Thursday, December 31, 2009

> ஜெனிலியாவின் டார்லிங்

அழகான, திறமையான நடிகை. ஆனாலும் தமிழ் சினிமாவில் அவ்வப்போது காணாமல் போகிறவரும் ஜெனிலியாவாக‌த்தான் இருக்கும். சந்தோஷ் சுப்பிரமணியத்துக்குப் பிறகு ரசிகர்களை தவிக்கவிட்டவர் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார்.

ஜெனிலியா தெலுங்கில் நடித்த ரெடி படத்தை தமிழில் ‌ரிமேக் செய்வதும், தனுஷ் ஹீரோவாக நடிப்பதும் பலமுறை அரைத்த செய்தி. தமிழிலும் ஜெனிலியாதான் ஹீரோயின். ரெகமண்ட் செய்தவர் தனுஷ் என்கிறார்கள் டீப்பாக மோப்பம் பிடிப்பவர்கள்.

தமிழ், தெலுங்கைவிட இந்தியில் நடிப்பதை‌த்தான் ஜெனிலியா அதிகம் விரும்புகிறார். இது உண்மையா என்று யாரேனும் கேட்டால் மற்ற நடிகைகளைப் போல, இது திட்டமிட்ட வதந்தி என்றெல்லாம் பின்வாங்குவதில்லை. திடமாக உண்மைதான் என்கிறார் இந்த பாய்ஸ் ஹீரோயின்.

இந்தி நடிகர் ‌ரித்தீஷ் தேஷ்முக்கை பல்வேறு பிரச்சனைகளுக்குப் பின்னும் ஆழமாக காதலிக்கிறாராம் ஜெனிலியா. தென்னகம் வந்தால் அவருடன் போனில்தான் பேச முடியும். இந்திப் படத்தில் நடித்தால் முகம் பார்த்தே பேசலாம். ஜெனிலியா தமிழ், தெலுங்கில் அதிக ஆர்வம் காட்டாததற்கு இதுதான் காரணமாம்.

பேசாமல் கல்யாணம் பண்ணிக்கலாமே?

> சிம்புவின் புதிய ஜோடி

சொந்தப் படம் என்றால்தான் மும்பையிலிருந்து விதவிதமாக நடிகைகளை இறக்குமதி செய்வார் சிம்பு. இயக்குவது வெயிட்டான ஆள் என்றால் கை காட்டும் நடிகையுடன் வாய் பேசாமல் டூயட் பாடுவார், தலை‌யீடு என்பதே கிடையாது.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்துக்கு கோ என்று பெயர் வைத்துள்ளனர். கோ என்றால் மன்னனா? இல்லை பசுவா? என்று சீ‌ரியஸாக ஒருபக்கம் பட்டிமன்றம் போய்க் கொண்டிருக்கிறது. இன்னொருபுறம் ஹா‌ரிஸுடன் கம்போஸிங்கில் உட்கார்ந்திருக்கிறார் கே.வி.ஆனந்த்.

இந்தப் படத்தில் சிம்புவுடன் ஜோடி சேரப் போகிறவர், தமன்னா. கே.வி.ஆனந்தின் முந்தையப் படம் அயனிலும் தமன்னாதான் ஹீரோயின்.

ஆ‌க்சன், காதல் கலந்து இந்த கதையை எழுத்தாளர்கள் சுபாவுடன் இணைந்து உருவாக்கியிருக்கிறார் கே.வி.ஆனந்த்.

> சிம்பு, த்‌ரிஷா படம் பிப்ரவ‌ரியில்

காதலர் தின ஸ்பெஷலாக காதலர் தினத்துக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே வெளியாகிறது, விண்ணைத்தாண்டி வருவாயா.

கௌதம் வாசுதேவ மேனன் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஹாரிஸ் ஜெயராஜுக்குப் பதிலாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பது, எதிர்பார்ப்பு மீட்டரை அதிக‌ரித்திருக்கிறது.

சிம்பு இதில் உதவி இயக்குனராக நடித்திருக்கிறார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை நியூயார்க்கில் எடுத்திருக்கிறார்கள். லண்டனை தொடர்ந்து சென்னையிலும் படத்தின் பாடல்களை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

காதலர் தின ஸ்பெஷலாக பிப்ரவ‌ரி 12 ஆம் தேதி படத்தை வெளியிடுகிறார்கள். காதல் பிளஸ் மியூசிக்கல் ட்‌ரீட்... இளைஞர்களுக்கு கொண்டாட்டம்தான்.

Wednesday, December 30, 2009

> கௌதமி இயக்கம் கமல் கதை

நடிப்பைத் தாண்டி யோசித்து வருகிறார் கௌதமி. படம் இயக்க வேண்டும் என்பதே அவரது பிரதான விருப்பம். அவரது விருப்பத்துக்கு உருவம் கொடுக்க முன்வந்திருக்கிறார் கமல்.

ஆம், கமல் கதை எழுதும் படத்தை கௌதமி இயக்குகிறார். இது திடீரென எடுத்த முடிவு இல்லையாம். நெடுநாளாக ஆலோசித்து எடுத்த முடிவாம்.

பாலசந்தரை ஹீரோவாக்கி ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்பது கமலின் நீண்டநாள் ஆசை. அதற்காக ஒரு கதையும் தயார் செய்து வைத்திருந்தார்.

ரெட்டச்சுழி படத்துக்குப் பிறகு சொந்த பேன‌ரின் முறியடி படத்தில் நடிப்பவர், கமலின் வேண்டுகோளை ஏற்று அவரது கதையிலும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தைதான் கௌதமி இயக்குகிறார். படத்துக்கு இசை ஸ்ருதிஹாசன்.

குடும்பப் படம்?

> விஜய்க்கு கதை சொல்லும் சமுத்திரக்கனி

தெலுங்கு நாடோடிகள் முடிந்துவிட்டது. அடுத்து சசிகுமார் இயக்கும் புதிய படத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார். அத்துடன் கன்னடத்தில் நாடோடிகளை தனது அசிஸ்டெண்டை வைத்து இயக்கும் வேலையையும் தொடங்கியிருக்கிறார்.

இதுவரை சின்னச் சின்ன நடிகர்களை வைத்து படம் இயக்கிய சமுத்திரக்கனி (ஒரே முறை விஜயகாந்தையும் இயக்கியிருக்கிறார்) தனது பார்வையை மாஸ் ஹீரோக்களின் பக்கம் திருப்பியிருக்கிறார். முக்கியமாக விஜய்க்கு கதை சொல்லப் போகிறாராம்.

ச‌ரித்திரப் பின்னணியில் ஒரு அதிரடி கதையை தயார் செய்து வைத்திருக்கிறார் சமுத்திரக்கனி. அந்தக் கதையைதான் விஜய்யிடம் சொல்லப் போகிறாராம்.

ஏற்கனவே லிங்குசாமி விஜய்யிடம் கதை சொல்லி கால்ஷீட் வாங்கி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

> அசல் பிப்ரவ‌ரியில்

அ‌ஜித்தின் 49வது படம், அசல். காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் என மூன்று வெற்றிகளை கொடுத்த சரண் - அ‌ஜித் - பரத்வா‌ஜின் காம்பினேஷன் என்பதால் அசலும் வெற்றி பெறும் என கடைகோடி ரசிகர்களே நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

பணத்தை தண்ணீராக செலவ‌ழித்து சிவா‌ஜி பிலிம்ஸ் அசலை தயா‌ரித்திருப்பது இன்னொரு பிளஸ் பாயிண்ட்.

பொங்கலுக்கு அசல் வெளியாகும் என அனைவரும் நம்பிக்கையுடன் இருந்தனர். சில நடைமுறை சிக்கல்களால் அந்த நம்பிக்கை நமத்து‌ப் போயுள்ளது. பிப்ரவ‌ரியில்தான் படம் திரைக்கு வருகிறதாம்.

அ‌ஜித், சமீரா ரெட்டி, பாவனா நடித்திருக்கும் அசலை பிப்ரவ‌ரி 5ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். கமர்ஷியல் படங்களை வலைவீசி பிடிக்கும் சேனல் வருந்தி கேட்டும் அவர்களுக்கு படத்தை கொடுக்காமல் சொந்தமாக ‌ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள் பிரபுவும், ராம்குமாரும்.

படம் தப்பு செய்யாது என்ற நம்பிக்கைதான் இதற்கு காரணம்.

> வேட்டைக்காரன் முதலிடம் - பாக்ஸ் ஆஃபிஸ்

பத்து தினங்களில் இரண்டு கோடியை தாண்டியிருக்கிறது வேட்டைக்காரன். சென்ற வாரம் வெளியான ஓடிப்போலாமா வசூல் எதிர்பார்த்ததைவிட மிகக் குறைவு என்பது கவலைதரும் செய்தி.

5. ரேனிகுண்டா
மூன்று வாரங்கள் முடிவில் 70 லட்சங்களை மட்டுமே ரேனிகுண்டா வசூலித்துள்ளது. பத்தி‌ரிகைகள் படத்தின் தரத்தை மாய்ந்து மாய்ந்து பாராட்டியும் ரசிகர்கள் கண்டுகொள்ளாதது, வித்தியாசமான முயற்சிகளுக்கு விடப்பட்ட சவால் என்றே சொல்ல வேண்டும். இதன் சென்றவார இறுதி மூன்று நாள் வசூல் 1.34 லட்சங்கள்.

4. பலம்
சிட்டிக்கு வெளியே முன்பே வெளியான இந்தப் படம் முதல் மூன்று தினங்களில் 1.82 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. ஒரு வாரத்தை இந்தப் படம் தாக்குப் பிடிப்பதே கடினம் என்பதே உண்மை நிலவரம்.

3. ஓடிப்போலாமா
சந்தியா, ப‌ரிமள் நடித்திருக்கும் இப்படம் வெளியான முதல் மூன்று தினங்களில் 3.5 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. பொங்கலுக்கு புதிய படங்கள் வெளியாகும் நிலையில் போட்ட பணத்தை வசூலிக்குமா என்ற ஐயத்தை ஓடிப்போலாமா ஏற்படுத்தியுள்ளது.

2. கந்தகோட்டை
நகுலனின் ஸ்டார் வேல்யூ எப்படி என்பதை சோதித்தறிய சிறந்த படம், கந்தகோட்டை. சன் பிக்சர்ஸின் தயவில்லாமல் வெளியாகியிருக்கும் முதல் படம். என்றாலும் சன் அளவுக்கு கந்தகோட்டைக்கு விளம்பரங்கள் கொடுத்து அசத்தி வருகிறார் தயா‌ரிப்பாளர் கல்பாத்தி எஸ் அகோரம். இதன் ஒருவார வசூல் 34 லட்சங்கள். சென்ற வார இறுதி வசூல், 9.3 லட்சங்கள்.

1. வேட்டைக்காரன்
இந்த வருட்த்தில் மிக அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்பட்ட படம், வேட்டைக்காரன். சென்ற வார இறுதியில் 59.15 லட்சங்களை இப்படம் வசூலித்துள்ளது. இதன் பத்து நாள் வசூல் 2.10 கோடிகள்.

Tuesday, December 29, 2009

> தடுமாறும் கோவா

பொங்கலுக்கு படா படா படங்களெல்லாம் வெளியாவதாக கூறினார்கள். ஆனால் கடைசி நேரத்தில் வெள்ளித்திரையை காண இருப்பது ஒருசில படங்கள்தானாம்.

பொங்கலுக்கு அசல் வெளியாகவில்லை என்பது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளையும், வெங்கட்பிரபுவின் கோவாவும் இழுபறியில் உள்ளது.

கோவா ஆடியோ வெளியீட்டு விழாவே வரும் 4ஆம் தேதி தான் நடைபெற உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா பேமெண்ட் விஷயத்தில் கறாராக இருந்ததால்தான் இந்த தாமதம் என்கிறார்கள்.

இப்படி கோவா தடுமாறுவது போலவே தீராத விளையாட்டு பிள்ளை தயா‌ரிப்பாளருக்கும் இரு வேறு எண்ணங்கள். ஆயிரத்தில் ஒருவன், குட்டி என போட்டி பலமாக இருக்கும் போது நமது படத்தை வெளியிட்டு ‌ரிஸ்க் எடுப்பானேன் என்று யோசிக்கிறாராம். பொங்கல் ‌ரிசல்டைப் பார்த்து படத்தை வெளியிடலாம் என்ற முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.

போகி வரை பொங்கல் படங்களின் லிஸ்ட் மர்மமாகதான் இருக்கும் போல.

> சரத் மகள் பாலா படத்தில்?

இதுதான் தற்போது கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக். ‘பாலா படத்தில் சரத்குமா‌ரின் மகள் வரலட்சுமி நடிக்கிறாராம்.’

பாலாவின் புதிய படத்தில் விஷால், ஆர்யா நடிக்கிறார்கள். படத்தின் போட்டோசெஷன் ஏற்கனவே முடிந்துவிட்டது. விரைவில் படப்பிடிப்புக்கு கிளம்புகிறார் பாலா.

இந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில் சரத்குமா‌ரின் மகள் வரலட்சுமி நடிக்கிறாராம். சிம்பு நடிக்கயிருந்த போடா போடி படத்தில் வரலட்சுமி அறிமுகமாவதாக இருந்தது. கடைசியில் பார்த்தால், போடா போடி படமே ட்ராப்.

இந்நிலையில் பாலா படத்தில் வரலட்சுமி அறிமுகமாவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

என்றாலும், பாலா சொல்லும் வரை கேள்விக்குறியுடன்தான் இதுபற்றி பேச வேண்டியிருக்கிறது.

> அட்டகாச அவதார்

வெளியாகி சில நாட்களிலேயே யுஎஸ் ஆல் டைம் பாக்ஸ் ஆஃபிஸில் 84வது இடத்தைப் பிடித்திருக்கிறது அவதார். கிறிஸ்மஸ் வரை யுஎஸ்ஸில் இப்படம் வசூலித்திருப்பது 212 மில்லியன் அமெ‌ரிக்க டாலர்கள்.

இந்தியாவிலும் 2012 படத்தின் சாதனையை அவதார் முறியடித்திருக்கிறது. ஒரே வாரத்தில் 22 கோடிகளை இப்படம் வசூலித்துள்ளது. கிறிஸ்மஸுக்கு முதல் நாள் வரை இப்படம் இந்தியாவில் வசூலித்தது ஏறக்குறைய நாற்பது கோடிகளாம்.

பல பிராந்தியப் படங்களின் வசூலை மிகச் சாதாரணமாக முறியடித்திருக்கிறது ஜேம்ஸ் கேமரூனின் படம். உலக அளவில் கேமரூனின் டை‌‌டானிக் படம்தான் வசூலில் முதலிடத்தில் இருக்கிறது.

உலக அளவிலான பாக்ஸ் ஆஃபிஸில் தற்போது 125வது இடத்தில் இருக்கும் அவதார், டைட்டானிக் வசூலை முறியடிக்குமா என்பதே அனைவ‌ரின் எதிர்பார்ப்பு.

> பிரபாகரன் வேடத்தை மறுத்த சேரன்

அய்யனார் படத்தில் பிரபாகரன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஆதி. பி.எல்.தேனப்பனின் ராஜலட்சுமி பிலிம்ஸ் படத்தை தயா‌ரித்துள்ளது.

பிரபாகரனாக இருக்கும் ஆதியை ஊரே கொண்டாடுகிறது. ஆனால், அவரது குடும்பமோ வெறுத்து ஒதுக்குகிறது. இந்த வெறுப்புக்கு காரணம், பிரபாகரனான ஆதி அய்யனார் என்ற பெய‌ரில் செய்த கொலைகள். ஏன் ஆதி அய்யனார் என்ற பெய‌ரில் கொலை செய்தார்? அதற்கான காரணம் என்ன என்பது படத்தின் சஸ்பென்ஸ் பகுதி.

படத்தில் ஆறு பிரமாண்ட சண்டைகள் இடம் பெறுகிறது. இந்தப் படத்தில் ஆதி நடித்திருக்கும் பிரபாகரன் கேரக்டருக்காக இயக்குனர் ராஜமித்ரன் முதலில் அணுகியது சேரனை. கதையை கேட்டவர், இவ்வளவு பெ‌ரிய ஆ‌க்சன் கதைக்கு நான் சூட் ஆக மாட்டேன் என்று பிரபாகரன் கேரக்ட‌ரில் நடிக்க மறுத்திருக்கிறார். அதன் பிறகே ஆதியிடம் கதை சொல்லி கால்ஷீட் வாங்கியிருக்கிறார்கள்.

ஆ‌க்ச‌ன் கதை என்றாலும், வாலிபால் கோச்சாக இருக்கும் ஆதி, மீரா நந்தனுக்கு பயிற்சி கொடுப்பதும், அவருடன் காதல் கொள்வதுமான காட்சிகளை கவித்துவமாக எடுத்திருக்கிறார்களாம். காதல்னாலே கவித்துவம் வந்திடும்தானே.

> கவர்ச்சி கஸ்தூ‌ரி

கடந்த சில வாரங்களாக கோடம்பாக்கத்தில் நடக்கும் விழாக்களுக்கு டாணென்று ஆஜராகிவிடுகிறார் நடிகை கஸ்தூ‌ரி. விழா நாயகர்களை படம் பிடிக்கிறார்களோ இல்லையோ, கஸ்தூ‌ரியை வளைத்து வளைத்து படம் எடுக்கிறார்கள். காரணம் அவரது காஸ்ட்யூம்.

உடலின் முக்கியமான இடங்களை மறைப்பதற்கே திணறுகிறது கஸ்தூரி அணிந்து வரும் காஸ்ட்யூம்கள். ‌ரிட்டையர்ட் ஆக வேண்டிய வயதில் இதென்ன வம்பு என்று வாய் பிளக்காதவர்களே இல்லை. அந்த ஆச்ச‌ரியத்து விடை கிடைத்திருக்கிறது.

வேறொன்றுமில்லை, மீண்டும் படங்களில் நடிக்கிறார் கஸ்தூ‌ரி. துரை தயாநிதி தயா‌ரித்திருக்கும் தமிழ் படத்தில் கஸ்தூரிக்கு முக்கியமான வேடமாம். கவர்ச்சியான வேடம் என்று தனியாக கூற வேண்டியதில்லை.

ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட அனுபவம் கஸ்தூரிக்கு இருக்கிறது. மீண்டும் ஆடுவதற்கு கஸ்தூரி தயார். தயா‌ரிப்பாளர்கள்தான் கண்டு கொள்வதில்லையாம். அழகழகான பெண்கள் இருக்கையில் ஆ‌ண்ட்டிகளுக்கு வாய்ப்பு கொடுக்க முடியுமா?

Monday, December 28, 2009

> கோவா ஆடியோ ஜனவ‌ரி 4

சௌந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோவின் முதல் தயா‌ரிப்பான கோவா அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. அதற்கு முன்னோட்டமாக ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.

வெங்கட்பிரபு இயக்கியிருக்கும் கோவாவுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். வாலி, கங்கை அமரன் பாடல்கள்.

கோவா ஆடியோ உ‌ரிமையை லம்பாக ஒரு அமௌண்டுக்கு சோனி நிறுவனம் வாங்கியுள்ளது. அவர்கள்தான் ஆடியோவை வெளியிடுகிறார்கள். ஜனவ‌ரி மாதம் 4ஆ‌ம் தேதி கோவா ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

பிரபல தொலைக்காட்சியில் விழா லைவ்வாக ஒளிபரப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் ர‌ஜினிகாந்த்தும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

> தமிழ் கொஞ்சும் ஐஸ்வர்யா ராய்

ராவண் படத்தின் இறுதிகட்ட வேலைகளில் இருக்கிறார் மணிரத்னம். மார்ச் அல்லது ஏப்ரலில் படம் திரைக்கு வரும் என தயா‌ரிப்பாளர் தரப்பு அறிவித்துள்ளது.

தமிழ், இந்தி இரு மொழிகளில் தயாராகியிருக்கும் படத்தில் ஐஸ்வர்யா ராய் இரு மொழிகளிலும் ஹீரோயின். தமிழில் விக்ரம் ஹீரோ, இந்தியில் அபிஷேக் பச்சன்.

ராவண் தமிழ் பதிப்பில் ஐஸ்வர்யா ராய் தனது சொந்தக் குரலில் டப்பிங் பேச சம்மதித்திருக்கிறார். ஏற்கனவே இரு தமிழ்ப் படங்களில் நடித்ததாலும், இரு படங்களில் நடித்துக் கொண்டிருப்பதாலும் ஐஸுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெ‌ரியுமாம். மணிரத்னம் கேட்டதும் மறுக்காமல் ஓகே சொல்லியிருக்கிறார்.

கடைசி நிமிடத்தில் ஏதேனும் குளறுபடி நடந்தால் சந்தியா அல்லது ஐஸ்வர்யா தனுஷ் முன்னாள் உலக அழகிக்காக டப்பிங் பேசுவார்களாம்.

Sunday, December 27, 2009

> ஆயிரத்தில் ஒருவன் போட்டியில்லை – குட்டி இயக்குனர்

குரு - சிஷ்யன், அண்ணன் - தம்பி... இந்த இரண்டு காம்பினேஷனும் பொங்கலுக்கு எதிரெதிராக மல்லுக்கட்டுகிறது. வெற்றி யாருக்கு? பொங்கல் வரை பொறுத்திருப்போம்.

தனுஷ் நடித்திருக்கும் குட்டி பொங்கலுக்கு வெளியாகிறது. தெலுங்கில் வெளியான ஆ‌ரியா படத்தின் ‌‌ரீமேக் இது. இயக்கியிருப்பவர் யாரடி நீ மோகினி படத்தை இயக்கிய மித்ரன் ஆர் ஜவஹர்.

யாரடி நீ மோகினியும் தெலுங்கில் வெளியான ஆடவா‌ரி... படத்தின் ‌‌ரீமேக்தான். இந்தப் படத்தை தெலுங்கில் இயக்கியவர் செல்வராகவன். தமிழில் இந்தப் படத்தை ‌‌ரீமேக் செய்ய மித்ரனுக்கு வாய்ப்பு கிடைக்கக் காரணம், மித்ரன் செல்வராகவனின் அசிஸ்டெண்ட்.

குட்டி வெளியாகும் அதே நாள் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவனும் வெளியாகிறது. வெற்றி பெறப்போவது குருவா சிஷ்யனா? அண்ணனா தம்பியா?

குட்டி ஆடியோ வெளியீட்டு விழாவில் இதை ஒரு கேள்வியாகவே மித்ரனிடம் முன்வைத்தனர். ஆயிரத்தில் ஒருவனும், குட்டியும் வேறுவேறு என்றவர், நிச்சயமாக ஆயிரத்தில் ஒருவன் குட்டிக்கு போட்டியில்லை என்றார்.

ஜெமினி லேபில் நடந்த இந்த ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு மி‌த்ரன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் என சொற்ப பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

> தமிழ் படம் பிரஸ்மீட்

தயாநிதி அழகி‌ரியின் கிளவுட் நைன் தயா‌ரித்திருக்கும் படம், தமிழ் படம். விளம்பரப் படங்களை இயக்கிவந்த சி.எஸ்.அமுதன் படத்தை இயக்கியிருக்கிறார் மிர்ச்சி சிவா ஹீரோ.

க‌ல்லூரியில் படிக்கும் சிவாவின் நண்பர்கள் யாரென்றால் அதே கல்லூரியில் படிக்கும் எம்.எஸ்.பாஸ்கர், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோபாலா. இதிலிருந்தே படம் எப்படிப்பட்டது என்பதை பு‌ரிந்து கொள்ளலாம். தமிழ்ப் படங்களில் வரும் குளறுபடிகளை ஈவு இரக்கம் இல்லாமல் ரவுண்டுகட்டி கிண்டலடித்திருக்கிறார்கள்.

இதுபற்றி இயக்குன‌ரிடம் கேட்டதற்கு, “தமிழ் சினிமாவை கொண்டாடும் விதமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. எந்த நடிகரையும் இது புண்படுத்தாது. மாறாக எல்லோரையும் சி‌ரிக்க வைக்கும்” என்றார்.

படத்தை தயா‌ரித்திருக்கும் தயாநிதி அழகி‌ரி பேசுகையி‌ல், நடிக்கிற ஆர்வம் இல்லை, ஆனால் படம் இயக்குகிற விருப்பம் இருப்பதாக‌த் தெ‌ரிவித்தார்.

கண்ணன் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். வரும் ஜனவ‌ரியில் படம் திரைக்கு வருகிறது.

> சசிகுமார் - பெய‌ரில்லா படம்

படத்தை தொடங்குவதற்கு முன் படத்தின் பெயரை தேர்வு செய்வது மரபு. பெயரை அறிவித்துவிட்டுதான் படப்பிடிப்புக்கே கிளம்புவார்கள். மணிரத்னம் சற்று வித்தியாசம். பெயரையோ, நடிகரையோ முறைப்படி அறிவிப்பதில்லை. ஆனால் இந்த இரண்டும் எப்படியேனும் கசிந்து மீடியாவின் காதுகளுக்கு வந்துவிடும்.

சசிகுமார் இதிலிருந்தும் மாறுபட்டிருக்கிறார். முதல் படம் சுப்பிரமணியபுரத்தை இயக்கும்போது, படத்தின் பெயரை அறிவித்துவிட்டுதான் தொடங்கினார். ஆனால், இரண்டாவது படத்தை எந்த அறிவிப்பும் இல்லாமல் தொடங்கியிருக்கிறார். இந்த புதிய படத்தை விக்ரமின் ‌‌ரீல் லைஃப் என்டர்டெயின்மெண்ட் தயா‌ரிக்கிறது.

சென்னையை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் ஹீரோ என்று யாரும் இல்லை. முக்கியமான வேடத்தில் ஏ.எல்.அழகப்பன் நடிக்கிறார். இன்னொரு முக்கியமான வேடம் சமுத்திரக்கனிக்கு. இவர்கள் தவிர மேலும் எட்டு கதாபாத்திரங்கள் இருக்கிறது.

பட வேலைகளை ஏற்கனவே தொடங்கிவிட்டார் சசிகுமார். படப்பிப்பு முடிந்த பிறகே படத்துக்கு பெயர் வைப்பது என்பது அவரது முடிவாம். ஆக, பெய‌ரில்லாமலே தயாராகி வருகிறது சசியின் புதிய படம்.

> சர்வதேச திரைப்பட விருதுகள் சென்னை

ஐசிஏஎஃப் ஒவ்வொரு வருடமும் சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. பத்து தினங்கள் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு நாட்டு திரைப்படங்கள் கலந்து கொள்ளும்.

இந்தமுறை சிறந்த தமிழ் திரைப்படத்துக்கு விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி விருது நடுவர் குழு விருதுக்கு தேர்வான படங்களை அறிவித்தது.

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையை மையப்படுத்தி வெளிவந்த அருண் வைத்யநாதனின் அச்சமுண்டு அச்சமுண்டு படம் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை வென்றது. இரண்டாவது இடத்தை பாண்டிரா‌ஜின் பசங்க கைப்பற்றியது.

பொக்கிஷம் படத்திற்காக ஒளிப்பதிவாளர் ரஜேஷ் யாதவ் சிறப்பு நடுவர் விருதை பெற்றார். அடுத்த வருடமும் இந்த விருதுகள் அளிக்கப்படும் என்றனர் ஐசிஏஎஃப் நிர்வாகிகள்.

Saturday, December 26, 2009

> அ‌ஜித்துக்கு எதி‌ரிகளில்லை

ஆளுக்கு தகுந்தபடி பாடல் எழுதுவதில் கவிப்பேரரசு வைரமுத்து திறமையானவர். சூழலுக்கு ஏற்பவும் அற்புதமாக எழுதுவார்.

விஜய், அ‌ஜித் மோதல் உச்சத்தில் இருந்தபோது அ‌ஜித்துக்கு இப்படி எழுதினார். “இமயத்தில் என் கொடி பறந்தால் உனக்கென்ன, எனக்கொரு நண்பனாக இருக்கவும் உனக்கு தகுதியில்லை...”

மோதி விளையாடு படத்தில் சரணின் எதி‌ரிகளை மனதில் வைத்து, உன்னை எதிர்ப்பவன் நிர்வாணமாக நிற்பான் என்று எழுதினார். இதை மேடையில் கவிப்பேரரசே தெ‌ரிவித்தார்.

அசல் படத்துக்கும் கவிப்பேரரசுதான் பாடல். சமீபத்தில் இவரது பாடல் ஒன்றை ஏவிஎம்-மில் படமாக்கினர். அ‌ஜித்துடன் ஆடியவர் பாவனா. பாடல் இப்படி தொடங்குகிறது.

அதி‌ரி புதி‌ரி பண்ணிக்கடா
எதி‌ரி உனக்கு இல்லைடா...

பாடல் நெடுக தல-யின் புகழை கவிப்பேரரசு வார்த்தையாக்கியிருக்கிறார். பிரமாண்ட அரங்கில் அதைவிட பிரமாண்டமாக எடுத்திருக்கிறார் சரண்.

இரண்டு வ‌ரிகளிலேயே பாடல் பட்டையை கிளப்பும் என்பதை யூகித்துவிடலாம்.

> மீண்டும் நடிக்கிறார் பாலசந்தர்

ரெட்டச்சுழி படத்தில் நடித்த பாலசந்தர் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை அவரது கவிதாலயா நிறுவனமே தயா‌ரிக்கிறது.

பாலசந்தர் நடித்திருக்கும் ரெட்டச்சுழி படத்தை அவரது சீடன் தாமிரா இயக்கியிருக்கிறார். பாலசந்தர் ரெட்டச்சுழியில் நடித்ததற்கு இதுவும் ஒரு காரணம்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து செல்வா இயக்கும் முறியடி படத்திலும் முக்கிய வேடமேற்கிறார் கே.பி. இதுவொரு ‌‌‌ரீமேக். மலையாளத்தில் வெளிவந்த பாச‌ஞ்சர் படத்தையே தமிழில் முறியடி என்ற பெய‌ரில் எடுக்கிறார்கள்.

திலீப் நடித்த வேடத்தில் கணேஷ் வெங்கட்ராமனும், சீனிவாசன் நடித்த வேடத்தில் சீனியர் நடிகர் ஒருவரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில்தான் பாலசந்தரும் நடிக்கிறார்.

தற்போது நூற்றுக்கு நூறு படத்தை செல்வா ‌‌ரீமேக் செய்து வருகிறார்.

> விண்ணைத்தாண்டி வருவாயா - இரண்டாவது விழா

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இரண்டு பாடல்களை ஒளிபரப்புவார்கள், பார்த்து ரசிக்கலாம் என்று காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம்.

சைலண்டாக ஆடியோவை லண்டனில் வெளியிட்டிருக்கிறார் கௌதம். ரஹ்மான் லண்டனில் இருந்ததாலும், ரஹ்மான் நம்மாள் என்று லண்டன்வாசிகளும் தெ‌ரிந்து கொள்ளட்டும் என்பதற்காகவும் லண்டனில் விழாவை நடத்தியிருக்கிறார்.

ஆனாலும் ஏமாற்றம் ஏமாற்றம்தானே.

ஊள்ளூர்காரர்களின் எண்ணத்தை மதித்து ஆடியோ விழாவை ஒன்ஸ்மோர் நடத்த முன்வந்திருக்கிறார் கௌதம். ஆம், விரைவில் சென்னையிலும் ஆடியோவை வெளியிடுகிறார்களாம், அட்டகாசமான விழாவுடன்.

தற்போது அறிவிப்பு மட்டுமே வந்திருக்கிறது. இடமும், தேதியும் பிறகு அறிவிக்கப்படுமாம்.

Friday, December 25, 2009

> COMPUTER CRASH ஆவது எதனால்?

சில வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும்.

சில வேளைகளில் திரையில Fatal error: the system has become unstable or is busy," it says. "Enter to return to Windows or press ControlAltDelete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications." என்ற செய்தி கிடைக்கும்.

இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.

ஹார்ட்வேர் பிரச்னை

கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்னை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டரில் இத்தகைய வழிகள் குறைந்த பட்சம் 16 இருக்கும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு / மவுஸ்) எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்று போகும். இவ்வாறு ஏற்படுகையில் Start => Settings => Control pannel => System => Device Manager எனச் சென்று பார்த்தால், பிரச்னை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ.ஆர்.க்யூ எண் காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்னை அங்குதான் உள்ளது என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்னைக்குரிய சாதனத்தை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும்.

ரம் மெமரி சிப்ஸ்

ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்போம். ஆனால் ஒன்றுக்கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாத போது Fatal Exception Error ஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் wait state நிலையைச் சற்று உயர்த்தலாம். அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை அமைக்கலாம்.

ஹார்ட் டிஸ்க் டிரைவ்

பயன்படுத்தத் தொடங்கிய சில வாரங்களில் ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு டிபிராக் செய்திட வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்கள் கொண்டு நீக்கலாம்.

வீடியோ கார்ட்

சில வேளைகளில் கிராஷ் ஆகும் போது Fatal OE exceptions and VXD errors என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனைத் தவிர்க்க வீடியோ டிஸ்பிளேயின் ரெசல்யூசனைக் குறைக்கவும். StartSettingsControl PanelDisplaySettings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது மூலையில் நிறுத்தவும். அதே போல கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில் அமைக்கவும்.

வைரஸ்

பெரும்பாலான கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி, அவ்வப்போது அதனை அப்டேட் செய்வது மட்டுமே இதனைத் தடுக்கும். பல வைரஸ்கள் பூட் செக்டாரைக் கெடுத்து வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. எனவே இது போன்ற நிலையில் கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை உருவாக்கி கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.

பிரிண்டர்

பல வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதற்குக் காரணம் பிரிண்டர்களில் மிகவும் குறைந்த அளவில் பபர் மெமரி இருப்பதே ஆகும். மேலும் கம்ப்யூட்டரின் சிபியு சக்தியை பிரிண்டர்கள் சற்று அதிகமாகவே பயன்படுத்தும். எனவே பல வேலைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவில் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாகக் காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்னை தலை தூக்குகிறது என்று பொருள். உடனே பிரிண்டருக்குச் செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு நிறுத்திப் பின் மீண்டும் இயக்கவும்.

சாப்ட்வேர்

முழுமையாக இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம். இவற்றைச் சரியாக அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர்பான வரிகள், ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு, இந்த சாப்ட்வேரினை இயக்குகையில் கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்குக் கொண்டுவரலாம். ரெஜிஸ்ட்ரியைச் சுத்தம் செய்திடவென வடிவமைக்கப்பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேல் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.

அதிக வெப்பம்

இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப் படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப்பட்டாலும், கெர்னல் எர்ரர் (Kernel Error) என்று ஒரு பிரச்னை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனைக் காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கும் வகையில், சிபியு செட் செய்யப்பட்டிருந்தாலும் அதிக வெப்ப பிரச்னை ஏற்படும். எனவே சிபியு வின் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும்.

மின் ஓட்டம்

கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் ஓட்டத்தினைச் சீராகத் தரும் சாதனங்களைக் கொண்டு தராவிட்டால், கிராஷ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே சரியான யு.பி.எஸ். மற்றும் சர்ஜ் புரடக்டர் கொண்டு இதனைத் தவிர்க்கவும்.


எழுதியவர் : கார்த்திக்

> பிபாசாவின் நியூ இயர் ஆட்டம்

புது வருடத்தை கொண்டாட இப்போதே தயாராகி வருகின்றன மும்பை நட்சத்திர விடுதிகள். நட்சத்திரங்களைப் பொறுத்தவரை இது அறுவடைக்கான நாள். ஒரு பாடலுக்கு ஆடினாலே கோடிகளில் காசு பார்க்கலாம்.

சென்ற வருடம் பிபாசா பாசுவின் நடனத்துக்குதான் மவுசு. சஹாரா ஸ்டார் நட்சத்திர விடுதியில் நடனமாட இவர் வாங்கியது ஒன்றரை கோடி ரூபாய். கோடியில் கொடுத்தாலும் பிபாசாவுக்கு இது தகுந்த சம்பளம்தான் என்று கருதுகிறது சஹாரா நிர்வாகம்.

இந்த வருடமும் சஹாராவின் புது வருட கொண்டாட்டத்தின் சென்டர் ஆஃப் அட்ரா‌க்சன் பிபாசா பாசுதான். ஹோட்டல் நிர்வாகம் ஊரை‌க் கூட்டி இதனை உறுதி செய்திருக்கிறது. பிபாசாவுடன் வேறு சிலரும் நடனமாட இருக்கிறார்கள்.

இந்தமுறை பிபாசாவுக்கு இரண்டு கோடி ரூபாய் சன்மானமாக அளிக்கப்பட இருக்கிறது. அவர் எந்தப் பாடலுக்கு நடனமாட இருக்கிறார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லையாம். முடிவு செய்தாலும் இறுதிவரை அது ரகசியமாக பாதுகாக்கப்படுமாம்.

பாட்டுதான் ரகசியம், உடை எல்லாம் பகிரங்கமாக‌த்தான் இருக்கும்.

Thursday, December 24, 2009

> TOYOTA கிர்லோஸ்கர்: பிராடோ டீசல் கார் அறிமுகம்

டயோடா கிர்​லோஸ்​கர் நிறுவனம் பிராடோ ரக நவீன புதிய டீசல் ரக காரை பெங்​க​ளூ​ருவில் நேற்று அறி​மு​கம் செய்​தது.

​ காரை அறி​மு​கப்​ப​டுத்​திய டயோடா கிர்​லோஸ்​கர் மோட்​டார் நிறு​வன மேலாண் இயக்​கு​நர் ஹிரோஷி நாக​காவா மற்​றும் விற்​ப​னைப் பிரிவு துணை மேலாண் இயக்​கு​நர் சந்​தீப் சிங் ஆகி​யோர் செய்தியாளர்களிடம், ​ லேன்ட் குரூ​சர் பிராடோ என்ற நவீன ஸ்போட்ஸ் யூட்டி​லிட்டி டீசல் என்​ஜின் காரைமுதல் முறை​யாக அமல்​ப​டுத்​தி​யுள்​ளோம்.​

நவீன தொழில்​நுட்​பங்​க​ளு​டன் வடி​வ​மைக்​கப்​பட்​டுள்ள இந்த காரை மலைப் பகு​தி​யி​லும் கரடு,​​ முர​டான காட்​டுப் பகு​தி​க​ளி​லும் ஓட்​ட​லாம்.​

​ இதில் 3.0 எல் டீசல் என்​ஜின் பொருத்தப்பட்டுள்ளது இதனல் தேசிய நெடுஞ்​சா​லை​க​ளி​லும், நகர சாலைகளில் செல்​லும்​போது ​நிலை​யான வேகத்​தைக் கொடுக்​கும். இந்த காரில் கைனட்​டிக் டைன​மிக் சஸ்​பென்​சன் சிஸ்​டம்,​​ ​ கால​நிலை கட்​டுப்​ப​டுத்​தும் தானி​யங்கி, பல்​ நோக்கு தக​வல் தரும் ​ எலக்ட்​ரா​னிக் டிஸ்ப்ளே,​​ ஆப்​டிட்​ரான் மீட்​டர்,​​ பார்க்​கிங் செய்​யும்​போது முன்,​​ பின் ​ வாக​னத்தை பாது​காப்​பாக இயக்​கும்​போது உதவ சென்​சார்​கள்,​​ கேம​ராக்​கள் போன்ற ​ சிறப்​பம்​சங்​கள் உள்​ளன.​ ​

​ காரின் உட்​பு​றம் தோல் பொரு​ளால் வடி​வ​மைக்​கப்​பட்​டுள்​ளது.​ மலைப் பகு​தி​யில் கார் ஏறும்​போ​தும்,​​ இறங்​கும்​போ​தும் டிரை​வ​ருக்கு உதவ டிஏடி தொழில்​நுட்​பம்,​​ வாகன வேகத்தை கட்​டுப்​ப​டுத்​தும் விஎஸ்சி தொழில்​நுட்​பம்,​​ மற்​றும் அடாப்​டிவ் டிராக்​ஷன் கன்ட்​ரோல் நுட்​பம் போன்​ற​வை​யும் உள்​ளன.​
​ வெள்ளை,​​ சில்​வர்,​​ சாம்​பல்,​​ கருப்பு மற்​றும் சாம்​பல் நீலம் கலந்த மெட்​டா​லிக் ​போன்ற நிறங்​க​ளில் கிடைக்கும். இதன் விலை ரூ.52.74 லட்சம் என்று தெரிவித்தனர்.


> கலாநிதிமாறனுக்கு விஜய் நன்றி

வேட்டைக்காரன் படம் மிகப் பெ‌ரிய வெற்றியை‌ப் பெற்றிருப்பதாக நடிகர் விஜய் தெ‌ரிவித்தார். இந்த வெற்றிக்கு நன்றி தெ‌ரிவிக்கும் வகையில் நேற்று அவர் கலாநிதிமாறனை அவரது அலுவலக‌த்‌தி‌ல் சந்தித்து பூங்கொத்து வழங்கினார்.

வேட்டைக்காரன் படத்தை ஏவிஎம் தயா‌ரித்திருந்தது. பிறகு படத்தின் ஒட்டுமொத்த உ‌ரிமையை சன் பிக்சர்ஸ் பெரும் தொகைக்கு வாங்கியது. படத்தை வெளியிட்டதுடன் மிகப் பெ‌ரிய அளவில் விளம்பரங்கள் செய்து படத்தை ஓட வைத்துக் கொண்டிருப்பதும் சன் குழுமம்தான்.

நேற்று கலாநிதிமாறனை சந்தித்த விஜய் பிறகு பத்தி‌ரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். வேட்டைக்காரன் படம் பிரமாண்டமான மெகா வெற்றியை பெற்றிருப்பதாகவும், ஏவிஎம் பாலசுப்பிரமணியன், சன் டிவி, கலாநிதிமாறன் ஆகியோருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருப்பதாகவும் அவர் தெ‌ரிவித்தார்.

தொடர்ந்து உங்கள் மகன் நடிப்பாரா என்ற கேள்விக்கு, இல்லை, இனி படிப்பு மட்டும்தான் என்றும் பதிலளித்தார்.

வேட்டைக்காரன் வெற்றி பெற்றதாகக் கூறி கோவில் கோவிலாக சென்று கொண்டிருக்கிறார் படத்தை இயக்கிய பாபு சிவன் என்பது குறிப்பிடத்தக்கது.

> பழஸிராஜா ஆஸ்கர் ப‌ரிந்துரையில்

குப்பையான இரண்டாம் மூன்றாந்தர படங்களையே ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் ப‌ரிந்துரைக்கப்படுகின்றன என்ற குற்றச்சாற்று இருந்து வருகிறது. அமிதாப் நடித்த ஏகலைவா என்ற வழக்கமான கமர்ஷியல் படம் ப‌ரிந்துரை செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்தமுறை ஆஸ்கர் ப‌ரிந்துரைப் பட்டிய‌லில் ஹ‌ரிஹரனின் பழஸிராஜா இடம் பிடித்திருக்கிறது. ச‌ரித்திரப் படமான இது பழஸி மகாராஜாவின் ஆங்கிலேயருக்கு எதிரான யுத்தத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது. கேரளாவில் இப்படம் வசூல் சாதனை பு‌ரிந்தது குறிப்பிடத்தக்கது.

நல்ல திரைப்படம் என்றாலும், உலக திரைப்படங்களுடன் போட்டியிட்டு ஆஸ்கரை வெல்லும் சக்தி பழஸிராஜாவுகு இருக்கிறதா என்பது ‌விடை தெ‌ரியாத கேள்வி. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

> யுவன் - செல்வா சந்திப்பு

யுவன் ஷங்கர் ராஜாவும் செல்வராகவனும் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது. இருவரும் சமீபத்தில் சந்தித்து பகையை மறந்து மனம்விட்டு‌ப் பேசியுள்ளனர்.

யுவன் - செல்வா கூட்டணியின் இசையும், பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவை. இருவரும் பி‌ரிந்தது இசை ரசிகர்களுக்கு பே‌ரிழப்பு. யுவனுக்குப் பதில் ‌ஜி.வி.பிரகாஷை தனது ஆயிரத்தில் ஒருவனில் பயன்படுத்தினார் செல்வா. ஆனால் செல்வாவுக்கு அது திருப்தியாக இல்லை.

விக்ரமை வைத்து இயக்கும் புதிய படத்துக்கு இந்தி இசையமைப்பாளரை பயன்படுத்த அவர் திட்டமிட்டிருக்கிறார். பத்தி‌ரிகைகளிலும் இந்த செய்தி வெளிவந்தது.

இந்நிலையில் யுவனும், செல்வாவும் சென்னையில் உள்ள கிளப் ஒன்றில் சந்தித்து உரையாடினர். சோனியா அகர்வாலின் முயற்சியால் ஆயிரத்தில் ஒருவன் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு யுவன் வந்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்புக்குப் பிறகு மனஸ்தாபம் விலகியதாகவும் மீண்டும் இருவரும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு பிரகாசமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விக்ரம் படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற அதிகார‌ப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்போது மனஸ்தாபம் விலகியதா என்பதற்கான விடை கிடைத்துவிடும்.

> வேட்டைக்காரன் - வேட்டு வைக்கும் வதந்தி

விஜய் படங்களிலேயே அதிக திரையரங்குகளில் வெளியான படம் என்ற பெயரைத் தட்டிச் சென்றிருக்கிறது வேட்டைக்காரன். விஜய் தரப்பு இதை பாஸிடிவ்வாக பேசிக் கொண்டிருக்க, அதையே எதிர்மறையாக விமர்சனம் செய்கிறது இன்னொரு கோஷ்டி.

பொங்கலுக்கு தீராத விளையாட்டு பிள்ளை, குட்டி, கோவா என்று எதிர்பார்ப்புக்குரிய நிறைய படங்கள் வெளியாகின்றன. இதில் ஒன்றிரண்டு படங்களை சன் பிக்சர்ஸ் வெளியிடும் என்கிறார்கள். வேட்டைக்காரன் படத்தை தூக்கிவிட்டுத்தான் இந்தப் படங்களை திரையிடயிருக்கிறார்களாம்.

ஆக, அதற்குள் கல்லா கட்டியாக வேண்டும். அதை மனதில் வைத்தே அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிட்டிருக்கிறார்களாம்.

வேட்டைக்காரன் ஓடும் திரையரங்குகளில் 'குட்டி' படத்தின் ட்ரெய்லரைப் பாருங்கள் என்று பத்திரிக்கையில் விளம்பரமே செய்கிறார்கள். பொங்கலுக்கு இதுவே, வேட்டைக்காரன் திரையரங்கில் குட்டி படத்தைப் பாருங்கள் என்று மாறப் போகிறது என தொடை தட்டுகிறார்கள் விமர்சனம் செய்பவர்கள்.

யார் என்ன சொன்னாலும், சுக்கான் இருப்பது சூரியன் (சன்) கையில் அல்லவா!

Wednesday, December 23, 2009

> சென்னை 600 028 பார்ட் 2.

சென்னை 600 028 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் வெங்கட்பிரபு.

வெங்கட்பிரபு நடிப்புக்கும் இசைக்கும் நடுவில் தத்தளித்தபோது, அவரது தனித்தன்மையை வெளிப்படுத்திய படம், சென்னை 600 028. வெங்கட்பிரபுவின் நெருங்கிய நண்பர் எஸ்.பி.பி.சரண் இந்தப் படத்தை தயா‌ரித்திருந்தார். வெங்கட்பிரபு என்ற சிறந்த இயக்குனரை இந்தப் படம் அடையாளம் காட்டியது.

கோவா படத்துக்குப் பிறகு அம்மா கி‌ரியேஷன்ஸ் சிவா தயா‌ரிக்கும் படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார். நடிகர், படத்தின் பெயர் எதுவும் இன்னும் முடிவாகவில்லை.

இதையடுத்து எஸ்.பி.பி.சரண் தயா‌ரிப்பில் சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். நட்சத்திர நடிகர் ஒருவர் இந்தப் படத்தில் நடிக்கயிருக்கிறார் என்பது கூடுதல் செய்தி. காமெடியன் யாரு, பிரேம்‌ஜிதானே?

> சிவா‌ஜி தலைப்பு சிம்புக்கு

விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்குப் பிறகு இரு படங்களில் நடிக்கிறார் சிம்பு. ஒரு படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயா‌ரிக்கிறார். படத்தின் பெயர் வாலிபன். சிம்புவே இயக்கி நடிக்கிறார்.

இன்னொரு படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயா‌ரிக்கிறது. பூபதி பாண்டியன் படத்தை இயக்குகிறார். அடுத்த வருட தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது. சிம்புவுடன் நடிப்பவர்கள் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

இந்தப் படத்துக்கு சிவா‌ஜி நடித்த உத்தமபுத்திரன் படத்தலைப்பு ப‌ரிசீலனையில் உள்ளது. பழைய படங்களின் பெயர்களை முறைப்படி அனுமதி பெற்றே பயன்படுத்த வேண்டும். அதனால் அனுமதி வாங்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

> கமல்+ நயன்தாரா+ உதயநிதி ஸ்டாலின்

கமல் நடிக்கும் புதிய படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவதும், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் படத்தை தயா‌ரிப்பதும் பழைய செய்தி.

கமல் ஜோடியாக தமன்னா நடிப்பார் என முதலில் கூறப்பட்டது. ஆனால் தமன்னாவுக்கு போட்டியாக இன்னொரு பெயரும் ப‌ரிசீலனையில் இருக்கிறது. அது, நயன்தாரா.

ஆர்யாவுடன் நடிக்கும் பாஸ் என்கிற பாஸ்கரன் தவிர்த்து தமிழில் நயன்தாராவுக்கு வேறு படங்களில்லை. அதனால் கிடைக்கிற எந்த சான்ஸையும் விடுகிற மனநிலையில் நயன் இல்லை.

அவரது தூண்டுதலின் பே‌ரில் பிரபுதேவா நயன் பெயரை கமலிடம் ரெகமண்ட் செய்ததாக சத்தமாகவே கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

உதயநிதிக்காக தரணி ஒரு ஸ்கி‌ரிப்ட் தயார் செய்து வைத்திருப்பதும், விரைவில் அவர் ஹீரோவாகிறார் என்பதும் தெ‌ரிந்ததுதான். அதற்குமுன் வெள்ளோட்டமாக இந்தப் படத்தில் கமலுடன் படம் முழுக்க வருகிறாராம் துணை முதல்வ‌ரின் மகன்.

ரெட் ஜெயண்‌ட்டின் ஆதவனைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் இயக்குனராக்கியதற்கான ரவிக்குமா‌ரின் ப‌ரிசுதான் இந்த கேரக்டராம். செய்தியே சுவாரஸியமாயிருக்கே.

> ஆண் கெட்டப்பில் - அனுஷ்கா

படத்தில் ஹீரோ பெண் வேடம் போடுவதும், ஹீரோயின் ஆண் வேடம் போடுவதும் சகஜம். பாதி படம் முழுக்க இப்படி பால் மாறி நடித்தவர்கள் இருவர் மட்டுமே. ஒருவர் கமல்ஹாசன், இன்னொருவர் மீரா ஜாஸ்மின்.

சத்தியன் அந்திக்காடு இயக்கிய படத்தில் மீரா ஜாஸ்மின் இப்படி ஆண் வேடம் போட்டு நடித்தார். அவர் பெண் என்பது மோகன்லாலுக்கு மட்டுமே தெ‌ரியும். பாதி படம் இப்படி ஆணாக அவர் நடித்திருந்தார். கமலின் அவ்வை சண்முகி பற்றி சொல்லத் தேவையில்லை.

இவர்கள் வழியில் அனுஷ்காவும் ஆண் வேடம் போடுகிறார். தெலுங்கில் அனுஷ்கா நடிக்கும் புதிய படத்தில் இடைவேளை வரை ஆண் கெட்டப்பில் வருகிறாராம். படத்தை சமுத்திரம் இயக்குகிறார். சஸ்பென்ஸ் த்‌ரில்லராக இந்தப் படம் உருவாகிறது.

அனுஷ்கா ஆண் வேடம் போடுவதே சஸ்பென்ஸ் த்‌ரில்லர்தானே.

Tuesday, December 22, 2009

> விஜய் விவகாரம்: சன் டிவிக்கு வந்த தலைவலி

கலைஞர் டிவியும், சன் டிவியும் விஜய் நடிக்கும் 50-வது படமான சுறா’வை வாங்குவதற்கு போட்டியிட்டன. இறுதியில் சன் வென்றுள்ளது.

படத்தை வெளியிடும் உரிமையையும் பெற்றுள்ளது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் சுறா...என்று பார்க்கலாம் என்றால் அதில் ஒரு சிக்கல்.

இந்த சிக்கலுக்கு காரணம் விஜய் சந்தித்திற்கும் புதிய வில்லங்கம்.

’’ஈழத்தமிழருக்கு ஆதரவு என்பது போல் உண்ணாவிரதம் இருந்து விட்டு ஈழ துரோகி காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு ராகுல் காந்தியை சந்தித்தார் விஜய்.

இது போதாது என்று தனது வேட்டைக்காரன் படத்தில் சிங்களப்பாடல் மெட்டில் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது. தமிழர்களுக்கெதிரான போரில் சிங்கள ராணுவத்தினரை உற்சாகப்படுத்த அந்த மெட்டில் பாடல் அமைத்தவர் ராஜ்வீரரத்ன என்பவர்.

அவருடன் இணைந்துதான் வேட்டைக்காரனுக்கு இசையமைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. இதற்கு விஜய் ஏன் சம்மதித்தார். தொடர்ந்து விஜய் ஈழத்தமிழர்களூக்கு துரோகம் செய்துவருகிறார் என்று அவரது படங்களை புறக்கணிக்க வேண்டும் என புலம்பெயர்ந்த தமிழர்கள் முடிவெடுத்துள்ளனர்.

வேட்டைக்காரன் மட்டுமல்லாது, பெருந்தொகை கொடுத்து சுறாவை வாங்கியிருக்க இந்த விவகாரத்தால் வெளிநாட்டு பிஸினஸ் பாதிக்கப்படுமோ என்று யோசிக்கிறதாம்.

அடுத்தடுத்து இரண்டு படங்களும் பிஸினஸ் ரீதியாக பாதிப்பட்டால் என்னாவது? இந்த தலை’வலி’ தீர வழி என்ன என்றும் யோசிக்கிறதாம் சன் தரப்பு.

> விஜய் படத்துக்கு பிரபாகரன் சொன்ன டைட்டில்!

தம்பி படத்தை அடுத்து ’கோபம்’ காட்டவிருந்தார் சீமான். ஆனால், சூழ்நிலை அவரை ‘வாழ்த்துகள்’சொல்ல வைத்தது.

இந்த காலகட்டத்தில் சீமான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்தபோது, ‘’கோபம்’ என்று படம் எடுக்கப்போகிறேன்’ என்று சீமான் சொல்ல,பிரபாகரனுடன் பக்கத்தில் இருந்தவர் ‘சினம்’ என்று தலைப்பு வையுங்கள் என்றாராம்.

அதற்கு பிரபாகரன், ‘கோபம் என்று சொன்னால்தான் அதில் அழுத்தம் இருக்கிறது. ஒரு வேகம் இருக்கிறது. அந்த தலைப்பிலேயே படம் எடுங்கள். அதற்கு என் வாழ்த்துக்கள். ஆனால் வாழ்த்துக்கள் மாதிரி மென்மையான படம் எடுக்க வேண்டாம்’என்று சொன்னாராம்.

அதன்படி சீமான் ‘கோபம்’காட்ட முடிவெடுத்துவிட்டார். நடிகர் விஜய்யும் சீமானுடம் இணைய முடிவெடுத்துவிட்டார்.

படப்பிடிப்புதான் எப்போது துவங்கப்போகிறது என்று தெரியவில்லை.

Monday, December 21, 2009

> விஜய் - லிங்குசாமி இயக்கத்தில்

பல வாரங்களாக சொல்லப்பட்டு வந்த சேதிதான். இப்போது உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. ‘லிங்குசாமி இயக்கத்தில் விஜய் நடிக்கிறார்.’

விஜய்க்காக லிங்குசாமி ஒரு கதையை ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்தார். விஜய்யிடம் கதையை கூறும்முன் பத்தி‌ரிகைகளில் இந்த செய்தியை பரவவிட்டார் லிங்கு. இந்த யுக்திக்கு கைமேல் பலன்.

விஜய்யே லிங்குசாமியை கூப்பிட்டு கதை கேட்டிருக்கிறார். கதையை கேட்டவர் அங்கேயே அப்போதே சேர்ந்து பண்ணுவோம் என்று உத்தரவாதமும் அளித்திருக்கிறார்.

லிங்குசாமியின் அடுத்தப் படம் இதுவாகவே இருக்கும் என்கிறார்கள். சுறாவில் நடித்து வரும் விஜய் அடுத்து ஜெயம் ராஜா இயக்கத்தில் நடிப்பாரா இல்லை லிங்குசாமிக்கு கால்ஷீட் கொடுப்பாரா என்று குழம்பிப் போய் தலையை தடவிக் கொண்டிருக்கிறார்கள்.

> எட்டுகால் பாய்ச்சலில் பரணி

நாடோடிகள் படத்தில் நண்பனாக வரும் பரணியை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டீர்கள். நண்பனாக வந்தவர் அரை டஜன் படங்களிள் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?

பரணி நடித்திருக்கும் விலை விரைவில் திரைக்கு வருகிறது. இது தவிர தூங்கா நகரம், பொடிப்பசங்க, வெள்ளைக் குதிரையில் ராஜகுமாரன் ஆகிய படங்களில் நடிக்கிறார். இதில் தூங்கா நகரம் படத்தை துரை தயாநிதியின் கிளவுட் நைன் கம்பெனி தயா‌ரிக்கிறது.

வெள்ளைக் குதிரையில் ராஜகுமாரன் படத்தை திலீபன் இயக்குகிறார். ராமசாமி பொடிப்பசங்க படத்தை இயக்குகிறார். இவை தவிர சரவண ‌‌ஜீவன் இயக்கும் ப‌ரிமளா திரையரங்கம் படத்திலும் பரணிக்கு முக்கியமான கேரக்டர்.

ஹீரோ வேடத்துக்கு காத்திருக்காமல் கிடைக்கிற படங்களில் நடிப்பதால்தான் இத்தனை படங்கள். சந்தோஷமா இருக்கேன் என்று பூ‌ரிக்கிறார் பரணி.

> கிளாமர் ரீமா சென்

ஆயிரத்தில் ஒருவன் வெளிவந்த பிறகு ‌‌ரீமா சென்னை எல்லோரும் கிளாமர் சென் என்றுதான் அழைப்பார்கள். அந்தளவுக்கு கவர்ச்சி காட்டாறாக பிரவாகம் எடுத்திருக்கிறாராம் ஆயிரத்தில் ஒருவனில்.

செல்வராகவனின் இந்த காஸ்ட்லி படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. ச‌ரித்தர காலத்து நிகழ்வுகளும் படத்தில் இடம்பெற்றிருப்பது முக்கியமான அம்சம். ‌ரீமா சென், ஆண்ட்‌ரியா இருவரும் ஹீரோயின்கள்.

இதில் ராணுவ அதிகா‌ரியாக நடித்திருக்கிறார் ‌‌ரீமா சென். ஆனாலும், மிலிட்ட‌ரி உடையைவிட கிளாமர் உடையில்தான் அதிகம் படத்தில் தோன்றுகிறாராம். இதுவரை இல்லாத அளவுக்கு என்று அழுத்தி சொல்கிறது பட யூனிட். மேலும், விளம்பரத்துக்காக வெளியிடப்பட்டிருக்கும் ஸ்டில்களிலும் ‌ரீமா செம தாராளம்.

இதனால் ஏதாவது பிரச்சனை ஏற்படுமா?

எல்லை மீறாமல் நடித்திருக்கிறேன். இதில் எனக்கு என்ன பிரச்சனை என்று எதிர் கேள்வி கேட்கிறார் ‌‌ரீமா சென். பார்ப்போம் சென்சார் என்ன செய்கிறதென்று.

Sunday, December 20, 2009

> வேட்டைக்காரன் வெற்றி பெறுவானா?

வேட்டைக்காரன் ‌ரிலீஸையொட்டி சிட்டியை சின்னாபின்ன மாக்கிவிட்டார்கள் விஜய் ரசிகர்கள். வடபழனியில் இவர்கள் போட்ட ஆட்டம் மொத்த சிட்டியிலும் எதிரொலித்திருக்கும்.

ர‌ஜினிக்கு அப்புறம் அதிக ரசிகர்கள் வருவது விஜய் படத்துக்குதான் என்று ஓபனாகவே ஸ்டேட்மெண்ட் தருகிறார் கமலா திரையரங்க உ‌ரிமையாளர் வள்ளியப்பன்.

விஜய் படங்கள் கண்டிப்பாக கமலா திரையரங்கில் வெளியாகும் என்பது பகவதி காலத்துக்கு முன்பிருந்தே ரசிகர்கள் அறிந்த செய்தி. விஜய்க்கும் இந்த திரையரங்குதான் பேவரைட்.

வில்லு படத்தின் ‌ரிலீஸின் போதும் தாரை தப்பட்டையுடன் அந்த பகுதியையே கிடுகிடுக்க வைத்தார்கள் ரசிகர்கள். இந்துமுறை கூடுதலாக யானையும் உண்டு. படப்பெட்டியை சுமந்து வந்ததே கஜேந்திரன்தான்.

எல்லாம் ச‌ரி, படத்தின் ‌ரிசல்ட் எப்படி?

உணர்ச்சியை உருட்டித்தர இதென்ன சேரன் படமா? நச்சுன்னு நாலு பைட், அழகழகா ஆறு டான்ஸ், அமர்க்களமா ஒரு ஓபனிங், அட்வைஸ் பண்ற மாதி‌ரி ஒரு பாட்டு, ராபின் ஹுட் மாதி‌ரி மனசு, ராம்போ ஸ்டாலோன் மாதி‌ரி மசில் விளையாட்டுன்னு வழக்கம்போல அசத்தியிருக்கார் என்று விஜய் புகழ் பாடுகிறார்கள் அவரது ரசிகர்கள்.

வழக்கம்போல இருப்பதுதான் மற்றவர்களுக்குப் பிரச்சனை. குருவி, வில்லுன்னு ஏற்கனவே பார்த்துட்டோம்ல என்று நெட்டி முறிக்கிறார்கள்.

வேட்டைக்காரன் வெற்றிமுகமா இல்லையா என்பது நாலே நாளில் தெ‌ரிந்துவிடும்.

> சோனாவின் குளியல்

படு சூடாக தயாராகி வருகிறது சோக்காலி. சைதன்யா, நயனா ஹீரோ, ஹீரோயினாக நடித்தாலும் படத்தை ஆக்கிரமித்திப்பவர், சொக்கத்தங்கம் சோனா.

சோனாவுக்கு எந்த மாதி‌ரி கேரக்டர் என்றால், விதவிதமான காட்சிகளை சொல்லி நம்மை திக்குமுக்காட வைக்கிறார், படத்தின் இயக்குனர் சரணா. சாம்பிளுக்கு ஒன்று.

கதைப்படி சோனா மாடி வீட்டு மங்கை. அவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் சைதன்யா மீது காதல் ச்சீ... காமம். ஒரு நாள் சைதன்யாவை தனது பங்களாவுக்கு அழைக்கிறார்.

சைதன்யா சென்று பார்த்தால் ஆளை கவிழ்க்கும் நீச்சல் உடையில் நீந்திக் கொண்டிருக்கிறார் நமது சொக்கத்தங்கம். அப்புறமென்ன...? முக்கல் முனகலுடன் ஒரு குத்துப் பாட்டு.

ஹீரோவாக நடிக்கும் சைதன்யா மானாட மயிலாட நிகழ்ச்சியில் முதல் ப‌ரிசு பெற்றவர். சோனாவுக்கு ஈடுகொடுப்பாரா?

Saturday, December 19, 2009

> கந்தகோட்டை மு‌ன்னோ‌ட்ட‌ம்

இ.எஸ்.கே. பிலிம்ஸ் புரொட‌க்சன் சார்பில் ராஜா தயா‌ரித்திருக்கும் படம் கந்தகோட்டை. இதனை ஏ‌.ஜி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் கல்பாத்தி எஸ் அகோரம் வாங்கி விநியோகிக்கிறார்.
காதலில் விழுந்தேன், மாசிலாமணி படங்களுக்குப் பிறகு நகுலன் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடி பூர்ணா. படத்தை இயக்கியிருப்பவர் சக்திவேல். ராதாமோகன், ப்‌ரியா வி. ஆகியோ‌ரிடம் பணிபு‌ரிந்த சக்திவேலுக்கு இது முதல் படம்.

கந்தகோட்டை என்ற இடத்தில் நடக்கும் கதையிது. கந்தகோட்டையில் வசித்து வருகிறார் நகுலன். அங்கு விடுமுறைக்காக வருகிறார் பூர்ணா. இருவருமே எதிரெதிர் குணங்கள் கொண்டவர்கள். நகுலன் காதலை வெறுப்பவர். பூர்ணா மதிப்பவர். இவர்கள் எப்படி இணைந்தார்கள் என்பது கதை.

“எதிர்பார்த்த ‌ரிசல்ட் வருவதற்காக நகுலன் கடுமையாக உழைத்திருக்கிறார்” என்று சொல்லும் சக்திவேல், பூர்ணாவின் நடிப்பையும் புகழ்கிறார். இந்தப் படத்தில் அவர் நடிக்கும் போது, முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் மட்டுமே நடித்திருந்தார். அதாவது ஒரு பட எக்ஸ்பீ‌ரியன்ஸ். ஆனால், அப்படி தெ‌ரியாத அளவுக்கு சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

தினா இசை. கபிலன், விவேகா, யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளனர். ஒளிப்பதிவு இ.கிருஷ்ணமூர்த்தி. அசோக்ராஜா நடனம் அமைத்திருக்கிறார்.

> ஹெலிகாப்ட‌ரில் டூயட்

லண்டனிலும், சென்னையிலும் வளர்ந்து வருகிறது மறுபடியும் ஒரு காதல். மருத்துவக் கல்லூரி பின்னணியில் நடக்கும் காதல் கதையாம் இது.

பல மலையாளப் படங்களில் நடித்த அனிருத் மறுபடியும் ஒரு காதல் மூலம் தமிழுக்கு வருகிறார். படத்தில் இவர்தான் ஹீரோ. லண்டனை சேர்ந்த ஜோஸ்னா, கேரளாவைச் சேர்ந்த வாணி கிஷோர் என்று இரு நாயகிகள்.

லண்டனில் தொடங்கும் கதை சென்னையில் தொடர்ந்து கிளைமாக்ஸ் லண்டனில் முடிவதுபோல் கதை அமைத்திருக்கிறார்கள். டாக்கி போர்ஷன் மட்டுமின்றி பாடல் காட்சியும் லண்டனில் படமாக்கப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள கெனே‌ரிவாப் பகுதியில் கதாநாயகி ஜோஸ்னா ஹெலிகாப்ட‌ரில் பறந்து கொண்டே, காதலா காதலா கவிஞன் நீ, கவிதை நான் என்று பாடும் பாடல் காட்சியை பல நெருக்கடிகளுக்கு நடுவில் படமாக்கியிருக்கிறார்கள்.

கனெக்ட் பிலிம் மீடியா மறுபடியும் ஒரு காதலை தயா‌ரித்து வருகிறது. தயா‌ரிப்பாளர் வாசு பாஸ்கர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார்.

> வேட்டைக்காரன், அவதார் மோதல்

நேற்று வேட்டைக்காரன் ‌ரிலீஸ். சன் பிக்சர்ஸ் வெளியிடும் இந்தப் படம் சென்னையில் மட்டும் 23 திரையரங்குகளில் வெளியாகிறது. போட்டிக்கு ர‌ஜினி, கமல் தொடங்கி அ‌ஜித், விக்ரம் வரை எந்த நடிக‌ரின் படமும் இல்லை. ஆனால், ஹாலிவுட் படம் ஒன்று இருக்கிறது, அவதார்.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. டைட்டானிக் படத்துக்குப் பிறகு பல வருட இடைவெளியில் இந்தப் படம் வெளியாவது ஒரு காரணம். படத்தின் கிராஃபிக்ஸ் மிரட்டல்கள் இன்னொரு காரணம்.

சமீபத்தில் வெளியான ஹாலிவுட் படமான 2012 நேரடித் தமிழ்ப் படங்களின் வசூலை முறியடித்து ஓடியது குறிப்பிடத்தக்கது. அவதாருக்கு 2012 விட அதிக எதிர்பார்ப்பு நிலவுவதால், வேட்டைக்காரனுக்கு போட்டியாக அதனை கருதுகிறார்கள் விநியோகஸ்தர்கள்.

வேட்டைக்காரன் 23 திரையரங்குகளில் வெளியாகிறது என்றால், ஹாலிவுட் மிரட்டல் 13 திரையரங்குகளில் வெளியாகிறது. ஹாலிவுட் படமொன்று இத்தனை திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறை.

ரசிகர்கள் யாருக்கு அதிக வரவேற்பு கொடுக்கிறார்கள் என்பது இன்னும் மூன்று தினங்களில் தெ‌ரிந்துவிடும்.

Friday, December 18, 2009

> விண்டோஸ் 8ம் கூகிள் தேடலும்

விண்டோஸ் 7 வெளிவந்து சில மாதங்களே ஆன நிலையில், அதற்குள் விண்டோஸ் 8 ? என்ற கேள்விக் குறி எழலாம். ஆம், அடுத்த திட்டத்திற்குத் தயாராவது தானே அமெரிக்க நிறுவனங்களின் வாடிக்கை. அந்த வகையில் விண்டோஸ் 8 பதிப்பு தொடங்க மைக்ரோசாப்ட் அடுத்த ஜூலையைக் குறித்துள்ளது.

இந்த திட்டத்தில் ஈடுபடுத்த மைக்ரோசாப்ட் ஏழு முறை புதிய வல்லுநர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அழைப்பு விடுத்த சில நாட்களில், அது எடுக்கப்பட்டுவிட்டாலும் பலர் இதனைக் கவனித்து மைக்ரோசாப்ட் திட்டம் குறித்து அறிந்துள்ளனர். அநேகமாக 2012ல், விண்டோஸ் பதிப்பு 8 வெளி வரலாம். இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் 128 பிட் என்ற அடிப்படை அளவில் செயல்படும் சிஸ்டமாக இருக்கலாம் என்பது பலரின் கணிப்பு.

2009 இல் கூகிளில் அதிகம் தேடப்பட்டவர்கள்

இந்த நிலையில் இந்த ஆண்டில் கூகுள் தளம் மூலம் அதிகம் தேடப்பட்டது என்ன விஷயம்? அல்லது யாரை? என்று அந்த தளத்தில் தகவல்கள் கிடைத்துள்ளன. நூறு கோடிக்கு மேல் தேடல்கள் இருந்தாலும், அவற்றில் மீண்டும் மீண்டும் தேடப்பட்டவற்றை வடிகட்டியும், தேவையற்ற முறையிலும், நோக்கமின்றியும் தேடப்பட்டவற்றை நீக்கியும் தேடல்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதே போல் தனி நபர் குறித்த தேடல்களும் ஆய்விலிருந்து நீக்கப்பட்டன. பின் கிடைத்தவற்றை ஆய்வு செய்ததில் சில ஆர்வமூட்டும் தகவல்கள் கிடைத்தன.

உலக அளவில் அதிகம் தேடப்பட்டவர் இந்த ஆண்டில் மறைந்த மைக்கேல் ஜாக்சன் தான். அடுத்த இடத்தைப் பிடித்தது பேஸ்புக். இதற்குப் பின்னால் அணிவகுப்பவை – Twitter, sanalika, new moon, lady gaga, windows 7, dantri.com.vn and torpedo gratis ஆகும். பொழுது போக்கு என்ற பிரிவிலும் முதல் இடத்தை மைக்கேல் ஜாக்சன் பிடித்துள்ளார். சாப்பாடு பிரிவில் acai berry முதல் இடத்தைப் பெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

> காவலர் குடியிருப்பு சொல்லப்படாத காதல் கதை

குப்பி படத்தின் மூலம் ஈழம் வரை கவனம் ஈர்த்தவர் இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். இவரது அடுத்தப் படைப்பு, காவலர் குடியிருப்பு. குப்பி போலவே இதுவும் உண்மைச் சம்பவம். முன்னது ரா‌ஜீவ் காந்தி கொலையுடன் சம்பந்தப்பட்டது என்றால், பின்னது பாபர் மசூதி இடிப்பை மையமாகக் கொண்டது. பிறப்பால் கன்னடர் என்றாலும் தமிழார்வத்தில் ரமேஷ் பேசும் சுந்தர தமிழ் எப்போதும் கேட்டுக் கொண்டிருக்கலாம் ரகம். இனி அவருடனான உரையாடல்...

காவலர் குடியிருப்பு பற்றிச் சொல்லுங்கள்...?

1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நாடெங்கும் ஏற்பட்ட கலவரம் பெங்களூருவிலும் நடந்தது. அப்போது பெங்களூரு போலீஸ் குவார்ட்டர்ஸில் நடந்த ஒரு சம்பவத்தின் தாக்கம்தான் இந்தப் படம். இதுவரை சொல்லப்படாத காதல் கதை இது.

தொடர்ந்து உண்மைச் சம்பவங்களை, அதுவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை படமாக்க என்ன காரணம்?

பொதுவாகவே நான் வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டு இயங்க விரும்புகிறவன். சென்னை ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில்தான் நான் படித்தேன். அதற்குப் பிறகு இயக்குனர் ஆர்.வி.உதயகுமாருடன் இணைந்து தொலைந்து போனவர்கள் சீ‌ரியல் எடுத்தேன். அந்த தொடரே ரொம்ப வித்தியாசமாக இருக்கும். ஆரம்பம் முதலே என்னுடைய கனவு வழக்கத்துக்கு மாறானதாகவே இருந்து வந்திருக்கிறது.

காவலர் குடியிருப்பு கதையை தேர்வு செய்ய என்ன காரணம்?

நண்பர் துவாரகநாத் தான் இந்த சம்பவத்தை என்னிடம் சொன்னார். நாட்டில் நடக்கிற மதக்கலவரங்கள் மரணம், கைது போன்ற நேரடி சேதங்களை மட்டுமே ஏற்படுத்தும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கண்ணுக்கு தெ‌ரியாத பாதிப்புகளும் இருக்கின்றன. பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அப்படிதான் இரு இளம் உள்ளங்கள் பாதிக்கப்பட்டன. பலருக்கும் தெ‌ரியாத விஷயம் என்பதால் அதை படமாக்க தீர்மானித்தேன்.

உண்மைச் சம்பவம் நடந்த இடத்திலேயே பல காட்சிகளை படமாக்கியிருக்கிறீர்களாமே?

1992ல் சம்பவம் நடந்த போலீஸ் குவார்ட்ட‌ர்ஸில் ஒரு மாதம் வரை படப்பிடிப்பை நடத்தினோம். நிஜ சம்பவத்தை பார்ப்பதுபோல் இருப்பதாகச் சொன்னவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். நிஜக் கதை நடந்த வேறு சில இடங்களையும் அவர்கள் எங்களுக்கு காட்டினார்கள். அங்கும் படப்பிடிப்பு நடத்தினோம். படப்பிடிப்பின் போது பழைய நினைவில் பலர் அழுதது மறக்க முடியாத அனுபவம்.

பின்னோக்கி பயணிக்கும் கதை என்பதால் படமாக்குவதில் சிரமம் ஏற்பட்டிருக்குமே?

உண்மைதான். 1968, 1992, 2009 என மூன்று கட்டங்களில் கதை பயணிக்கிறது. அந்தந்த காலகட்டங்களுக்கேற்ற பொருட்களை, வாகனங்களை, உடைகளை பயன்படுத்த வேண்டும். அதை கலை இயக்குனர் சிறப்பாக‌‌ச் செய்திருக்கிறார். அதேபோல் மூன்று காலகட்டங்களையும் வேறுபடுத்தி காண்பிக்க மூன்று விதமான வண்ணங்களை ஒளிப்பதிவாளர் துவாரகநாத் பயன்படுத்தியிருக்கிறார். இது அவருக்கு பெயர் சொல்லும் படமாக இருக்கும்.

உண்மை‌க் கதையை படமாக்கும்போது பாடல்கள் தேவையா?

காவலர் குடியிருப்பு ஆ‌க்சன் நிறைந்த நிஜ காதல் கதை. ஒரு காதல் படத்துக்கு பாடல்கள் முக்கியம். பாடலுக்கென்று தனிக் காட்சிகள் தேவையில்லை என்பது என்னுடைய கருத்து. அதனால் பாடல்கள் காட்சிகளின் பின்னணியில் இடம்பெறுமாறு அமைத்திருக்கிறேன். பாடலுடன் சேர்ந்து கதை நகர்வதால் பாடலை பார்க்காவிட்டால் கதையின் தொடர்ச்சி பாதிக்கும். ரசிகர்களும் பாடல் காட்சிகளில் எழுந்து வெளியே போகமாட்டார்கள். ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருக்கிறார்.

Thursday, December 17, 2009

> விஜய் ரசித்த வேட்டைக்காரன்

கடைசி இரண்டு படங்களும் சுமார். இந்தப் படத்தை சூப்பர் ஹிட்டாக்கியே தீர வேண்டும் என்ற நிர்ப்பந்தம். விஜய் வழக்கத்தைவிட கூடுதலாகவே உழைத்திருக்கிறார் வேட்டைக்காரனுக்காக.

பாபு சிவன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை சில நாட்களுக்குமுன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கண்டு களித்தார் விஜய். படத்தைப் பார்த்த அனைவரும் பாஸிட்டிவ்வான அபிப்ராயம் சொன்னதில் இளைய தளபதிக்கு ரொம்பவே மகிழ்ச்சி. விஜய் ரசிகர்களை வசீக‌ரிக்கும் அனைத்து அம்சங்களும் படத்தில் இருக்கிறதாம்.

விஜய்யின் கடைக்கண் பார்வையில் இருக்கும் இயக்குனர்களின் பட்டியலில் பேரரசுவின் பெயரும் இருக்கிறது. விரைவில் விஜய்யை வைத்து அவர் படம் இயக்குவார் என்ற செய்தியை ரசிகர்கள் தாராளமாக நம்பலாம். வேட்டைக்காரனை ரசித்தவர்களில் பேரரசுவும் ஒருவர் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.

> தனக்குத்தானே பட்டம் சூட்டிய சிம்பு

லிட்டில் சூப்பர் ஸ்டார் பதவியிலிருந்து தனக்குத்தானே புரமோஷன் கொடுத்துக் கொண்டுள்ளார் சிம்பு. இனி அவர் இளைய சூப்பர் ஸ்டாராம். வாலிபன் படத்தின் விளம்பரங்களில் இந்த அடைமொழிதான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுபற்றி விளக்கமளித்துள்ள சிம்பு, நான்தான் வளர்ந்துட்டேனே… இனி நான் எப்படி லிட்டில்னு சொல்லிக்க முடியும்… இப்போது நான் இளைஞன். அதனால் இனி இப்படித்தான் போட்டுக் கொள்ள முடியும்’ என்கிறார்.

இன்னொன்றையும் அடிக்கடி சொல்கிறார் சிம்பு… அது ‘எப்படி இருந்த நான் இப்படியாகிட்டேன்’

அதாவது எல்லோரும் வெறுக்கும் அளவுக்கு மோசமான இமேஜிலிருந்து இப்போது நல்ல இமேஜுக்கு திரும்பிட்டாராம்.

குழந்தை நடிகரா இருந்தபோது லிட்டில்… இளைஞனா மாறியதும் இளைய சூப்பர் ஸ்டார். இளமை தொலைந்த பிறகு?

> வடிவேலுக்கு பதில் சந்தானம்

வடிவேலுக்கு பதில் தன்னைதான் ஒப்பந்தம் செய்வார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த ஜட்டி பிரா காமெடியனுக்கு அல்வா கொடுத்திருக்கிறது குரு சிஷ்யன் டீம். அவருக்கு பதில் சந்தானத்தை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

சுந்தர் சி. வடிவேலு முட்டிக் கொண்ட பிறகு சுந்தர் சி. யின் படங்களில் ஜட்டி, பிரா காமெடியன் விவேக்குக்கு வாய்ப்பு கிடைத்து வந்தது. ஆனால் இவரது ஸ்டீ‌ரியோ டைப் மிமிக்கி‌ரி மற்றும் கெட்டப் காமெடி சலித்துப் போனதால் ரசிகர்களிடம் அவ்வளவாக வரவேற்பில்லை.

இந்நிலையில் குரு சிஷ்யன் படத்தில் நடிக்கவில்லை என்று அறிவித்தார் வடிவேலு. அந்த இடத்தில் தன்னைதான் போடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தார் ஜட்டி பிரா.

அவரை ஒப்பந்தம் செய்வதும் காமெடியன் இல்லாமல் படம் எடுப்பதும் ஒன்று என்பதை பு‌ரிந்து கொண்ட இயக்குனர் ஷக்தி சிதம்பரம் சந்தானத்தை ஒப்பந்தம் செய்து விறுவிறுப்பாக காட்சிகளை படமாக்கி வருகிறார். கண்டேன் காதலைக்குப் பிறகு சந்தானத்தின் மவுசு கண்டபடி எகிறியிருப்பதால் மானாவா‌ரியாக அவருக்கு காட்சிகள் வைத்திருக்கிறார்களாம்.

வடிவேலு இல்லையென்ற குறை தெ‌ரியக் கூடாது என்ற ஒரே காரணத்தை வைத்து காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். யாரை நம்பி நாம் பொறந்தோம்... ஜமாய்ங்கப்பு ஜமாய்ங்க.
உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.