை என எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த “டுவென்டி-20′ உலக கோப்பை தொடரில் இந்திய அணி “சூப்பர்-8′ சுற்றோடு வெளியேறியது. இதற்கு பெரும்பாலான வீரர்கள் முழு உடல்தகுதியில்லாமல் பங்கேற்றதே முக்கிய காரணம் என கூறப்பட்டது.

உதாரணமாக வலது தோள்பட்டையில் லேசான வலி என்று சேவக் முதலில் கூறியுள்ளார். பின்னர் லண்டனில் சோதனை செய்த போது “ஆப்பரேஷன்’ செய்யும் அளவுக்கு பெரிய பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அணியில் இருந்து கடைசி நேரத்தில் நீக்கப்பட்டார். இது தொடர்பாக கேப்டன் தோனி மற்றும் சேவக் இடையே மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாயின. காயத்தின் உண்மை தன்மையை சேவக், தன்னிடம் தெரிவிக்கவில்லை என தோனி ஆதங்கப்பட்டுள்ளார்.

அதிரடி “அட்வைஸ்’: இந்தச் சூழலில் இந்திய அணி அடுத்த கட்டமாக நான்கு ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. முதல் போட்டி வரும் 26ம் தேதி நடக்கிறது. இத்தொடர் துவங்குவதற்கு முன்பாக சக வீரர்களிடம் மிகவும் காட்டமாக பேசியுள்ளார் தோனி. காயம் மற்றும் நூறு சதவீத உடல்தகுதி இல்லாத வீரர்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டுமென எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக கோப்பை போட்டிகளில் யுவராஜ், ஹர்பஜன், காம்பிர் போன்றவர்கள் சோபிக்கவில்லை. எனவே, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சீனியர் வீரர்கள் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று சூசகமாக கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக சக வீரர்களிடம் தோனி கூறியது: என்னை பொறுத்தவரை தனிப்பட்டவர்களை காட்டிலும் அணிக்கு தான் முன்னுரிமை அளிப்பேன். இதையே தான் அணியில் உள்ள ஒவ்வொருவரும் கடைபிடிப்பார்கள் என நம்புகிறேன். காயம் தொடர்பான உண்மையை மறைக்காதீர்கள். அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் காயம் அடைந்திருந்தாலோ அல்லது தனிப்பட்ட பிரச்னைகள் இருந்தாலோ, அது பற்றி உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும். காயத்துக்கு சிறிது காலம் ஓய்வு தான் தீர்வு என்றால், அதனை ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். சோர்வோடும் வலியோடும் பங்கேற்றால், அது அணிக்கும் அவருக்கும் பின்னடைவு ஏற்படுத்தும். அணியில் இருந்து “பிரேக்’ எடுத்துக் கொள்ள விரும்பினால், என்னிடம் அல்லது இந்திய கிரிக்கெட் போர்டிடம் தெரிவிக்கவும். அணியின் நலனுக்காக சீனியர் வீரர்கள் இன்னும் அதிகமான திறமையை வெளிப்படுத்த வேண்டும். ஜூனியர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்படுவது மிகவும் அவசியம். வீரர்கள் வெற்றியை பழக்கமாக கொள்ள வேண்டும். இவ்வாறு தோனி தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு இம்முறை வீரர்கள் கவனமுடன் தேர்வு செய்யப்பட்டனர். காயம் அடைந்த சேவக்(வலது தோள்பட்டை காயம்), சச்சின் (விரல் பகுதியில்), ஜாகிர் கான் (தோள்பட்டை) சுரேஷ் ரெய்னாவுக்கு (கட்டை விரலில் லேசான எலும்பு முறிவு) ஓய்வு அளிக்கப்பட்டது. இவர்களுக்கு பதிலாக முறையே முரளி விஜய், அபிஷேக் நாயர், ஜாகிர், பத்ரிநாத் வாய்ப்பு பெற்றனர். முழு உடல்தகுதி கொண்ட இவர்கள் சாதிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பி.சி.சி.ஐ., ஆதரவு: கேப்டன் தோனியின் கருத்துக்கு இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி. சி.ஐ.,) ஆதரவு தெரிவித்துள்ளது. பி.சி.சி.ஐ., மீடியா கமிட்டிதலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,”"சக வீரர்களுக்கு “அட்வைஸ்’ அளிக்கும் உரிமை தோனிக்கு உண்டு. இவரது கருத்து வீரர்களின் உடல்தகுதியில் முன்னேற்றம் ஏற்பட உதவும். காயம் அடைந்த வீரர்கள் மற்றும் சோர் வாக இருப்பதாக உணருபவர்கள் அணியின் “பிசியோதரபிஸ்ட்’ அல்லது பி.சி.சி.ஐ.,யிடம், அது பற்றி தெரிவிக்க வேண்டும்,”என்றார்.

பன்றிக் காய்ச்சல் பீதியில் இந்திய வீரர்கள்: வெஸ்ட் இண்டீசில் பன்றிக் காய்ச்சல் மிக வேகமாக பரவி வருவதால் இந்திய வீரர்கள் பீதியில் உள்ளனர். ஓட்டலை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். அசைவ உணவு பக்கம் தலை காட்டுவதில்லையாம். வெஸ்ட் இண்டீசில் உள்ள டிரினிடாட், டுபாகோதீவுகளில் 18 பேர் பன்றிக் காய்ச்சல் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இங்கு நடக்க இருந்த கரீபிய விளையாட்டு மற்றும் இளைஞர் கால்பந்து கோப்பை போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த தீவுகளில் இந்திய அணி எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்காதது ஆறுதல் அளிக்கும் விஷயம். முதலிரண்டு போட்டிகள்(ஜூன் 26, 28) ஜமைக்காவிலும், 3, 4வது போட்டி(ஜூலை 3, 5) செயின்ட்லூசியாவில் நடக்க உள்ளன. ஆனாலும் நமது வீரர்கள் மிகுந்த முன்எச்சரிக்கையுடன் உள்ளனர்.

> தனுஷ் இரண்டு குழந்தைகளின் தந்தை

'சார்...உங்களுக்கு கல்யாணமாகி நாலு வயசுல ஒரு பையன் இருக்கான்....' நாற்பது வயசு ஹீரோக்கள்கூட இந்த மாதிரி ஒன்லைன் கேட்டா
ஓடிப்போயிருவாங்க. தமிழ் சினிமாவின் ஹீரோயிசம் இப்படித்தான் இருக்கிறது இன்றைய நிலையில்.

தனுஷ் மாதிரியான சில பேர் இதற்கு விதிவிலக்கு. தனுஷை பார்த்தாலே பள்ளிக்கூட சிறுவன்மாதிரிதான் இருக்கிறார். அவர் அப்பா கேரக்டரில் நடித்தால் எப்படியிருக்கும்? அதான் நடிக்கப்போறாரே....

அண்ணன் செல்வராகவனும் தம்பி தனுஷூம் கைக்கோர்த்து ரொம்ப நாளாச்சு. இடையில் 'இது மாலை நேரத்து மயக்கம்' படத்தில் இணைவதாக இருந்தது. அந்தப்படம் கைவிடப்பட்ட நிலையில் புதிய படமொன்றில் இணையவுள்ளனர். இப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். படத்தில் கதாநாயகி உண்டு. எனினும் தனுஷூக்கு ஜோடி இல்லையாம். (தெளிவா குழப்புறாய்ங்க!)

தற்போது மித்ரன் ஜவகர், சுராஜ், வெற்றிமாறன் ஆகியோரது இயக்கத்தில் தனுஷ் ரொம்ப பிஸி. ஆயிரத்தில் ஒருவன் ரிலீசுக்கு பிறகு ஒரு தெலுங்கு படம், ஒரு இந்தி படம்னு செல்வராகவனும் அடுத்தடுத்த ஆஃபர்களை கையில் வைத்துக்கொண்டிருக்கின்றனர். இருவரும் ஃப்ரீ ஆனதும் புதிய படம் ஆரம்பமாகிறதாம்.

> ஐஸ்வர்யா ராய் மீது வழக்கு!

சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்தின் காற்றாலைக்கு பழங்குடியினர் நிலத்தை சட்டவிரோதமாக வாங்கிய குற்றச்சாட்டின் பேரில் நடிகை
ஐஸ்வர்யாராய் மீது மகாராஷ்ட்ர போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பிரபல காற்றாலை நிறுவனமான சுஸ்லான் எனர்ஜி மகாராஷ்ட்ராவின் நந்தர்பார் மற்றும் துல் மாவட்டங்களில் காற்றாலைகள் அமைக்க ஏராளமான நிலங்களை வாங்கியது.

பழங்குடி மக்களுக்குச் சொந்தமான இந்த நிலங்கள் மிகக் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. அப்படி வாங்கப்பட்ட இந்த நிலங்களில் காற்றாலைகள் அமைக்க அரசின் சலுகைகளைப் பெற்றுக் கொண்ட சுஸ்லான், பின்னர் காற்றாலை அமைக்காமல், நிலங்களை ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பிரபலங்களுக்கு எக்கச்சக்க விலைக்கு விற்று லாபம் பார்த்ததாக கூறப்படுகிறது.

எனவே பழங்குடி மக்களை ஏமாற்றி மோசடி செய்து இந்த நிலங்கள் வாங்கப்பட்டிருப்பதாக மகாராஷ்ட்ர அரசு கடந்த முறை சட்ட சபையிலேயே அறிவித்தது நினைவிருக்கலாம்.

நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக் பச்சன், மாமனார் அமிதாப் பச்சன், ட்விங்கிள் கன்னா மற்றும் சமாஜ்வாடி கட்சி பொதுச்செயலாளர் அமர் சிங் ஆகியோர் பெயர்களில் இந்த நிலங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே மகாராஷ்ட்ர அரசே எழுப்பியுள்ள இந்தப் புகாரின் அடிப்படையில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் மற்றும் அமிதாப் பச்சன்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சச்சின் டெண்டுல்கரும் இந்த நிலங்களை வாங்கியிருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் தனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என அவர் மறுத்துவிட்டது நினைவிருக்கலாம்.

Wednesday, June 24, 2009

> விண்டோஸ் 7 ஐ பதிவது எப்படி?

விண்டோஸ் 7 குறித்த தகவல்கள் நிறைய வரத் தொடங்கிவிட்டன. ஒவ்வொருவரும் அது குறித்த செய்திகளைப் படித்தவுடன் விண்டோஸ் 7 தொகுப் பினைப் பயன்படுத்திப் பார்த்துவிட வேண் டியதுதான் என்ற முடிவிற்கு வந்துள்ளனர். ஆனால் தங்களின் கம்ப்யூட்டரில் விண் டோஸ் 7 தொகுப்பினைப் பதிந்து இயக்க முடியுமா என்ற சந்தேகம் அனைவருக்கும் உள்ளது.


உங்கள் கம்ப்யூட்டரில் விஸ்டா தொகுப் பினைப் பதிந்து இயக்கிக் கொண்டிருந்தால் நிச்சயம் அதில் விண்டோஸ் 7 ஆப் பரேட்டிங் சிஸ்டத்தை பதிந்து இயக்கலாம்.

வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டம் வைத் திருப்பவர்களுக்கென மைக்ரோசாப்ட் நிறு வனம் விண்டோஸ் 7 அப்கிரேட் அட் வைசர் ஒன்றைத் தந்துள்ளது.



இந்த அப்கிரேட் அட்வைசரை டவுண் லோட் செய்து இயக்கினால் அது உங்கள் கம்ப்யூட்டரின் அனைத்து பாகங்களையும் ஆய்வு செய்து விண்டோஸ் 7 பதிக்க முடியுமா என்பதற்கான அறிவுரையை வழங் கும். பிரச்சினைகள் இருந்தால் அவற்றைத் தீர்ப்பதற்கான தீர்வுகளும் தரப்படுகின்றன. எப்படி விண்டோஸ் 7 தொகுப்பிற்கு அப்கிரேட் செய்திடலாம் என்றும் ஆலோசனை தரப்படும்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்



எழுதியவர் : கார்த்திக்

> இளைஞர் சக்தியாக உருவெடுப்போம்:விஜய்

நடிகர் விஜய் பிறந்த நாள், இதையொட்டி தனது ரசிகர்களுக்கு, "மெசேஜ்' அளிக்கும் வகையில் விஜய் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில், ‘’என் ரசிகர் மன்றங்கள் படிப்படியாக முன்னேறி, சினிமாவையும் தாண்டிய நற்பணி இயக்கமாக வளர்ந்து, சமூக உணர்வோடும், சமுதாயச் சிந்தனைகளோடும் ஆக்கபூர்வமான நற்பணிகளை செய்து, எனக்கு பின்னே ஒரு மாபெரும் இளைஞர் படையாக உருவெடுத்துஇருக்கிறீர்கள்.

ஏழைகளுக்கு இலவசமாக வேட்டி, புடவை கொடுத்ததில் ஆரம்பித்த உங்கள் நற்பணி, நாளடைவில் இலவச திருமணம், இலவச பள்ளிக்கூடம் கட்டித்தருவது, ஏழை மாணவர்களைப் படிக்க வைப்பது உள்ளிட்ட சேவைப்பணிகளாக விரிவடைந்துள்ளது. உங்கள் சமூக உணர்வையும், தொண்டு உள்ளத்தையும் பாராட்டி, நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய ரசிகர்கள் சாதாரண ரசிகர்களாக மட்டுமில்லாமல், நற்பணி நாயகர்களாகவும், நல்ல சமூக சேவகர்களாகவும் உருவெடுத்திருப்பது பெருமையான விஷயம். நாடு முன்னேற முதுகெலும்பாக இருப்பது கல்வி; கல்விக் கூடங்களில் தான் நாட்டின் தலையெழுத்தே நிர்ணயிக்கப்படுகிறது.

அதனால் தான், கல்விப் பணியில் நான் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறேன். பல நூறு ஏழைக் குழந் தைகளை படிக்க வைப்பதும், அவர்களுக்கு ஆண்டுதோறும் இலவச நோட்டுப் புத்தகங்களையும் வழங்கி வருகிறேன். இந்த ஆண்டு என் பிறந்த நாளுக்காக சென்னையில் இரு இடங்களில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சிப் பள்ளி துவங்குகிறேன்.

நான் எந்த நல்ல செயல்களை செய்தாலும், அதை ரசிகர்களாகிய நீங்களும் பின்பற்றி வருகிறீர்கள். எனவே, இலவச கம்ப் யூட்டர் பயிற்சிப்பள்ளியை மாநிலம் முழுவதும் உருவாக்க வேண்டும். இதை என் பிறந்த நாள் பரிசாக உங்களிடம் கேட்கிறேன்.

நேற்றைய தொண்டன் இன்றைய தலைவனாக இருக்கின்றான். அதுபோல இன்றைய தொண்டன் நாளைய தலைவனாக மாறலாம். இந்த விதி உங்களுக்கும் பொருந்தும்.

இது சமூகம் தரும் நாளைய தீர்ப்பு என்பதை ஆழமாக மனதில் வைத்து, மேலும் உங்கள் சமூகப் பணியை வளர்க்க வேண்டும்.

இனிவரும் காலத்தில் தமிழ் மக்களின் நன்மைக்கு பாடுபடும், ஒரு மக்கள் இயக்கமாக செயல்பட்டு, ஒரு வலிமைமிக்க இளைஞர் சக்தியாக உருவெடுப்போம் என்ற நம்பிக்கையில், அடுத்த ஆண்டில் கால் பதிக்கிறேன்’’என்றூ தெரிவித்துள்ளார்.


நன்றி : நக்கீரன்

Monday, June 22, 2009

> வித்தியாசமான சட்டங்கள் விபரீதமான சம்பிரதாயங்கள் !

உலகெங்கிலுமுள்ள நாடுகளில் சட்டம் , ஒழுங்கு என்கிற பெயரில் பல்வேறு சட்டங்களை இயற்றியுள்ளனர் . அவற்றுள் பல வித்தியாசமானவை சில விபரீதமானவையும் கூட...., சிலவற்றை படித்து வியப்படையாமலும் கூட இருக்க முடியாது . அவற்றுள் சில ......

*ஒகியோ மாகாணத்தின்பால்டிங் நகரில் குரைக்கும்நாயை அடக்க சட்டப்படிபோலிஸ்காரர் நாயைஅடிக்கலாம்.

*நியூ யார்க் மாகாணத்தில் கரமெல் பகுதியில் பொருத்தமற்ற ஜக்கெட் ,பேன்ட் அணிந்து வெளியே செல்லக் கூடாது.

*கெண்டகி மாகணத்தில் கோர்ர்ன் ஐஸ்கிரிமை சட்டைப் பையில் கொண்டு செல்வது தடை செய்யப்படடுள்ளது.

*மசாசு செட்ஸ் பகுதியில் உள்ள நாய்கள் அனைத்துக்கும் ஏப்ரல் மாதத்தில் பின்னங்கால்கள் இரண்டும் கட்டப்பட்டிருக்க வேண்டும்.

*மிச்சிகன் பகுதியில் பெண்ணின் தலை முடி கணவனுக்கு சொந்தம், எனவே கணவனின் சம்மதமின்றி முடி வெட்டி கொள்ளக்கூடாது.

*சால் வாடர் மாகாணத்தில் மது அருந்திவிட்டு கார் ஓடுபவர்களுக்கு மரண தண்டனை கூட வழங்கப்படலாம்.

*புளோரிடா மாகாணத்தில் கன்னிப் பெண்கள் ஞாயிற்று கிழமைகளில் பரசூடிலிருந்து குதிப்பது சட்ட விரோதமானது

*வாகனம் ஓட்டும்போது ஓட்டுனர்கள் ,கண்களை கட்டிக்கொண்டு ஓட்டுவது அலபாமா மாகாணத்தில் குற்றமாகும்.

*வெர்மான்ட் மாகாணத்தில் பெண்கள் பல்செட் அணிய கணவனின் அனுமதி பெறவேண்டும் .

*ஒகியோ மாகாணத்தில் ஆக்ஸ்போர்ட் நகரில் ஒரு பெண் ஆணின் படத்துக்குஎதிரே ஆடைகளை களைவது சட்டவிரோய்தமானது .

*நியூ ஜெர்சி மாகாணத்தில் 'கிராஸ் ஹில் ' பகுதியில் வசிக்கும் பூனைகளின்கழுத்தில் மூன்று மணிகள் கட்டியிருக்க வேண்டும்.(பறவைகள் தெரிந்துகொள்வதற்காக )

*அலக்சாண்டிரியா மாகாணத்தில் மின்ன சோடா பகுதியில் கணவனின் வாயில்துர்நாற்றம் வீசினால் ,மனைவியோடு உறவு கொள்ள முடியாது. வாயைசுத்தப்படுத்தி கொண்டு வரும்படி கணவன் மீது மனைவி சட்டப்படி நடவடிக்கைஎடுக்க முடியும்.

*பெனிசில்வேனியா மாகாணத்தில் மனிவியின் எழுத்துபூர்வ ஒப்புதலின்றி மதுவாங்க முடியாது.

*லிவர்பூல் மாகாணத்தில் பொது இடத்தில் பெண் மேலாடை இல்லாமல்இருப்பது சட்ட விரோதமானதாகும். ஆனால் மீன் அங்காடியில் உள்ளபெண்களுக்கு மட்டும் விதிவிலக்கு.

*டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் இரயில் பாதையில் இரண்டு இரயில்கள் சந்தித்தால்இரண்டும் நின்று, பிறகு புறப்பட்டு செல்லும் .

*பிரிட்டிஷ் கடற்படையை சேர்ந்த கப்பல்கள் லண்டன் துறைமுகத்தில்நுழையுமானால் 'டவர் ஒப் லண்டன் ' எனும் மாளிகையில் பணிபுரியும்காவலர்களுக்கு சட்டப்படி , ஒரு பீப்பாய் 'ரம்' மது வழங்க வேண்டும்.

*செஸ்டர் மாகாணத்தில் வேல்ஸ் நாட்டு மக்கள் சூரிய உதயத்திற்கு முன்னும்அஸ்தமனத்துக்கு பின்னும் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது .

*இங்கிலாந்தில் பாராளுமன்றத்தில் இறப்பது சட்ட விரோதமானது.

*சனிக்கிழமைகளில் மூக்கை குடைவது இஸ்ரேல் நாட்டில் சட்ட விரோதமானது.

*கோழிகள் , வெள்ளி அல்லது சனிக்கிழமைகளில் முட்டையிடுவது இஸ்ரேல்நாட்டில் சட்ட விரோதமானது.

*பிரிட்டிஷ் கடற்படையில் தட்டுப்படும் திமிங்கிலங்கள் சட்டப்படி அரசுக்குசொந்தமானவை , அவற்றின் வால் ராணிக்கு சொந்தம்.

*இங்கிலாந்தில் மன்னர் பரம்பரையினரின் தபால் தலையை தலைகீழாகஒட்டுவது இராஜத்துரோக குற்றத்துக்கு ஒப்பானதாகும்.

*பிரான்ஸ் நாட்டில் பன்றியை 'நெப்போலியன் ' என்று பெயர் வைத்து அழைப்பதுசட்ட விரோதமானதாகும்.

*தாய்லாந்து நாட்டில் மக்கள் உள்ளாடை இல்லாமல் வெளியே செல்வது சட்டவிரோதமானதாகும்.

*டென்மார்க் நாட்டில் ஒரு புதுமையான சட்டம்,
சிறையிலிருந்து தப்பி செல்வது சட்ட விரோதமானதல்ல ...ஆனால் பிடிபட்டால்எஞ்சிய கால தண்டனையை சிறையில் கழித்த பின் தான் விடுவிக்கப்படுவார்கள்.

*சுவிஸ்சர்லாந்து நாட்டில் அடுக்கு மாடி கட்டிடங்களில் வசிப்பவர்கள் இரவு பத்துமணிக்கு மேல் , கழிப்பறையில் தண்ணீரை திறந்து சப்தம் ஏற்படுத்த கூடாது.

இப்படி உங்கள் ஊர்களிலும் வித்தியாசமான சட்டங்கள்,சம்பிரதாயங்கள்இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

Saturday, June 20, 2009

> ஈ-மெயில் இணைப்பை (Attach File) இலகுவாக தரவேற்றுவது எப்படி..?

மெயில்களில் பைல்களை அட்டாச் செய்கையில் அனைத்து பிரவுசர்களும் இமெயில் கிளையண்ட் புரோகிராம்களும் பிரவுஸ் செய்து பின் எக்ஸ்புளோரர் போல விண்டோவினைத் திறந்து பைல்களைக் காட்டி அதிலிருந்து அட்டாச் செய்திட வேண்டிய பைல்களை ஒவ்வொன்றாக இணைக்கச் செய்கின்றன.


இந்த சுற்று வேலைகளுக்குப் பதிலாக பைல் இருக்கும் டைரக்டரியைத் திறந்து பைலை அப்படியே அட்டாச் விண்டோவில் இழுத்துப் போடும் வசதியை ஜிமெயிலில் மேற்கொள்ளலாம். இந்த வசதியை பயர்பாக்ஸ் பிரவுசர் மூலம் மட்டுமே நிறைவேற்ற முடியும். ஏனென்றால் இந்த வசதியைத் தருவது ஒரு பயர்பாக்ஸ் ஆட் ஆன் தொகுப்பாகும்.


நீங்கள் பிரவுஸ் செய்வதற்கு பயர்பாக்ஸ் பிரவுசரையும் மெயில் அனுப்ப ஜிமெயிலையும் பயன்படுத்துபவராக இருந்தால் இதனைப் படியுங்கள். இங்கு பயர்பாக்ஸ் ஆட் ஆன் தொகுப்பு ஒன்றைக் காண இருக்கிறீர்கள். இதன் பெயர் "dragdropupload" இதன் மூலம் ஜிமெயில் பயன்பாட்டில் புதிய அனுபவம் ஒன்றை நீங்கள் பெறலாம்.


வழக்கமாக இமெயில் ஒன்றுடன் பைலை அட்டாச் செய்திட "Attach a file"கிளிக் செய்து பின் அந்த பைல் உள்ள டைரக்டரியில் அத்தனை பைல்களையும் பார்த்து நீங்கள் இணைக்க வேண்டிய பைலைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்கிறீர்கள் இல்லையா? அதற்குப் பதிலாக இந்த ஆட் ஆன் தொகுப்பை இறக்கிப் பதிந்து கொண்டால் எத்தனை பைல்களை வேண்டுமானாலும் இறக்கி அட்டாச் விண்டோவில் இழுத்துப் போட்டுவிட்டு பின்னர் செய்தியைத் தயார் செய்து அனுப்பலாம்.

இந்த ஆட் ஆன் தொகுப்பை addons.mozilla.org என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம்.

Friday, June 19, 2009

> ரஜினியை யாரோடும் ஒப்பிடத் தேவையில்லை!

சமீபத்தில் சென்னையில் கமல்ஹாஸன் நடத்திய திரைக்கதை பயிற்சிப் பட்டறைக்கு வந்திருந்த சேகர் கபூர், திரைக்கதை உருவாக்கம் குறித்து, கருத்தரங்கில் பங்கு பெற்றவர்களுக்கு பாடம் எடுத்தார்.

சர்வதேச அங்கீகாரம் பெற்ற இந்திய இயக்குநர் சேகர் கபூர். மிஸ்டர் இந்தியா, பண்டிட் குயின், எலிஸபெத் போன்ற உலகப் புகழ்பெற்ற இந்தி- ஆங்கில திரைப்படங்களின் இயக்குனர்.


சேகர் கபூர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’ இந்திய சினிமாவில் ரஜினிகாந்த் ஒரு அசாதாரண கலைஞர். நானும் ரஜினியும் இணைந்து பணியாற்றுவது குறித்து நிறையப் பேசியிருக்கிறோம். அப்படியே வருடங்கள் ஓடிவிட்டன. திரைப் படங்களை மக்கள் விரும்பும் வகையில் தருவது எப்படி என்பதில் ரஜினி தேர்ந்த படைப்பாளியும் கூட.


ஆரம்ப காலப் படங்களிலேயே மிகச் சிறந்த நடிப்பையும், யாருக்கும் வசப்படாத தனி ஸ்டைலையும் தனக்கென உருவாக்கி மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ரஜினி. எனக்குத் தெரிந்து அவர் அளவுக்கு ரசிகர்களின் மனதை ஆக்கிரமித்துள்ள நடிகர்கள் யாருமில்லை.


இப்போது ரஜினியை வைத்து அவரது மகள் செளந்தர்யா ரஜினி சுல்தான்- தி வாரியர் படம் செய்து வருவதை அறிந்து சந்தோஷப்பட்டேன்.


அந்தப் படத்தை நிச்சயம் முதல்நாளே பார்த்துவிடும் அளவுக்கு எனக்கு ஆர்வமாக உள்ளது.


பொதுவாக எனக்கு ஒப்பீடுகள் பிடிக்காது. ரஜினியை யாரோடும் ஒப்பிடத் தேவையில்லை’’ என்றார்.

நன்றி : நக்கீரன்

> விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய்

நடிகர் விஜய் கட்சி ஆரம்பிக்கும் முடிவில் இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் விஜய்யின் தந்தை சந்திரசேகரன் ஒரு பேட்டியில், ’’விஜய் அரசியலுக்கு வருவதை எண்ணி விஜயகாந்த் பயப்படுகிறார்’’ என்று கூறியிருந்தார்.

இது குறித்து விஜய்யிடம் கேட்டதற்கு, ’’ அவர் அப்படி சொல்லியிருக்க மாட்டார் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. பொதுவாகவே நாங்கள் யாரை பற்றியும் குறை சொல்லி பேசுவது இல்லை.

என்றாலும் அப்பாவிடம் இதுபற்றி கேட்டேன். ``நான் அப்படி சொல்லவே இல்லை'' என்றார்.

அண்ணன் விஜயகாந்த், என் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர். சினிமாவில் எனக்கு பல உதவிகளை செய்தவர். அப்பாவின் நீண்டகால நண்பர்.

அவர் எங்கே, நான் எங்கே? எங்கோ தப்பு நடந்து இருக்கிறது. அதற்காக, நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’’என்று தெரிவித்தார்.

> ஏன் கட்சி ஆரம்பிக்கும் முடிவு: விஜய்

நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாகவும், கட்சி தொடங்கப்போவதாகவும் சமீபகாலமாக தகவல்கள் பரவியது. இதுபற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு,

’’தமிழ்நாடு முழுவதும் 37 ஆயிரம் நற்பணி மன்றங்கள் உள்ளன. இந்த மன்றங்கள் சார்பில் ரசிகர்கள் நற்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் தகுதிக்கு மீறி, பொதுமக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்கள்.

நற்பணி மன்றங்களை, அரசியல் அமைப்பாக மாற்றினால் தமிழ்நாட்டு மக்களுக்கு இன்னும் அதிக அளவில் உதவிகளை செய்யலாம் என்பது என் ரசிகர்களின் விருப்பம்.

இதை என்னிடம் பலமுறை சொல்லி வந்தார்கள். என் வளர்ச்சிக்கு காரணமான ரசிகர்களுக்கும், அவர்களின் எதிர்காலத்துக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நீண்டகாலமாக எனக்குள் திட்டம் இருந்தது.

அதேபோல் ஒவ்வொரு வீட்டிலும் என்னை மகனாகவும், அண்ணன்-தம்பியாகவும் நினைக்கும் தமிழ்நாட்டு பொதுமக்களுக்கும் நிறைய நன்மைகள் செய்ய ஆசைப்பட்டேன். அதனால் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரசிகர்களின் வேண்டுகோளில், எனக்கும் உடன்பாடு ஏற்பட்டது.

இது தொடர்பாக ரசிகர்களின் விருப்பத்தை மட்டுமல்லாமல், பொதுமக்களின் கருத்தையும் கேட்டு அறிய விரும்பினேன். இதற்காக சென்னையிலும், சில மாவட்ட தலைநகரங்களிலும் ஆலோசனை கூட்டங்கள் நடந்தன. படித்த இளைஞர்கள், பெண்கள் என பல பிரிவினரிடம் கருத்துக்களை கேட்டு, என் மூளையில் பதிவு செய்து, அதற்கான தகுந்த நேரத்துக்காக காத்திருக்கிறேன்.

எடுத்தேன், கவிழ்த்தேன் என்று உடனடியாக அரசியலில் குதிப்பதிலும், கட்சி தொடங்குவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை’’என்று தெரிவித்தார்.


நன்றி :: நக்கீரன்

> மெகா தொடரில் சோனியா அகர்வால்

இயக்குநர் செல்வராகவனை கல்யாணம் செய்து குடும்பஸ்திரியான சோனியா அகர்வால் சின்னதிரைக்கு வந்துவிட்டார்.

கலைஞர் டிவியில் விரைவில் வரவிருக்கும் ‘நாணல்’ மெகா தொடரில் கதை நாயகியாக இவர் நடிக்கிறார். கல்யாணத்துக்கு பிறகு பட வாய்ப்புகள் நிறைய வந்தும் செல்வராகவனின் அனுமதி இல்லாததால் மறுத்து வந்தார்.

இப்போது தனகென சம்பாதித்து சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்று முடிவெடுத்திருப்பதால் சீரியல் பக்கம் வந்துவிட்டார்.

Thursday, June 18, 2009

> விஜய் T.V விருது வ‌ழங்கு‌ம் விழா முக்கிய புகைப்படங்கள்












> விஜய் T.V விருது வ‌ழங்கு‌ம் விழா முக்கிய புகைப்படங்கள்
> விஜய் T.V விருது வ‌ழங்கு‌ம் விழா முக்கிய புகைப்படங்கள்
> விஜய் T.V விருது வ‌ழங்கு‌ம் விழா முக்கிய புகைப்படங்கள்
> விஜய் T.V விருது வ‌ழங்கு‌ம் விழா முக்கிய புகைப்படங்கள்
> விஜய் T.V விருது வ‌ழங்கு‌ம் விழா முக்கிய புகைப்படங்கள்
> விஜய் T.V விருது வ‌ழங்கு‌ம் விழா முக்கிய புகைப்படங்கள்

> மொபைல் போன் பிரவுசர்கள்

மொபைல் போன் வழி நெட்வொர்க் இணைப்பினை சாதாரண மக்களும் விரும்பும் இந்நாளில் போனுடன் வரும் பிரவுசரைத்தான் ஒருவர் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை. இணையத்தில் இதற்கெனத் தரப்படும் இலவச பிரவுசர்களையும் டவுண்லோட் செய்து மொபைல் போனில் இன்ஸ்டால் செய்தும் பயன்படுத்தலாம். அந்த வகையில் ஸ்கை பயர் மொபைல் பிரவுசர் (Skyfire Mobile Browser) குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் உள்ளது. அதனைப் பற்றி இங்கு காணலாம்.


போனில் இல்லாத மொபைல் பிரவுசரை நாம் பயன்படுத்துவதற்கு முதல் காரணம் அதனை நம் விருப்பப்படி செட் செய்து அமைத்துக் கொள்ளலாம். அந்த வகையில் ஸ்கை பயர் மிகவும் ஒத்துழைக்கிறது. பிளாஷ் ,மீடியா வீடியோஸ் மற்றும் சில்வர் லைட் பதிப்பு 2 ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது. வேகமாக இணையப் பக்கங்களை வழங்குகிறது. பரவலாகப் பயன்படுத்தப்படும் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டமான சிம்பியன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்து இயங்குகிறது. முதல் கட்ட தோற்றத்திலேயே இந்த பிரவுசர் நம்மைக் கவர்கிறது. நாம் இதன் முதல் பக்கத் தோற்றத்தினையே நமக்கேற்றபடி மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.


பிரவுசரை நம் பேஸ்புக், யு–ட்யூப் மற்றும் டிவிட்ட்டர் போன்ற அக்கவுண்ட்களுக்கு செட் செய்து நேரடியாக லாக் இன் செய்திடும்படி அமைக்கலாம். இதனுடைய அட்வான்ஸ்டு மெனு செட்டிங்ஸ் மூலம் குக்கீஸ் மற்றும் ஹிஸ்டரி பதிவுகளை நீக்கலாம். பிளாஷ் மற்றும் விண்டோஸ் மீடியா வீடியோஸ் சப்போர்ட் செய்வதால் அவற்றை எளிதாகவும் சிறப்பாகவும் காண முடிகிறது.

ஏற்கனவே ஆப்பரா மினி பயன்படுத்தித் தற்போது புதிய பிரவுசர் வேண்டும் என எண்ணுபவர்கள் ஸ்கை பயர் பிரவுசரைப் பயன்படுத்திப் பார்க்கலாம். ஆனால் மிகப் பெரிய திரையுள்ள மொபைல் வைத்திருப்பவர்கள் தொடர்ந்து இதனைப் பயன்படுத்தத் தயங்குவார்கள். இமேஜஸ் சற்று சிதறலாகின்றன. இந்தக் குறையை வரும் காலத்தில் ஸ்கை பயர் நீக்கிவிட்டால் நிச்சயம் இந்த இலவச பிரவுசர் பல மொபைல் போன்களில் இடம் பிடிக்கும்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

பயர்பாக்ஸ் மூலம் பிரவுசர் உலகைக் கலக்கிக் கொண்டிருக்கும் மொஸில்லா நிறுவனம் மொபைல் போன்களுக்கான பிரவுசர் தொகுப்பு ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளது. Firefox aka Fennec என இது அழைக்கப்படுகிறது.மொபைல் போனுக்கான பிரவுசர் மார்க்கட்டில் தன் முதல் பாணத்தை மொஸில்லா வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இதனைப் பயன்படுத்துபவர்கள் தரும் அனுபவக் குறிப்புகளைக் கொண்டு செம்மைப் படுத்த மொஸில்லா திட்டமிடுகிறது. இப்போதைக்கு இந்த பிரவுசர் நோக்கியா 810 மொபைல் போனில் மட்டுமே செயல்படும்.


இதில் என்னவெல்லாம் இருக்கிறது?

* புக் மார்க் மற்றும் டேக்

* அருமையான யு.ஆர்.எல். பார் (இதனையும் “awesome bar” என அழைக்கலாம்)

* தம்ப் நெயில் படம் கொண்ட டேப் பிரவுசிங்

* யு.ஆர்.எல். பாரிலேயே இணைந்த வெப் தேடுதல்

* பல்வேறு சர்ச் இஞ்சின்களை எளிதாகப் பெற்று செயல்படுத்தும் வசதி

* பிரவுசர் கண்ட்ரோல்களை மறைத்து இணையப் பக்கத்தை முழுமையாகப் பெறலாம்

* ஸூம் வசதி உள்ளது.

பாப் அப் பிளாக்கர், பாஸ்வேர்ட் மேனேஜர், பிரைவேட் டேட்டா அழித்தல் ஆகிய வசதிகளும் தரப்பட்டுள்ளன.

தரவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யவும்

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.