Sunday, February 28, 2010

> விண்ணைத்தாண்டிய வரவேற்பு

நேற்று விண்ணைத்தாண்டி வருவாயா வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான், கௌதம் முதல் முறையாக இணைந்திருக்கும் படம் என்பதாலும், சிம்பு, த்‌ரிஷா நடித்திருக்கும் காதல் படம் என்பதாலும் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு.

சென்னையிலும் புறநக‌ரிலும் உள்ள மல்டி பிளிக்ஸ்களில் கூட்டம் அலைமோதியது. சமீபத்தில் எந்தப் படத்துக்கும் இப்படியொரு கூட்டம் இல்லை என்பதே மல்டி பிளிக்ஸ் உ‌ரிமையாளர்களின் வியப்பு.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கார்த்திக் என்ற அசிஸ்டெண்ட் டைரக்டராக சிம்பு நடித்துள்ளார். ஜெஸ்ஸி என்ற சாஃப்ட்வேர் இன்‌ஜினியராக த்‌ரிஷா.

இது கௌதமின் நிஜ வாழ்க்கை காதலை பிரதிபலிப்பதாகவும் கூறப்படுகிறது. கார்த்தியைப் போலவே மெக்கானிக்கல் இன்‌ஜினிய‌ரிங் படித்து திரைப்படத் துறைக்கு வந்தவர் கௌதம்.

படத்தின் இசையும் மனோ‌ஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவும் முக்கிய அம்சங்கள். கௌதம் பாடல்களை படமாக்கியிருக்கும் விதமும் அலாதியானது. காதலை ரசிப்பவர்களுக்கு விண்ணை‌த்தாண்டி வருவாயா ச‌ரியான சாய்ஸாக இருக்கும்.
மேலும் அறிய

> ஜோவின் இலக்கணப் பிழை

இலக்கணப் பிழை... எத்தனை அழகிய தமிழ் வார்த்தை. இதை தலைப்பாக்கி ஒரு படம் தயாராகிறது. எழுதி இயக்குகிறவர் ஜோ.

இலக்கணப் பிழை என்றதும் ஏதோ மென்மையான காதல் கதையை சொல்லப் போகிறார்கள் என்றுதான் அனைவருக்கும் தோன்றும். ஆனால் ஜோ எடுத்திருப்பது மெல்லின கதையல்ல, வல்லின கதை.

காதலுக்கு மட்டுமல்ல நட்புக்கும் கற்பு உண்டு, ஒழுக்க விதிகள் உண்டு. இதனை ஒரு நண்பன் மீறுகிறான். எப்படி? தனது நண்பனின் மனைவியுடனே உறவு வைத்துக் கொள்கிறான். இந்தப் பிழையும் அதுதரும் தண்டனையும்தான் படத்தின் கதை.

தினச‌ரியில் வரும் பாலியல் கதை போலிருக்கும் இதனை சுவாரஸியமான திரைக்கதையால் சிறந்த படமாக்கியிருப்பதாகக் கூறுகிறார் ஜோ. ஆறுமுகம், சத்யா, சுவாதி ஸ்ரீ, ‌ரிஹனா ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.
மேலும் அறிய

> மௌனமாக வென்ற அ‌‌ஜீத்

அ‌‌ஜீத் வருத்தம் தெ‌ரிவிக்க வேண்டும், ர‌ஜினிக்கு கண்டனம் என்ற தனது தீர்மானத்தை கைவிட்டிருக்கிறது பெப்சி அமைப்பு. கலையுலகின் பிதாமகன் கலைஞர் வேண்டுகோள் விடுத்ததால் இந்த முடிவை எடுத்திருப்பதாக பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் தெ‌ரிவித்தார்.

முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய அ‌‌ஜீத், சிலர் தங்களை அரசியல் சார்பான விழாக்களில் கலந்து கொள்ளச் சொல்லி மிரட்டுவதாக தெ‌ரிவித்தார். இந்த கருத்துக்கு எழுந்து நின்று கைத்தட்டினார் ர‌ஜினி. இது திரையுலக சங்கங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஜாகுவார் தங்கம் என்பவர் அ‌‌ஜீத்தை ஒருமையில் திட்டி பேட்டி அளித்ததோடு அ‌‌ஜீத், ர‌ஜினியின் பூர்வீகத்தை சந்திக்கு இழுத்து இதனை இன ‌ரீதியிலான பிரச்சனையாக மாற்ற முயன்றார். இதற்கு சில லெட்டர்பேட் கட்சிகளும் சாதி சங்கங்களும் தங்களது மேலான ஆதரவை தெ‌ரிவித்து பிரச்சனையை விசிறிவிட்டன.

அ‌‌ஜீத் முதல்வரை சந்தித்து தனது விளக்கத்தை தெ‌ரிவித்த பிறகு பிரச்சனை பெ‌ரிதானது. தேவைப்பட்டால் மிரட்டுவோம் உன்னால் என்ன செய்ய முடியும் என பகிரங்கமாக விழா ஒன்றில் பேசினார் வி.சி.குகநாதன். ஒட்டு மொத்த நடிகர்களையும் மிரட்டும் தொனியில் அவர் பேசியதை கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. சங்கங்கள் ஒன்றுக்கொன்று மோதி வேலைநிறுத்தம் ஏற்படும் அளவுக்கு பிரச்சனை பெ‌ரிதானது.

இந்நிலையில் திரையுலகின் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து ர‌ஜினிக்கு கண்டனம் தெ‌ரிவிப்பதாகவும், அ‌‌ஜீத் தனது உண்மையற்ற பேச்சுக்காக வருத்தம் தெ‌ரிவிக்க வேண்டும் என்றும் தீர்மானம் வெளியிட்டன. ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது, வேண்டுமானால் சினிமாவைவிட்டே போய் விடுகிறேன் என்று தனது நிலைப்பாட்டில் அ‌‌ஜீத் உறுதியாக இருந்தார்.

இந்நிலையில், முதல்வர் பிரச்சனையை இத்துடன் முடித்துக் கொள்ளுங்கள் என நீண்ட அறிக்கையை வெளியிட்டார். இதற்கு மதிப்பளித்து போராட்டத்தை கைவிடுவதாகவும், ர‌ஜினி, அ‌‌ஜீத் படங்களுக்கு தடையி‌ல்லா ஆதரவு வழங்குவதாகவும் வி.சி.குகநாதன் தெ‌ரிவித்தார்.

ஜாகுவார் தங்கம் போன்ற நபர்கள் உரக்க கூச்சலிட்ட போதும், உதி‌ரி அரசியல் மற்றும் சாதி சங்கங்கள் அலம்பல் செய்த போதும் மௌனமாகவே இருந்தார் அ‌‌ஜீத். அந்த மௌனமே இன்று அவருக்கு இந்த பிரச்சனையில் சாதகமான வெற்றியை பெற்றுத் தந்திருக்கிறது.
மேலும் அறிய

Saturday, February 27, 2010

> சோனியா அகர்வால் மலையாளத்தில்

செல்வராகவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவதற்கு முன்பே தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார் சோனியா அகர்வால். மொத்தமாக பிரிந்த பிறகு சினிமாவில் தீவிரமாக கவனம் செலுத்தப் போவதாக அறிவித்தார்.

திருமணமானவர்களுக்கு கோடம்பாக்கம் அக்கா, அண்ணி, அம்மா வேடம்தானே கொடுக்கும்? எனக்கு இன்னும் இளமை இருக்கிறது, அதனால் கதாநாயகியாகதான் நடிப்பேன் என்று உறுதியாக சோனியா கூறியதால் தமிழில் அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதேநேரம் மலையாளப் படவுலகம் அவரை இருகரம் நீட்டி வரவேற்றிருக்கிறது.

மலையாள திரையுலகம் திருமணத்தை ஒரு பொருட்டாக பார்ப்பதில்லை. திருமணமாகி குழந்தை பிறந்த பிறகு மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்தார் தேவயானி. இன்னும் இதுபோல் நிறைய உதாரணங்கள் கூற முடியும்.

சோனியா நடிக்கவிருப்பது சுரேஷ்கோபிக்கு ஜோடியாக. சுரேஷ்கோபியின் வழக்கமான மசில் படம்தான் இதுவும். டி.எஸ்.சுரேஷ்பாபு இந்தப் படத்தை இயக்குகிறார்.

திருமணத்துக்குப் பிறகு சோனியா அகர்வால் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அறிய

> வினய் ஆங்கிலப் படத்தில்

விமலாராமன் நடிக்கும் ஆங்கிலப்படமான Dame 999 படத்தில் அவர் மட்டுமின்றி வேறு பல இந்திய திரை நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள். படத்தை இயக்குகிறவரும் ஒரு இந்தியர்தான்.

கேரளாவைப் பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் தயாராகிறது. சுஹன் ராய் படத்தை இயக்குகிறார். இதில் விமலாராமன் மட்டுமின்றி நடிகர் வினய்யும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். உன்னாலே உன்னாலே படத்தில் அறிமுகமான இவர் தற்போது செல்வாவின் நுhற்றுக்கு நுhறு படத்தில் நடித்து வருகிறார்.

இவர்களுடன் திலகன் உள்ளிட்ட பிரபல மலையாள, இந்தி, ஹாலிவுட் நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள். படத்தை ஹாலிவுட்டில் ரிலீஸ் செய்வீர்களா?
மேலும் அறிய

> கமல் எழுதும் சுயச‌ரிதை

தனது ஐம்பது வருட திரை வாழ்க்கையை தொடராக எழுதவிருக்கிறார் கமல். சினிமாதான் கமலின் வாழ்க்கை. வாழ்க்கைதான் சினிமா. அந்தவகையில் இந்தத் தொடர் அவரது சுயச‌ரிதையாக இருக்கும்.

கமல் தனது நின்றுபோன மய்யம் பத்தி‌ரிகையை இணைத்தில் கொண்டு வருகிறார். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இணைய பத்தி‌ரிகையில் பணிபு‌ரிய நிருபர்களையும், சப் எடிட்டர்களையும் தேர்வு செய்யும் வேலைகள் நடந்து வருகின்றன.

கமலின் பங்களிப்பு அதிகம் இந்தப் பத்தி‌ரிகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக கமல் தனது ஐம்பது வருட திரை வாழ்க்கையை எழுதவிருக்கிறார். அதேபோல் அவரது வெளிவராத கவிதைகள் இந்த இணைய பத்தி‌ரிகையில் இடம்பெறும் எனவும் தெ‌ரிகிறது.
மேலும் அறிய

Friday, February 26, 2010

> Google Buzz ஒரு சிறப்பு பார்வை

ஐந்தாண்டுகளுக்கு முன் ஜிமெயில் ஜஸ்ட் ஒரு இமெயிலாக மட்டுமே இருந்தது. அதன் பின் சேட் என்னும் அரட்டை மனை, வீடியோ சேட் மனை ஆகியன அதற்குள்ளேயே தரப்பட்டான். ஒரே பிரவுசர் விண்டோவில் இவை அனைத்தும் சாத்தியமே என்று கூகுள் காட்ட, மக்கள் இதில் மொய்த்தனர். ஏனென்றால் மக்கள் தங்களுக்குள் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளத் துடிக்கின்றனர். தாங்கள் படித்த, கேள்விப்பட்ட தகவல்களை, எடுத்த, அமைத்த போட்டோக்களை மற்றவருக்கு அனுப்பி அவர்கள் கருத்தை, பாராட்டை, திட்டு தலைப் பெற விரும்புகின்றனர்.

இவர்களுக்கு இணையம் இடம் தரும் வகையில் வளைந்து கொடுக்கிறது.அந்த வகையில் கூகுள் சென்ற வாரம் Buzz என்னும் ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளது. இதுவும் ஜிமெயிலுக்குள்ளாகவே அமைக்கப்பட்டுள்ளது. Twitter, FaceBook, Friendfeed என உள்ள சோஷியல் தளங்களில் உள்ள வசதிகளைத் தன் மெயில் தளத்திலேயே கொண்டு வந்துள்ளது கூகுள்.

இதனை உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டிலேயே பயன்படுத்த வேண்டும் என நீங்கள் விரும்பினால், Google Buzz தளம் செல்லுங்கள். அங்கு Try Buzz in GMail என்னும் பட்டன் காட்டப்படும். அதில் கிளிக்கிடுங்கள். உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் காட்டப்படும். உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் இணைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுவிடும். சில நாட்களில் இந்த வசதி உங்கள் மெயில் இன்பாக்ஸ் பெட்டியில் கிடைக்கும். இதில் "Buzz" என ஒரு பட்டன் காட்டப்படும். இதில் அழுத்துவதன் மூலம் பயன்பாடு கிடைக்கும். இதன் மூலம் இணைய தளங்களுக்குச் செல்லலாம்.
உங்களுக்குத் தெரிந்த தகவல்களை உலகிற்குத் தெரிவிக்கலாம்; அல்லது உங்கள் நண்பர்கள் குழுவிற்கு மட்டும் என வரையறை செய்திடலாம். இதன் மூலம் உங்கள் நண்பர்கள் நீங்கள் எந்த தளங்களுக்கெல்லாம் சென்று தகவல்களைத் தருகிறீர்கள் என்று அறிந்து கொள்வார்கள். அதே போல மற்றவர்கள் "Buzz" மூலம் தரும் தகவல்களையும் நீங்கள் அறியலாம். குறிப்பிட்ட சிலரின் தகவல்களை மட்டும் கூடத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்; அதற்கு உங்கள் பதில் கருத்துக்களைப் பதியலாம். இனம், மொழி, சாதி, நாடு என்ற வேறுபாடற்ற சமுதாயம் அமைய இத்தகைய முயற்சிகள் வழி வகுக்கும் என்று எதிர்பார்த்து இதனை வரவேற்போம்.

எழுதியவர் : KarthiK
மேலும் அறிய

> சூர்யா ஜோடி ப்‌ரியாமணி

ராம்கோபால் வர்மாவின் ரக்த ச‌ரித்ராவில் ப்‌ரியாமணியும் நடிக்கிறார். சூ‌ர்யாவின் ஜோடியாக அவர் நடிப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஆந்திராவில் வாழ்ந்த பிரபல தாதா பரித்தலா ரவி. தாதாயிஸத்தின் பா‌ரிமாண வளர்ச்சியான அரசியலில் ஈடுபட்டு எம்.எல்.ஏ.வாகவும் இவர் இருந்துள்ளார். இறுதியில் எதிர் கோஷ்டியினரால் பரித்தலா ரவி கொல்லப்பட்டார்.

இவரது கதையைதான் ரக்த ச‌ரித்ரா என்ற பெய‌ரில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இயக்குகிறார் வர்மா. ப‌ரித்தலா ரவியின் கதாபாத்திரத்தில் வர்மாவால் கம்பெனி படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட விவேக் ஓபராய் நடிக்கிறார். ரவியின் கூட்டாளி ‌சூரியின் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்கிறார்.

ப‌ரித்தலா ரவியின் மனைவி ப‌ரித்தலா சுனிதாவின் கதாபாத்திரத்தில் வங்காள நடிகை ராதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சூ‌ரியின் காதலி வேடத்தில் நடிக்க ப்‌ரியாமணியை தேர்வு செய்திருக்கிறார் வர்மா.

விரைவில் சூ‌ர்யாவுடன் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் ப்‌‌ரியாமணி.
மேலும் அறிய

> பாடகர் சுந்தர் சி

தலைநகரம் படத்தில் ஹீரோவான சுந்தர் சி. இன்றைய தேதியில் மீடியம் பட்ஜெட் படங்களின் மினிமம் கியாரண்டி நாயகன். இவர் நடித்த சில படங்கள் தவிர்த்து மற்றவை கையை கடிக்காதவை.

ஹீரோவான பிறகு சுந்தர் சி. படம் எதுவும் இயக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனைவி குஷ்புவின் தயாரிப்பில் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடிக்க உள்ளார்.

இயக்குனர், ஹீரோவுடன் இவரது ஆசை அடங்கும்போல த‌ெ‌ரியவில்லை. குரு சிஷ்யன் படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். ஷக்தி சிதம்பரம் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஸ்ருதியாக பெயர் மாறியிருக்கும் இந்திரவிழா ஹேமமாலினி சுந்தர் சி.க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தினா இசையில் சுந்தர் சி. பாடியிருக்கும் பாடல், சுப்பையா சுப்பையா நீ செய்யுறது தப்பையா... என்று தொடங்குகிறது. (ஆ, எத்தனை உண்மையான வ‌ரிகள்).

சுந்தர் சி.யுடன் சத்யராஜும் இணைந்து பாடியிருக்கிறாராம். என்ன கொடுமை தினா சார் இது.
மேலும் அறிய

> கமாண்டோ சூர்யா

வாரணம் ஆயிரம் படத்தில் கமாண்டோ வீரராக நடித்தார் சூர்யா. அந்த கம்பீர உடையை அவர் மீண்டும் மாட்ட வேண்டிய தேவை வந்திருக்கிறது.

இயக்குனர் மேஜர் ரவி கந்தகார் விமானக் கடத்தலை மையமாக வைத்து கந்தகார் என்ற படத்தை இயக்குவதும் மோகன்லால், அமிதாப்பச்சனுடன் சூர்யாவும் அதில் நடிக்கவிருப்பதும் தெ‌ரிந்த விஷயங்கள். சூர்யாவுக்கு படத்தில் என்ன வேடம் என்பது இதுவரை த‌ெ‌ரியாமல் இருந்தது. அதனை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார் மேஜர் ரவி. கந்தகாரில் கமாண்டோ வீரராக சூர்யா நடிக்கிறாராம்.

அமிதாப்பச்சன் படத்தின் இடைவேளைக்குப் பிறகே படத்தில் வருகிறார் என்று த‌ெ‌ரிவித்தவர், இதுவொரு கெஸ்ட் ரோல் என்றும் கூறினார். முக்கியமான ராணுவ மையங்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
மேலும் அறிய

Thursday, February 25, 2010

> ரஜினி எந்திரன் படப்பிடிப்புக்குத் தடை

ரஜினி, ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடிக்கும் எந்திரன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. புதிதாக ஓரிரு சீன்கள் எடுத்து இணைக்க இயக்குனர் ஷங்கர் விரும்பினார். இதற்கான படப்பிடிப்பை டெல்லியில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான இடமும் அங்கு தேர்வு செய்யப்பட்டது.

படப்பிடிப்புக்கு போலீஸ் அனுமதி கேட்டனர். மனுவை ஆய்வு செய்த போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் படப்பிடிப்பில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்க தடை போட்டதாக கூறப்படுகிறது. டெல்லிக்கு பயணமாக தயாராக இருந்த ரஜினி, ஐஸ்வர்யாராய்க்கு கடைசி நேரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. பயணத்தை ரத்து செய்து விட்டனர். டெல்லிக்கு பதில் வேறு எங்கு படப்பிடிப்பை நடத்தலாம் என்று ஷங்கர் ஆலோசித்து வருகிறார்.

எந்திரன் படம் ஜூலை மாதம் ரிலீசாகும் என்று ரஜினி கூறியுள்ளார். மெகா பட்ஜெட்டில் இப்படம் தயாராகிறது. படத்தில் ஒரு பகுதியை 3 டியில் உருவாக்க ஏற்பாடு நடப்பதாக ஷங்கர் தெரிவித்தார்.

கோவா, புனே, ஐதராபாத், போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. சென்னையில் என்ஜினீயரிங் கல்லூரிகளிலும், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனங்களிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு உள்ளது. ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கி உள்ளது.

அதிநவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இப்படத்தை ஒரு எடுக்கின்றனர். எந்திரன், விஞ்ஞானி என இரு கெட்டப்பில் ரஜினி நடிக்கிறார்.
மேலும் அறிய

> பிகினியில் நடிப்பேன் - பியா

இப்போது வருகிற நடிகைகளுக்கு எது இருக்கிறதோ இல்லையோ... தாராளம் ரொம்பவே இருக்கிறது. வெட்டி வரச் சொன்னால் கட்டி வருகிற இவர்களின் சுறுசுறுப்பைப் பார்த்து சில இயக்குனர்களே மிரண்டு போயிருக்கிறார்கள்.

வாழ்க்கையில் எத்தனையோமுறை முத்தம் கொடுக்கிறோம். அதையே சினிமாவில் கொடுக்கச் சொன்னால் ஏன் வெட்கப்படணும்? கதைக்கு தேவை என்றால் முத்தம் தர நான் தயார். இப்படி அதிர வைத்திருப்பவர் ஆண்ட்‌ரியா.

இவருக்கு சற்றும் சளைத்தவரல்ல பியா. ஏற்கனவே இவர் அணியும் உடைகள் பிகினி மாதி‌ரிதான் இருக்கிறது. இந்நிலையில் கதைக்கு தேவைன்னா பிகினியில் நடிக்கவும் தயார் என ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளார்.

எத்தனை கவர்ச்சியாக நடித்தும் பியாவுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் இல்லை. ஏற்கனவே ஒப்புக் கொண்ட பலே பாண்டியா மட்டுமே கையில் இருக்கும் உருப்படியான ஒரே வாய்ப்பு. இப்போது கே.வி.ஆனந்தின் கோ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

பிகினி அறிவிப்புக்குப் பிறகாவது வாய்ப்புகள் வருகிறதா பார்ப்போம்.
மேலும் அறிய

> ஜ‌ீவாவின் , வந்தான் வென்றான்

வெற்றி மீது இயக்குனர் கண்ணனுக்கு அதிக விருப்பம்போல. இவரது முதல் படம் 'ஜெயம் கொண்டான்'. இரண்டாவது 'கண்டேன் காதலை'. மூன்றாவது படத்துக்கு முதல் படத்தைப் போலவே வெற்றியில் முடியும் பெயராக வைத்திருக்கிறார்.

கண்ணன் ஜ‌ீவா இயக்கும் படத்தை இயக்குகிறார். வாசன் விஷுவல் வென்சர்ஸ் படத்தை தயா‌ரிக்கிறது. ஜ‌ீவா ஜோடி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. கோ படத்துக்குப் பிறகு இந்தப் படம் தொடங்கப்பட உள்ளது.

கண்ணன் தனது மூன்றாவது படைப்புக்கு வைத்திருக்கும் பெயர் 'வந்தான் வென்றான்'. குண்ணனின் முத‌‌ல் இரண்டு படங்களும் சுமாரான வெற்றியையே பெற்றன. மூன்றாவது படமாவது படத்தின் டைட்டிலைப் போல வெல்ல வாழ்த்துவோம்.
மேலும் அறிய

> பவன் கல்யாண் 3 இடியட்ஸில்

இந்தியில் வெற்றிபெற்ற 3இடியட்ஸ் படத்தின் தமிழ், தெலுங்கு ‌ரிமேக் உ‌ரிமையை வாங்கியிருக்கிறார்கள். மிகப் பொ‌ரிய தொகைக்கு என்பது சொல்லாமலே தெ‌ரிந்திருக்கும்.

தமிழில் 3இடியட்ஸ் படத்தை ‌ரிமேக் செய்ய விஷ்ணுவர்தனை அணுகியிருக்கிறார்கள். ஆனால் யார் நடிப்பது? அமீர்கான் நடித்த வேடத்தில் விஜய்யை போடலாம் என்று அபிப்ராயங்கள் முன்மொழியப்படுகிறதே தவிர விஜய் இதுபற்றி வாய் திறக்கவில்லை.

இதே நிலைதான் தெலுங்கிலும். ஆனால் அங்கு சிறிது முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. எஸ்.ஜே.சூ‌ர்யாவின் புலி படத்தில் நடித்து வரும் பவன் கல்யாண் அமீர்கான் நடித்த வேடத்தை செய்ய முன் வந்திருக்கிறார். மற்ற நடிகர்கள் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

நல்ல படத்தில் நடிக்கவும் தயங்குகிறார்கள். சொதப்பிவிடுவோம் என்ற பயமாக இருக்குமோ?
மேலும் அறிய

> தனுஷ்,ஹ‌ரி இணையும் அருவா

மாப்பிள்ளை, ஆடுகளம், தெலுங்கு ரெடி படத்தின் ‌ரிமேக் என ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். இதுதவிர செல்வராகவனின் இயக்கத்தில் 'இது மாலை நேரத்து மயக்கம்' வேறு இருக்கிறது.

''இது மாலை நேரத்து மயக்கம் கதையில் சில மாறுதல் செய்யலாம் என்று இருக்கிறோம். அதனால்தான் படம் தள்ளிப் போகிறது'' என்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளார் தனுஷ்.

இந்தப் படங்களுடன் ஹ‌ரி இயக்கும் புதிய படத்திலும் நடிக்கிறார் தனுஷ். ஒரு படம் வெளியாகும்போது அடுத்தப் படத்தின் ஷுட்டிங்கை தொடங்குவதுதான் ஹ‌ரியின் ஸ்டைல். சேவல் சொதப்பியதால் சிறிய இடைவேளை ஏற்பட்டது. இப்போது சிங்கம் முடிவடையும் நிலையில் தனது அடுத்தப் படத்தை அறிவித்துவிட்டார் ஹீரோ தனுஷ்.

ஹ‌ரியை பொறுத்தவரை ஃபிலிம் இல்லாமல் படமெடுத்தாலும் அருவா இல்லாமல் படமெடுக்க மாட்டார். இந்த பந்தத்தின் முதிர்ச்சியா தெ‌ரியவில்லை, தனுஷ் நடிக்கும் படத்துக்கு 'அருவா' என்றே பெயர் வைத்துள்ளார். விஜயா புரொடக்ஷன் படத்தை தயா‌ரிக்கிறது.
மேலும் அறிய

Wednesday, February 24, 2010

> அனிமேஷனில் லவ குசா விரைவில்

ராமனின் மகன்கள் லவ, குசா. தீரமிக்கவர்கள். ராமாயணத்தை பின்புலமாகக் கொண்டு இவர்களின் கதையை 2டி அனிமேஷனில் உருவாக்கியிருக்கிறார்கள்.

புராண கதைகளை அனிமேஷனில் உருவாக்கும் போது ரசிகர்கள் ஆர்வமுடன் அதனை ரசிக்கிறார்கள். ஏற்கனவே அனுமானின் கதை அனிமேஷனில் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. தற்போது லவ குசா தயாராகியுள்ளது. 25 கோடி செலவில் இந்த அனிமேஷன் படத்தை தயா‌ரித்துள்ளனர்.

இசை மேதை எல்.வைத்தியநாதன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். அனிமேஷன் படம் என்றாலும் ஐந்து பாடல்கள் படத்தில் உள்ளன. தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் படம் திரைக்கு வரயிருக்கிறது.
மேலும் அறிய

> விக்ரம் படம் மும்மொழிகளில்

ராவண் படத்துக்குப் பிறகு இந்திப் படவுலகம் ஆச்ச‌ரியமுடன் பார்க்கும் நடிகராவார் விக்ரம் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கிறது. பாலிவுட் நடிகர்கள் விக்ரமின் படங்கள் பார்த்து ஆச்ச‌ரியப்பட்ட சம்பவங்கள் பல நடந்திருக்கிறது. முக்கியமாக சல்மான்கான்.

விக்ரமின் சேது படம் தேரே நாம் என்ற பெய‌ரில் இந்தியில் தயாரானது. விக்ரமின் கதாபாத்திரத்தில் நடித்தவர் சல்மான். படம் ஹிட். அப்போதே அவர் விக்ரமின் நல்ல நண்பர். விக்ரமின் சாமி படம் மும்பையில் நூறு நாட்கள் ஓடியது பல ஸ்டார்களை அதிசயப்பட வைத்தது.

ராவண் படம்தான் விக்ரமின் முதல் நேரடி இந்திப்படம். அதனால் அவரை இந்திப்பட ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக ட்ரெய்லர் ஒன்றை உருவாக்கியுள்ளார் மணிரத்னம். இந்தப் படம் வெளிவந்தால் இந்தியில் நடிக்க விக்ரமுக்கு வாய்ப்புகள் வரும் என்பது அனைவ‌ரின் நம்பிக்கை.

இந்த நம்பிக்கையின் காரணமாக மோகன் நடராஜன் விக்ரமை வைத்து தயா‌ரிக்கும் படத்தை இந்தி, தமிழ், தெலுங்கு என மும்மொழிகளில் தயா‌ரிக்க திட்டமிட்டுள்ளார். இந்தப் படத்தை இயக்குகிறவர் பூபதி பாண்டியன். ஜோடியாக நடிப்பவர் இலியானா.

விக்ரம் கே. குமார்தான் இந்தப் படத்தை இயக்குவதாக இருந்தது. கதையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பூபதி பாண்டியனுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இயக்குனர் மாற்றப்பட்டதால் முதலில் ஒப்பந்தமான ஏ.ஆர்.ரஹ்மான், பி.சி.ஸ்ரீராம் இருவரும் இந்தப் படத்திலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

தற்போது தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தை தெலுங்கிலும் தயா‌ரிக்க இருப்பதால் தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தத்தை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
மேலும் அறிய

> பாவனா - திருமண விளக்கம்

கடந்த இரண்டு நாட்களாக கேரளாவை சுழற்றிக் கொண்டிருக்கும் செய்தி, பாவனா திருமணம் செய்யப் போகிறார். தமிழ்நாட்டிலும் இந்த செய்தியின் சாரல் அடித்தது.

பாவனாவின் திருமண செய்தி உண்மையா? அவ‌ரிடமே கேட்டோம்.

இப்போதுதான் கன்னடம், தெலுங்கு என்று பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் திருமணம் பற்றி யோசிக்கவே நேரம் இல்லை என்றார்.

உங்கள் பெற்றோர் திருமணத்துக்கு உங்களை நிர்ப்பந்திப்பதாகவும் செய்திகள் வருகிறதே?

அதில் உண்மையில்லை. என்னுடைய விருப்பம் என் பெற்றோருக்கு தெ‌ரியும். அதை மீறி அவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள். இப்போதைக்கு திருமணம் செய்து கொள்வதாக இல்லை என்று மீண்டும் திட்டவட்டமாக கூறினார் பாவனா.
மேலும் அறிய

> தமிழ்ப் படம் அசலை முந்தியது

சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் ஆச்ச‌ரியம் நிகழ்த்தியிருக்கிறது தமிழ்ப் படம். ஒவ்வொரு வாரமும் படங்களின் கலெ‌க்சன் குறையும். ஆனால் சென்ற வாரம் தமிழ்ப் படத்தின் வசூல் முந்தைய வாரத்தைவிட சில லட்சங்கள் அதிக‌ரித்துள்ளது. மேலும், அ‌‌ஜீத்தின் அசலையும், விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளையையும் இது பின்னுக்கு‌த் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

5. ஆயிரத்தில் ஒருவன்
செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் ஐந்து வாரங்கள் முடிவில் 3.19 கோடிகள் வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 2.7 லட்சங்கள்.

4. கோவா
கோவாவுக்கு நான்காவது இடம். மூன்று வாரங்கள் முடிவில் இதன் மொத்த சென்னை வசூல் 1.6 கோடிகள். சென்ற வார இறுதி வசூல் 8 லட்சங்கள்.

3. அசல்
முதலிடத்தில் இருந்த அசல் இரண்டாவது வாரமே மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் மொத்த வசூல் 2.07 கோடிகள். சென்ற வார இறுதி வசூல் 21.26 லட்சங்கள்.

2. தீராத விளையாட்டுப் பிள்ளை
ஒரு வார முடிவில் 85 லட்சங்களை விஷாலின் படம் வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 27 லட்சங்கள்.

1. தமிழ்ப் படம்
புதிய வெளியீடுகளான அசல், தீராத விளையாட்டுப் பிள்ளை இரண்டையும் பின்னுக்கு தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது தமிழ்ப் படம். இதுவரை இப்படம் சென்னையில் 1.81 கோடிகளை வசூலித்துள்ளது. சென்ற வார இறுதி வசூல் 29.9 லட்சங்கள்.
மேலும் அறிய

> விண்ணைத்தாண்டி வருவாயா - மு‌ன்னோ‌ட்ட‌ம்

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ், ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் இணைந்து தயா‌ரித்திருக்கும் படம் விண்ணைத்தாண்டி வருவாயா. கௌதம் வாசுதேவ மேனன் படத்தை இயக்கியிருக்கிறார்.

உதவி இயக்குனர் ஒருவர் கேரளாவிலிருந்து வரும் இளம் பெண்ணுடன் காதல் கொள்வதும் அதனால் வரும் பிரச்சனைகளும், காதலின் முடிவும்தான் படத்தின் கதை. கார்த்திக் என்ற உதவி இயக்குனராக சிம்பு நடித்துள்ளார். மலையாள கிறிஸ்தவ பெண் ஜெஸ்ஸியாக த்‌ரிஷா.

இவர்கள் இருவரையும் மிக இயல்பாக நடிக்க வைத்திருக்கிறார் கௌதம். படத்தின் கிளைமாக்ஸை நியூயார்க் நக‌ரில எடுத்துள்ளனர்.

“விண்ணைத்தாண்டி வருவாயா என்னுடைய கே‌ரியல் முக்கியமான படமாக இருக்கும். சிம்பு படம்னா விரல் வித்தை, பன்ச் டயலாக் இருக்கும்னு ஒரு இமே‌ஜ் இருக்கு இல்லையா? அதை இந்தப் படம் மாற்றும்” என கூறுகிறார் சிம்பு.

“நான் இயக்கிய படங்களிலேயே மனசுக்கு ரொம்ப நெருக்கமான படம் இது. பிடித்த படமும் இதுதான்” என்கிறார் கௌதம். ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிர விசிறி த்‌ரிஷா. அவரது இசையில் நடிக்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் விருப்பம். அந்த விருப்பம் இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியதாக சந்தோஷப்படுகிறார்.

கௌதமின் ஆஸ்தான கவிஞர் தாமரை பாடல்கள் எழுதியுள்ளார். மனோ‌ஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு. ஆண்டனி எடிட்டிங். கலை ரா‌ஜீவன். உடை நளினி ஸ்ரீராம்.

படத்தில் சிம்பு, த்‌ரிஷா உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் காட்சி இடம்பெறுகிறது. இதன் காரணமாக படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கைக் குழு.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.
மேலும் அறிய

Tuesday, February 23, 2010

> அ‌‌ஜீத்துக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்

சண்டை இயக்குனர் ஜாக்குவார் தங்கம் வீடு தாக்கப்பட்ட விவகாரத்தில் விளக்கம் கேட்டு நடிகர் சங்கம் அ‌‌ஜீத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முதல்வருக்கு நடந்த பாராட்டுவிழா நிகழ்ச்சியில் அ‌ஜித் பேசியதை தமிழினத்துக்கு எதிராக அ‌‌ஜீத் பேசியதாக தி‌ரித்து‌க் கூறி வருகிறார் ஜாக்குவார் தங்கம். சாதி, இனம், மொழி என்று அவர் பிரச்சனையை திசை திருப்பியும் வருகிறார்.

ஜாக்குவார் தங்கம் வீடு தாக்கப்பட்டது தொடர்பாக 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அ‌‌ஜீத்தின் மேனேஜர், உதவியாளர், ரசிகர் மன்ற நிர்வாகி ஆகியோரும் அடங்குவர். அ‌‌ஜீத்தின் பெயரை வழக்கில் சேர்க்க ஜாக்குவார் தங்கம் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.

இந்நிலையில் தனது வீடு தாக்கப்பட்டது தொடர்பாக அ‌‌ஜீத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்படி நடிகர் சங்கத்திடம் பிராது கொடுத்தார் ஜாக்குவார் தங்கம். இதனைத் தொடர்ந்து அ‌‌ஜீத்துக்கு விளக்கம் கேட்டு நடிகர் சங்கம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் அறிய

> ஜெயம் ராஜா - விஜய்யை இயக்குகிறேன்

விஜய்யின் 50வது படமான சுறா வேகமாக தயாராகி வருகிறது. ரா‌ஜ்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். மணிசர்மா இசையமைக்க தமன்னா விஜய்யின் ஜோடி. ஏகாம்பரம் கேமரா.

சுறாவுக்குப் பிறகு விஜய் யார் படத்தில் நடிப்பார்? இந்தக் கேள்விக்குப் பதிலாக மூன்று பெயர்களை முன் வைத்தனர். ஒருவர் ஜெயம் ராஜா. இவர் விஜய்யிடம் கதை சொல்லி ஏற்கனவே ஒப்புதல் வாங்கியிருந்தார். ஆஸ்கர் பிலிம்ஸ் ஜெயம் ராஜா இயக்கும் படத்தை தயா‌ரிப்பதாக ஒப்பந்தம்.

இன்னொருவர் மலையாள இயக்குனர் சித்திக். தனது பாடிகார்ட் படத்தின் கதையை விஜய்யிடம் சொல்லி இவரும் ஏற்கனவே ஒப்புதல் வாங்கியிருந்தார்.

மூன்றாவது லிங்குசாமி. விஜய்க்கு கதை தயார் செய்து வைத்திருப்பதாக ஓபனாகவே அறிவித்திருந்தார்.

இந்த மூவ‌ரில் முந்திக் கொண்டவர் சித்திக் என்கிறார்கள். மலையாளத்தில் பாடிகார்ட் நன்றாகப் போவதால் உடனே அதை ‌‌ரீமேக் செய்ய விரும்புகிறாராம் விஜய். லிங்குசாமிக்கு வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. அவரும் சிம்புவை வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார். ஜெயம் ராஜா?

‘ஆஸ்கர் பிலிம்ஸ் தயா‌ரிப்பில் விஜய் நடிக்கும் படத்தை நான் இயக்குகிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. சுறாவுக்குப் பிறகு நான் இயக்குகிறேனா இல்லை அதற்கு அடுத்து இயக்குகிறேனா என்பதெல்லாம் தெ‌ரியாது’ என கூறியிருக்கிறார் ஜெயம் ராஜா.

ஆக, விஜய்யை ஜெயம் ராஜா இயக்குகிறார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
மேலும் அறிய

> ‘உண்மையற்ற’ பேச்சும் பேராண்மை பதிலும் - அ‌‌ஜீத்

முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய அ‌‌ஜீத், அரசியல் பிரச்சனைகளில் அரசை முந்திக் கொண்டு சிலர் அவசர முடிவு எடுப்பதாகவும், அத்தகைய கூட்டங்களில் கலந்து கொள்ளச் சொல்லி சிலர் மிரட்டுவதாகவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து முன்பு கற்பழிப்பு புகா‌ரில் சிக்கிய ஸ்டண்ட் நடிகர் ஒருவர் அ‌‌ஜீத் தமிழின விரோதி என்று பத்தி‌ரிகையில் பேட்டி கொடுத்தார். இதற்கு அ‌‌ஜீத்திடம் இருந்து எந்த பதிலிலும் கிடைக்கவில்லை.

ஓ‌ரிரு நாட்கள் கழிந்த நிலையில் எனது காரை அ‌‌ஜீத்தின் தூண்டுதலில் உடைத்துவிட்டனர் என்று இந்த கற்பழிப்பு புகழ் ஸ்டண்ட் நடிகர் காவல் துறையில் புகார் செய்தார். இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில் பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் என்பவர் நாங்க மிரட்டுவோம், உன்னால் என்ன செய்ய முடியும் என பகிரங்கமாக விழா ஒன்றில் பேசினார். இதனைத் தொடர்ந்து நடிகர் சங்கம் அவருக்கு தனது கண்டனத்தை தெ‌ரிவித்தது.

பிரச்சனை பெ‌ரிதாகி வருவதைக் கண்ட திரைத்துறையின் அனைத்து சங்கங்களும் கூட்டாக ஆலோசனை நடத்தின. பிறகு கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன. அதில் தனது உண்மையற்றப் பேச்சுக்காக அ‌‌ஜீத் வருத்தம் தெ‌ரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தன. மேலும் அ‌‌ஜீத்துக்கு ஆதரவாகப் பேசியதற்கு அவை ர‌ஜினிக்கு கண்டனமும் தெ‌ரிவித்திருந்தன.

மிரட்டுவோம் என்று பகிரங்கமாகப் பேசிய வி.சி.குகநாதன் என்பவரும் இந்த ‘உண்மையற்ற’ கூட்டறிக்கையில் கையெழுத்துப் போட்டிருந்தார்.

இந்த அறிக்கைக்கு அ‌‌ஜீத்திடமிருந்து இன்னும் பதிலில்லை. பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் மன்னிப்பு கேட்க முடியாது என்று பேராண்மை பதிலை தெ‌ரிவித்திருந்தார் அ‌‌ஜீத். இப்போது நடப்பதைப் பார்த்தால் கேமரா முன்னால் நிற்கவே பிடிக்கவில்லை என்றும் அதில் தெ‌ரிவித்துள்ளார். மீண்டும் கார் ரேஸில் கலந்து கொள்ள அவர் ஆர்வமுடன் இருப்பதும் இந்தப் பேட்டியில் தெ‌ரிய வந்துள்ளது.

அ‌‌ஜீத் முதல்வர் முன்னால் வைத்த குற்றச்சாற்று, சிலர் மிரட்டுகிறார்கள் என்பது. இது உண்மையற்ற பேச்சு என்று சங்கங்கள் கூறியுள்ளன. வி.சி.குகநாதன் பகிரங்கமாக மிரட்டுவோம் என்று கூறியது அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்த பிறகும் அ‌‌ஜீத்தின் பேச்சை சங்கங்கள் உண்மையற்றப் பேச்சு என கூறியிருப்பது கோயபல்ஸை தோற்கடிக்கும் சமாச்சாரம்.

முதல்வரை அ‌‌ஜீத் சந்தித்த பிறகே அவருக்கு எதிரான கருத்துகள் வன்மையாக வெடித்தன. முதல்வ‌ரிடம் சலுகைக்காக கையேந்தி நிற்பவர்களை ஒரு கண்ணசைவில் முதல்வரால் கட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

சங்கங்களின் சர்வாதிகார போக்குக்கு தலைவணங்காத அ‌‌ஜீத் பாராட்டுக்கும் பெருமிதத்துக்கும் உ‌ரியவர்.
மேலும் அறிய

> இயக்குனராவேன் - தனுஷ்

நடிப்பு, இயக்கம் இரண்டில் எது ரொம்பப் பிடிக்கும் என்று கேட்டால் தயங்காமல் தனுஷிடமிருந்து வருகிற பதில், “இயக்கம்தான் பிடிக்கும்.”

படம் இயக்க வேண்டும் என்பது தனுஷின் நீண்ட நாள் விருப்பம். தன்னை அதற்கு தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக பல முயற்சிகள் எடுத்து வருகிறார்.

“அண்ணனின் ஆயிரத்தில் ஒருவனில் உதவி இயக்குனர் போல வேலை செய்திருக்கிறேன். அந்தப் படத்தின் கதை உருவானதிலிருந்து ஒவ்வொன்றையும் உற்றுப் பார்த்து வந்திருக்கிறேன். இயக்குனருக்கான அடிப்படை விஷயங்கள் கற்றுக் கொண்டபின் படம் இயக்குவேன்” என்கிறார் உறுதியுடன்.

தற்போது ரெடி படத்தின் ‌‌ரீமேக்கிலும், வெற்றிமாறனின் ஆடுகளத்திலும், சுரா‌ஜின் மாப்பிள்ளையிலும் நடித்து வருகிறார் தனுஷ். விரைவில் அவரை வைத்து படம் இயக்கப் போகும் அறிமுக இயக்குனர் ஜஸ்வர்யா தனுஷ். ஆம், தனுஷுக்காக கதை தயார் செய்து வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா.
மேலும் அறிய

Monday, February 22, 2010

> மலையாளத்தில் மீண்டும் பிரபு.

மலையாளத்தில் மீண்டும் நடிக்கிறார் பிரபு. இது அவர் நடிக்கும் மூன்றாவது மலையாளப் படம்.

முதல் படம் ப்‌ரியதர்ஷன் இயக்கிய கலாபாணி. இந்தப் படத்தில் மோகன்லாலுக்கு இணையான வேடத்தில் நடித்திருந்தார் பிரபு. இந்தப் படம் சிறைச்சாலை என்ற பெய‌ரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

பிரபு நடித்த இன்னொரு மலையாளப் படத்தில் ஜெயராம், கலாபவன் மணி, ரோஜா ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த இரண்டு படங்களிலும் தமிழ் பேசும் தமிழ்நாட்டுக்காரராக பிரபு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரபு நடிக்கும் மூன்றாவது மலையாளப் படம் பிராமணி. இதில் மம்முட்டியுடன் நடிக்கிறார். மம்முட்டியுடன் பிரபு நடிப்பது இதுவே முதல் முறை.
மேலும் அறிய

> உடல் எடை எளிதாக கூட்டலாம், குறைக்கலாம்

உடல் எடையைக் கூட்ட பேரீச்சம் பழம் மிகவும் உதவும். பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்துக் கிடைக்கிறது. தினமும் இரண்டு பேரீச்சம் பழமும் பாலும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

அதேப்போல உடலுக்கு போதுமான இரும்புச் சத்து இருந்தால் முடி உதிர்வதும் தவிர்க்கப்படும்.

ரொம்ப ரொம்ப ஒல்லியாக இருப்பவர்கள், தங்களது உடல் எடையைக் கூட்ட வேண்டும் என்றால் நிறைய ஐஸ்க்ரீம் சாப்பிடலாம்.

பாலில் தேன் ஊற்றி சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கும்.

அதே சமயம் உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், பலரும் பல வழிகளை கையாள்கிறார்கள். உடற்பயிற்சி, நடனம் போன்றவற்றில் ஈடுபடுவதால் நிச்சயம் உடல் எடை குறையும். ஆனால் அதனை தொடர்ந்து செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. நிறுத்திவிட்டால் உடனடியாக உடல் எடை அதிகரித்துவிடும்.

அதற்கு மாற்றாக யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடலாம். எடுத்ததுமே கடினமான ஆசனங்கள் செய்யாமல் முதலில் எளிதான ஆசனங்களை செய்து படிப்படியாக யோகாவில் பயிற்சி பெறலாம்.

வெதுவெதுப்பான சுடுநீரில் தேன் ஊற்றி சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
மேலும் அறிய

Sunday, February 21, 2010

> V.C குகநாதனுக்கு கடும் கண்டனம்

வி.சி.குகநாதன் பெப்சி தலைவரான பிறகு கட்ட பஞ்சாயத்து செய்பவர் போல் நடந்து கொள்கிறார் என்று திரையுலகில் பலரும் குறை கூறி வந்தனர். இருபதாயிரம் தொழிலாளிகளுக்கு தலைவன் என்று கூறிக்கொண்டு இவர் நடத்தும் தன்னிச்சையான நடவடிக்கைகள் திரைத் துறையினருக்கே பிடிப்பதில்லை.

இந்நிலையில் நேற்று நடந்த ஆடியோ வெளியீட்டு விழா ஒன்றில் நடிகர்கள் அ‌ஜித், ர‌ஜினி மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த நடிகர்களையும் மிரட்டும் தொனியில் பேசினார் வி.சி.குகநாதன். இதற்கு நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெ‌ரிவித்துள்ளது. இது குறித்து நடிகர் சங்க‌த் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

நடிகர் சங்கம், தயா‌ரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட‌த் தொழிலாளர் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் இதுவரை ஒற்றுமையாக செயல்பட்டு வந்தோம். ஆனால், சமீப காலமாக பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் தன்னிச்சையாக செயல்பட்டு ஒற்றுமைக்கு இடைவெளி ஏற்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் எங்களை கலந்து பேசாமல் நடிகர், நடிகைகள் ஊர்வலம் என்று பேட்டியளித்தார். பின்னர், விழாவில் கலந்து கொள்ளாத நடிகர், நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.

இப்போது ஒரு பேட்டியில் எங்கள் உறுப்பினர்களான நடிகர், நடிகைகளை ம‌ரியாதை இல்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தி அவதூறாக‌ப் பேசியுள்ளார். இதை நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தயா‌ரிப்பாளர் சங்கம் பெப்சி தலைவ‌ரின் செயல்பாட்டை‌க் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அறிய

> ஜீவா ஜோடியாகும் ஸ்ரேயா

ஜீவாவின் கச்சே‌ரி ஆரம்பம் ‌ரிலீஸுக்கு தயாராக உள்ளது. சிங்கம் புலி படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு ரவுத்ரம் படத்தில் நடிப்பதாக இருந்தார் ‌‌ஜீவா. அதற்குள் கே.வி.ஆனந்தின் கோ குறுக்கிட ரவுத்ரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், ரவுத்ரத்தின் பூர்வாங்க வேலைகள் தொடங்கிவிட்டன. ‌ஜீவா ஜோடியாக ஸ்ரேயா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.

கந்தசாமி, ஜக்குபாய் படங்களில் ஸ்ரேயாவுக்கு நல்ல பெயர் கிடைத்தாலும் வாய்ப்பு மட்டும் வரவில்லை. ஆர்யாவுடன் நடித்துவரும் சிக்குபுக்கு மட்டுமே கையிலிருக்கும் ஒரே வாய்ப்பு.

இந்நிலையில்தான் ‌‌ஜீவாவின் ரவுத்ரம் வாய்ப்பு ஸ்ரேயாவை தேடி வந்தது. கப்பென்று பிடித்தவர் வழக்கம் போல இந்தியில் பிஸி, தெலுங்கில் ஆறு படம் என்று புள்ளி விவரம் தருகிறார். நம்புவோம்.
மேலும் அறிய

> விஜய்யை சுற்றும் ஆண்டனி

இன்றைய தேதியில் தமிழ்‌த் திரையுலகில் எடிட்டிங் பி‌ரிவில் கலக்கிக் கொண்டிருப்பவர் ஆண்டனி. கௌதமின் சமீபத்திய படங்கள் அனைத்தும் இவரது மேஜையில்தான் உருவாயின. சிவா‌ஜியும் இவரது கைவண்ணம்தான். எந்திரன் படத்துக்கும் இவர்தான் எடிட்டர்.

ஆண்டனிக்கு சமீபகாலமாக இயக்கத்தின் மீது தீராத மோகம். முன்னணி நடிகர்களை இயக்குவதற்காக கதையும் தயார் செய்து வைத்திருக்கிறார். விஜய்யிடம் கதை சொல்ல தேதி கேட்டிருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

எடிட்டராக இருந்த பி.லெனின் சில திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். ஆண்டனிக்கும் இயக்குவதற்கு வாய்ப்பு கிடைக்க வாழ்த்துவோம்.
மேலும் அறிய

> சூர்யா - சூப்பர் ஸ்டார்களுடன்

இரண்டு ஹீரோ சப்ஜெக்டில் சூர்யா நடிப்பது புதிதல்ல. பலமுறை நடித்திருக்கிறார். இப்போது வரும் தகவல் புதிது. இரண்டு சூர்பர் ஸ்டார்களுடன் நடிக்கிறாராம்.

மேஜர் ரவி அரண் படத்துக்குப் பிறகு தமிழ், மலையாளம் இரு மொழிகளில் இயக்கும் படம் கந்தகார். 1999ல் நடந்த விமானக் கடத்தலை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்குகிறார். மோகன்லால், அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனன்யா ஹீரோயின்.

இந்தப் படத்தில் சூர்யாவும் நடிப்பதாக கூறப்படுகிறது. படத்தில் அவருக்கு முக்கியமான வேடமாம். கேரளா, டெல்லி, நேபாள் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
மேலும் அறிய

> நயன்தாராவின் சிம்பல்

முதல் முறையாக கன்னடப் படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. ஹீரோ உபேந்திரா.

சிம்பல் என்று பெயர் வைத்திருக்கும் இந்தப் படத்தில் நடிப்பதோடு படத்தை இயக்கவும் செய்கிறார் உபேந்திரா. பத்து வருடங்களுக்குப் பிறகு அவர் இயக்கும் படம் என்பதால் நிறைய எதிர்பார்ப்பு.

நயன்தாராவின் பூர்வீகம் கேரளா என்றாலும் அவர் பிறந்தது பெங்களூருவில். அவர் கன்னடப் படமொன்றில் நடிப்பதும் இதுவே முதல் முறை. இந்த காரணங்களால் சிம்பல் படத்தை நயன்தாராவும் ரொம்பவே எதிர்பார்க்கிறார்.

ராக் லைன் வெங்கடேஷ் படத்தை தயா‌ரிக்கிறார். இவர் சிம்பு நடித்த குத்து படத்தை தயா‌ரித்தவர்.
மேலும் அறிய

Saturday, February 20, 2010

> நோ கமெண்ட்ஸ் - அ‌ஜீ‌த்

நேற்று மாலை நடிகர் அ‌ஜீ‌த் முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தி‌ற்கு‌ச் சென்று சந்தித்தார்.

சமீபத்தில் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய அ‌ஜீ‌த், இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு வரும்படி மிரட்டுகிறார்கள் என்று பகிரங்கமாக குற்றம்சாற்றியிருந்தார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அ‌ஜீ‌த் முதல்வரை சந்தித்ததால் ஏராளமான பத்தி‌ரிகையாளர்கள் அ‌ஜீ‌த்தை பேட்டி காண முதல்வ‌ரின் வீட்டு முன்பு திரண்டனர்.

சுமார் இருபது நிமிடங்கள் முதல்வருடன் உரையாடிவிட்டு வெளியே வந்தார் அ‌ஜீ‌த். அவரை சூழ்ந்து கொண்டு பத்தி‌ரிகையாளர்கள் கேள்விகள் தொடுத்தனர். எதற்கு இந்த சந்திப்பு என்ற கேள்விக்குப் பதிலளித்த அ‌ஜீ‌த், இது ம‌ரியாதை நிமித்தமான சந்திப்பு அவ்வளவுதான் என்றார்.

அ‌ஜீ‌த் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய போது அவருக்கு ஆதரவாக ர‌ஜினி எழுந்து நின்று கைத்தட்டினார். இதுபற்றி நிருபர்கள் அ‌ஜீ‌த்திடம் கேட்டதற்கு, அவருக்கு என் நன்றி என சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

நிருபர்கள் ஆர்வமாக இருந்தும் பேச்சை முடித்து கிளம்புவதிலேயே குறியாக இருந்தார் அ‌ஜீ‌த். நீங்கள் சொன்ன கருத்தில் இப்போதும் உறுதியாக இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு, நோ கமெண்ட்ஸ் என்று ஒரே வார்த்தையில் பதிலளித்து கா‌ரில் பறந்தார்.
மேலும் அறிய

> சூர்யா ஜோடி ஸ்ருதிஹாசன் ?

ஸ்ருதிஹாசன் பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் இச் படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியானது. அந்த செய்திகளை ஸ்ருதிஹாசன் மறுத்துள்ளார். அந்தப் படத்தில் நடிக்க என்னை யாரும் அணுகவேயில்லை என்பது ஸ்ருதியின் விளக்கம்.

அதேபோல் சிம்புவின் வாலிபன் படத்தில் ஸ்ருதி நடிக்கயிருப்பதாக வரும் தகவல்களிலும் எந்த அடிப்படையும் இல்லை. ஸ்ருதியின் கவனமெல்லாம் இந்தி திரைப்படங்களின் மீதே உள்ளது.

அதேநேரம் முருகதாஸ், சூர்யா இணையும் படத்தில் ஸ்ருதிதான் ஹீரோயின் என்ற நம்பத்தகுந்த தகவல் உலவுகிறது. உதயநிதி ஸ்டாலின் தயா‌ரிக்கும் இந்தப் படத்துக்கு ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ் இசையமைக்கிறார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இவர்தான் இந்தி க‌ஜினிக்கும் ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முருகதாஸின் இந்த‌ப் புதிய படம் எப்போது தொடங்கும் என்பதில் குழப்பம் நிலவுகிறது. அடுத்த மாதமா இல்லை அடுத்த வருடமா என்று பட்டிமன்றம் நடந்து வருகிறது கோடம்பாக்கத்தில். தயா‌ரிப்பாளர்தான் பொறுப்பான பதிலளிக்க வேண்டும்.
மேலும் அறிய

> பொங்கிவழியும் தேசபக்தி - IPL க்கு தடை

திரையரங்குகளில் ஐபிஎல் கி‌ரிக்கெட் போட்டியை திரையிடக் கூடாது என்று தயா‌ரிப்பாளர்கள் சங்கமும், விநியோகஸ்தர்கள் சங்கமும் கொடி பிடித்துள்ளன. இவர்களின் அவசர கூட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஆடியோ விழாவிலேயே ஆவேசமாக பேசும் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி ‌ஜி.சேகரன் நே‌ற்று தனது கருத்துகளை ஆவேசமுடன் வெளியிட்டார். அதன் சாராம்சம் வருமாறு :

விளையாட்டு என்பது உலகம் முழுவதும் உணர்வு‌ப்பூர்வமான அங்கம். அதற்கு காரணம் விளையாட்டுப் போட்டிகளில் தேசப்பற்று இருப்பதுதான். ஆனால் சமீபமாக ஐபிஎல் கி‌ரிக்கெட் போட்டிகளை பெரும் பண முதலைகள் நடத்துகின்றன. லாபம் சம்பாதிக்க நடத்தப்படும் இந்தப் போட்டிகளால் தேசப்பற்று நாசமடைந்துவிட்டது.

மரபணு மாற்றம் போல் சென்னை அணியில் பாகிஸ்தான் வீரர் என்றும், கொல்கத்தா அணியில் ஆஸ்திரேலிய வீரர் என்றும் விளையாட்டுகளை ஈனப்படுத்திவிட்டனர்.

கலைப்புலி ‌ஜி.சேகரன் சொன்னவை அனைத்தும் உண்மை. அதேநேரம் சென்னை டீமில் பாகிஸ்தான் வீரர் இருப்பதுபோல் தமிழ் சினிமாவான கோவா, ஜக்குபாய் போன்ற படங்களில் வெளிநாட்டவர்கள் நடித்திருக்கிறார்கள். எந்திரனில் ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள். இதுவும் தேசப்பற்றை ஈனப்படுத்தும் விஷயமா? கலைப்புலிதான் கருணைகூர்ந்து விளக்க வேண்டும்.
மேலும் அறிய

> அ‌ஜீ‌த், ர‌ஜினிக்கு - குகநாதன் பகிரங்க மிரட்டல்

அ‌ஜீ‌த்தையும், ர‌ஜினியையும் பெயர் குறிப்பிடாமல் பகிரங்கமாக மிரட்டினார் பெப்சி தலைவர் வி.சி.குகநாதன். எங்களை எதிர்த்தால் இவர்களை இருக்கும் இடம் இல்லாமல் செய்ய முடியும் என்று அவர் பேசியது திரையுலகினரையும், ர‌ஜினி, அ‌ஜீ‌த் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவி‌ல், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் சொல்லி சிலர் மிரட்டுவதாக அ‌ஜீ‌த் கூறியது வி.சி.குகநாதன் போன்ற சங்க நிர்வாகிகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் எதிரொலியை இன்று சென்னையில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் கேட்க முடிந்தது.

படத்தையோ, படத்தின் ஆடியோவையோ பற்றி பேசாமல் வி.சி.குகநாதன் தனது கோபத்தை கொட்டத் தொடங்கினார்.

திரைப்பட அமைப்பு என்பது அரசியல் கட்சி என்றால் அதன் உறுப்பினர்கள் தொண்டர்கள் மாதி‌ரி. தலைவனுக்கு கட்டுப்பட்டு நடப்பதுதான் தொண்டர்களின் கடமை. அது தெ‌ரியாமல் சிலர் விதாண்டவம் பேசுகிறார்கள் (அ‌ஜீ‌த்). இவர்களுக்கு சிலர் (ர‌ஜினி) ஆதரவு.

ஊரோடு ஒத்துப் போக வேண்டும். முடியாது எதி‌ர்த்துதான் நிற்போம் என்றால் இவர்களை எப்படி மேலே கொண்டு வந்தோமோ அதேமாதி‌ரி இருக்கும் இடம் இல்லாமலும் செய்ய முடியும். நாங்கள் பண்பாகவும் கேட்போம், பணிவாகவும் கேட்போம், மிரட்டியும் கேட்போம். இவர்களால் எங்களை என்ன செய்ய முடியும்? அப்படியும் கேட்காவிட்டால் இவர்களை ஓரம்கட்டும் வழியும் தெ‌ரியும். இவர்களால் என்ன செய்ய முடியும்?

இப்படி பகிரங்கமாக நடிகர்களுக்கு சவால் விட்டிருக்கிறார் வி.சி.குகநாதன். நாங்க யாரை சொல்றோம் என்று உங்களுக்கே தெ‌ரியும் என்று எடுத்துக் கொடுத்தார் வி.சி.குகநாதனுக்குப் பிறகு பேச வந்த கலைப்புலி ‌ஜி.சேகரன்.

அ‌ஜீ‌த்தை யார் மிரட்டினார்கள் என்பது இப்போது ஊருக்கே தெ‌ரிந்திருக்கும் நடிகர் சங்கமும், தமிழக முதல்வரும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்?
மேலும் அறிய

Friday, February 19, 2010

> ஜூலை‌யி‌ல் 'எ‌ந்‌திர‌ன்' ‌‌ரி‌‌லீ‌ஸ்

'எ‌ந்‌‌‌திர‌ன்' படத்தின் சில தொழில்நுட்ப வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன எ‌ன்று‌ம் ஜூலை மாதம் படம் வெளியாகும் என‌்று‌ம் நடிக‌ர் ர‌ஜி‌னிகா‌ந்‌த் கூ‌றினா‌ர்.

முதலமை‌ச்ச‌ர் கருணாநிதியை இ‌ன்று நடிக‌ர் ‌ர‌ஜி‌னிகா‌ந்‌த் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பே‌ட்டி அ‌ளி‌த்த அவ‌ர், என் மகள் சௌந்தர்யா நிச்சயதார்த்தத்திற்கு முதல்வர் குடும்பத்தோடு வந்து ஆசி வழங்கினார். அவருக்கு நன்றி தெரிவிப்பதற்காக இன்று காலை சந்தித்து பேசினேன் எ‌ன்றா‌ர்.

‘எந்திரன்’ படம் எப்போது வெளியாகும் எ‌ன்ற கே‌ள்‌வி‌க்கு ப‌தி‌ல்‌ அ‌ளி‌த்த ர‌‌ஜி‌னிகா‌ந்‌த், படத்தின் சில தொழில்நுட்ப வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஜூலை மாதம் படம் வெளியாகும் எ‌ன்றா‌ர்.

அண்மையில் நடந்த திரைப்படத்துறை பாராட்டு விழாவில் நடிகர் அஜீத் பேசியது பற்றி உங்கள் கருத்து என்ன எ‌ன்ற ம‌ற்றொரு கே‌ள்‌வி‌க்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த அவ‌ர், அது அவருடைய உரிமை. அவருடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். அதற்காக அவரை நான் பாராட்டுகிறேன்.

நடிகர், நடிகைகளை விழாவுக்கு வரும்படி அழைக்கப்படுகிறார்கள். ஆனால் வர வேண்டும் என்று யாரும் நிர்ப்பந்தம் செய்வதில்லை. அவர்களாகவே விரும்பித்தான் போராட்டங்கள், உண்ணாவிரதம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். முதல்வர் கருணாநிதி பல்வேறு போராட்டங்களை சந்தித்தவர். அவர் யாரையும் நிர்ப்பந்தம் செய்து அழைக்க வேண்டிய அவசியம் இல்லை எ‌ன்றா‌ர்.

60 வயதிலும் கதாநாயகனாக நடிக்கிறீர்களே எ‌ன்ற கே‌ள்‌வி‌க்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த ர‌‌ஜி‌னிகா‌ந்‌த், தமிழ் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வதால், அவர்கள் என் மீது அன்பு செலுத்துவதால் 60 வயதிலும் கதாநாயகனாக நடிக்கிறேன் எ‌ன்றா‌ர்.
மேலும் அறிய

> IPL - தயா‌ரிப்பாளர்கள் சங்கம் கட்டுப்பாடு

ஐபிஎல் கி‌ரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் தொடங்குகிறது. கி‌ரிக்கெட்டை சூதாட்டமாக மாற்றியிருக்கும் இந்த ஐபிஎல் போட்டிகள், தொடங்கப்படுவதற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் போட்டிகளை மனதில் வைத்து பல தயா‌ரிப்பாளர்கள் தங்கள் படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றியுள்ளனர். கி‌ரிக்கெட் நடக்கும் தினங்களில் ரசிகர்கள் திரையரங்குக்கு வரமாட்டார்கள் என்பதே இதற்கு காரணம்.

ஐபிஎல் போன்ற போட்டிகளால் தயா‌ரிப்பாளர்கள் மட்டுமின்றி திரையரங்கு உ‌ரிமையாளர்களும் பாதிக்கப்படுகிறார்கள். தயா‌ரிப்பாளர்கள் பட வெளியீட்டை தள்ளி வைப்பதுபோல் இவர்கள் திரையரங்கை மூடிவிட்டு செல்ல முடியாது. பத்தே பேர் வந்தாலும் நாலு ஷோ நடத்தியாக வேண்டும்.

இதன் காரணமாக சில திரையரங்கு உ‌ரிமையாளர்கள் கி‌ரிக்கெட்டையே திரையரங்குகளில் ஒளிபரப்பும் மாற்றுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினர். இதற்கு சென்னையில் நல்ல வரவேற்பு. ரசிகர்கள் பெ‌ரிய திரையில் கி‌ரிக்கெட்டை காண குழுமினர். திரையரங்குகளின் நஷ்டமும் தவிர்க்கப்பட்டது.

ஆனால் இந்தமுறை இப்படி திரையரங்குகளில் கி‌ரிக்கெட்டை ஒளிபரப்பக் கூடாது, அப்படி ஒளிபரப்புவதால் தயா‌ரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என தயா‌ரிப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெ‌ரிவித்துள்ளது.

மேலும், இதனை வலியுறுத்தி சென்னை திரையரங்கு உ‌ரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதனிடம் பேசயிருப்பதாகவும் தயா‌ரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம.நாராயணன் தெ‌ரிவித்துள்ளார்.
மேலும் அறிய

> ஆர்யாவுக்குப் பிறகு ‌‌ஜீவா

சத்யஜோதி பிலிம்ஸின் அடுத்தப் படத்தை கண்ணன் இயக்குவதாக முதலில் கூறப்பட்டது. கண்டேன் காதலை படத்தில் நடித்த பரத் ஹீரோ என்பது வரை உறுதி செய்யப்பட்டிருந்தது. என்ன நடந்ததோ... சத்யஜோதியில் கண்ணனும் இல்லை, பரத்தும் இல்லை.

கண்ணன் அடுத்து இயக்கும் படத்தை வாசன் விஷுவல் மீடியாஸ் தயா‌ரிக்கிறது. இவர்கள் தற்போது ஆர்யா, நயன்தாரா நடிப்பில் ராஜேஷ் எம். இயக்கும் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை தயா‌ரித்து வருகின்றனர். இதையடுத்து அவர்கள் தயா‌ரிக்கும் படத்தைதான் கண்ணன் இயக்குகிறார்.

இந்தப் புதிய படத்தில் ‌ஜீவா நடிக்கிறார். கோ படத்துக்குப் பிறகு கண்ணன் படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் ‌‌ஜீவா.

ஹீரோயின் வேட்டையில் தற்போது பிஸியாக இருக்கிறார் கண்ணன்.
மேலும் அறிய

> அ‌‌ஜீத் ர‌ஜினி பாதையில்?

சினிமாக்காரர்களை அவங்க தொழில் செய்ய அனுமதியுங்க என்று முதல்வர் முன்னால் புயல் கிளப்பிய அ‌ஜீத் பிறகு ரேஸ் ட்ராக்கில் புழுதி கிளப்பினார். எல்லாப் பத்தி‌ரிகைகளிலும் இப்போது தல புராணம்தான்.

இது ஒருபுறமிருக்க சத்தமில்லாமல் திருப்பதி, வேளாங்கண்ணி போன்ற ஆன்‌மீக‌த் தலங்களுக்கு சென்று வந்துள்ளார் அ‌‌ஜீத். என்னுடைய கவலை, மகிழ்ச்சி எல்லாவற்றையும் நான் கடவுளிடம்தான் ஷேர் செய்வேன் என்று இதற்கு விளக்கமும் அளித்துள்ளார்.

மேலும் ர‌ஜினியின் பேவரைட் ஆன்‌மீக தலங்களான ‌ரிஷிகேஷ், ஹ‌ரித்வார், ஹிமாலயாஸ் என்று போகவும் அ‌ஜித்துக்கு ஐடியா இருக்கிறது.

ர‌ஜினி பாதை நல்ல பாதை, பாபா மாதி‌ரி படம் எடுக்காதவரை.
மேலும் அறிய

> இணையத்துக்கு வரும் கமல்

கமல்ஹாசன் நடத்தி வந்த மய்யம் பத்தி‌ரிகை விரைவில் இணையத்தில் வெளிவரவுள்ளது. இதற்கான வேலைகளில் எழுத்தாளரும், உன்னைப்போல் ஒருவன் வசனகர்த்தாவுமான இரா.முருகன் ஈடுபட்டுள்ளார்.

வழக்கமான ரசிகர்மன்ற பத்தி‌ரிகையைப் போல் அல்லாமல் இலக்கியத்தரம் வாய்ந்த பத்தி‌ரிகையாக மய்யம் பத்தி‌ரிகையை கமல் வடிவமைத்திருந்தார். ஜெயகாந்தன் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களின் கதைகள், பேட்டிகள் மய்யத்தில் இடம்பெற்றுள்ளன. சில நடைமுறை சிக்கல்களால் மய்யம் பல வருடங்களாக வெளியாகவில்லை.

அதனை இணையத்தில் கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறார் கமல். அதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை ஏற்றிருப்பவர் இரா.முருகன். தனது ப்ளாக்கில் இந்தத் தகவல்களை அவர் தெ‌ரிவித்துள்ளார்.
மேலும் அறிய

> அ‌ஜீத் முதல்வரை சந்திக்கிறார்

இன்று காலை முதல்வர் கருணாநிதியை ர‌‌ஜினிகாந்த் சந்தித்தார். தனது மகள் திருமண நிச்சயதார்த்தத்துக்கு முதல்வர் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டதற்கு நன்றி தெ‌ரிவிக்க முதல்வரை சந்தித்ததாக ர‌‌ஜினி பத்தி‌ரிகையாளர்களிடம் தெ‌ரிவித்தார்.

ர‌‌‌ஜினியைத் தொடர்ந்து அ‌ஜீத்தும் இன்று முதல்வரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ம‌ரியாதை நிமித்தமான சந்திப்பு என்றாலும், சமீபத்தில் முதல்வ‌ரின் முன்னிலையில் அ‌ஜீத் கூறிய கருத்துகள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதால், அதுபற்றி முதல்வ‌ரிடம் விளக்கம் அளிக்கவே அவர் முதல்வரை சந்திக்கயிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்புக்குப் பிறகு சர்ச்சைகள் கட்டுக்குள் வரும் என்று நம்புவோம்.
மேலும் அறிய

Thursday, February 18, 2010

> GOOGLE LABS புதிய வசதிகள்

கூகுள் சர்ச் தேடல் பகுதிகளில் ஏதேனும் புதுமையான அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, வசதிகள் தரப்பட்டால், உடனே அதனை அறிந்து கொண்டு பயன்படுத்துகிறோம். கூகுள் தன் பிரிவுகள் அனைத்திலும் அதே போல புதிய அம்சங்களை அறிமுகப் படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. கூகுள் லேப்ஸ் பிரிவில் அறிமுகப்படுத் தியுள்ள சில அம்சங்களை இங்கு காண்போம்.

ஜிமெயிலில் செட்டிங்ஸ் (Settings) பிரிவில் லேப்ஸ் (Labs) என்பதில் கிளிக் செய்தால் இவற்றைப் பார்க்கலாம்.Google Search ஜிமெயிலில் நீங்கள் இருக்கையில், ஏதேனும் ஒன்றை கூகுள் சர்ச் இஞ்சினில் தேட வேண்டும் என்றால், உடனே வெளியேறி, அல்லது அடுத்த டேப்பில் கூகுள் சர்ச் தளத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. கூகுள் மெயிலில் இருந்தவாறே தேட வசதி தரப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி வழக்கமான தேடல் இஞ்சினில் உள்ளது போல டிக்ஷனரி விளக்கம்,ஸ்பெல் செக், கால்குலேட்டர், சீதோஷ்ண நிலை அறிதல், செய்திகள் என அனைத்து வசதிகளும் தரப்பட்டுள்ளன.

Undo Send

இந்த வசதி மூலம், Send பட்டனில் கிளிக் செய்து அனுப்பிய மெயிலை சில நொடிகளில் திரும்பப் பெறலாம்.

Snake

கூகுள் தளத்தில் இருக்கையில்,சிறிய பெர்சனல் பிரேக் எடுக்க வேண்டும் என்றால், விளையாட்டு ஒன்றை விளையாடலாம். Old Snakey என்னும் விளையாட்டினை முதலில் இயக்கிக் கொள்ளுங்கள். பின் ஜிமெயில் செட்டிங்ஸ் சென்று ஷார்ட் கட் கீ இயக்கத்திற்கு உயிர் (Enable) கொடுங்கள். அதன் பின் ஷார்ட் கட் கீயாக - கீயை அழுத்தினால் பிரபலமான ஸ்நேக் விளையாட்டு கிடைக்கும்.

Attachment Detector

அட்டாச்மென்ட் இணைப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டுவிட்டு, பின் அதனை இணைக்காமலேயே மெயிலை நாம் பல முறை அனுப்பி விடுகிறோம். பின்னர் தவறை உணர்ந்து மீண்டும் ஒரு முறை அந்த மெயிலை அட்டாச்மெண்ட் பைலுடன் அனுப்புகிறோம். இந்த தவறைக் கண்டறியும் வசதியாக, அட்டாச்மென்ட் டிடெக்டர் (Attachment Detector) உள்ளது. இதனை இயக்கி விட்டால், அது நாம் தயாரிக்கும் இமெயிலை ஸ்கேன் செய்கிறது. அதில் அட்டாச் செய்வதாக செய்தி இருந்தால், பைல் அட்டாச் செய்யப்படுகிறதா என்று கண்காணித்து, இல்லை எனில் நம்மை உஷார்படுத்துகிறது.

Hide Unread Counts

நமக்கு வந்த பல மெயில்களை நாம் வெகுநாட்கள் திறக்காமல் வைத்திருப்போம். இது தலைப்பில் இத்தனை மெயில்கள் படிக்கப்படாமல் உள்ளன என்று காட்டப்பட்டு நம் மானத்தினை வாங்கும். இந்த செய்தி வராமல் இருக்க இந்த டூல் உதவுகிறது.

Vacation Time

வெளியூர் செல்கிறீர்களா? அப்படியானால் உங்கள் இன்பாக்ஸில் வந்து சேரும் மெயில்களுக்கு யார் பதில் சொல்வது. இங்கு தான் Vacation Time என்ற வசதி பயன்தருகிறது. இதனை இயக்கி எந்த நாள் முதல் எந்த நாள் வரை என தேதிகளை வரையறை செய்தால், மெயில் வந்தவுடன், அதனை அனுப்பியவருக்கு, நீங்கள் விடுமுறையில் உள்ளதாகவும், குறிப்பிட்ட இந்த நாளில் வருவீர்கள் என்றும் செய்தி மின்னஞ்சலாகத் தானாகச் செல்லும்.

You Tube Preview

உங்களுக்கு வந்த மின்னஞ்சலில், அதனை அனுப்பியவர் யு ட்யூப் தளத்தில் உள்ள வீடியோ ஒன்றுக்கு லிங்க் அனுப்பி இருந்தால், அது என்ன என்று அறியாமல், புதிய டேப்பில் அதனை இயக்க வேண்டியதில்லை. இந்த வசதி மூலம், மெயிலிலேயே அந்த வீடியோவின் பிரிவியூ ஒன்றைக் காணலாம்.

Insert இமேஜ்

இந்த வசதி மூலம் இமேஜ் ஒன்றை இமெயிலில் இணைக்கலாம். அப்படியே அனுப்பலாம்.

எழுதியவர் : KarthiK
மேலும் அறிய

> பிரபுவின் ஆசை ?

படம் சுமார் என்று ‌ரிசல்ட் வந்த பிறகும் படத்தின் கலெ‌க்சன் நன்றாகவே இருக்கிறது. அசலைப் பற்றிதான் சொல்கிறோம். அ‌ஜீத் அளவுக்கு ஓபனிங் உள்ள இளம் நடிகர் யாருமில்லை என்பதை அசல் மீண்டும் நிரூபித்திருக்கிறது.

அசலை தயா‌ரித்த பிரபு மீண்டும் அ‌ஜீத்தை வைத்து படம் தயா‌ரிக்கும் தனது ஆசையை வெளியிட்டிருக்கிறார். தொந்தரவு தராதது, படத்தில் காட்டும் ஈடுபாடு இவைதான் பிரபுவிடம் இப்படியொரு ஆசையை விதைத்திருக்கிறது.

அ‌ஜீத்தின் ஐம்பதாவது படத்தை ரெட்ஜெயண்ட் மூவிஸ் தயா‌ரிக்கிறது. கௌதம் படத்தை இயக்குகிறார். சரணின் அசிஸ்டெண்ட் கார்த்திக்கிடம் அ‌ஜீத் கதை கேட்டிருக்கிறார். இவரே அ‌ஜீத்தின் ஐம்பத்தியொன்றாவது படத்தின் இயக்குனராக இருப்பார் என்கிறார்கள். அனேகமாக இந்தப் படத்தை சிவா‌ஜி பிலிம்ஸ் தயா‌ரிக்கலாம்.
மேலும் அறிய

> பிரபுதேவாவின் சர்வதேச நடனப்பள்ளி

சர்வதேச நடனப் பள்ளியை தொடங்குகிறார் பிரபுதேவா. இதற்கான பூர்வாங்க வேலைகள் அனைத்தும் வேகமாக நடந்து வருகின்றன.

நடனப் பள்ளி அமைக்க வேண்டும் என்பது பிரபுதேவாவின் நீண்டநாள் கனவு. அதற்கான நேரம் இப்போது தகைந்திருக்கிறது. தனது நடனப் பள்ளிக்கு நவரசா என்று பெயர் வைத்திருக்கிறார் பிரபுதேவா.

பெங்களூரு, மலேசியா, கல்போர்னியா ஆகிய இடங்களில் முதல்கட்டமாக பள்ளிகள் தொடங்க திட்டமிட்டிருக்கிறார். அனைத்து வகை நடனங்களும் கற்றுத்தரப்படும் பள்ளியாக இவை இருக்கும் என்கிறார்கள்.
மேலும் அறிய

> கார்த்தியின் மொழியார்வம்

தெலுங்குப் படித்து வருகிறார் கார்த்தி. நேரடித் தெலுங்குப் படங்களில் நடிக்கப் போகிறாரா? இப்போதைக்கு அப்படி எந்த திட்டமும் இல்லை. பிறகு?

தெலுங்கில் ஆயிரத்தில் ஒருவனை யுகனிக்கி ஒக்கடு என்ற பெய‌ரில் வெளியிட்டார்கள். ஒரே வாரத்தில் ஆந்திரா முழுவதும் 1.78 கோடிகளை படம் வசூலித்தது. இந்த வரவேற்பை எதிர்பார்க்காதவர்கள் ஆந்திராவுக்கே சென்று படத்தை புரமோட் செய்திருக்கிறார்கள். தமிழில் விமர்சனத்தை மட்டுமே எதிர்கொண்டவர்களை இந்த மெகா கலெ‌‌க்சன் ஆற்றுப்படுத்தியிருக்கிறது.

அதனைத் தொடர்ந்து கார்த்தியின் பருத்தி வீரனையும் தெலுங்கில் டப் பண்ணும் வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது. படத்தின் பெயரையும் தேர்வு செய்திருக்கிறார்கள். ப‌ல்ந‌ட்டி ‌வீருடு.

இந்தப் படத்துக்கு சொந்தக் குரலில் டப்பிங் பேசுவதற்காக‌த்தான் தெலுங்கு கற்று வருகிறார் கார்த்தி. இதற்குப் பெயர்தான் ஈடுபாடு.
மேலும் அறிய

Wednesday, February 17, 2010

> மீனவனாக கார்த்தி

பையா படத்தின் ‌ரிலீஸுக்காக காத்திருக்கிறார் கார்த்தி. முதலிரண்டு படங்களிலும் அழுக்குமூட்டையாக நடித்தவர் பையாவில்தான் தனது ஒ‌ரி‌ஜினல் அழகுடன் திரையில் தோன்றுகிறார்.

தற்போது சுரேந்திரன் இயக்கும் நான் மகான் அல்ல படத்தில் நடித்து வருகிறவர் அடுத்து வெற்றிமாறன் இயக்கும் வட சென்னை படத்தில் நடிக்கிறார். பொல்லாதவனுக்குப் பிறகு சென்னையை மையமாக வைத்து வெற்றிமாறன் இயக்கும் படம் இது.

வட சென்னையில் மீனவ இளைஞனாக கார்த்திக்கு முற்றிலும் வித்தியாசமான வேடம். மீனவர்களின் நல்வாழ்வுக்காக போராடும் முற்போக்கு கதாபாத்திரம் என்று பீதியடைய வேண்டாம். கேரக்டர் மீனவர் என்றாலும் இதுவும் மாஃபியா சம்பந்தப்பட்ட கதைதான்.

சுறா படத்தில் விஜய்யும் மீனவனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் அறிய

> சீனா செல்ல ‌‌ஜீவாவுக்கு விசா மறுப்பு

கோ படத்துக்காக சீனா செல்ல ‌‌ஜீவாவுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறை விண்ணப்பித்தும் விசா கிடைக்கவில்லை. இதனால் அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் இருக்கிறது கோ யூனிட்.

உலகம் முழுவதும் தீவிரவாதம் பரவியிருக்கும் நிலையில் முஸ்லீம்கள் மட்டும் அதி தீவிரமாக அனைத்து நாடுகளாலும் கண்காணிக்கப்படுகிறார்கள்.

அமெ‌ரிக்க விமான நிலையத்தில் ஷாருக்கான் தனது முஸ்லீம் பெயருக்காக பல மணிநேரம் விசாரணை செய்யப்பட்டார். அதேபோல் ஹாசன் என்ற பெயருக்காக கமல்ஹாசனும் பல மணி நேரம் விசாரணையை சந்திக்க வேண்டி வந்தது.

‌ஜீவா விஷயத்திலும் இதுதான் நடந்துள்ளது. ‌ஜீவாவின் நிஜப் பெயர் அமீர். இந்தப் பெய‌ரில்தான் அவரது பாஸ்போர்ட் உள்ளது. முஸ்லீம் பெயராக இருப்பதால்தான் அவருக்கு சீன தூதரகம் விசா மறுத்துள்ளது.

தீவிரவாதிகள் எல்லோரும் முஸ்லீம்கள் என்று சித்த‌ரிக்கும் போக்கு தமிழ் சினிமாவில் உள்ளது. இதில் டாக்டரேட் வாங்கியவர் விஜயகாந்த். சமீபத்தில் வெளியான தமிழ்ப் படத்திலும் கூட தீவிரவாதி என்று தாடி வைத்த முஸ்லீம் பாரம்ப‌ரிய உடை அணிந்தவரையே காட்டுகின்றனர்.

தமிழ் சினிமா விதைத்த வினைகளில் ஒன்றைதான் அறுவடை செய்திருக்கிறார் ‌ஜீவா.
மேலும் அறிய

> விடுமுறைக்கு காத்திருக்கும் பையா

பொங்கலுக்கு ஆயிரத்தில் ஒருவனுடன் மல்லுக்கு நின்றது லிங்குசாமியின் பையா. பையாவுக்கு பல வருடங்கள் முன்பே தொடங்கப்பட்ட படம் என்ற சீனியா‌ரிட்டி அடிப்படையில் பொங்கலுக்கு ஆயிரத்தில் ஒருவனுக்கு அனுமதி வழங்கினர். ஆயிரத்தில் ஒருவன் வெளியான பிறகு எப்போது வேண்டுமானாலும் பையாவை வெளியிடலாம். இது சங்கம் கொடுத்த தீர்ப்பு.

ஜனவ‌ரி இறுதியிலேயே பையா திரைக்கு வரும் என்றார்கள். பிறகு பிப்.19க்கு ‌ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. இப்போது அந்த‌த் தேதியிலும் படம் வெளியாகவில்லை. ஏன்?

ஐபிஎல் போட்டிகள், மாணவர்களுக்கு தேர்வு என்று பல நெருக்கடிகள் இருப்பதால் கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் லிங்குசாமி. இந்த நெருக்கடிகள் காரணமாக கோடை விடுமுறைக்கு ‌ரிலீஸ் தேதி தள்ளிப் போயிருக்கும் இன்னொரு படம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்.

ரசிகர்களுக்கு ஹாலிடே ட்‌ரீட் காத்திருக்கு.
மேலும் அறிய

> விக்ரம் படத்திலிருந்து விலகிய A.R.ரஹ்மான்

மோகன் நடராஜன் தயா‌ரிக்கும் படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருந்தார் விக்ரம். படத்தை இயக்குகிறவர் விக்ரம் கே.குமார். ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம், இசை ஏ.ஆர்.ரஹ்மான். படத்துக்கு 24 என்று பெயரும் வைத்தனர்.

இந்நிலையில் கதையில் விக்ரம் சொன்ன திருத்தங்களை விக்ரம் கே.குமார் ஏற்கவில்லை. இதனைத் தொடர்ந்து அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதில் பூபதி பாண்டியன் விக்ரமை இயக்குவார் என தயா‌ரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இயக்குனரை மாற்றியது ரஹ்மான், பி.சி.ஸ்ரீராம் இருவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. பூபதி பாண்டியனின் முந்தையப் படங்களை பார்த்திருக்க வேண்டும். இந்த புராஜெக்டில் பணிபு‌ரிய முடியாது என்று இருவரும் பை சொல்லியிருக்கிறார்கள்.

தற்போது ரஹ்மானுக்குப் பதில் மணிசர்மாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
மேலும் அறிய

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.