புவி வெப்பமடைதலால் பூமியின் மேற்பரப்பு மாற்றமடைகிறது. இதனால் நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள், பெரும் நிலச்சரிவுகள் அடிக்கடி நிகழும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக புவியியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.தட்பவெப்ப மாற்றத்துடன் தொடர்புடைய புவியியல் மாற்றங்கள் மீத்தேன் வாயுவின் புகையனல் கக்குதலையும் உருவாக்கலாம். இந்த வெப்ப வாயு தற்போது உறைபனியில் திட வடிவத்தில் உள்ளது. மேலும் கடலடிப் படுகையிலும் மீத்தேன் திட வடிவில் உள்ளது. தற்போது காற்றில் இருக்கும் ஒட்டுமொத்த கரியமில வாயுவின் அளவைக்காட்டிலும் உறைபனியடியில் திட நிலையில் உள்ள இந்த மீத்தேன் அளவு பன்மடங்கு அதிகமாகும்.
"தட்பவெப்ப மாற்றங்கள் விண்வெளியையும், கடல்களையும் மட்டும் பாதிப்பதில்லை, பூமியின் மேல்பாறையையும் பாதிக்கிறது. ஒட்டுமொத்த பூமியும் ஒன்றையொன்று சார்ந்து இயங்குவது" என்று லண்டன் பல்கலைக் கழக கல்லூரி பேராசிரியர் பில் மெகுவைர் வானிலை மாற்ற விளைவுகள் குறித்த முக்கிய கருத்தரங்கில் விஞ்ஞானிகள் மத்தியில் கூறியுள்ளார்.
"அரசியல் வட்டாரத்தில் தட்பவெப்ப மாற்றத்தின் புவியியல் அம்சங்கள் குறித்து அறியாமல் உள்ளனர்." என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எரிமலை நிபுணர்கள், நிலநடுக்க ஆய்வாளர்கள், பனிப்பாறை விஞ்ஞானிகள், வானிலை மாற்றம் குறித்த ஆய்வு நிபுணர்கள், நிலச்சரிவு நிபுணர்கள் ஆகியோர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு கடந்த கால புவியியல், வானிலை மாற்றங்களின் அடிப்படையில் எதிர்காலத்தை கணிக்கும் ஆய்வுத் தரவுகளை பகிர்ந்து கொண்டனர்.
"பனி உருகிப்போனால், பூமியின் மேல்பரப்பு தட்பவெப்ப மாற்றங்களுக்கு இலக்காகி நிலநடுக்கங்களை உருவாக்கும். இதனால் கடலுக்கு அடியிலும் நிலச்சரிவுகள் ஏற்படும், இந்த கடலடி நிலச்சரிவினால் சுனாமி என்ற ஆழிப் பேரலைகள் ஏற்படும்" என்று மெகுவைர் தெரிவித்தார்.
ஆக்ஸ்போர்ட் பலகலைக் கழகத்தைச் சேர்ந்த டேவிட் பைலி பூமியின் மேற்பரப்பு நிறையில் (mass) ஏற்படும் சிறிய மாற்றங்களால் பொதுவாக எரிமலை நடவடிக்கைகள் தாக்கம் பெறும். பனி உருகிய பகுதிகளில் மட்டுமே இது நிகழாது, மாறாக மற்ற பகுதிகளிலும் எரிமலை நடவடிக்கைகள் துரிதமடையும். என்று அந்த கருத்தரங்கில் தெளிவு படுத்தினார்.
எரிமலைகள் வெடிக்கும் போது மிகப்பெரிய அளவில் சாம்பலையும், கந்தகத்தையும், கரியமில வாயுவையும் விண்வெளிக்கு செலுத்துகிறது. சூரிய ஒளி இதனை மீண்டும் பிரதிபலிக்கும் போது சில வேளைகளில் பூமி குளிரடையவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் இது இரண்டாண்டுகளுக்கே நீடிக்கும். ஆனால் அடிக்கடி எரிமலை வெடிப்பு ஏற்பட்டால் புவிவெப்பமடைதலை துரிதப்படுத்தும் அபாயமும் உள்ளது என்று அமெரிக்க எரிமலை ஆய்வு நிபுணர் பீட்டர் வார்ட் இந்தக் கருத்தரங்கில் பேசுகையில் தெரிவித்தார்.
"மனிதனுக்கு முன்னால் தட்பவெப்ப மாற்றங்களை உருவாக்கியது எரிமலைச் செயல்பாடுகள்தான். ஆனால் தற்போது தட்பவெப்ப மாற்றத்தை மனிதன் தன் கையில் எடுத்துக் கொண்டு விட்டான், எரிமலை ஏன் மாற்றங்களை தோற்றுவிக்கிறது என்பதை புரிந்து கொண்டால் என்ன செய்வது என்பதை நாம் நிர்ணயிக்க முடியும்" என்று அவர் மேலும் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
ஆனால் இந்த கருத்தரங்கில் பேசியவர்களெல்லாம், கண்டுபிடிப்புகள் அனைத்தும் கருதுகோள் அளவில் உள்ளது என்பதை குறிப்பிட்டாலும், உலகம் பெரிய அதிர்வுகளைச் சந்திக்க நேரிடும் என்பதற்கான ஆதாரங்கள் பெருகி வருகிறது என்றும் எச்சரித்தனர்.
நாசா விஞ்ஞானி டோனி சாங் உரையாற்றுகையில், சமீப காலங்களில் ஏற்பட்ட பனிப்பாறை நிலநடுக்கங்களால் பனிப்பாறைகள் மிகப்பெரிய நிலச்சரிவை சந்தித்து கடலுக்கு அடியில் சென்றுள்ளதாக தெரிவித்தார்.
"மேலும் பனிப்பாறை நிலநடுக்கங்கள், கடலுக்கு அடியில் ஏற்படும் மிகப்பெரிய நில நடுக்கங்கள் ஏற்படுத்தும் சுனாமியைக் காட்டிலும் சக்தி வாய்ந்த சுனாமியை ஏற்படுத்தும் என்று தங்கள் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது" என்றார்.
இதனால் சிலி, நியூஸீலாந்து, கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் ஆகியவற்றிற்கு அபாயம் ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த பலதரப்பட்ட சுற்றுச்சூழல் சீரழிவிற்கு கரியமில வாயு வெளியேற்றத்தை மட்டும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் போதாது என்பதை அவர்கள் வலியுறுத்தினர்.


ஓட்டுபவருக்கும், பயணிப்பவர்களுக்கும் உகந்த அனைத்து வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட மகேந்திரா க்சைலோ வாகன விரும்பிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆக்டோபஸ் அறிவோடும், அமீபாவின் பணிவோடும் இருப்பவர்தான் கமல். ஐம்பதாண்டு கால திரையுலக பயணம் சிலருக்கு மட்டுமே வாய்த்த சிறப்பு. இன்றைய தேதியில் இவருக்காக சிம்சானங்கள் காத்திருந்தாலும், ஒரு காலத்தில் நடைவண்டி கூட இல்லாமல் சிரமப்பட்டவர்தான் கமல்.
தனுஷின் அடுத்த படைப்பு, குட்டி. யாரடி நீ மோகினி மாதிரி இதுவும் தெலுங்கு ரீமேக். மித்ரன் ஏ.ஜவஹர் இயக்கியிருக்கிறார்.
கொச்சினில் நடந்து வருகிறது சுறா படப்பிடிப்பு. ஆனாலும் கமல்ஹாசனுக்கு விஜய் டிவி நடத்துகிற பாராட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அங்கிருந்து பறந்து வந்தார் விஜய். நடிப்பில் ரஜினி வழியை பின்பற்றும் விஜய், அடிப்படையில் கமல் மேல் மிகவும் பற்று கொண்டவர். அதனால்தான் இவ்வளவு கடுமையான வேலைகளுக்கு இடையேயும் கொச்சினிலிருந்து சென்னைக்கு பறந்து வந்துவிட்டார்.
தமிழக அரசின் சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2007ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது ரஜினிகாந்த்துக்கும், 2008ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது கமல்ஹாசனுக்கும் கிடைத்துள்ளது.
ஹாட்ரிக் அடிக்கப் போகிற சந்தோஷத்தில் இருக்கிறார் வெங்கட்பிரபு. சென்னை -28, சரோஜா, தொடர்ந்து கோவாவுக்காக காத்திருக்கிறது ரசிகர்கள் வட்டாரம். சுற்றி வளைத்து பார்த்தாலும் சரி, நேரடியாக முறைத்தாலும் சரி, வெங்கட்டின் ஒரே தந்திரம் சிரிப்பு. இதை வைத்துக் கொண்டுதான் பெரிய ஜனக்கடலை உள்ளங்கைக்குள் வைத்திருக்கிறார் அவர். கோவா எப்படி? அதையேன் கேட்கிறீங்க... இந்த படத்திலே பிரேம்ஜிக்கு பஞ்ச் டயலாக்கெல்லாம் இருக்கு தெரியுமா என்று வெடிக்கு திரி கொளுத்துகிறார் வெங்கட்.
மனசாட்சி வேணாமாய்யா மனுஷனுக்கு? இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்ச அந்த பொண்ணு, இப்போ தனியா இருக்கு. சண்டை போட்டு பிரிஞ்சிருந்த ஆளுங்க ரெண்டு பேரும் ஒண்ணா சுத்த ஆரம்பிச்சிட்டாங்க. சேர்த்து வச்சாரே, அவருக்காக ஒரு வார்த்தை நாம பேசலாமேன்னு நினைச்சாரா அந்தாளு? இப்படி கூடி கூடி குமைகிறார்கள் யுவன் சங்கர் ஏரியாவில்!
ஐந்து மாதங்களுக்கு முன்பு, மெக்சிகோவில் பன்றிக்காய்ச்சல் என்ற பெயருடன் கண்டறியப்பட்ட அந்நோய் தற்போது உலகம் முழுவதையும் பதற வைத்துக்கொண்டிருக்கிறது.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல் உடலின் நலம் நகத்தில் தெரியும் என்று கூறலாம்.
இன்றும் எவர்கிரீன் ஹீரோ என்றால் அது, எம்.ஜி.ஆர். தான். தமிழகத்தின் பத்து இடங்களிலாவது இவரது படங்கள் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும். நல்ல கலெக்சனுடன் என்பது முக்கியமான விஷயம்.
நாலாபுறத்திலிருந்து பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கிறது ஸ்ருதிக்கு. இவருக்கு அமைந்த முதல் படமான உன்னைப்போல் ஒருவன் பாடல்கள் மூலம் தன்னை புலிக்கு பிறந்த புலி என்று நிரூபித்திருக்கிறார் ஸ்ருதி. இசைஞானி இளையராஜாவும், மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதனும் இவரை ஆசிர்வதித்தார்களாம். அந்த சந்தோஷத்தில் இருந்து மீளும் முன்பாகவே இன்னொரு சந்தோஷம் ஸ்ருதிக்கு. அது?
விதி வழியோட போனாலும் வில்லங்கம் விருந்து வச்சு அழைக்குமாம். அப்படி ஆகியிருக்கு நயன்தாரா நிலைமை. பிரபுதேவாவுடனான கள்ள காதலை முறித்துக் கொண்டு அவரிடமிருந்து விலகிக் கொண்டதாக அறிவிக்கணும். அப்படி இல்லேன்னா நயன்தாரா படங்கள் ஓடும் தியேட்டர்கள் முன்பாக போராட்டம் பண்ணுவோம் என்று அறிவித்திருக்கிறது மாதர் சங்கங்கள்.


தமிழ் ஆண்டுகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயர் உண்டு. இது மொத்தம் 60 ஆகும். தற்போது நடப்பது சர்வதாரி. வரும் ஏப்ரலில் துவங்க இருப்பது விரோதி ஆண்டு.


பிரபுதேவா-நயன்தாரா காதல் விவகாரத்தில் வாயையே திறக்காமல் இருந்த பிரபுதேவாவின் மனைவி ரமலத் இப்போது பத்திரிகைகளிடம் தனது குமுறலை வெளிப்படுத்த தொடங்கியிருக்கிறார். இது தொடர்பாக கண்ணீரும் கவலையுமாக முன்னணி நாளிதழ் ஒன்றில் கருத்து தெரிவித்திருக்கும் அவர், இனிமேலும் என் கணவருடன் நயன்தாராவை பார்த்தால் அந்த இடத்திலேயே அடிப்பேன் என்று கூறியிருப்பதுதான் அதிர்ச்சி.

மொபைல் போனின் பரிமாணங்கள் இன்று அனைத்து வகைகளிலும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. ஒருவருக்கொருவர் வயர்லெஸ் இணைப்பில் பேசுவதற்கு மட்டும் எனத் தொடங்கிய இந்த சாதனம் இன்று கையடக்கக் கம்ப்யூட்டராக மாறி, நம்முடைய அன்றாட பல வேலைகளை மேற்கொள்ள உதவியாய் உள்ளது. இது தொடங்கிய நாள் தொட்டு, வளர்ந்த நிலைகளை இங்கு காணலாம்.
வரும் அக்டோபர் 22ல் வெளியாக இருக்கும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த கண்காட்சியினை நீங்கள் உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ, அரங்கிலோ நடத்தலாம். இதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் அனைத்து உதவிகளையும் தருகிறது. கண்காட்சிக்கு நீங்கள் அழைக்கும் நபர்களுக்கு சிறிய பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். உங்களுக்கு விண்டோஸ் 7 தொகுப்பு பரிசாகத் தரப்படும். என்ன ஆச்சரியாமாக இருக்கிறதா! மேலே படியுங்கள்.

“ஆதியோட பாதி முகத்தை முன்னாடி பார்த்தேன். மீதி முகத்தை இப்போதான் பார்க்கிறேன். ரொம்ப டேஞ்சர்பா...” இப்படி அதிர்ச்சியோடு புலம்பிக் கொண்டிருப்பது யாரோ அல்ல. ஆதியை தமிழில் அறிமுகப்படுத்திய டைரக்டர் சாமி. ஒண்ணு மண்ணுமா இருந்தாங்களே, இப்போ என்னாச்சு இவங்களுக்குள்ளே?
காதலன் படம் முடிந்ததுமே இயக்குநர் ஷங்கர் இயக்க நினைத்த படம் ரோபோ. ஷங்கரின் கனவுப்படமான இந்த ரோபோவில் கமல் நடிப்பதாக இருந்தது.
இன்றைய மனித இனத்தின் சிந்தனைப் போக்கை மாற்றியதில் இன்டர்நெட்டுக்கு முக்கிய பங்கு உண்டு என்றால் அது மிகையாகாது. தகவல் பரிமாற்றம், உருவாக்கி சேமித்தல் என்ற இரு பரிமாணங்களில் தினந்தோறும் புதிய மாற்றங்களைத் தந்து வரும் இந்த இன்றியமையாத சாதனம் உலகிற்கு வந்து 40 ஆண்டுகள் ஆகின்றன.
மியூசிக்கல் சேர் ஆட்டத்தில் ஓடி ஓடி உட்கார்ந்து கொள்கிறார் தமன்னா. அசின், த்ரிஷா, நயன்தாரா, நடிக்க வேண்டிய படத்திலெல்லாம் தமன்னாவின் ஆதிக்கம். இதனால் அரண்டு போயிருக்கிறார்கள் மேற்படி நடிகைகள். அதிலும் இந்திக்கு போவதாக கொஞ்சமே கொஞ்சம் இடத்தை காலி பண்ணிய த்ரிஷா, அந்த வாய்ப்பும் சரவர அமையாமல் திரும்பி வந்தால், இவரது பழைய ஏரியா ஹவுஸ்ஃபுல்! எல்லா வாய்ப்பும் தமன்னாவுக்கே...
கண்டேன் காதலை எப்போ ரிலீஸ்? பரத் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்களோ, இல்லையோ? பாக்யராஜ் எதிர்பார்கிறார். இவர் இயக்கி வரும் சித்து ப்ளஸ் 2 படமும், கண்டேன் காதலை படமும் ஒரே கதையாம். திரைக்கதை மன்னரான பாக்யராஜ் தனக்கேயுரிய இஞ்சி, பூண்டு, சோம்பு சமாச்சாரங்களை கலந்து எக்கச்சக்க டேஸ்ட்டில் தருவார் என்பது இருக்கட்டும்... இவரை போலவே க.கா டைரக்டர் கண்ணனும் சிந்தித்திருந்தால்? அந்த பயம்தான் பாக்யராஜுக்கு.






திருவண்ணாமலை சித்தர் சொல்லிதான் அரசியலில் குதிக்க போகிறாராம் விஜய். அடிப்படையில் கிறிஸ்துவராக இருந்தாலும், திருவண்ணாமலை, திருக்கடையூர் என்று இந்து கடவுள்கள் மீதும் அலாதி பக்தி வைத்திருக்கிறார் விஜயின் அம்மா ஷோபா. அதனால் மேற்படி திருத்தலங்களுக்கு அவ்வப்போது விசிட் அடிக்கும் அவர் போகிற இடத்திலெல்லாம் பிள்ளையின் அரசியல் பிரவேசத்திற்காகவும் வேண்டிக் கொள்வாராம். அப்படி திருவண்ணாமலைக்கு போகிற போதுதான் எப்போது அரசியலுக்குள் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்ற உத்தரவும் வந்ததாம் சித்தரிடமிருந்து. சித்தன் போக்கு, சிவன் போக்கு என்றிருக்கும் சித்தர்கள் கூட, இப்போதெல்லாம் அரசியல் ஆருடம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்களே என்ற சந்தேகம் இருக்கட்டும். திருமதி ஷோபா சந்திரசேகர் சமீபத்தில் ஒரு அற்புதமான காரியம் செய்திருக்கிறார்.
நம் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் தான் அனைத்து டேட்டாக்களும் பதிவு செய்யப்படுகின்றன. இங்குதான் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமர்ந்து கொண்டு கம்ப்யூட்டரை இயக்குகிறது. ஏறத்தாழ 50 ஆண்டுகளா கத்தான் ஹார்ட் டிஸ்க் கம்ப்யூட்டரின் ஓர் இன்றியமையாத உறுப்பாக இயங்கி வருகிறது. கம்ப்யூட்டர் பயன்பாடு வந்த தொடக்கத்தில் ஹார்ட் டிஸ்க் என்பதே இல்லை. இப்போது 2 டெராபைட் கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க்குகள் வந்துள்ளன. ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை 1 ஜிபிக்கும் குறைவான அளவுள்ள ஹார்ட் டிஸ்க்குகளே புழக்கத்தில் இருந்தன.
நாம செத்துட்டா நாலு பேராவது உச் கொட்டணும்னு நினைக்கிறது தப்பேயில்லை. ஆனால் அப்படி உச் கொட்டுவதை நாமளும் பார்க்கணும்னு நினைக்கறதுதான் தப்பு. இப்படி ஜென் சன்னியாசி மாதிரி சித்தாந்தம் பேச வச்சவர் நம்ம ஸ்ரேயாவேதான். மொட்ட தலைக்கும் முழங்காலுக்கும் கூட முடிச்சு போடுங்கப்பா. அதுக்காக ஸ்ரேயாவுக்கும் சாவு செய்திக்கும் முடிச்சு போடுறீங்களே, நல்லாவா இருக்கு?
நிஜமானாலும் நிழலானாலும் ‘ஆட்டோகிராப்’ சமாச்சாரத்திற்கு தனி கிக் தான்! 80 களில் நடித்த ஹீரோ ஹீரோயின்கள் ஒன்று சேர்ந்து ஒரு விருந்தில் கலந்து கொண்டால் எப்படியிருக்கும்? தென்னக திரைவானில் மட்டுமல்ல, வடக்கிலேயும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஸ்ரீதேவி போன்றோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாம். ஆனால் வந்தவர்கள் அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்களும், தமிழகத்தை சேர்ந்தவர்களும்தான்.
செப்டம்பர் 7ல் கூகுள் தன் பதினோராவது ஆண்டை முடித்து 12 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. 1998ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ம் திகதி கூகுல் தனது முதலாவது பிறந்த நாளை கொண்டாடியது.
